தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாணவர்களுக்கான கல்வி கடன்

View previous topic View next topic Go down

மாணவர்களுக்கான கல்வி கடன் Empty மாணவர்களுக்கான கல்வி கடன்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:28 pm

தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று பலரும் வியந்து பாராட்டுகிற அளவில் இங்குள்ள கல்வித்தரம், மற்ற மாநிலங்களை பின்பற்ற வைக்கிறது. ஆண்டுதோறும் கல்விக்காக தமிழக பட்ஜெட்டில் கணிசமான தொகை ஒதுக்கப்படுகிறது. பிளஸ்–2 வரை ஒரு மாணவனின் பெற்றோருக்கு எந்த செலவும் இல்லாமல் அனைத்து தேவைகளையும் அரசே பூர்த்தி செய்துவிடுவதால், பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதை ஏழை பெற்றோர்கூட ஒரு சுமையாக கருதுவதில்லை. மாணவர்களிடமும் ஒரு விழிப்புணர்வு வந்துவிட்டது. பிளஸ்–2 தேறியவுடன் எல்லா மாணவர்களும் சரி, அவர்கள் பெற்றோர்களும் சரி, இதோடு படிப்பை நிறுத்திவிடக்கூடாது, கடன் வாங்கியாவது உயர் படிப்பை படித்து முடித்துவிட்டு, வேலைக்குப்போய்விட்டால், அவர்களே கடனையும் அடைத்துவிடுவார்கள், அவர்களின் எதிர்காலமும், குடும்பத்தின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்ற உணர்வில், அவர்களின் கண்ணுக்கு தெரிவது என்ஜினீயரிங் கல்லூரிதான்.

அதிலும் நன்றாக படித்துவிட்டால் சாப்ட்வேர் கம்பெனிகளில் ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் நல்ல வேலை கிடைத்துவிடுகிறது, இப்போதுள்ள தொழில் வளர்ச்சியின் காரணமாக பிரபல தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்ற வகையில், மாணவர்களுக்கு ஆபத்பாந்தவனாக தெரிவது வங்கிக்கடன்தான். மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி படிப்புகளுக்காக வங்கிகள் கடன் கொடுக்கும், எந்த மாணவருக்கும் இல்லையென்ற நிலையே ஏற்படாது, தட்டினால் வங்கி கதவுகள் திறக்கும், கேட்டால் உடனடியாக கிடைக்கும் என்றெல்லாம் உறுதிமொழிகள் அள்ளிவீசப்பட்டன. இந்தியாவில் படிக்க ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் படிக்க ரூ.20 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், யதார்த்த நிலையில் இந்த வங்கிக்கடன் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. மாணவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது. சமீபத்தில் ஒரு மாணவர், என்ஜினீயரிங் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் இடம் வாங்கியவர், 59 சதவீத மார்க்குகள் எடுத்தவர்–அவருக்கு கடன் தரமுடியாது என்று வங்கி மறுத்துவிட்டது. 60 சதவீத மார்க்குகள் பெற்றால்தான் கடன் உண்டு என்று கதவை மூடிவிட்டது. அவர் கேட்டதோ ரூ.1 லட்சத்து 88 ஆயிரம்தான். தனக்கு ஒரு வழிகாட்ட அந்த மாணவர் சென்னை ஐகோர்ட்டின் கதவுகளைத்தட்டினார். நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்யநாராயணன் ஆகியோர் இப்போது ஒரு தெளிவான தீர்ப்பை வங்கிகளுக்கு வழங்கிவிட்டனர்.

பொருளாதார ரீதியாக நலிந்த மாணவர்கள் பலன் பெறுவதற்காக அரசாங்கம் கொண்டுவந்த திட்டம் இது. மாணவர்களுக்கு ஓசிக்கு கொடுப்பதில்லை. பின்னர் குறைந்த வட்டியோடு திரும்பக்கட்டும் கடன்தான் இது. இதை வங்கிகள் புரிந்துகொண்டு, கஷ்டப்படும் மாணவர்கள் படிக்க கடன் வழங்க வேண்டும். மேனேஜ்மெண்ட் கோட்டாவில் படிக்கும் மாணவர்களுக்கும் கடன் வழங்கவேண்டும் என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல, வங்கிக்கடன் விண்ணப்பங்களை 15 நாட்களில் இருந்து ஒரு மாதத்துக்குள் தீர்வு செய்யவேண்டும். மேலும், இந்திய வங்கி சங்கத்தின் வழிமுறைகளில் எந்த இடத்திலும் 60 சதவீதத்துக்குமேல் மார்க் எடுத்த மாணவர்களுக்கு மட்டுமே வங்கிகள் கடன் கொடுக்கலாம் என்று குறிப்பிடவில்லை என்று தெளிவாகவே நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

நிச்சயமாக இது, காலத்தே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. நடைமுறையில் வங்கிகளில் இந்த நிலையே இல்லை. அரசு நிர்ணயித்த மார்க்குகளின் அடிப்படையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம்பெறும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கவேண்டும், அதிலும் விண்ணப்பித்த ஒருமாத காலத்துக்குள் பரிசீலித்து தீர்வு காணவேண்டும் என்ற நிலைப்பாடை உடனடியாக அனைத்து வங்கி கிளைகளும் எடுக்கவேண்டும், இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை இந்திய வங்கிகள் சங்கம் வகுக்கவேண்டும் என்பதுதான் மாணவர்களின் கோரிக்கையாகும். தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக கவுன்சிலிங் நடந்துவருகிறது. ஆகஸ்டு 1–ந் தேதி கல்லூரிகள் திறந்துவிடும். மாணவர்கள் வங்கிகளை நாடி புற்றீசல்போல வருவார்கள். அவர்களின் விண்ணப்பங்களை வங்கிகள் கருணையோடு பரிசீலிக்க இந்த தீர்ப்பு நிச்சயமாக வழிகாட்டும்.


நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மாணவர்களுக்கான கல்வி கடன் Empty Re: மாணவர்களுக்கான கல்வி கடன்

Post by ஸ்ரீராம் Tue Aug 19, 2014 11:15 am

நல்லதொரு பதிவுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum