தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி

View previous topic View next topic Go down

சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி Empty சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி

Post by நாஞ்சில் குமார் Fri Jul 04, 2014 9:54 pm

சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி Mv58o3



நூற்றுக்கணக்கான படிகள் கொண்ட மலை உச்சியில் உள்ளது அந்த முருகன் கோயில். மலை அடிவாரத்தில் அர்ச்சனை தட்டுகள், தீபம், பழங்கள், சாமி அபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள், சாமி படம் விற்பனை கடை என சிறு, சிறு கடைகள் நிறைய உண்டு. அங்கு கந்தன் அப்பா சண்முகத்திற்கும் சிறிய அளவில் மாலை, அர்ச்சனைத்தட்டு விற்கும் ஒரு கடை உண்டு.

10ம் வகுப்பு படிக்கும் படு சுட்டியான கந்தன் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் கடையில் இருப்பான். அப்பாவின் வியாபார அனுபவத்தை பார்த்து அவனும் நிறைய கற்றிருந்தான். அப்பா இல்லாத நேரங்களில் கடையை பார்த்துக் கொள்வான். பொருள் வாங்க வரும் பக்தர்களிடம் வயதிற்கேற்ப அன்பொழுக பேசி சாமர்த்தியமாக வியாபாரம் செய்வதில் கந்தன் கில்லாடி.

ஒரு நாள் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவுடன் அவன் அம்மா அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தார். வழக்கமான உற்சாகம் இல்லாமல் அம்மா முகம் வாடியிருப்பதைப் பார்த்து, ‘என்னம்மா, உடம்பு சரியில்லையா?’ என்றான் கந்தன். அவன் கேட்பதை கவனிக்காமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த அம்மாவை தோள் தட்டி ‘என்னாச்சு’ என்று கேட்டான்.

‘கோயில் அடிவாரத்துல போட்டிருக்கிறது எல்லா கடைகளையும் காலி பண்ணச் சொல்ல நோட்டீஸ் வந்துருக்கு. அதான் என்ன பண்றதுன்னு தெரியல’ என்று அம்மா வேதனையுடன் சொல்லிக்கொண்டிருந்த போது அப்பா சண்முகம் வீட்டிற்குள் நுழைந்தார். ‘என்னப்பா.. அம்மா ஏதோ நோட்டீசுன்னு சொல்லுது’ என்றான்.

‘ஆமாப்பா, நடைபாதை கடைகளை எடுக்கச் சொல்லி நோட்டீஸ் வந்திருக்கு. அது கோயில் இடம். நாம காலி பண்ணிதான் ஆகணும். இத விட்டா வேற தொழில் தெரியாது. என்ன பண்றதுன்னு தெரியல’ என்றார் சோகமாக. இரவு தூங்காமல் யோசனையுடன் அப்பா புரண்டு கொண்டிருந்ததை பார்த்த கந்தனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. கடவுள் நம்மை கை விடமாட்டார் என்ற நம்பிக்கையில் தூங்கிப்போனான்.மறுநாள் காலை கடை பகுதி பரபரப்பாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் பலர் கண்ணீருடன் கடையை அகற்றிக் கொண்டிருந்தனர். சிலர் செய்வதறியாது அமர்ந்திருந்தனர். கலங்காத கந்தன் தன் ஆசிரியரை சந்தித்து நெருக்கடியை கூறினான். ‘துன்பம் வரும்போது கலங்காதே. எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு. அதற்கு கொஞ்சம் மாத்தி யோசி’ என்றார் ஆசிரியர்.

கடை போய் விட்டது. வீட்டில் எல்லோரும் கவலையுடன் இருந்தனர். யாரும் எவரிடமும் பேசிக் கொள்ளவில்லை. ‘மனசு சரியில்ல.. நான் கோயிலுக்கு போயிட்டு வர்றேன்’ என கூறிவிட்டு கந்தன் புறப்பட்டான். கால் போன போக்கில் யோசித்துக் கொண்டே சென்ற கந்தன் ஒரு மாற்றுப்பாதையில் சென்றான். அந்த வழியில் ஒரு மான் பண்ணை இருந்தது. அங்கே மான், குரங்குகள், முயல்கள், மயில் உள்ளிட்ட விலங்குகளும், பறவைகளும் இருந்தது. கோயிலுக்கு வரும் மக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.

