Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இளைஞருக்கு ஏற்ற வீட்டுக் கடன்
Page 1 of 1 • Share
இளைஞருக்கு ஏற்ற வீட்டுக் கடன்
இந்தக் காலத்தில் சொந்தமாக வீடு, வாசல் கட்டிய பிறகு கல்யாணம் செய்துகொள்ளும் இளைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். வேலையில் சேர்ந்தவுடனேயே வீடு கட்ட வேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞர்களையும் இன்று நிறையப் பார்க்க முடிகிறது.
ஆனால், தொடக்க காலத்தில் குறைந்த அளவு சம்பாதிக்கும் இளைஞர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வீட்டுக் கடன் கிடைத்து விடாது. அதுபோன்ற இளைஞர்களுக்கு என்றே இருக்கிறது, ஒரு வீட்டுக் கடன் திட்டம். அதுதான் ஸ்டெப்-அப் வீட்டுக் கடன் திட்டம்.
ஸ்டெப்-அப் கடன்
இந்த வீட்டுக் கடன் வாங்கும் நபர் பணியாற்றும் துறையின் வளர்ச்சி, பணியில் கிடைக்கும் பதவி உயர்வு, அதிகரிக்கும் மாத வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வீட்டுக் கடனுக்கான அளவை உயர்த்தி தரும் கடன் திட்டம். இது முழுக்க முழுக்க படித்து முடித்து விட்டுப் பணியில் சேரும் இளைஞர்களைக் கவரும் வகையில் வழங்கப்படும் கடன்.
இளைஞர்களுக்கு ஏற்ற கடன்
குறிப்பிட்ட இளைஞர் தற்போது குறைந்த அளவு மாத வருமானம் பெற்றாலும்கூட இந்த வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் அதிகக் கடனைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் வாயிலாகக் கடன் பெறும் தகுதி அளவை 5 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.
குறைவாகச் சம்பாதிக்கும் போதே வீட்டுக் கடனை அதிக அளவு வாங்கித் தன் கனவு இல்லத்தை அடைய இந்த வீட்டுக் கடன் இளைஞர்களுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம்.
வருவாய்க்கு ஏற்ப இ.எம்.ஐ.
இப்படி வாங்கப்படும் ஸ்டெப்-அப் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியாக இருக்காது. வங்கிக்கு வங்கி மாறுபடும். சாதாரண வீட்டுக் கடனில் செலுத்துவது போலவே இதிலும் இ.எம்.ஐ. செலுத்த வேண்டும்.
ஸ்டெப்-அப் முறை வீட்டுக் கடன் திட்டத்தில் கடன் தவணைகளை வங்கிகள் பிரித்து வைத்திருக்கும். தொடக்க காலத்தில் வீட்டுக் கடனைச் செலுத்தும் இ.எம்.ஐ. தொகை குறைவாக இருக்கும். பணியில் சேர்ந்த குறிப்பிட்ட இளைஞர் தொடக்க காலத்தில் குறைந்த மாதச் சம்பளம் வாங்குவார் என்பதால் இ.எம்.ஐ. தொகை குறைவாக வசூலிக்கப்படும்.
ஆண்டு செல்லச் செல்ல இத்தொகையின் அளவு அதிகரிக்கத் தொடங்கும். அதாவது பணியில் கிடைக்கும் பதவி உயர்வு, அதற்கேற்ப உயரும் வருவாய் ஆகிய வற்றைக் கருத்தில் கொண்டு இ.எம்.ஐ. தொகை அதிகரிக்கும்.
தனியார் வங்கியில் கடன்
இளைஞர்கள், படிப்பை முடித்துவிட்டுப் பணியில் சேர்ந்தவர்கள் ஆகியோருக்குப் பயன் தரும் இந்தக் கடன் திட்டத்தை ஒரு சில பொதுத் துறை வங்கிகள் மட்டுமே வழங்குகின்றனர்.
தனியார் வங்கிகள், வீட்டுக் கடன்களை வழங்கும் வங்கிகள் இந்தக் கடன் திட்டத்தை தாராளமாக வழங்குகின்றன. தகுதியுடைய இளைஞர்களுக்கு மட்டுமே தனியார் வங்கிகள் இத்திட்டத்தில் கடனளிக்கின்றன.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இளைஞருக்கு ஏற்ற வீட்டுக் கடன்
நல்லது
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி அண்ணா
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வீட்டுக் கடன் பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்ல முடியுமா?
» வீட்டுக் கடன்: ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மாறுமா?
» வீட்டுக் கடன்: வேறு வங்கிக்கு மாற முடியுமா?
» வீட்டுக் கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?
» வீட்டுக் கடன்: அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்
» வீட்டுக் கடன்: ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மாறுமா?
» வீட்டுக் கடன்: வேறு வங்கிக்கு மாற முடியுமா?
» வீட்டுக் கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?
» வீட்டுக் கடன்: அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|