தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி

View previous topic View next topic Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி Empty முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி

Post by நாஞ்சில் குமார் Fri Jul 25, 2014 9:34 pm

முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி 141sftl

" பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்.
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்"

அம்மான் பச்சரிசி என்றவுடன் இது அரிசியின் ஒரு வகையோ என நினைக்க தோன்றும். ஆனால் ஒரு சிறு மூலிகை என்பது பலருக்கு தெரியாத ஓன்றாகும். அதுவும் நாம் கானுமிடமெல்லாம் தானாகவே முளைத்து கிடக்கும் ஓன்றுதான். அம்மா என்பது உயர்ந்த எனப்பொருள்படும் தமிழ்சொல்லாகும்.

உறவுகளில் சிறந்த உறவான தாய் மாமனை அம்மான் என்று குறிப்பிடுவது தமிழகத்தில் உள்ளது. சிறு குழந்தையை வளர்க்க பயன்படும் தாய்பாலை பெருக்கும் குணம் கொண்டதால் இதை அம்மான் என்ற அடைமொழியுடன் சேர்த்து அம்மான்பச்சரிசி என அழைத்தனர்.

இதன் வட்டவடிவ காயில் அரிசியின் நுனிபோன்று காணப்படும் தரையோடு படரும் இனம், சிறுசெடி என இரண்டு வகையும், இதில் சிவப்பு, வெள்ளை என இரு இனமும் உண்டு. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஈரப்பதமுள்ள அனைத்து இடங்களிலும் தானே வளர்கிறது. எதிர் அடுக்கில் கூர்நுனிப்பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளையுடையது. இதன் காம்பைக் கிள்ளினால் பால் வரும்.

இலைகளை அரைத்தோ அல்லது அரைக்காமலோ பாலில் அல்லது தயிரோடு சேர்த்து உண்ண வெப்ப நோய்கள் அனைத்தும் நீங்கும். இதன் காயை துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கலே வராது. இளமை பருவத்தில் உடல் தளர்ந்து குடும்ப வாழ்க்கை வாழ முடியாமல் துவண்டு போனவர்கள் தூதுவளை இலையுடன் அம்மான்பச்சரிசி இலையை துவையல் செய்து சாப்பிட தாது பெருகும், உடல் பலப்படும்.

வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கை, கால் வலியால் துடிப்பார்கள். குனிந்தால் வாயு பிடிப்பு என அவதிப்படுவார்கள் இவர்கள் அம்மான்பச்சரிசி இலையை மென்மையாக அரைத்து எலுமிச்சை காய் அளவு எடுத்து மோரில் கலந்து நாள்தோறும் சாப்பிட்டுவந்தால் ஒரு மாதத்தில் வாத நோய்கள் குணமாகும். இலையை கலவைக்கீரையுடன் சமைத்து உண்டு வந்தால் உடல் வறட்சியை நீடிக்கும். இதனை சுடுசோற்றில் இட்டு முதல் உணவாக சாப்பிட்டால் உதடு மற்றும் நாக்கில் தோன்றும் வெடிப்புகளை போக்கும்.

ஒரு சிலருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகும்.. எந்த மருத்துவம் பார்த்தாலும் எரிச்சல் அடங்காது. செய்வினை என சொல்லி துன்பப்படுவார்கள். இவர்கள் கீழாநெல்லியுடன் சமஅளவு அம்மான் பச்சரிசி இலையை மையாக அரைத்து காலை மதியம் இருவேளையும் எருமைத்தயிரில் கலந்து குடித்து வர உடல் எரிச்சல், நமைச்சல் சில வாரங்களில் தீரும்.

நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும் சில தாய்மார்களுக்கு போதுமான அளவிற்கு பால் சுரக்காது. இவர்கள் அம்மான் பச்சரிசியின் பூக்களை 30கிராம் அளவு சேகரித்து மையாக அரைத்து கொட்டைப்பாக்களவு பசும் பாலில் கலந்து ஒரு வாரம் குடித்தால் தாய்ப்பால் போதுமான அளவு பெருகும். செடி உள்ள இடத்திற்கு அருகில் சென்று தண்டை கிள்ளினால் வரும் பாலை உடனடியாக மருவில் தடவி வந்தால் அவை உதிர்ந்துவிடும். நகச்சுற்றில் தடவிவர நகச்சுற்று போகும்.

மனிதர்களுக்கு அழகை கொடுப்பது அவர்களின் தோல் தான். அது நிறம் மாறும் போது அவர்களின் அழகு மாறுபாடு அடைகிறது. அதிலும் வெண்குஷ்டம் என்பது தோலில் வெள்ளை நிறப்புள்ளிகள் தோன்றி உடல் முழுவதும் வெள்ளை நிறம் பரவி விகாரமாக காட்சி அளிக்கும். இவர்கள் அம்மான் பச்சரிசி கிழாநெல்லி, வெந்தயம், ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூரணம் செய்து 15 கிராம் அளவில் காலை, மாலை பாலில் கலந்து குடித்து வந்தால் வெண்குஷ்டம் போகும். இதைத்தான்

" காந்தல் விரணமலக் கட்டுமேந் கந்தடிப்புச்
சேர்ந்த திணவிவைகள் தேகம்விட்டுப் பேர்ந்தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிச் குண்மை இனத்துடனே
கூடும்மா ணொத்த கண்ணாய்! கூறு "  

என்கின்றது அகத்தியர் குணவாகடம்.. மூலிகையை கண்டறிந்து அதை பயன்படுத்தி அதை பயன்படுத்தி நோய்களை தீர்ப்பது எவ்வாறு என்பதை அறிந்து பயன்படுத்துவது என்பது நம்மால் முடியாத ஓன்றாகும். ஆனால் நமது முன்னோர்கள் நமக்காக கண்டறிந்து வழங்கிய மூலிகையை பயன்படுத்தி நமது வாழ்வை நலமாக அமைத்து கொண்டு சிறப்புடன் வாழ்வோம்.


நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி Empty Re: முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி

Post by ஸ்ரீராம் Tue Aug 19, 2014 11:11 am

நல்லதொரு பதிவுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum