Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சங்கடம் விலக்கினால் சாதிக்கலாம் : மாத்தி யோசி
Page 1 of 1 • Share
சங்கடம் விலக்கினால் சாதிக்கலாம் : மாத்தி யோசி
பாபு ஒரு சோப்பு கம்பெனியில் வேலை பார்த்தான். நீண்ட நாள் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்ட பின் சொந்தமாக சிறிய அளவில் ஒரு சோப்பு கம்பெனி துவங்கினான். நாளடைவில் இவன் கம்பெனி சோப்பு மார்க்கெட்டில் நன்றாக பிக்அப் ஆக விற்பனையும் மெல்ல உயர துவங்கியது. வியாபாரம் பெருக, பெருக மற்ற நிறுவனங்களுடன் இவன் நிறுவனமும் போட்டி போடும் நிலைக்கு வந்தது. போட்டி நிறுவனங்களுக்கு இணையாக தன் நிறுவன பிராண்டு சோப்பும் மார்க்கெட்டில் விற்க புதுமையான விளம்பர உத்திகளை பாபு கையாண்டான்.
சோப்பு விற்பனையை தொடர்ந்து தனது நிறுவனத்தில் வாஷிங்பவுடர் தயாரிக்கும் பிரிவையும் பாபு துவங்கினான். தயாராகும் வாஷிங் பவுடரை பாக்கெட்டில் நிரப்பி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்ப வேண்டும். வாஷிங் பவுடரை தானியங்கி முறையில் பாக்கெட்டில் நிரப்புவதற்காக ஒரு புதிய இயந்திரத்தை பாபு நிறுவினான். குறிப்பிட்ட அளவு பவுடரை இயந்திரமே பாக்கெட்டில் அடைத்து தானாகவே பேக்கிங் செய்து அனுப்பும் வகையில் அந்த இயந்திரம் இருந்தது. இயந்திரத்தை இயக்கும் போது அதில் ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டது.
வரிசையாக பேக்கிங் ஆகி வரும்போது சில பாக்கெட்டுகளில் பவுடர் நிரம்பாமலேயே வெற்று பாக்கெட்டுகளாக பேக்கிங் ஆனது. இதை எப்படி தடுப்பது என்பது குறித்தும், மற்ற நிறுவனங்களில் இதற்கு என்ன செய்கிறார்கள் என்பது குறித்தும் பாபு விசாரித்தான். பெரிய நிறுவனங்களில் இது போன்று ஏற்படும் தவறை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வாங்கிய ஸ்கேனிங் மெஷின் வைத்துள்ளதும், அதன் மூலம் பவுடர் நிரம்பாத பாக்கெட்டுகளை ஈஸியாக அடையாளம் கண்டு அவர்கள் ஒதுக்கி விடுவதும் தெரிந்தது.
அதே போல் நாமும் வாங்கலாம் என நினைத்து, அந்த ஸ்கேனிங் மெஷின் விலையை கேட்டபோது, 5 லட்சம் ரூபாய் என்றதும் கேட்ட பாபுவுக்கு தலை சுற்றியது. சிறிய அளவில் தொழில் செய்து வரும் தன்னால் அவ்வளவு பணத்தை எப்படி இதற்காக முடக்க முடியும் என்று யோசித்தான். கவலையுடன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது பாபுவின் நண்பன் ரமேஷ் அங்கு வந்தான். நண்பன் ஏதோ மனக்குழப்பத்தில் இருப்பதை முகத்தைப் பார்த்து தெரிந்து கொண்ட ரமேஷ் என்னவென்று கேட்டான். விஷயத்தை பாபு கூறினான்.
இப்ப என்ன செய்யப்போற.. என்று ரமேஷ் கேட்டுவிட்டு அவனும் யோசனையுடன் அமைதியாக அமர்ந்திருந்தான். அப்போது டேபிள் மீது இருந்த ஒரு பிளாஸ்டிக் கவர் காற்றில் அசைந்து கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் திடீரென ஐடியாடா.. என்று உற்சாகமாக கூச்சலிட்டான். என்னடா என பரபரப்பாக கேட்ட பாபுவிடம், ‘மெஷினை ஸ்டார்ட் பண்ணு’ என்றான். பாபுவும் நம்பிக்கையில்லாமல் மெஷினை ஆன் செய்தான். அப்போது அருகில் இருந்த டேபிள் பேனை எடுத்து பேக்கிங் ஆகி வரும் இடத்தை பார்த்து ரமேஷ் ஓட விட்டான்.
தயாராக இருந்த வாஷிங் பவுடர் பாக்கெட்டில் நிரம்பி வெளியில் வந்தது. பேக்கிங் ஆகாத சில பாக்கெட்டுகள் மட்டும் பேன் காற்றில் பறந்து கீழே விழுந்தது. இதை பார்த்த பாபு, சூப்பர்டா நண்பா... என உற்சாகமாக கூச்சலிட்டான். எவ்வளவு பெரிய விஷயமா நினைச்சுட்டு இருந்ததை சிம்பிளா செலவே இல்லாம செய்ய முடியும்னு காட்டிட்டடா என்று நண்பனை பாபு கட்டி அணைத்துக் கொண்டான்.
சில இக்கட்டான நேரங்களில் சரியான முடிவு எடுப்பது என்பது இயலாத காரியம் தான். அது போன்ற நேரங்களில் முடிவெடுப்பதை சற்று தள்ளிப்போட்டு மாற்று வழியை யோசிக்க வேண்டும். 5 லட்சம் ரூபாய் செலவாகுமே, என்ன பண்றது என்ற அந்த கவலையே பாபுவை மாற்று வழி குறித்து சிந்திக்க விடாமல் செய்தது. ஆனால் அதையே மாற்றி யோசித்ததால் 5 லட்சம் ரூபாய் மேட்டரை வெறும் ஆயிரம் ரூபாய் டேபிள் பேனை வைத்து ரமேஷால் முடிக்க முடிந்தது. எல்லாத்துக்கும் வழி இருக்கு. அது நாம எப்படி மாத்தி யோசிக்கிறமோ அதுல தாங்க இருக்கு.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சங்கடம் விலக்கினால் சாதிக்கலாம் : மாத்தி யோசி
கட்டுரை அருமை
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மாத்தி யோசி ஆனால் நல்லா யோசி - சிந்தனை கதைகள்
» மாத்தி யோசி
» இலக்கு ஒன்றானால் சாதிப்பது சாத்தியம் - மாத்தி யோசி
» சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி
» எண்ணங்களை மாற்றும் கண்ணாடி - மாத்தி யோசி
» மாத்தி யோசி
» இலக்கு ஒன்றானால் சாதிப்பது சாத்தியம் - மாத்தி யோசி
» சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி
» எண்ணங்களை மாற்றும் கண்ணாடி - மாத்தி யோசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|