அந்த பண்ணையில் சிறியவர்களும், பெரியவர்களும் மகிழ்ச்சியாக மான்களையும் பறவைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். கந்தனும் ஆழ்ந்த யோசனையுடன் அமர்ந்து இதை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுமி, தன் கையில் இருந்த சாக்லேட்டை மானுக்கு கொடுக்கட்டுமா? என தன் தாயிடம் கேட்டாள். ‘இதெல்லாம் மான் சாப்பிடாது. கேரட், முள்ளங்கி மாதிரி காய்கறிதான் அது சாப்பிடும்’ என்றாள் தாய். ‘அதை வாங்கி கொடும்மா. நான் மானுக்கு கொடுக்கணும்’ என குழந்தை அடம் பிடித்தது.

இதை கவனித்து சுற்றிலும் திரும்பி பார்த்த கந்தனுக்கு ‘பளீர்’ என மூளையில் மின்னல் வெட்டியது. உடனே வீட்டிற்கு ஓடினான். ‘அப்பா படிக்கட்டு அடிவாரத்துல தானே கடை போடக்கூடாது. வேறெங்காவது போடலாம் தானே’ என்றான். ‘வேறெங்க போடறது. ஜனங்க வர்ற இடத்துல தானே கடை போட முடியும்’ என்றார் அப்பா. ‘மான் பண்ணைக்கு போற வழியில கடை போடலாம்’ என்றான். ‘அங்க எப்படிப்பா அர்ச்சனை தட்டு விக்க முடியும்’ என்றார் சண்முகம் விரக்தியாக.

‘ஏன் அதையே விற்கணும் அப்பா. மான் பண்ணைக்கு வர்றவங்க, அங்குள்ள விலங்கு, பறவைகளுக்கு கொடுக்க முள்ளங்கி, கேரட், தக்காளி கிடைக்காம ஏமாற்றமா இருக்காங்க. இதை விற்க அங்க ஒரு கடையும் இல்ல. இதை நாம வியாபாரமாக்கினா மான்களுக்கும், பறவைகளுக்கும் தீனி கிடைக்கும். நமக்கும் வருமானம் கிடைக்கும். அங்க கடை போட அனுமதி கிடைக்குமா கேளுங்க’ என்றான்.

ஏதோ யோசனையுடன் புறப்பட்டுச் சென்ற சண்முகம் சிறிது நேரத்தில் திரும்பி வந்தபோது அவர் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது. ‘கந்தா.. மான் பண்ணைக்கிட்ட கடை போட அனுமதி கொடுத்துட்டாங்கடா. நல்ல யோசனை சொன்னேடா. என்ன பண்றதுன்னு தவிச்சுக்கிட்டு இருந்த எங்களுக்கு இப்பதாண்டா நிம்மதியா இருக்கு’ என மகனை வாஞ்சையுடன் பெற்றோர் இருவரும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டனர்.

ஒரு பிரச்னை வரும் போது அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்து இடிந்து போகாமல், பொறுமையுடன் செயல்பட்டு அதற்கு தீர்வு காண முயல வேண்டும். பிரச்னையின் தீர்வுக்கு ஒரே வழியில் மட்டும் அல்லாமல் வேறெதாவது மாற்று வழி இருக்குமா என்பதை அலசி ஆராய வேண்டும். அனைத்து பிரச்னைகளுக்கும் கண்டிப்பாக நல்ல தீர்வு இருக்கும். அதற்கு ஒரே கண்ணோட்டத்தில் இல்லாமல் பொறுமையுடன் கொஞ்சம் மாற்றி யோசித்தால் பலன் கிடைக்கும்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி Empty Re: சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி

Post by செந்தில் Sat Jul 05, 2014 2:47 pm

சிறப்பான சிந்தனை.நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி Empty Re: சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி

Post by mohaideen Sun Jul 06, 2014 2:48 pm

கதையின் மூலம் நல்ல தகவல்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி Empty Re: சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி

Post by kanmani singh Wed Jul 09, 2014 2:01 pm

சிறந்த கதை!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி Empty Re: சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum