தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தண்ணீரில் எழுதிய பாடம்

View previous topic View next topic Go down

தண்ணீரில் எழுதிய பாடம் Empty தண்ணீரில் எழுதிய பாடம்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 15, 2014 8:53 pm

[You must be registered and logged in to see this image.]

தவறுகளில் இருந்து புதிதாகக் கற்றுக் கொள்ளும் திறனைப் பெற்ற உயிரினம் மனித இனம். உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கை ஏற்கெனவே எழுதிய நிரலின்படி, தவறின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதன் மட்டுமே தவறுகளைத் திருத்தி கொள்ளாத, தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாத ஜீவியாக இருக்கிறான்.

இயற்கை பல வகைகளில் எச்சரிக்கைகளைக் கொடுத்த பிறகும், கற்றுக்கொள்ளாத மனித இனத்தை வேறென்னச் செய்து திருத்த முடியும்? இதற்குச் சிறந்த உதாரணம், கடந்த ஆண்டு உத்தர்கண்ட்டில் நிகழ்ந்த பேரழிவு. அந்தப் பேரழிவில் இயற்கைச் சீற்றத்தின் பங்கு முழுமையானதல்ல. ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்ததற்கு மனிதத் தவறுகளே முதன்மைக் காரணம்.

பேரழிவின் முகம்

உத்தர்கண்ட்டில் மே மாதம் முதல் அக்டோபர் வரை கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனிதத் தலங்களை 10 லட்சம் பக்தர்கள் தரிசிக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டபோது, புவியியல் ரீதியில் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பிருந்த இந்தப் பகுதிகளில் பக்தர்கள் குவிந்து கிடந்தார்கள். பேரழிவு நிகழ்ந்த நேரத்தில், கேதார்நாத்தில் இருந்த பக்தர்களின் எண்ணிக்கை 26,000. அங்கு மட்டும் 5,500 பேர் உயிரிழந்தனர்.

இந்தப் பேரழிவுக்கு முறைப்படுத்தப்படாத சுற்றுலாதான் காரணம் என்று தேசியப் பேரழிவு மேலாண்மை நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பித்த அறிக்கையில் தெளிவாகக் கூறியிருக்கிறது. இப்போது ஓராண்டு கடந்துவிட்டது. ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? கிஞ்சித்தும் இல்லை என்பதுதான் நிதர்சன நிலை.

மாறியது என்ன?

சூழலியல் ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இந்த மலைத் தொடர் பகுதியில் சுற்றுலாவை முறைப்படுத்த மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சொற்பத்திலும் சொற்பம். பேரழிவு ஏற்பட்ட பிறகு அனைத்துத் தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்ட மாநில அரசு, பல வாக்குறுதிகளை அப்போது அள்ளி வீசி இருந்தது. ஒவ்வொரு புனிதத் தலத்தின் சுற்றுலாப் பயணிகள் தாங்குதிறன் (Carrying capacity) தொடர்பாகக் கணக்கிட ஆராய்ச்சி நடத்தப்படும், அதற்கு ஏற்ப சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கட்டுப் படுத்தப்படும். பயோமெட்ரிக் பதிவு அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும், பயோமெட்ரிக் அட்டையும் வழங்கப்படும். தீவிர மருத்துவப் பிரச்சினை உள்ள சுற்றுலா பயணிகள் சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பல்வேறு வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் இன்றைக்கு, அது எதுவும் நடந்ததற்கான அத்தாட்சி இல்லை.

இதற்கு அரசுத் தரப்பில் காரணமாகச் சொல்லப்படுவ தெல்லாம், ‘பயோமெட்ரிக் அட்டை பற்றி விழிப்புணர்வு இல்லாமலேயே பக்தர்கள் கோயிலை அடைந்து விடுகிறார்கள். அவர்களைத் திரும்ப அனுப்ப முடியாது' என்பதுதான். இன்றைக்கும் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு அரசுத் துறையும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை வித்தியாசமாகக் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன.

உத்தர்கண்ட் அரசு வாக்குறுதி அளித்தபடி, மாநிலச் சுற்றுலா அமைச்சகம் 2014 மார்ச் 8-ம் தேதிதான் மாநிலத்திலுள்ள சுற்றுலாத் தலங்களின் தாங்குதிறன் தொடர்பான ஆராய்ச்சிக்கான முன்மொழிவு கேட்டு மிகமிகத் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டது.

காத்திருக்கும் அழிவு

கடந்த ஆண்டு நிகழ்ந்த பேரழிவால் உத்தர்கண்ட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு சற்றுச் சரிந்திருக்கிறது. ஆனால், இது முறையான விழிப் புணர்வால் ஏற்பட்ட ஒன்றல்ல.

கேதார்நாத்துக்கு இந்த ஆண்டு இதுவரை சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கை 26,000 என்பதை வைத்துப் பார்க்கும்போது, மீண்டும் ஒரு பேரழிவு நிகழ்ந்தால் கடந்த ஆண்டைப் போலவே மோசமான இழப்பே ஏற்படும் என்று தெரிகிறது.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தண்ணீரில் எழுதிய பாடம் Empty Re: தண்ணீரில் எழுதிய பாடம்

Post by rammalar Tue Jul 15, 2014 9:29 pm

பேரழிவு ஏதும் மீண்டும் நேராது
என்ற நம்பிக்கையில்தான் சுற்றுலா
வருகிறார்கள்...
-
நம்பிக்கைதானே வாழ்க்கை..!!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

தண்ணீரில் எழுதிய பாடம் Empty Re: தண்ணீரில் எழுதிய பாடம்

Post by நண்பன் Wed Jul 16, 2014 12:27 pm

சோகம் 
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

தண்ணீரில் எழுதிய பாடம் Empty Re: தண்ணீரில் எழுதிய பாடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum