தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சென்னையின் நுரையீரலுக்கு ஆபத்து

View previous topic View next topic Go down

சென்னையின் நுரையீரலுக்கு ஆபத்து Empty சென்னையின் நுரையீரலுக்கு ஆபத்து

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 10:08 pm

சென்னையின் நுரையீரலுக்கு ஆபத்து 2eam2s9

ஒரு காலத்தில் ஐந்து சதுரக் கிலோமீட்டருக்கு முழுமையான காடாக, ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கு வேட்டைக் களமாக இருந்த காட்டுப் பகுதி, ஒரு மாநகர வளர்ச்சிக்குப் பலியாகி, துண்டாடப்பட்டு, மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஒரு மாநகரின் மையத்தில் உள்ள ஒரே தேசியப் பூங்காவாகவும், இந்தியாவின் மிகச் சிறிய தேசியப் பூங்காக்களுள் ஒன்றுமான அது, கிண்டி தேசியப் பூங்காதான். பெயர்தான் பூங்காவே தவிர, அரிய வகைத் தாவரங்களும் உயிரினங்களும் செழித்துள்ள ஒரு சரணாலயம். அதன் எதிர்காலம் இன்றைக்குக் கேள்விக்குறியாகிவிட்டது.

சென்னை கடற்கரை சார்ந்த பகுதிகளிலும், கிழக்கு கடற்கரையின் மற்றப் பகுதிகளிலும் ஒரு காலத்தில் மிகுந்து காணப்பட்ட பசுமைமாறா உலர் காடுகள், முட் செடிகொடிகள் கொண்ட சூழல்தொகுதி (Ecosystem) இந்தக் காட்டின் சிறப்பம்சம். ஒருபுறம் ஆளுநர் மாளிகையையும் மற்றொருபுறம் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தையும் (ஐ.ஐ.டி.) கொண்டுள்ள இந்தக் காட்டுப் பகுதி, அழிந்துவரும் ஆபத்தில் உள்ள வெளிமான்களின் (Black buck) இயற்கைப் புகலிடம். 350 தாவர வகைகளும்,130 பறவை வகைகளும், 60 வகை பூச்சிகள், 60 வகை சிலந்திகள் உள்ளிட்ட உயிரினங்களைக் கொண்ட இந்தக் காடு, இன்றைக்கு 2.7 சதுரக் கிலோமீட்டர் பரப்பு கொண்டதாகச் சுருக்கப்பட்டுவிட்டது.

துண்டாக்கப்பட்ட காடு

ஐ.ஐ.டியைக் கட்டுவதற்காக இந்தக் காட்டின் ஒரு பகுதி மத்தியக் கல்வி அமைச்சகத்திடம் 1958-ம் ஆண்டு கொடுக்கப்பட்டது. இந்தக் காட்டுப் பகுதி இப்படித் திருத்தப்பட்டதை, இங்கு வாழும் உயிரினங்கள் எதுவும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆண்டுதோறும் இந்தத் தேசியப் பூங்காவில் நடைபெறும் மான்கள் கணக்கெடுப்பின்போது தேசியப் பூங்காவாக வரையறுக்கப்பட்ட பகுதி மட்டுமில்லாமல், ஒரே வகை தாவரங்கள், உயிரினங்களைக் கொண்டுள்ள அண்டைப் பகுதிகள் என்பதால் ஆளுநர் மாளிகை, ஐ.ஐ.டியிலும் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இது ஒருங்கிணைந்த காடு என்பதற்கான பல எடுத்துக்காட்டுகளுள் ஒன்று.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1988-ன்படி கிண்டி தேசியப் பூங்காவின் ஏழு முதல் 10 கி.மீ. பரப்பு கொண்ட சுற்றுப் பகுதி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி (Eco Sensitive Area/ Zone) என்று வரையறுக்கப்பட வேண்டும். இப்படி வரையறுக்கப்படுவதன் நோக்கம், பாதுகாக்கப்பட்ட பகுதியில் வாழும் உயிரினங்கள் பருவகால மாற்றம் சார்ந்து இடம்பெயர வசதியாக இருக்கும் என்பதுதான். அத்துடன், மனிதச் சமூகம் சார்ந்த நவீன வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கத்தில் இருந்து அந்த உயிரினங்களைப் பாதுகாக்கவும் இப்பகுதி உதவுகிறது. ஆனால், கிண்டி தேசியப் பூங்காவுக்குச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தேவை இல்லை எனத் தமிழக அரசு தற்போது பரிந்துரைத்து இருக்கிறது. இது சூழலியல் ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

சூழலியல் முக்கியப் பகுதி

சென்னை மக்கள்தொகை மிகுந்த ஒரு மாநகரம் என்பதால், இங்குச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தேவையில்லை என்று முடிவை நியாயப்படுத்த முடியாது. ஏனென்றால், கிண்டி தேசியப் பூங்காவை ஓட்டியுள்ள ஆளுநரின் மாளிகை, ஐ.ஐ.டி. வளாகங்கள் அரிய தாவரங்கள், உயிரினங்கள் அடங்கிய காட்டுப் பகுதியாகவே இன்றைக்கும் இருந்து வருகின்றன. இந்த வளாகங்களில் எஞ்சியுள்ள காட்டுப் பகுதியையாவது கிண்டி தேசியப் பூங்காவுக்கான சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக வரையறுத்தால், எஞ்சியுள்ள காட்டையும் அதில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்கலாம். சென்னை போன்று மோசமாகச் சுற்றுசூழல் சீர்கேடு அடைந்துள்ள நகரத்துக்குக் கிண்டி தேசியப் பூங்கா போன்ற காட்டுப் பகுதி, மாசைக் களைந்து மனிதன் சுவாசிக்க சுத்தமான காற்றை அளிக்கும் நுரையீரலாகப் பெரும் சேவையாற்றி வருகிறது.

இந்தத் தேசியப் பூங்காவுக்குச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை அறிவிக்கத் தமிழக அரசு முறைப்படி நடவடிக்கை எடுப்பது, அந்த நுரையீரலைக் காப்பதற்கான முதல் படியாக இருக்கும்.

ஜெ. தமிழ்ச்செல்வி- கட்டுரையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், தொடர்புக்கு: jtamilselvi@gmail.com

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum