Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாரம்பரிய நோன்பு!
Page 1 of 1 • Share
பாரம்பரிய நோன்பு!
By மு.அ. அபுல் அமீன்
நம்பிக்கையுடையோரே! உங்களின் முன்னோர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல நோன்பு உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது'' என்று திருக்குர்ஆன் (2-183) கூறுகிறது.
உலகம் படைக்கப்பட்டு ஆதிநபி ஆதம் - ஹவ்வா (ஏவாள்) வழியே மக்கள் சமுதாயம் உருவானதிலிருந்து ஒவ்வொரு இறைத்தூதரைப் பின்பற்றும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நோன்பு கடமையாக்கப் பட்டதைக் குர்ஆன் கூறுகிறது.
கால சூழ்நிலை, வளர்ச்சிக் கேற்ப முந்திய விதிகளிலிருந்து பிந்திய சட்டங்களும் நடைமுறைகளும் மாறுபடுவது உலக நியதி. இந் நியதிக்கேற்ப இஸ்லாமிய நோன்பு முந்திய நோன்புகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.
இஸ்லாமியர்களின் ஹிஜ்ரி ஆண்டின் 9- வது மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது ஆண் பெண் இருபாலருக்கான கட்டாய கடமையாகும். நோன்பு நோற்போர் சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்பு உணவு உண்ணுவதையும் நீர் பருகுவதையும் நிறுத்த வேண்டும்.
"இதனையே பஜ்ருக்கு (வைகறை தொழுகை) முன்பே நோன்பு வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்ததை இப்னு உமர் (ரலி) எடுத்துரைப்பது அபூதாவூத் நூலில் காணலாம்.
சூரியன் மறைந்து 15 நிமிடங்களுக்குப் பிறகு நோன்பு திறக்க வேண்டும். ஒரு நாளில் 14 மணி நேரம் உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்க வேண்டும்.
நோன்பிருப்போர் பொய், புறம், கெட்ட பேச்சுக்கள் பேசக்கூடாது. அறிவீனமான பழிவரும் பாவச் செயல்களில் ஈடுபடக்கூடாது. சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) புகன்றது புகாரி முதலிய கிரந்தங்களில் காணப்படுகிறது.
மாதங்களில் சிறந்த ரமலானில்தான் இஸ்லாமியர்களின் வேதமான திருக்குர்ஆன் அருளப் பட்டது என்று எழில் மறைக்குர்ஆனின் 2-185 வது வசனம் கூறுகிறது.
இச்சிறப்புடைய மாதத்தில் சிறப்பிற்குரிய செயல்களையே செய்ய வேண்டும். வெறுக்கத் தக்கவற்றை வெறுத்தொதுக்க வேண்டும். மறுமையில் மகத்தான பலனைத் தரும் இந்நோன்பில் இம்மை பயன்களும் பல உள.
புசியாதிருப்பது புனிதம் மட்டுமல்ல, பல நோய்களுக்கும் நல்ல மருந்து. அதனால் ஆயுர்வேத மருத்துவம், ""லங்கணம் பரம ஒளஷதம்'' என்றுரைக்கிறது.
சித்த மருத்துவமும் சிரத்தையாய் உண்ணா நோன்பை ஊக்குவிக்கிறது. இன்றைய நவீன அலோபதி மருத்துவமும் உணவு கட்டுப்பாட்டைக் கட்டாயப் படுத்துகிறது.
ஆண்டில் 11 மாதங்களும் பசியறியாது புசித்தோர் பசியின் கொடுமையை உணர்ந்து ஏழைகளுக்கு வாரி வழங்க நோன்பு வழிகாட்டுகிறது.
அதனாலேயே இம்மாதத்தில் "ஜகாத்' என்னும் ஏழைவரி கணக்கிட்டு இல்லாதோருக்கு இன் முகத்துடன் ஈயப்படுகிறது.
பள்ளி வாசல்களில் ஒவ்வொருவரும் கொண்டு வரும் பழம், சிற்றுண்டிகளைப் பலருக்கும் வழங்கி ஒன்றாய் அமர்ந்து சமபந்தி போஜனம் போல் நோன்பு திறக்கும் பழக்கம் பகுத்துண்ணும் பண்பைப் பறைசாற்றுகிறது. ஏற்றத் தாழ்வு இல்லாமையை எடுத்தியம்புகிறது.
நன்றி: தினமணி
நம்பிக்கையுடையோரே! உங்களின் முன்னோர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல நோன்பு உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது'' என்று திருக்குர்ஆன் (2-183) கூறுகிறது.
உலகம் படைக்கப்பட்டு ஆதிநபி ஆதம் - ஹவ்வா (ஏவாள்) வழியே மக்கள் சமுதாயம் உருவானதிலிருந்து ஒவ்வொரு இறைத்தூதரைப் பின்பற்றும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நோன்பு கடமையாக்கப் பட்டதைக் குர்ஆன் கூறுகிறது.
கால சூழ்நிலை, வளர்ச்சிக் கேற்ப முந்திய விதிகளிலிருந்து பிந்திய சட்டங்களும் நடைமுறைகளும் மாறுபடுவது உலக நியதி. இந் நியதிக்கேற்ப இஸ்லாமிய நோன்பு முந்திய நோன்புகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.
இஸ்லாமியர்களின் ஹிஜ்ரி ஆண்டின் 9- வது மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது ஆண் பெண் இருபாலருக்கான கட்டாய கடமையாகும். நோன்பு நோற்போர் சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்பு உணவு உண்ணுவதையும் நீர் பருகுவதையும் நிறுத்த வேண்டும்.
"இதனையே பஜ்ருக்கு (வைகறை தொழுகை) முன்பே நோன்பு வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்ததை இப்னு உமர் (ரலி) எடுத்துரைப்பது அபூதாவூத் நூலில் காணலாம்.
சூரியன் மறைந்து 15 நிமிடங்களுக்குப் பிறகு நோன்பு திறக்க வேண்டும். ஒரு நாளில் 14 மணி நேரம் உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்க வேண்டும்.
நோன்பிருப்போர் பொய், புறம், கெட்ட பேச்சுக்கள் பேசக்கூடாது. அறிவீனமான பழிவரும் பாவச் செயல்களில் ஈடுபடக்கூடாது. சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) புகன்றது புகாரி முதலிய கிரந்தங்களில் காணப்படுகிறது.
மாதங்களில் சிறந்த ரமலானில்தான் இஸ்லாமியர்களின் வேதமான திருக்குர்ஆன் அருளப் பட்டது என்று எழில் மறைக்குர்ஆனின் 2-185 வது வசனம் கூறுகிறது.
இச்சிறப்புடைய மாதத்தில் சிறப்பிற்குரிய செயல்களையே செய்ய வேண்டும். வெறுக்கத் தக்கவற்றை வெறுத்தொதுக்க வேண்டும். மறுமையில் மகத்தான பலனைத் தரும் இந்நோன்பில் இம்மை பயன்களும் பல உள.
புசியாதிருப்பது புனிதம் மட்டுமல்ல, பல நோய்களுக்கும் நல்ல மருந்து. அதனால் ஆயுர்வேத மருத்துவம், ""லங்கணம் பரம ஒளஷதம்'' என்றுரைக்கிறது.
சித்த மருத்துவமும் சிரத்தையாய் உண்ணா நோன்பை ஊக்குவிக்கிறது. இன்றைய நவீன அலோபதி மருத்துவமும் உணவு கட்டுப்பாட்டைக் கட்டாயப் படுத்துகிறது.
ஆண்டில் 11 மாதங்களும் பசியறியாது புசித்தோர் பசியின் கொடுமையை உணர்ந்து ஏழைகளுக்கு வாரி வழங்க நோன்பு வழிகாட்டுகிறது.
அதனாலேயே இம்மாதத்தில் "ஜகாத்' என்னும் ஏழைவரி கணக்கிட்டு இல்லாதோருக்கு இன் முகத்துடன் ஈயப்படுகிறது.
பள்ளி வாசல்களில் ஒவ்வொருவரும் கொண்டு வரும் பழம், சிற்றுண்டிகளைப் பலருக்கும் வழங்கி ஒன்றாய் அமர்ந்து சமபந்தி போஜனம் போல் நோன்பு திறக்கும் பழக்கம் பகுத்துண்ணும் பண்பைப் பறைசாற்றுகிறது. ஏற்றத் தாழ்வு இல்லாமையை எடுத்தியம்புகிறது.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நோன்பு கறி கஞ்சி
» ஓட்ஸ் நோன்பு கஞ்சி
» காரடையான் நோன்பு கொழுக்கட்டை
» புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு
» இன்று மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு
» ஓட்ஸ் நோன்பு கஞ்சி
» காரடையான் நோன்பு கொழுக்கட்டை
» புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு
» இன்று மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|