Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வருங்காலத்திற்கான கட்டிட பாணி
Page 1 of 1 • Share
வருங்காலத்திற்கான கட்டிட பாணி
கட்டுமானம் தவிர்க்க முடியாத ஒரு செயல்பாடு. வணிகக் கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள், அணைகள், மேம்பாலங்கள், ரயில் தண்டவாளங்கள் எனக் கட்டுமானத்தின் பலவகைகள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருகின்றன. இது ஒரு புறம் என்றால் இன்னொரு புறம் குடியிருப்புக்கான கட்டுமானங்கள். இப்படியாகக் கட்டுமானத் துறை உலகமெங்கும் அசுர வளர்ச்சி கண்டுவருகிறது.
இன்றைய கட்டுமானத்தின் தீமைகள்
உலகத்தின் சுற்றுப்புறத்தைச் சீரழிப்பதில் இன்றைக்குள்ள கட்டுமானத் தொழில்நுட்பத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. உலக இயற்கை ஆற்றலின் 40 சதவீதமானது கட்டுமானத் துறையால்தான் அழிகிறது என்கிறார் ராமகிருஷ்ணன். இவர் கன்னியாகுமரியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள மேலாண்மைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர். கட்டிடப் பணிகளுக்கு நாம் பயன்படுத்தும் பகுதிப்பொருட்கள் எல்லாமும் இயற்கையை அழித்து உண்டாக்கப்படுவதால், கட்டுமானப் பணிகள் பூமியின் இயற்கை ஆற்றலைக் கடுமையாகப் பாதிக்கின்றன என்கிறார் அவர். உதாரணமாகச் செங்கல்லை எடுத்துக்கொண்டால் அதற்கு மண் தேவைப்படுகிறது. ஆக மண் வளத்தைச் சுரண்டுகிறோம். ஈரச் செங்கல்லைச் சூளையில் வைத்து எரிக்க விறகுகள் தேவைப் படுகின்றன. அதனால் மரங்களை வெட்ட வேண்டி வருகிறது. செங்கல்லுக்கு மாற்றான ஒரு முறையைக் கண்டுபிடிப்பதன் மூலம் இவ்வாறு ஆற்றல் வீணாவதைத் தடுக்க முடியும். அல்லது செங்கல்லைக் குறைவாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கடைபிடிப்பதன் மூலம் ஆற்றல் வீணாவதைக் குறைக்க முடியும். அதுபோல ஒரு மூட்டை சிமெண்ட் தயாரிக்க 90 கிலோ கார்பன் டை ஆக்ஸைடு செலவாகிறது. மேலும் கட்டுமானக் கம்பிகள் தயாரிக்கவும் மின்சார நிறைய மின்சார ஆற்றல் செலவழிகிறது. ஆக இன்றைக்குள்ள இந்தக் கட்டுமான நுட்பத்தை சுனாமி, வெள்ளம் போல ஒரு பேரிடர் எனலாம் என்கிறார் ராமகிருஷ்ணன்.
உயிர்ப்புள்ள மணல்
கட்டுமானமே இல்லாமல் வாழ்க்கை சாத்தியமல்ல என்பது நிதர்சனம். ஆனால் இன்றைக்குள்ள இயந்திரத் தன்மையிலான கட்டுமானங்களை விட்டுவிட்டு உயிர்ப்புடனான பழையகால கட்டுமானத் தொழில்நுட்பத்திற்குத் திரும்பலாம். அந்தக் காலத்து வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை. செங்கல்லோ சிமெண்டோ கிடையாது. அவை இன்றும் உறுதியோடு இருப்பதைக் கிராமங்களில் பார்க்க முடியும். இந்த முறையை நாம் பின்பற்றலாம் என்கிறார் ராமகிருஷ்ணன். பழைய காலக் கட்டிடக் கலையில் உள்ள இன்னொரு சிறப்பான அம்சம் அது நூற்றாண்டு கடந்தும் உயிர்ப்புடன் இருக்கும். அதாவது ஒரு நூறு ஆண்டுகளில் அந்தக் கட்டிடம் செயலிழக்கிறது என்றால் அதன் இடிபாடுகள் மண்ணுடன் மண்ணாகக் கலந்து உயிர்ப்புள்ள மணலாக (Living Soil) மாறுகின்றன. ஆனால் இன்றைக்குள்ள கட்டிடத்தை அதன் முதுமைக்குப் பிறகு இடிக்கும்போது அது இறந்து உயிர்ப்புள்ள மணலாக (Living Soil) மாற ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்கிறார் ராமகிருஷ்ணன்.
