Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழகத்தில் முதன்முறையாக ஏடிஎம் போல் பள்ளிகளில் நாப்கின் மெஷின்: வேலூர் பெண் கைதிகள் ஏற்பாடு
Page 1 of 1 • Share
தமிழகத்தில் முதன்முறையாக ஏடிஎம் போல் பள்ளிகளில் நாப்கின் மெஷின்: வேலூர் பெண் கைதிகள் ஏற்பாடு
வேலூர்: தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் பெண்கள் சிறை கைதிகள் ஏடிஎம் இயந்திரம் போல் நாப்கின் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் குற்றவாளிகளை தண்டிக்கும் தண்டனை கூடமாக மட்டும் அல்லாமல், அவர்களின் புத்தியை கூர்மைப்படுத்தும், பட்டறைகளாகவும் உள்ளன. இன்றைக்கு மாநிலத்தில் உள்ள எல்லா சிறைகளிலும் தொழிற் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளியாக சிறைக்கு செல்லும் கைதிகள், தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொண்டவர்களாகவே செல்கின்றனர். வேலூரில் ஆண்கள் சிறையில் விவசாயம், காவல் துறைக்கு தேவையான புட்வேர், உணவு பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இதேபோல், பெண்கள் சிறையில் புடவை ஜரிகை, கைவினை பொருட்கள், அரிசி வத்தல், மிளகாய் வத்தல், ஜவ்வரிசி வத்தல், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. பெண்கள் சிறையில் நன்னடத்தை கைதிகளான சுமார் 12 பேரை கொண்டு நாப்கின்கள் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக வேலூர் பெண்கள் சிறை வளாகத்தில் நவீன தொழில்நுட்ப இயந்திரத்தை கொண்டு கடந்த 4 மாதங்களாக நாப்கின்கள் தயாரிக்கப்படுகிறது.
இதுவரை 21 ஆயிரம் நாப்கின்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான மூலப்பொருட்களை தனியார் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. தயாரிப்பு இயந்திரமும் தனியார் அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் நாப்கின்களை அரசு பள்ளிகளில் மாணவிகளின் தேவைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளி வளாகத்திலேயே ஏடிஎம் இயந்திரத்தைபோல நாப்கின்களை எடுக்கும் இயந்திரம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. எப்படி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியுமோ, அதைப்போலவே நாப்கின்களையும் இயந்திரத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். இந்த நாப்கின் எடுக்கும் இயந்திரங்கள் சோதனை அடிப்படையில் விரைவில் வேலூரில் உள்ள சில அரசு பள்ளிகளில் வைக்கப்பட உள்ளது. இந்த இயந்திரங்களை வழங்க சில தனியார் அமைப்புகள் முன்வந்துள்ளன. மாணவிகளின் வசதிக்காக குறைந்த விலையில் நாப்கின்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், பெண்கள் சிறையில், தனியார் அமைப்புகளின் உதவியுடன் நாப்கின் தயாரிப்பு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.
சிறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களை குறைந்த விலையில் விற்பனை செய்யும் வகையில், 3 ரூபாய்க்கு 2 நாப்கின் பாக்கெட்டுகள் கிடைக்கும். இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நவீன இயந்திரத்தில் 2 ரூபாய் நாணயம் மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டால் நாப்கின்கள் வெளியே வரும். இந்த இயந்திரங்கள் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் பள்ளிகளின் அருகில் அமைக்கப்படும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் நாளொன்றுக்கு அந்த இயந்திரத்தில் நாப்கின்கள் இருப்பு வைக்கப்படும். காலியான பிறகு, சிறை நிர்வாகத்தால் மீண்டும் நிரப்பப்படும். மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டும், சிறைவாசிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசுக்கு 1 ரூபாய் கூட செலவு இல்லை
வேலூர் பெண்கள் சிறை நிர்வாகம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு சிறை நிர்வாகம் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட செலவு வைக்கவில்லை. தயாரிப்பு இயந்திரம் முற்கொண்டு நாப்கின் மூலப்பொருட்கள், நாப்கினை எடுக்கும் இயந்திரங்கள் வரை அனைத்தும் தனியார் அமைப்புகளால் வழங்கப்படுகிறது. அரசு நிதி வழங்கவில்லை என்றாலும் தங்களுடைய முயற்சியை கொண்டு பெண்கள் சிறை நிர்வாகம் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தி அதில் வெற்றிபெற தீவிரம் காட்டி வருகிறது.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்
» நீதிமன்ற அனுமதி தேவையில்லை பெண் கைதிகள் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் மும்பை ஐகோர்ட்டு த
» வேலூர்: தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செ
» வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
» ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி...
» நீதிமன்ற அனுமதி தேவையில்லை பெண் கைதிகள் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் மும்பை ஐகோர்ட்டு த
» வேலூர்: தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செ
» வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
» ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|