Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுவையான தேனீர்...!!
Page 1 of 1 • Share
சுவையான தேனீர்...!!
*
சுவையான தேனீர்…!!
*
இந்திய தேசம் பழம்பெரும் தேசம். இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் அரசர்களின் கீழ் தான் நடைபெற்று வந்துள்ளன. அக்காலத்திய அரசர்களின் அரண்மனைக் கட்டிடங்கள் மிகுந்த கலைநய வேலைப்பாடுடன், கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி நீர் நிறைந்த அகழி, வலிமையான கற்களால் கட்டப்பட்ட மதில் சுவர்கள், நான்குப் புறமும் வாயில்கள், உள்ளே அகன்ற வீதிகள், அரசபை மண்டபம், அரசருக்காக ஆலோசனைக்கூடம், அரசர், ராணிகள் மற்றவர்க்கென்று தனித்தனி படுக்கையறைகள், தேரோடும் வீதிகள், குளிப்பதற்னெ நீராழிமண்டபங்கள், யானை குதிரை லாயங்கள், போர்பயிற்சிக் கூடங்கள், வழிப்பாட்டுக் கோயில்கள். காஜானா அறைகள்,ரகசியஆலோசனைக்கூடங்கள், சுரங்கப்பாதைகள் என சிறந்தமுறையில் கட்டப்பட்ட அரண்மனைகள், இந்து, முஸ்லிம் மன்னர்களின் நாடு பிடிக்கும் ஆசையினால் போர்கள் மூண்டுள்ளது. அதற்குப் பின்னர் வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவைத் துண்டாடி, மக்களிடையே பகைமை மூட்டி, மன்னர்களைச் சிறைப் பிடித்து, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். அப்போது, போர்களால் அரண்மனைகளை அழித்தும் சிதைத்தும் மிகுந்தச் சேதத்தை ஏற்படுத்தினர் அதன் எச்சங்களாகவே, இந்தியா முழுவதும் இன்றைக்கும் இருக்கின்ற கோட்டைகளை, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறிசில இடங்களில் அரண்மனைகளை நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து அனுமதிக்கும் காட்சிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரண்மனைகள் சிதைவுற்று யாரும் உள்நுழைந்த காணமுடியாத அளவில் உள்ளன. அங்கே மக்கள் யாவரும் பயத்தோடு தான் சென்று பார்க்கின்றனர். மக்கள் பார்வையிட முடியாத அளவிலும் பல கோட்டைகள் இருக்கின்றன. அக் கோட்டைகளின் உள்ளே முன் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது.யாருக்கும்அனுமதியுமில்லை.இருட்டும்,செடிகொடிகள் புதர்கள் நிறைந்த அவ்விடத்தை வௌவால்களும்,சிறுபறவைகளும்,எலிகளும்,
ஒணான்களும் இன்ன பிறவிலங்குகளும், குறிப்பாக, வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே,
*
“ அரண்மனைக்குள் நுழைய
அனுமதியில்லை யாருக்கும்
வண்ணத்துப்பூச்சிகள் மட்டும். ” – [ நா.விச்வநாதன் – “ முள்ளில் அமரும்
*
பனித்துளிகள் ” நூல் பக்கம் 18 ] என தொன்மத்தை நினைவுகூறும் வகையில் ஹைக்கூ கவிதையினைப் படைத்துள்ளார் கவிஞர். ஒரு ஹைக்கூ கவிதையின் அழகியல் என்பது படைப்பாளி தேர்வு செய்யும் கருப்பொருளில் தானிருக்கின்றன என்பது இந்த ஹைக்கூ கவிதையில் அறியமுடிக்கின்றது.
*
சுவையான தேனீர்…!!
*
இந்திய தேசம் பழம்பெரும் தேசம். இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் அரசர்களின் கீழ் தான் நடைபெற்று வந்துள்ளன. அக்காலத்திய அரசர்களின் அரண்மனைக் கட்டிடங்கள் மிகுந்த கலைநய வேலைப்பாடுடன், கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி நீர் நிறைந்த அகழி, வலிமையான கற்களால் கட்டப்பட்ட மதில் சுவர்கள், நான்குப் புறமும் வாயில்கள், உள்ளே அகன்ற வீதிகள், அரசபை மண்டபம், அரசருக்காக ஆலோசனைக்கூடம், அரசர், ராணிகள் மற்றவர்க்கென்று தனித்தனி படுக்கையறைகள், தேரோடும் வீதிகள், குளிப்பதற்னெ நீராழிமண்டபங்கள், யானை குதிரை லாயங்கள், போர்பயிற்சிக் கூடங்கள், வழிப்பாட்டுக் கோயில்கள். காஜானா அறைகள்,ரகசியஆலோசனைக்கூடங்கள், சுரங்கப்பாதைகள் என சிறந்தமுறையில் கட்டப்பட்ட அரண்மனைகள், இந்து, முஸ்லிம் மன்னர்களின் நாடு பிடிக்கும் ஆசையினால் போர்கள் மூண்டுள்ளது. அதற்குப் பின்னர் வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவைத் துண்டாடி, மக்களிடையே பகைமை மூட்டி, மன்னர்களைச் சிறைப் பிடித்து, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். அப்போது, போர்களால் அரண்மனைகளை அழித்தும் சிதைத்தும் மிகுந்தச் சேதத்தை ஏற்படுத்தினர் அதன் எச்சங்களாகவே, இந்தியா முழுவதும் இன்றைக்கும் இருக்கின்ற கோட்டைகளை, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறிசில இடங்களில் அரண்மனைகளை நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து அனுமதிக்கும் காட்சிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரண்மனைகள் சிதைவுற்று யாரும் உள்நுழைந்த காணமுடியாத அளவில் உள்ளன. அங்கே மக்கள் யாவரும் பயத்தோடு தான் சென்று பார்க்கின்றனர். மக்கள் பார்வையிட முடியாத அளவிலும் பல கோட்டைகள் இருக்கின்றன. அக் கோட்டைகளின் உள்ளே முன் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது.யாருக்கும்அனுமதியுமில்லை.இருட்டும்,செடிகொடிகள் புதர்கள் நிறைந்த அவ்விடத்தை வௌவால்களும்,சிறுபறவைகளும்,எலிகளும்,
ஒணான்களும் இன்ன பிறவிலங்குகளும், குறிப்பாக, வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே,
*
“ அரண்மனைக்குள் நுழைய
அனுமதியில்லை யாருக்கும்
வண்ணத்துப்பூச்சிகள் மட்டும். ” – [ நா.விச்வநாதன் – “ முள்ளில் அமரும்
*
பனித்துளிகள் ” நூல் பக்கம் 18 ] என தொன்மத்தை நினைவுகூறும் வகையில் ஹைக்கூ கவிதையினைப் படைத்துள்ளார் கவிஞர். ஒரு ஹைக்கூ கவிதையின் அழகியல் என்பது படைப்பாளி தேர்வு செய்யும் கருப்பொருளில் தானிருக்கின்றன என்பது இந்த ஹைக்கூ கவிதையில் அறியமுடிக்கின்றது.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: சுவையான தேனீர்...!!
உங்களின் இன்று ஒரு தகவல் மிகவும் அருமை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுவையான தேனீர்...!!
சுவையான தேனீர் பாராட்டிய முழுமுதலோன், செந்தில், கண்மணிசிங் ஆகியோருக்கு மிக்க நன்றி.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: சுவையான தேனீர்...!!
“ அரண்மனைக்குள் நுழைய
அனுமதியில்லை யாருக்கும்
வண்ணத்துப்பூச்சிகள் மட்டும். ” – [ நா.விச்வநாதன் – “ முள்ளில் அமரும் பனித்துளிகள் ” நூல் பக்கம் 18 ]
அழகிய ஹைக்கூகூக்கு பல வரிகளில் விளக்கம்... விவரிப்பு நடை அழகு... பாராட்டுகள்
Re: சுவையான தேனீர்...!!
மழை ரசிகன்…!!
*
தமிழ்நாட்டில் இலக்கியக் கூட்டங்கள் பெரும்பாலும் சனி, ஞாயிறு காலை அல்லது மாலை வேளைகளில் தான் நடைபெறுகின்றன.. ஏனென்றால் அவ்விரு நாட்களும் விடுமுறை தினம் என்பதேயாகும். அன்று ஒய்வாக இலக்கியப் பேச்சாளர்கள், படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொள்வதற்கு வசதியாக அமைகின்றன. இலக்கியக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட சின்ன அரங்க அறைக்கு வந்து தேவையான அறை அலங்கரிப்புகள், மேசை நாற்காலிகள் வரிசைப்படுத்தி வைப்பது, குடிநீர் மற்றும் தேனீர் டிரம் வைப்பதற்கான இடம் தேர்வு செய்து வைப்பது, மைக்செட் அமைப்பது, பேச்சாளர்கள் பேசுவதற்கான ஸ்டேண்ட் அமைப்பது, முன்வாசலில் உள்ளே வருபவர்களை வரவேற்று, போய் அமருங்கள் என முகமலர்ச்சியோடு பேசி மகிழ்வது, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் வரிசைப்படுத்தி வைப்பது, அதனருகில் வந்து நிற்கும் நண்பர்களிடத்தில் நலம் விசாரித்து புதியதாக வந்துள்ள புத்தகம் பற்றி பேசுவது என பல்வேறு காரியங்களை ஒருங்கிணைப்போடு கவனித்து வருவார்கள். வருகை தருபவர்கள் உள்ளே நுழைந்து காலியாக இருக்கும் இருக்கைளில் போய் அமர்ந்துக் கொள்வார்கள். கூட்டம் எப்போது தொடங்கும் என்ற ஆவல் பலரின் மனங்களில் ஓடும். கூட்ட ஏற்பட்டாளர்கள் கூட்டத்தைத் தொடங்கலாமென நினைக்கும் போது பார்த்து வெளியே மெல்ல சின்னச் சின்னத் தூறல்கள் விழத்தொடங்கும். “ அட, மழைத்தூறல் போட ஆரம்பித்து விட்டதே ” – என்று கவலைப்படுவார்கள். யாரேனும் ஒருவர் வந்து வெளியில் பார்த்துவிட்டு, பலமா வராது, லேசான தூறல்தான் கூட்டத்தை ஆரம்பியுங்க… ” என்பார். கூட்டம் ஆரம்பித்து பேசத் தொடங்குவார்கள். வருபவர்கள் வந்துக்கொண்டிருப்பார்கள். பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்று தன் ஹைக்கூ கவிதையில் இப்படிச் சொல்கின்றார்.
*
“ மாடி யறை
இலக்கியக் கூட்டம்
கலந்துக் கொள்ளும் மழை ” – [ “ ஐக்கூ அருவிகள் ” அமுதபாரதி – நூல் பக்கம் 35 ] ஆக, இலக்கிய கூட்டமென்றால் பலரும் கலந்துக்கொண்டு ரசிப்பது மட்டுமல்ல, எப்பொழுதேனும் திடீரென வரும் இயற்கைப் பொழிவான மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்கிறார். பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்துக் கொண்டு அனுபவித்த நிகழ்வுகளின் நினைவுகளை முன்னிறுத்தி, அதனை ஹைக்கூ கவிதையில் மிகத் திறம்பட சொல்லிப் பதிவு செய்துள்ளார் ஓவியக் கவிஞர்.அமுதபாரதி.
*
*
தமிழ்நாட்டில் இலக்கியக் கூட்டங்கள் பெரும்பாலும் சனி, ஞாயிறு காலை அல்லது மாலை வேளைகளில் தான் நடைபெறுகின்றன.. ஏனென்றால் அவ்விரு நாட்களும் விடுமுறை தினம் என்பதேயாகும். அன்று ஒய்வாக இலக்கியப் பேச்சாளர்கள், படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொள்வதற்கு வசதியாக அமைகின்றன. இலக்கியக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட சின்ன அரங்க அறைக்கு வந்து தேவையான அறை அலங்கரிப்புகள், மேசை நாற்காலிகள் வரிசைப்படுத்தி வைப்பது, குடிநீர் மற்றும் தேனீர் டிரம் வைப்பதற்கான இடம் தேர்வு செய்து வைப்பது, மைக்செட் அமைப்பது, பேச்சாளர்கள் பேசுவதற்கான ஸ்டேண்ட் அமைப்பது, முன்வாசலில் உள்ளே வருபவர்களை வரவேற்று, போய் அமருங்கள் என முகமலர்ச்சியோடு பேசி மகிழ்வது, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் வரிசைப்படுத்தி வைப்பது, அதனருகில் வந்து நிற்கும் நண்பர்களிடத்தில் நலம் விசாரித்து புதியதாக வந்துள்ள புத்தகம் பற்றி பேசுவது என பல்வேறு காரியங்களை ஒருங்கிணைப்போடு கவனித்து வருவார்கள். வருகை தருபவர்கள் உள்ளே நுழைந்து காலியாக இருக்கும் இருக்கைளில் போய் அமர்ந்துக் கொள்வார்கள். கூட்டம் எப்போது தொடங்கும் என்ற ஆவல் பலரின் மனங்களில் ஓடும். கூட்ட ஏற்பட்டாளர்கள் கூட்டத்தைத் தொடங்கலாமென நினைக்கும் போது பார்த்து வெளியே மெல்ல சின்னச் சின்னத் தூறல்கள் விழத்தொடங்கும். “ அட, மழைத்தூறல் போட ஆரம்பித்து விட்டதே ” – என்று கவலைப்படுவார்கள். யாரேனும் ஒருவர் வந்து வெளியில் பார்த்துவிட்டு, பலமா வராது, லேசான தூறல்தான் கூட்டத்தை ஆரம்பியுங்க… ” என்பார். கூட்டம் ஆரம்பித்து பேசத் தொடங்குவார்கள். வருபவர்கள் வந்துக்கொண்டிருப்பார்கள். பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்று தன் ஹைக்கூ கவிதையில் இப்படிச் சொல்கின்றார்.
*
“ மாடி யறை
இலக்கியக் கூட்டம்
கலந்துக் கொள்ளும் மழை ” – [ “ ஐக்கூ அருவிகள் ” அமுதபாரதி – நூல் பக்கம் 35 ] ஆக, இலக்கிய கூட்டமென்றால் பலரும் கலந்துக்கொண்டு ரசிப்பது மட்டுமல்ல, எப்பொழுதேனும் திடீரென வரும் இயற்கைப் பொழிவான மழையும் வந்துக் கலந்துக் கொள்ளும் என்கிறார். பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்துக் கொண்டு அனுபவித்த நிகழ்வுகளின் நினைவுகளை முன்னிறுத்தி, அதனை ஹைக்கூ கவிதையில் மிகத் திறம்பட சொல்லிப் பதிவு செய்துள்ளார் ஓவியக் கவிஞர்.அமுதபாரதி.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» இந்தியாவின் தேசிய பானமாகன “தேனீர்” பற்றிய சுவார்ஷ்ய குறிப்பு.
» நான்கு கோப்பை தேனீர், காபி குடியுங்கள் - ரத்த அழுத்தத்திற்கு விடைகொடுங்கள்! - 10 ஆண்டு ஆய்வு தகவல்!
» சுவையான தம் ஆலூ
» சுவையான பரோட்டா
» சுவையான வாழ்க்கைக்கு
» நான்கு கோப்பை தேனீர், காபி குடியுங்கள் - ரத்த அழுத்தத்திற்கு விடைகொடுங்கள்! - 10 ஆண்டு ஆய்வு தகவல்!
» சுவையான தம் ஆலூ
» சுவையான பரோட்டா
» சுவையான வாழ்க்கைக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|