தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?

View previous topic View next topic Go down

ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா? Empty ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?

Post by முழுமுதலோன் Mon Jul 14, 2014 11:40 am

ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?

என்னது உலகமயமாக்கபட்ட சொல்லா, இது நம்மூர் ஹிந்துக்கள் தானே உபயோகிக்கும் ஒரு தமிழ் சொல் அல்லது எனக்கு தெரிந்த வரை ஓம், அல்லது அவும் அல்லது அம் என்ற வட மொழி சொல்லின் மறுவலே இந்த ஓம் என்ற சொல் இது எப்படி உலகம் முழுவதும் என்று கேட்பவர்களுக்கான விளக்கத்தை இரண்டாம் பாராகிராஃபில் தெரிவித்துள்ளேன்

அதற்கு முன் இந்த ஓம் என்ற சொல் நம் மனித வாழ்வில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்தாலும் இதை நவீன விஞ்ஞானம்- இந்த சொல்லுக்கு ஒரு சூப்பர் பவர் என நிருபித்து உள்ளது……….ஓம் என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கப்பட்டதன் காரணம் அதற்குள் அடங்கிய பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் ஒரு நல்ல விஷயங்களுக்கான அதிர்வு தான் அந்த வார்த்தை.

ஆம் ஒரு சில கோயில்களிலும், அரண்மனைகளிலும், சில வீடுகள் மடங்கள் இந்த மாதிரி இடத்திலும் நீங்கள் காணக்கூடிய ஒரு ஸ்ரீ சக்கரம் (யந்த்ரம்) என்னவென்று பலருக்கு தெரியாது. பலர் இதை ஒரு செப்புத் தகடின் கிறுக்கல்கள் என நினைத்திருக்கலாம். ஓம் என்ற சொல்லின் உருவம் அல்லது படிவம் தான் என்று சயின்ஸ் நிருபித்துள்ளது.

ஆம் ஹான்ஸ் ஜென்னி என்னும் விஞ்ஞானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர்தான் ஒலியின் பரிமாணத்தை நம் பார்வைக்கு கொண்டுவந்தவர். இவர் கண்டுபிடித்த சாதனம் தான் டோனோஸ்கோப் (Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி. இந்த டோனோஸ்கோப்பில் ஓம் என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை .காண முடியும் அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். நீங்களும் உச்சரித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்திருப்பதை அதுவும் பல ஆயிரகணக்கான ஆண்டுகளூக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமாணம் இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இதன் அர்த்தத்தை உணர்ந்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை.
சரி நம் ஓம் சொல்லுக்கு வருவோம்

ஒம் பல மொழிகளின் பிரணவ மந்திரமாக, வடிவ, உருவ அளவில் வேறுபட்டாலும் இதன் ஒலி ஓங்கார நாதமாக ஒன்றாக இணைந்த அளவில் உள்ளது. ஒம் என்ற தமிழ் சொல்லிற்கு ஒ = அ + உ + ம் (அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்).

இதை பிராமண சொல் என்று கூறுபவர்களுக்கு, இந்த ஓம் வடிவம் சட்டைமுனி சூத்திரத்தில் – ” ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு ” என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார். ஓ என்ற சொல் தாழ்ந்தும் ம் என்ற சொல் நீண்டும் இருந்தால் ஒருவித ஒலி அதிர்வுகள் கிடைக்கும். அது போக ஒ என்ற வார்த்தை உச்சரிக்கும் போது மூச்சை உள்ளே இழுத்து ம் என்றும் கூறும் போது எல்லா வாயுவையும் வெளியே அனுப்பும் இன்னொரு சான்றோரின் மூச்சு பயிற்சியின் சீக்ரெட்.
அது போக ஓ என்று ஜெபிக்கையில், நினைத்த நல்ல விஷயத்தை/உருவத்தை/விரும்பும் கடவுளை நிலை நிறுத்தினால், ம் என்று கூறும்போது அது அப்படியே அந்த அதிர்வலை நம்மை சுற்றி சூழ்ந்து கொண்டு நல்லது நடக்கும் என உறுதியாகிறது. அது போக ஓம் என்ற ஒலியை நாம் கேட்கும் போது சயின்டிஃபிக்காய் கெட்ட விஷயங்கள் தோன்றுவது தடைப்படும். நிறைய குழப்பங்கள் இருக்கும் போது இந்த ஓம் ஒலி அதிர்வின் எல்லையில் நாம் இருந்தால் நம் மனதும் தெளிவு பெறும் என்பது தெளிவாகிறது.

பகவத் கீதை ஒரு கற்பனை கதை அல்லது அது கிருஷ்ணனின் அவதாரத்தை குறிக்கும் ஒரு வரலாற்று உண்மை என கூறுபவர்களுக்கு, இதோ கீதையில் கூட ஓம் என்ற வார்த்தை வருகிறது பாருங்கள், கீதை – 8 – 13 “எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்.”
ஓம் என்ற சொல் ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.

ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன. இவை மூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை, இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.

சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதி கூட தன் மனைவிக்கும் குடும்பத்தாருக்கும் கடிதம் எழுதும் போது ஓம் என்று முதலில் எழுதி தான் இந்த கடிதத்தை எழுதவே ஆரம்பிப்பானாம். இதை விட இதை 108 தடவை உச்சரிக்கும் ஒரு விஷயமும் அறிவியல் பூர்வ உண்மையை பல ஆண்டுகளுக்கு முன் கணித்த நம் மாமுனிவர்களின் விளக்கமும் சில ஆண்டுகளுக்கு முன் வான் வெளி ஆராய்ச்சி உண்மையும் ஒன்று தான்.

அதாவது சூரியன், சந்திரனின் சராசரி டயாமீட்டர்களின் அளவு தான் பூமியின் தூரம். இது 0.5% சூரியனுக்கும் 2.0% சந்திரனுக்கும் என்ற சமீபத்திய புள்ளிய தூர விவரம் பல்லாயிர ஆண்டு இந்தியர்களின் அறிவை மெச்சுகின்றன.

ஓம் என்ற வார்த்தை பிராமணர்களின் சொல், அல்லது வட மொழி சொல், அல்லது இது ஆர்யர்களின் சொல் என்று சிலர் கூறலாம். இது உண்மையல்ல. பிரபஞ்சம் எப்படி கடவுளின் வடிவமைப்போ அது போலத்தான் இந்த ஓம் என்ற சொல்லும். சிந்து வெளி நாகரிகம் என்ன என்பது நம் எல்லோருக்கு தெரிந்ததே, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அருமையாக கட்டப்பட்ட கட்டிடங்கள், நவீன மாட மாளிகைகள், பிரமாண்டமான வேலைப்பாடுகள் நிறைந்த நவீன கட்டமைப்பை கொண்டு வந்தவர்கள் தான் இந்த சிந்து வெளி சமூகம்.

இந்த சிந்து வழி சமூகத்தின் செங்கல்களில் கூட இந்த ஓம் என்ற சொல் இருந்ததாக தொல் பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது பல நாடுகளில், பல மாதிரி கூறினாலும் இதன் வலிமையை உணர்ந்த முதல் ஐரோப்பிய மனிதன் ஹிட்லர் தான். சிந்து நதிக்கரையில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களைக் கொண்ட உலக பெருமைகள் கொண்ட நாடென்றால் அது இந்தியா என்னும் மாபெரும் நாடுதான்.

உலகத்தின் ஒவ்வொரு ஆளும் கண்களுக்கு, இந்தியா தான் டார்க்கெட். அது பிரிட்டிஷ் ஆகட்டும், போர்ச்சூகீஸ் ஆகட்டும், பிரஞ்சு ஆகட்டும், ஜப்பானியர்கள் ஆகட்டும், மொகலாயர்கள் ஆகட்டும் இந்தியாவின் மீது கொண்ட ஆசை இங்கிருந்த கலாச்சாரம், விலை மதிப்பில்லா பொருட்கள் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். அதன்படி பார்த்தால் ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னமும் இந்த ஓம் என்ற சொல்லின் தழுவல் தான். இது ஹிட்லர் உபயோகிக்கும் முன் இந்துக்கள் இப்படி இருக்க காரணம், அவர்களிடம் உள்ள முதல் மந்திரமான ஓம் என்ற எழுத்துதான் என மேடிசன் கிரான்ட் என்பவரின் நூலே (தி பாஸிங் ஆஃப் கிரேட் ரேஸ்) இதற்கு சான்று.

அதை நிலை நிறுத்தி ஹிட்லரின் மூளையாக செயல் பட்ட ஹென்ரிச் மூலரும் இதை கூறியுள்ளார். இதை விட அவர் கூறிய வார்த்தைகள் தான் மிகுந்த ஆச்சரியத்தில் உண்டாக்கியது. அது அவர் எப்படி யூத இனத்தை அழிக்க ஹிட்லர் கமான்டை நான் உபயோகித்தேன் என்றால், ஒரு கையில் பகவத் கீதை மற்றும் ஹிட்லர் வார்த்தை, கிருஷண பகவான் அர்ஜுனனுக்கு எப்படி ஒரு சத்திய வாக்கோ அதே தான் என்னுடைய பணியும், அது போல ஹிட்லரை நான் 11ஆவது கிருஷ்ண அவதாரமாக காண்கிறேன் என்று அவர் மட்டுமல்ல, மேக்ஸ்னியானி போர்ட்டஸ் எனற பிரஞ்சு பெண் (பின்பு தன்னை சாவித்ரி தேவி என்று மாற்றி கொண்டவர்) கூட கூறுகிறார்.

இதற்கு மேலே இதை பற்றி நாம் பேசினால் பவர்ஃபுல் ஆர்யர்கள் நாங்கதான் என்ற குரல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒலிக்க இதற்கு போட்டி இருந்தது- இருக்கிறது.

ஓம் என்ற வார்த்தை, ஒரு காலத்தில் நல்லது நினைத்து தியானம் கொண்ட முனிவர்களுக்கும், கெட்டது நினைத்து தவம் கொண்ட சில அரக்கர்களுக்கும், உருவான ஒரு காமன் லேங்குவேஜ் இந்த ஒம்.

ஓம் என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாதவர்கள், அவர்கள் மனதுக்குள் தியானம், யோகா, உடற்பயிற்சி செய்யும் போது கூட இதை ஃபாலோ பண்ணினாலே நிறைய மாறுதல்கள் உண்டாகும் என சவுன்ட் ஆஃப் ஹீலீங் கோட்பாடுபடி இது மரணத்தை கூட தள்ளி வைக்கும் ஒரு அற்புத செயல் என ஜொனாதன் கோல்ட்மேன் என்ற அமெரிக்க டாக்டர் கூறுகிறார்.

ஓம் ஓம் ஓம்………….
நன்றியுடன் ரவி நாகராஜன் …..



ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா? 10491101_680866585300860_2758714270505636464_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா? Empty Re: ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?

Post by செந்தில் Mon Jul 14, 2014 2:33 pm

அறிய பகிர்வுக்கு நன்றி அண்ணா.

 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா? Empty Re: ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 15, 2014 9:09 am

இச் சொல்லும் மந்திரம்தான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா? Empty Re: ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum