Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கதை கேளு... கதை கேளு!
Page 1 of 1 • Share
கதை கேளு... கதை கேளு!
குழந்தைகளுக்கு கதை சொல்வதில் ஒரு காலத்தில் இரண்டு பேருக்கு முக்கிய பங்கு இருந்தது... அம்மா மற்றும் பாட்டி. அவர்களிடம்தான் எத்தனை கதைகள்! பாட்டி தன்னிடம் உள்ள கதை நூல்களை விதவிதமான வண்ணத் தோரணங்களாக்கி வீடு முழுக்கக் கட்டியிருப்பாள். எல்லா இடத்திலும் செல்லத்தின் இன்னொரு மனதாக, இரண்டாம் தாயாக உடன் வளர்வது அவளாளான கதைகள்தான்... இப்போது?
‘‘பாட்டியா? அவர்கள் வேறு வீட்டில். அம்மா பிஸி. நெட்டில் பிடித்து, ஸ்பீக்கரில் ஏதாவது கதையைப் போட்டுவிட்டால் குழந்தை பார்த்துக் கொண்டே அமைதியாகப் படுத்திருப்பாள். சாப்பாடு ஊட்டும்போது டி.வி., அடம் பிடித்தால் செல்போன்... கதைகளுக்குப் பதிலாக குழந்தைகளின் உலகை மின்னணு சாதனங்கள் இப்படி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. வளர்ந்த பிறகு குழந்தைகளின் வெளிப்பாடுகளிலும் அதுபோன்ற இயந்திரத் தன்மைதான் தெரியும். நல்ல விஷயங்களையும் நேசத்துக்குரிய உணர்வுகளையும் கதைகள் மூலமாகத்தான் குழந்தைகளிடம் கொண்டு செல்ல முடியும்’’ என்கிறார் இயல்வாகை சூழலியல் அமைப்பாளர் அழகேஸ்வரி.
‘‘குழந்தைகளுக்கு கதைகள் வெறும் கற்பனைகள் மட்டும் அல்ல. இந்த உலகத்தை, தனது பார்வைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை கதைகளாக உள்வாங்கிக் கொள்ள உதவும் முக்கிய சாதனம். அவர்கள் உருவாக்கும் கதைகளில் தனக்கு தெரிந்தவர்களைப் பாத்திரங்களாகப் படைக்கிறார்கள். பாத்திரங்களின் குணங்களை கட்டமைப்பதன் மூலம், யாரைப் பிடிக்கும், யாரைப் பிடிக்காது என்பதை வெளிப்படுத்துகிறார்கள். குழந்தைகளுக்கு சொல்லவும், அவர்களிடம் கேட்கவும் நேரம் இருந்தால், அவர்களைப் புரிந்து கொள்ள கதைகளைவிட சிறந்த வாய்ப்பு ஏதுமில்லை.
இன்றைய குழந்தைகள் நிறையப் பேசுகிறார்கள். ஆனால், மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்க விரும்புவதில்லை. குழந்தைகளிடம் கேட்கும் பழக்கத்தை உருவாக்கக் கதைகளே சிறந்த வழி. கதை மூலம் தாய்மொழி சார்ந்த பழக்கங்கள், பண்பாடு சார்ந்த நடைமுறைகளைத் தெரிந்து கொள்கிறார்கள். வார்த்தைகளை எளிதாகப் பழகவும் கதை கை கொடுக்கிறது. தூக்கத்துக்கு முன்பாக சொல்லப்படும் கதை, தூக்கத்தையும் கனவையும் இனிய அனுபவமாக்குகிறது. சிறகை அடித்து அடித்து உயரப் பறப்பதற்கான வலிமை சேர்க்கும் கழுகுகளைப் போன்றவை குழந்தையிடம் கதை வளர்க்கும் கற்பனைச் சிறகுகள். குழந்தைகள் குட்டிக் குட்டிக் கதைகளில் தொடங்கி படைப்பாற்றலைக் கையகப்படுத்துகிறார்கள். அவர்கள் எல்லாக் கலையிலும் சிறந்து விளங்குவதற்கான தன்னம்பிக்கை இதன் மூலம் விதைக்கப்படுகிறது.
பேசத் தொடங்கும் காலத்தில் குழந்தை, ஒவ்வொருவரையும் செல்லப் பெயர் வைத்து அழைக்கும். மொழியை தன்வசப்படுத்த முயற்சி செய்யும். வளரும் காலத்தில் தன்னைச் சுற்றியுள்ள பெரியவர்கள் தன்னையே கவனிக்க வேண்டும் என்று விரும்பும். அதற்காகவே எதையாவது செய்ய முயற்சிக்கும். கதை சொல்லும் குழந்தைக்குச் சுற்றி இருப்பவர்களை ஒருங்கிணைப்பதும் ஈர்ப்பதும் எளிது. அது தன்னை தலைவனாக கற்பனை செய்து கொள்கிறது. இந்த எண்ணம் குழந்தைக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. டீம் வொர்க்கில் உள்ள தத்துவார்த்த குணங்களை அறியவும், குழுவை வழி நடத்துவதில் உள்ள சிக்கல்களை எளிதாகக் கடக்கவும் கற்றுத் தருகிறது.
எங்கள் அமைப்பில் குழந்தைகளுக்கு ‘மகிழ்ச்சி’ என்ற கதையைச் சொல்லுவோம். தூர தேசத்தில் இருந்து பறந்து வரும் ‘மகிழ்ச்சி’ என்ற ஒரு பறவை, பல நூறு ஆண்டுகளாக பாலைவனத்தில் தனித்திருக்கும் மலையின் மேல் அமரும். மலைக்கு புது அனுபவம். அது பறவையோடு பேசும். பறவை தன்னுடனே இருக்க வேண்டும் என்று ஆசைப்படும். உணவு இல்லாத காரணத்தால் அங்கே வாழ முடியாமல் பறவை திரும்பிவிடும். ஆனாலும், ஆண்டுக்கு ஒரு முறை பறவை தேடி வரும். அதன் பிரிவை விரும்பாத மலை, பறவையிடம் பேசுவதை நிறுத்திக் கொள்ளும்.பறவை ஒவ்வோர் ஆண்டும் ஒரு விதையை மலையில் போட்டு விட்டுச் செல்லும்.
மலை தனது வெறுமையை எண்ணி வெடித்து அழும். அங்கே மீதம் இருந்த ஈரத்தில் பறவை கொண்டு வந்து போட்ட விதைகள் முளைக்கத் தொடங்கும். சில நூறு ஆண்டுகளில் ஒவ்வொரு உயிரினமாகத் தோன்றி வளர ஆரம்பிக்கும். செடிகள் வளர்ந்து பூத்துக் குலுங்கும். மலையின் தனிமையை பூச்சிகளும் பறவைகளும் விலங்குகளும் நிறைக்கும். பல நூற்றாண்டுகள் கழித்து மலை, வனமாக மாறியிருக்கும். மகிழ்ச்சிப் பறவை தான் போட்ட முதல் விதையில் வளர்ந்து நிற்கும் மரத்தில் கூடுகட்டுவதற்காக குச்சிகளுடன் வரும். அப்போது மலை அடைந்த சந்தோஷத் துக்கு அளவே இருக்காது.
நம்மைச் சுற்றியிருக்கும் வனங்களும் காடுகளும் பறவைகள், விலங்குகளின் பெரும் முயற்சியால் உருவானவை. காடுகளைக் காப்பாற்ற மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது. விதை பரவலுக்குக் காரணமான பறவைகளும் வேண்டும் என்பதை இந்தக் கதை குழந்தைகளின் மனதில் பதிய வைக்கிறது. மகிழ்ச்சிப் பறவை இன்றைக்கும் குழந்தைகளின் மனதில் காடுகளின்
அவசியத்தை உணரச் செய்கிறது.
குழந்தைகளின் ‘கேரக்டர் பில்டிங்’ விஷயத்திலும் கதைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சாதாரண காந்தியை மகாத்மாவாக உயர்த்தியது ‘அரிச்சந்திரன் கதை’. சாகும் நிலை வந்தாலும் உண்மையே பேச வேண்டும் என்பது அந்தக் கதையின் சாராம்சம். வாழ்வின் மிகப் பெரிய உயரங்களை எட்டிய மனிதர்களை ஏதோ ஒரு வகையில் கதைகளும் கதாபாத்திரங்களும் பாதித்திருக்கின்றன. குழந்தைகளுக்கு அந்தந்த வயதுக்கு ஏற்ற கதைப் புத்தகங்கள் இப்போது கிடைக்கின்றன. வாய்வழிக் கதைகளை அறிமுகம் செய்த பிறகு, பெற்றோர் புத்தகங்களைப் படித்துக் காட்டலாம். வண்ணப் படங்களுடன் கூடிய புத்தகங்கள் குழந்தைக்கு வாசிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.
வாசிக்கும் பழக்கம் குழந்தைக்கு உருவாக கதைகளே வேர். அந்தப் பழக்கம் குழந்தையின் பல்வேறு சிந்தனைச் சாளரங்களைத் திறந்து விடும். பள்ளிப் பாடங்களிலும் வாக்கியக் கட்டமைப்பு எளிதாகி, யோசித்து எழுதுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும். வாசிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகள் விவாதங்களில் பங்கெடுப்பார்கள்... தயக்கம் இன்றி உரையாடுவார்கள்... மனதுக்கு சரி, தவறு என உணரும் விஷயத்தை மற்றவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைப்பார்கள்.
பெரியவர்களாக வளர்ந்து, ஒரு நிறுவனத்தை திறம்பட நடத்துவதற்குக் கூட குட்டிக் கதைகள் உதவுகின்றன. ஊழியர்களிடம் இருக்கும் குறைகளை நேரடியாக சுட்டிக் காட்டாமல், கதைகள் மூலம் சொல்லி பொறுப்பு களை உணர்த்தலாம். சக மனிதர்களிடம் மனம் சார்ந்து உருவாகும் சிக்கல்களைப் புரிந்து கொள்ளவும், மற்றவர் மனம் புண்படாமல் எளிய தீர்வு காணவும் கதைகள் காலம் முழுக்க உடன் வருகின்றன.
சொல்வதோடு, கேட்பதற்கும் மனம் இருந்தால் குழந்தைகளின் கதை உலகத்துக்குள் கட்டப் பட்டிருக்கும் அழகிய சொர்க்கத்துக்குள் உங்களால் செல்ல முடியும். என்ன ரெடியா?!’’ என ஆர்வம் ஊட்டுகிறார் அழகேஸ்வரி!
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|