Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மருத்துவமனை...தற்காலிக போதிமரம்!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
மருத்துவமனை...தற்காலிக போதிமரம்!
[You must be registered and logged in to see this image.]
சிறு வயதில் காவலர் குடியிருப்பில் இருந்தோம். வீட்டின் மிக அருகிலேயே காவலர்களுக்கான சிறப்பு மருத்துவமனையும் இருந்தது. ‘புண்ணா இல்லையா’ என்று சந்தேகம் வரும் அளவில் இருக்கும் கண்ணுக்கு எளிதில் புலப்படாதக் காயத்திலிருந்து, பார்ப்பதற்கே பயமூட்டும் அளவில் இருக்கின்ற பெரிய காயங்கள் வரை, பாரபட்சமின்றி வயலெட் நிறத்தில் உள்ள ஒரு திரவம் தடவப்படும்.
டானிக் பெரும்பாலும் ரோஸ் நிறத்தில் இருக்கும். த/அ என்று சமமாகப் பிரித்த வட்ட வடிவ மாத்திரைகள் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், ஒரே விதமான வயிற்றைப் பிரட்டும் மணத்துடன் இருக்கும். தண்ணீரில் கொதிக்க வைத்த ஊசிமுனை, கண்ணாடிப் புட்டியில் இருந்து மருந்தினை உள்வாங்கிக்கொண்டு, வெளியே துளியும் போய் விடக்கூடாது என்ற நோக்கில் முழுவதும் புறத்தோலின் வழியாக உள்ளே செலுத்தப்படும். வெண்ணிற கவுன் அணிந்து, தலையில் வெள்ளைத் தொப்பி, காலில் அதே வெள்ளை நிற காலுறை, காலணி அணிந்து மூன்று செவிலியர்கள் எப்பொழுதும் இருப்பர்.
பக்கத்து வீட்டில் கொடுத்த ரோஜாப்பூவை அம்மாவிடம் கொடுப்பதற்காக வீட்டுக்குள் ஓடிய எனக்கு வயது ஆறு. ஓடிய வேகத்தில் நிலை தடுமாறி பொத்தென்று கீழே விழுந்ததில், திண்ணையில் சிறிது பிளவுபட்டுக் கூர்மையாக இருந்த தரை, நாடியை கிழித்து விட்டது. அலறிக்கொண்டே எழுந்த பொழுது ரத்தம் தொடர்ச்சியாக விழுந்து கொண்டே இருந்தது. பதறிப்போன அம்மாவும் பாட்டியும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு, நாடியில் ஒரு துணியைப் பிடித்து அழுத்திய வண்ணம் கொண்டு சென்றனர். உள் அறையில் படுக்கையில் படுக்க வைத்தபடி, ரத்தத்தைத் துடைத்து விட்டு காயத்தின் அளவை சோதித்தனர்.
தொடர்ச்சியாக கத்திக்கொண்டும் கண்ணீர் விட்டுக்கொண்டும் இருந்த என் முகம் கை, கால்களை இருவர் பிடித்துக் கொள்ள, ஒரு ஊசியில் நூல் போன்ற ஒரு வித நரம்பை உள்ளே செலுத்தி சரி பார்த்துக் கொண்டே வந்த மருத்துவர் ஊசியை உள்ளே நுழைத்து, வெளியே எடுத்த ஒவ்வொரு முறையும் தாங்க முடியாத வலியால் சத்தம் போடுகிறேன். இறுதியாக அவர் கத்திரிக்கோலால் நூலை வெட்டி விட்டு, மருந்தை வைத்துக் கட்டி, நாடியிலிருந்து தலைக்குக் கொண்டு சென்ற கட்டின் நுனிகளை முடிச்சிட்டப் பின்பே அலறல் குறைந்தது. அதன் பிறகு ஊசி குத்தியதும் கண்ணீரும் குறைந்தது. சில நாட்களிலேயே ஆறிய புண், வடுவாக நாடியில் தங்கி, முக்கியமான ஆவணங்களில் அடையாளப் படுத்தப்படுவதில் ஒன்றாக இருந்து வருகிறது.
சித்திரை வருடப்பிறப்பு அன்று, மதியம் கத்தரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் வைத்து உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்படி அம்மாவிடம் சொன்னேன். ஆனால், மதியம் 3 மணிக்கு தயிர் சோறு மட்டுமே சாப்பிட முடிந்தது. அதுவரை ஐந்தாறு முறைக்கு மேலேயே வயிற்றுப்போக்கு போய் இருப்பினும், ‘இப்படியாவது எடை குறையட்டும்’ என்று, வீட்டில் சொல்லவே இல்லை. தொடர்ந்து, இரவு 10 மணி வரை மீண்டும் ஏழெட்டு முறை செல்லவும், நடக்கவும் தெம்பில்லாமல் படுத்துக் கிடந்தேன். அப்போதுதான் வீட்டுக்குத் தெரிய வர, நான் கிடந்த நிலையைப் பார்த்து விட்டு, அருகில் இருந்த வடமலையான் மருத்துவமனைக்கு வண்டி யில் வைத்து அழைத்து சென்றனர்.
தொடர்ச்சியாக போடப்பட்ட பெயர் தெரியாத ஊசிகளும், 14 பாட்டில் குளூகோஸும் என்னை எழுந்து உட்காரவும் நடக்கவும் செய்தன. அன்று மாலை வீட்டுக்கு வந்த பிறகு பார்த்தால், குளூகோஸு ஏற்றி இருந்ததால் வலது உள்ளங்கையின் மேற்புறம் வீங்கி இருந்தது. அடுத்த நாள், நான்காம் பருவத்தின் கடைசி தமிழ்த் தேர்வு, வழக்கம் போல முதல் நாள் மட்டுமே படித்து தெரிந்ததை எழுதும் குழு நான். கையை மடக்கி எழுத முடியாது என தோன்றியதால் மாத்திரையை சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டேன். காலையில் எழுந்ததும் வீக்கம் சற்று வற்றி இருப்பது போல இருந்தது. 7 மணிக்கு நாளிதழைப் புரட்டினேன்.
பழைய தெம்பு வந்தது போல இருந்தது. இன்று எழுதாவிட்டால், மீண்டும் 5ம் பருவத்தோடு சேர்த்து எழுத வேண்டும் என்பதே பெரிய அயர்ச்சியாக இருந்தது. சரியாக அரை மணி நேரத்தில் மேம்போக்கான வாசிப்பு... அடுத்த 10 நிமிடங்கள் ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ளே நானாக சொல்லிப்பார்த்துக் கொண்டு, அம்மாவிடம் ‘குளித்துவிட்டு தேர்வுக்குப் போகிறேன்’ என்ற என்னை ஒரு வார்த்தை சொல்லித் தடுத்ததுடன் நிறுத்திக் கொண்டார். எப்படியும் கேட்க மாட்டேன் என்று தெரியும். சைக்கிளில் சென்றால், உள்ளங்கைக்கு கூடுதல் வேலை கொடுத்தது போல ஆகிவிடும் என்பதால், பேருந்தில் கிளம்பினேன்.
‘எப்படி எடை குறைந்தாய்’ என்ற கேள்விக்கு, முதல் நாள் மருத்துவமனையில் இருந்தேன் என்ற நிஜத்தை நம்பாமல் இருந்த தோழிகள், தோலில் ஊசி குத்தப்பட்ட காயங்களைக் காட்டிய பிறகே நம்பினர். இத்தனை சிரமப்பட்டு எழுதிய விடைத்தாளில், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற திரைப்படக் கதாநாயகியாக இருந்திருக்க வேண்டும். நிகழ்ந்தது நடைமுறையில் என்பதால் தேர்வு முடிவுகள் வரும் பொழுது, குறைவான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தேன்.
அதன் பிறகான மருத்துவமனை வாசம் பிரசவத்துக்காக...
வலி என்பது துளியும் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனக்கு ஸ்கேன் எடுத்த மருத்துவர், ‘குழந்தையின் கழுத்துப் பகுதியில் நீர் உள்ளது, உடனடியாக சிசேரியன் செய்தாக வேண்டும்’ என்றார். முதுகை வளைக்க சொல்லி, நடுவில் உள்ள நீளமான எலும்பின் மத்தியில் ஊசி குத்திய பொழுது ஒரு பெரிய ‘ஆ’ சத்தம், சில நிமிடங்களில் இரண்டாவது ஊசியை அதற்கும் கீழே குத்தும் பொழுது, பென்சிலால் அழுத்திய உணர்வு. நொடிகள் கரைய கரைய... தலை, கைகள் தவிர எல்லா பாகங்களுமே மரத்துப் போனது போல இருந்தது. சிறிது நேரத்திலேயே, குழந்தை அழுகிற சத்தம், எதிரில் இருந்த காலண்டரில், 28.5.2006... கடிகாரத்தில் நேரம், அதிகாலை 2:33. பத்து நிமிட இடைவெளிக்குப் பிறகு, பவுடர் எல்லாம் பூசி, புதுச்சட்டை அணிந்த வருணை கைகளில் ஏந்தி வந்த மருத்துவர் ‘உங்களுக்கு பையன் பொறந்து இருக்கான், நல்லா இருக்கான்’ என்றார்.
குட்டிக் குட்டிக் கை கால்களுடன், மருத்து வரின் கைகளுக்குள், அழகாக படுத்திருந்த வருணைப் பார்த்ததும், சுகமான 10 மாத காத்திருப்பின் பலனை நேரில் கண்ட தாள முடியாத மகிழ்ச்சியில், உள்ளே ஊசி மூலம் ஏற்றப்பட்ட மருந்தில் நிம்மதியுடன் கண் அயர்ந்தேன். அந்த நாள் முழுவதுமே, அதிகமாக எடை கூடி இருந்ததால், எழவோ, திரும்பிப் படுக்கவோ கூட முடியாமலும், கால் எங்கே இருக்கிறது என்பதை உணர முடியாமலும், சீரான இடைவெளிகளில் கொடுக்கப்பட்ட திரவ உணவு வகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இருந்தேன். இதன் ஊடே, குழந்தையைப் பார்க்க வந்த உறவுகளுக்கும் நட்புகளுக்கும் புன்சிரிப்பை பதிலாக அளித்து, ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டும் இருந்தேன். ஒரே மாதிரி கேள்விகள், ஒரே மாதிரி பதில்கள்தான் பெரும்பாலும். இருப்பினும் அலுக்கவில்லை.
வலியை மறக்க செய்வதற்காக போடப்பட்ட ஊசி, 24 மணி நேரம் மட்டும் வேலை செய்யும் போல. மெது மெதுவாக, அடி வயிற்றில், தையல் போடப்பட்ட இடத்தில் வலி தெரிய ஆரம்பித்தது. ‘இப்போதாவது கால்களை உணர முடிகிறதா’ என்று அசைத்துப் பார்த்தப் பொழுது, லேசாக அசைந்தன. வலி குறைய மீண்டும் ஊசி குத்தப்பட்டது. அந்த நேரத்தில் சளி, இருமலால் வேறு பாதிக்கப்பட்டு இருந்ததால், லேசாக இருமினாலே, தையல் பிரிந்து போவது மாதிரி, உயிர் போகும் வலி ஒரு புறம்.
‘எப்போ இருமல் வருமோ’ என்று பயந்து கொண்டே இருந்ததாலோ என்னவோ, அடிக்கடி இருமிக் கொண்டே இருந்தேன். இரண்டாம் நாளில்தான் உட்கார முடிந்தது. மூன்றாம் நாளில், 7,8 அடிகள் எடுத்து வைத்து நடக்க முடிந்தது. நான்காம் நாளில், யார் உதவியுமின்றி குழந்தையைத் தூக்க முடிந்தது. ஐந்தாம் நாள் வீட்டுக்கு வந்தாகிவிட்டது. படிப்படியாக குறைந்த வலி, மறைந்து போனாலும், அந்த ஒரு மாதத்தில் லேசான இருமலோ, தும்மலோ வந்தால், அப்பப்பா...ம்ம்... இவ்வளவையும் கடந்தால், உயிரின் ஒரு பகுதி தனியாக உருவெடுத்து புன்னகைப்பதைப் பார்க்க முடியும் :-)
முன்பு போல ஓரிரு நாட்களில் வந்து செல்கின்ற சளி, காய்ச்சல் போன்றவை எல்லாம், இப்போது முற்றிலும் முடக்கிப் போடும் வலியுடன், மாத்திரை எடுத்துக் கொண்டால் ஏழு நாட்களிலும், மாத்திரை எடுக்காவிட்டால் ஒரு வாரத்திலும் குணமாகின்றன. அதிக நவீன வசதி படைத்த எண்ணிக்கையற்ற பெரிய மருத்துவமனைகள், புதிது புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பிரமாண்ட மான மருத்துவமனைகள், மனதில் பாதுகாப்பு உணர்வைத் தருவதற்கு பதிலாக, பீதியையே எழுப்புகின்றன. நமக்காகவே, நம்மை சார்ந்தவர்களுக்காகவே, நாம் சார்ந்திருப்பவர்களுக்காகவே, குறிப்பிட்ட இடைவேளையில் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கான தனிப்பட்ட வாசம், நம் சுவாசத்தில் கலந்து கொண்டே இருக்கிறது.
ஒரு வகையில் பார்த்தால், மருத்துவமனை படுக்கையில் இருக்கின்ற நேரங்களில், எத்தகைய மனிதர்களையும் எளிதில் மன்னிக்கும் குணசாலிகளாக மாறிவிடுகிறோம். விடை தெரியாமல் இருந்தாலும், வயதில் ஏதோ ஒரு எண்ணுடன் முடிந்து போய் விடலாம் நம் இருப்பு என்கின்ற எண்ணம் மேலோங்கி, அன்பை மட்டுமே வழங்க வேண்டும் என்ற கொள்கை சில நாட்களாவது நீடிக்கிறது. தற்காலிக போதி மரத்தின் கீழ் பெறப்படுகின்ற ஞானம், அடுத்து, நடைமுறை வாழ்க்கையில் ஒன்றும் வரையில் மட்டும் நீடிக்கிறது. உடல்நலமில்லாமல் போவது பல வகைகளில் நமக்கு துன்பத்தை கொடுத்தாலும், ஆழ்ந்த ஓய்வில் ஆழமாகக் கிடக்கின்ற உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது!
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மருத்துவமனை...தற்காலிக போதிமரம்!
அருமை
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி!.
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி!.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மலச்சிக்கலில் தொடங்கி மருத்துவமனை வரை.
» தற்காலிக விடுமுறை
» தற்காலிக விடுமுறை
» தமிழகத்தில் 4 இடங்களில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை:
» வன்பொருள் கற்போம் - கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
» தற்காலிக விடுமுறை
» தற்காலிக விடுமுறை
» தமிழகத்தில் 4 இடங்களில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை:
» வன்பொருள் கற்போம் - கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|