கட்டிடக் கலாபூர்வமும் வலிமையும்
பழைய காலக் கட்டிடப் பணிக்கும் இன்றைக்குள்ள கட்டிடப் பணிக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால் முன்னது ஒரு கலையாகப் போற்றப்பட்டது. பின்னது வெறும் இயந்திரத் தொழிலாகப் பார்க்கப்படுவது. கலை என்றதும் மாட மாளிகைகள்தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் சின்னஞ்சிறு வீடுகளின் கட்டுமானத்தில்கூட சின்னச் சின்ன அழகான அம்சங்களை நாம் பார்க்க முடியும். ராமகிருஷ்ணன் இம்மாதிரியான கட்டுமானங்கள் அழகானவை மட்டுமல்ல வலிமையானவையும்கூட என்கிறார். மேலும் பழைய காலக் கட்டிடங்கள் கலாச்சார அடையாளங்களாகவும் விளங்குகின்றன என்கிறார். கன்னியாகுமரிப் பகுதியை எடுத்துக்கொண்டால் அந்தக் கட்டிடத்தில் ஒரு தனித்தன்மை இருக்கும். மற்ற பகுதிக் கட்டிடங்களும் தனித்த அடையாளத்துடன் இருக்கும் என உதாரணம் காட்டுகிறார். இன்றைக்குக் கன்னியாகுமரியில் வீடுகட்டினாலும் சரி காஷ்மீரில் வீடு கட்டினாலும் சரி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
உள்ளூர்க் கட்டுமானப் பொருட்கள்
உள்ளூர்க் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டுவதால்தான் இந்தத் தனித்தன்மை கிடைக்கிறது எனச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். கன்னியாகுமரிப் பகுதியில் சரளமாகக் கிடைக்கும் வெட்டுக் கற்களைச் செங்கல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். சுட்ட செங்கல்லுக்கு மாற்றாக அழுத்தப்பட்ட செங்கல்லைப் (Compressed Bricks) பயன்படுத்தலாம். மரக் கதவுக்குப் பதிலாக சிமெண்ட் கதவைப் பயன்படுத்தும்போது இயற்கை ஆற்றல் சேமிக்கப்படும் வாய்ப்புள்ளது என்கிறார். மூங்கில் அதிகம் உள்ள இடங்களில் மூங்கிலைப் பயன்படுத்திச் சுவர் எழுப்பலாம். அதாவது மூங்கிலை ஆதாரமாகக் கொண்டு அதன் மேல் மண் பூசிச் சுவர் எழுப்பலாம். மகாத்மா காந்தி 8 கிலோ மீட்டர் சுற்றளவில் கிடைக்கும் பொருளைக்கொண்டு வீடு கட்டப்படுவதைப் பசுமைக் கட்டிடம் என்றார். ஆனால் சில அமெரிக்க நிறுவனங்கள் அதைத் தங்கள் வசதிக்காக 70 கிலோ மீட்டராக மாற்றிச் சான்றிதழ் அளிக்கின்றன என ராமகிருஷ்ணன் விமர்சிக்கிறார்.
இன்றைக்குப் பசுமைக் கட்டிடங்கள் எனக் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்படுவை உண்மையான பசுமைக் கட்டிடங்கள் அல்ல. கண்ணாடியையும் அலுமினியத்தையும் கொண்டு வடிவமைத்துவிட்டு அதைப் பசுமைக் கட்டிடம் என்கிறார்கள். உண்மையில் கண்ணாடி தயாரிக்க அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. சில நிறுவனங்கள் சூரிய மின்சக்தி முறையை மட்டும் காட்டிப் பசுமைக் கட்டிடம் எனச் சான்றிதழ் பெற்றுக்கொள்கின்றன என்கிறார் ராமகிருஷ்ணன்.
பசுமைக் கட்டிடத்தின் அம்சங்கள்
இயற்கைக் கட்டுமானப் பொருட்கள்
இயற்கை ஒளியைப் பயன்படுத்துதல்
மழை நீர் சேகரிப்பு
கழிவு நீர் மேலாண்மை (கழிவு நீர் வெளியேற்றாமல் அதைச் சமையல் வாயுவாக அல்லது உரமாக மாற்றுதல்)
மாற்றுக் கட்டுமானத்திற்குப் பயிற்சி
இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் கட்டுமானச் செலவைக் குறைக்கும் வகையிலும் சுவாமி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள மேலாண்மைத் திட்டத்தில் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதில் மாற்றுக் கட்டுமானப் பொருட்கள் உருவாக்கும் தொழில் நுட்பங்கள், லாரி பேக்கரின் கட்டுமான நுட்பங்கள் உட்பட பல முறைகள் போதிக்கப்படுகின்றன. இப்போதுள்ள முறையைக் காட்டிலும் இந்த முறையை உபயோகிக்கும்போது கட்டுமானச் செலவுகள் ஓரளவு குறையும் என்கிறார் ராமகிருஷ்ணன். முற்றிலும் மண் கட்டிடம் கட்டுவது பாதுகாப்பற்றது என உணர்ந்தால் லாரி பேக்கரின் ‘எலிப் பொறி’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டும் நுட்பத்தை அவர் முன்வைக்கிறார். இதன் மூலம் செங்கற்கள் பயன்பாடும் குறையும் சிமெண்ட் அளவும் குறையும். படித்துப் பார்க்கும்போது இவை எல்லாம் இன்றைக்கு எவ்வளவு சாத்தியமாகும் எனக் கேள்வி எழலாம். ஆனால் மாற்றுக் கட்டுமானம் நாளைய உலகின் அத்தியாவசியம் ஆகும்.
பயிற்சி தொடர்புக்கு: vknardep@gmail.com
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வருங்காலத்திற்கான கட்டிட பாணி
நல்லதொரு தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வருங்காலத்திற்கான கட்டிட பாணி
பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கட்டிட விரிசல்களைத் தவிர்க்க
» கட்டிட விரிசல்களுக்கு யார் பொறுப்பு?
» அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில், ஈரோடு
» அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில், ஈரோடு
» நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி
» கட்டிட விரிசல்களுக்கு யார் பொறுப்பு?
» அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில், ஈரோடு
» அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில், ஈரோடு
» நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|