Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தை சிவப்பாக மட்டுமல்ல... சுகப்பிரசவத்திற்கும் குங்குமப்பூ
Page 1 of 1 • Share
குழந்தை சிவப்பாக மட்டுமல்ல... சுகப்பிரசவத்திற்கும் குங்குமப்பூ
பிரசவம் என்பது ஒரு பெண்ணின் மறுஜென்மம் என்பது பொதுவான கருத்தாகும். ஆனால் தாய்மை அடைந்த ஒரு பெண்ணின் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. குழந்தை பிறந்தவுடன் அதை பார்த்தவுடன் தாய்க்கு ஏற்பட்ட எல்லா வேதனையும் விலகிவிடும். தலைப்பிரசவ பெண்களுக்கு பலர் பலவித பயமுறுத்தல்களை அறிவுரையாக வழங்கியிருப்பார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சீரான உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமாக இருந்தால் போதும். பிரசவம் சுகமாக இருக்கும் என்று ஆறுதல் சொல்பவர்களின் எண்ணிக்கையிலும் சிலர் இருப்பார்கள்.
அதேபோல் கர்ப்பிணிகள் பயப்படாமல் இருக்க மேலும் பல டிப்ஸ்கள் இதோ...
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். கருவுற்ற பெண்கள் பொதுவாக குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களிலும், ஜன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக்கூடாது. மழையிலோ மழைச்சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம்சூடான நீரில் குளித்து விட வேண்டும்.
எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரை பருகுவது நல்லது. அதிலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக சூடான நீரை குடிக்கக்கூடாது. குளிர்சாதன பெட்டியில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவு பொருட்களை தவிர்த்தால் ஜலதோஷம் வராது. ஜலதோஷம் வந்தால் அது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். அதிக காரம், புளிப்பு போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்பது நல்லது.
குங்குமப்பூ
பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரும் கர்ப்பிணிக்கு சிறிதளவு குங்குமப்பூவுடன் சோம்பு நீரில் கரைத்து கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும். கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் வெற்றிலையுடன், சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை போட்டு குடித்து வந்தாலோ பிறக்கும் குழந்தை சிவப்பாக இருக்கும்.
வாக்கிங் அவசியம்
கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல்நிலையை பலப்படுத்தும். கர்ப்பகாலத்தின் ஆரம்ப மாதங்களிலும், கடைசி மாதங்களிலும் களைப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும்போது தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. கர்ப்பிணிகள் தங்களால் முடிந்த வேலைகளை மட்டும் செய்யலாம். களைப்பை ஏற்படுத்தும் வேலைகளை செய்வது தவிர்ப்பது நல்லது.
கீரைகள், பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணிகள் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும். உணவு சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தல் போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. அதிக சத்தம் போட்டு பேசக்கூடாது. இதனால் வயிற்றில் உள்ள கருவிற்கு அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
புரதம்: கர்ப்ப காலத்தில் புரதத்தின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே புரதம் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது முக்கியமாகும். மீன், இறைச்சி வகைகளுடன், கடலை, அவரை போன்றவை அதிக புரதச்சத்து கொண்டவையாகும்.
போலிக் அமிலம்: கருவுற்ற முதல் சில வாரங்களில் சிசுவின் நரம்பு மண்டலம் வளர்ச்சிபெறும் காலம். எனவே போலிக் அமிலம் அவசியமானது. பச்சை நிறமான காய்கறி வகைகள் போலிக் அமிலத்தை அதிகமாக கொண்டுள்ளன. அவற்றை நீராவியில் வைத்து சாப்பிடுதல் அல்லது பச்சையாகவே சாப்பிடுதல் சிறந்தது.
நார்ப்பொருள்: கர்ப்பிணிகளுக்கு சாதாரணமாகவே மலச்சிக்கல் இருக்கும். இதை தவிர்க்க நார்ப்பொருள் அடங்கிய உணவுகளை தினமும் உட்கொள்வது அவசியம். பழ வகைகள், காய்கறி வகைகளில் இவற்றை சாப்பிடலாம். தானிய வகை, நாட்டரிசி, விதை வகைகள், இலந்தம்பழம், திராட்சை போன்றவற்றிலும் நார்ச்சத்து உள்ளது.
நல்ல ஓய்வு: கர்ப்பமாக இருக்கும்போது நீண்ட நேர ஓய்வு அவசியமானது. அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நன்மையை விளைவிக்கும். கண்களின் மீது சூரிய வெளிச்சம் படாமல் இருக்க, கண்களுக்கு மாஸ்கை கூட அணியலாம்.
மெதுவாக விழியுங்கள்: காலையில் சீக்கிரம் எழும் பழக்கம் இருக்கலாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும். காலையில் எழுந்திருக்க உங்கள் உடலுக்கு போதிய நேரத்தை கொடுங்கள். மெதுவாக எழுந்திருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் போதுமான அளவில் நீரை பருக வேண்டும். நீர்ச்சத்து குறைந்தால் பாதிப்பு ஏற்படும் எனவே முடிந்த வரை தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடித்தால் சுகமான பிரசவம் ஏற்படும்.
தவிர்க்க வேண்டியவை
சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே நோயால் அவதிப்படும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளும் பாதிக்கப்படலாம்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: குழந்தை சிவப்பாக மட்டுமல்ல... சுகப்பிரசவத்திற்கும் குங்குமப்பூ
தாய்மார்கள் அறியவேண்டிய தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குழந்தை சிவப்பாக மட்டுமல்ல... சுகப்பிரசவத்திற்கும் குங்குமப்பூ
நல்ல பகிர்வு நண்பரே...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» குழந்தை சிவப்பாக பிறக்க..
» குங்கும பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்குமா?
» குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது உண்மையா?
» குங்குமப்பூ அழகா? ஆரோக்கியமா?
» அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ
» குங்கும பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்குமா?
» குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது உண்மையா?
» குங்குமப்பூ அழகா? ஆரோக்கியமா?
» அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|