Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.
Page 1 of 1 • Share
எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.
தினமும் காலையில் பேப்பரைப் பிரித்ததும் ராசிபலன் பார்த்துட்டுதான் தலைப்புச் செய்தியைப் பார்ப்பேன்” என்றார் ஒருவர். “ஏதாவது நல்லா போட்டிருந்தா சரி. எதிர்மறையா போட்டிருந்தா என்ன செய்வீங்க” நண்பரின் கேள்வியில் நியாயமிருந்தது.
“அந்த நாள் எனக்கு சாதகமா இருக்குன்னு போட்டிருந்தா சந்தோஷமா இருப்பேன். அந்த நாள் எனக்கு எதிரா இருக்கிறதா போட்டிருந்தா, நான் அந்த நாளுக்கு எதிரா இருக்க மாட்டேன்னு முடிவெடுப்பேன். அப்படியும் சந்தோஷம்தான்” என்றார்.
இப்படிப்பட்ட மனப்பான்மை உள்ளவர்கள் ராசிபலன், ராசிக்கல் என்று எதைப் பார்த்தாலும் பிரச்சினையில்லை.
அநேக மனிதர்களுக்கு முட்டுக்கட்டையாய் இருப்பவை எதிர்மறை எண்ணங்கள்தான். நேர் மறையாய் சிந்திக்க விழிப்புணர்வு தேவைப் படுகிறது. ஆனால் எதிர்மறை எண்ணங்கள் அனிச்சையாகவே நிகழ்கின்றன.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல், நேர்மறை எண்ணங்களின் நல்ல பலன்கள், எதிர்மறை எண்ணங்களின் பாதிப்பில் தான் தெரியும். வெளிப்புறப் பாதிப்புகளால் எதிர்மறை எண்ணங்கள் வேகவேகமாய் வளர்கின்றன. மருத்துவர், சாமியார், அதிகாரி என்று எல்லாப் பெயர்களுக்கும் முன்னால் “போலி” என்ற வார்த்தையை சமூகம் சேர்த்து விட்டது.
இது எல்லோருடைய மனங்களிலும் இடம் பெறத் தொடங்கியிருப்பது இப்படித்தான். இரண்டாவது விஷயம், தன்னைப் பற்றிய அவ நம்பிக்கை. முன்னர் எடுத்த முயற்சி எதுவும் முறிந்து போயிருந்தால் இன்னொருதடவை முயன்று பார்க்க இதயம் இடம் கொடுப்பதில்லை.
யாருடனாவது பழகி, அவர்கள் துரோகத்தால் ஏமாந்துபோக நேர்ந்தால் வாழ்வில் நண்பர்களே வேண்டாமென்று நினைக்கத் தோன்றுகிறது.
இவையெல்லாம், நாம் எந்தவித முயற்சியும் செய்யாமலேயே இதயத்தை சூழ்ந்துகொள்ளும் எதிர்மறை எண்ணங்களின் பாதிப்புகள்தான். இன்னொன்று, எதிர்மறையான கற்பனையில் ஒரு சுவாரசியம் மறைந்திருக்கிறது. ஒன்று சரியாக நடக்கும் என்றால் ஒரேயொரு விளைவுதான் மனதில் தோன்றும். ஒன்று தவறாகப் போக எத்தனையோ வழிகள் இருக்கும். இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோ என்று கற்பனைகள் வளர்ந்து கொண்டே போகும். முன்னெச்சரிக்கையாய் இருப்பதற்காக எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி மறைந்தால் தவறில்லை. எண்ணங்களின் போக்கே அந்த விதமாக இருந்தால் அப்புறம் அவஸ்தைதான்.
இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? எண்ணங்களை நேர்மறையாகவோ எதிர் மறையாகவோ செலுத்துவது நம்மிடம்தான் இருக்கிறது.
தபால் வருகிறது என்றால் உடனே வாங்கி அவசரமாய் பிரித்து அல்லது பிரிப்பதாய் நினைத்துக் கிழித்து, பக்கங்களை ஒட்டவைத்துப் படித்துவிடுவோம்.
ஆனால், பதிவுத் தபால் வருகிறதென்றால் உடனே வாங்க மாட்டோம். உஷாராகிவிடுவோம். யார் அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்த்து, ஏன் அனுப்பியிருப்பார்கள் என்று யோசித்து, விருப்பம் இருந்தால் வாங்குவோம், இல்லையென்றால் திரும்ப அனுப்பிவிடுவோம்.
எண்ணங்கள் அப்படித்தான் எதிர்மறையாய் போகத் தொடங்குகிறது என்று தெரிந்தால், நிதானித்து எண்ணங்களை மடை மாற்றினால், போகப்போக தானாகவே எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்முறை எண்ணங்கள் வரத் தொடங்கி விடும்.
இன்னோர் உதாரணம். குடும்பத்துடன் டிவி பார்க்கிறீர்கள். ஆபாசமான காட்சியோ அச்சுறுத்தும் காட்சியோ வருகிறது. குழந்தைகள் பெண்கள் பார்க்கக்கூடாது என்று நினைத்தால் உடனே சேனலை மாற்றுகிறீர்கள். இதே தொழில்நுட்பம்தான் உள்ளேயும் தேவை. எதிர்மறையான காட்சிகளும் எண்ணங்களும் தாறுமாறாக ஓடுகின்றனவா… சேனலை மாற்றுங்கள்!
நேர்மறையான சிந்தனைகளை வலியப் புகுத்துங்கள். எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.
முகநூல்
“அந்த நாள் எனக்கு சாதகமா இருக்குன்னு போட்டிருந்தா சந்தோஷமா இருப்பேன். அந்த நாள் எனக்கு எதிரா இருக்கிறதா போட்டிருந்தா, நான் அந்த நாளுக்கு எதிரா இருக்க மாட்டேன்னு முடிவெடுப்பேன். அப்படியும் சந்தோஷம்தான்” என்றார்.
இப்படிப்பட்ட மனப்பான்மை உள்ளவர்கள் ராசிபலன், ராசிக்கல் என்று எதைப் பார்த்தாலும் பிரச்சினையில்லை.
அநேக மனிதர்களுக்கு முட்டுக்கட்டையாய் இருப்பவை எதிர்மறை எண்ணங்கள்தான். நேர் மறையாய் சிந்திக்க விழிப்புணர்வு தேவைப் படுகிறது. ஆனால் எதிர்மறை எண்ணங்கள் அனிச்சையாகவே நிகழ்கின்றன.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல், நேர்மறை எண்ணங்களின் நல்ல பலன்கள், எதிர்மறை எண்ணங்களின் பாதிப்பில் தான் தெரியும். வெளிப்புறப் பாதிப்புகளால் எதிர்மறை எண்ணங்கள் வேகவேகமாய் வளர்கின்றன. மருத்துவர், சாமியார், அதிகாரி என்று எல்லாப் பெயர்களுக்கும் முன்னால் “போலி” என்ற வார்த்தையை சமூகம் சேர்த்து விட்டது.
இது எல்லோருடைய மனங்களிலும் இடம் பெறத் தொடங்கியிருப்பது இப்படித்தான். இரண்டாவது விஷயம், தன்னைப் பற்றிய அவ நம்பிக்கை. முன்னர் எடுத்த முயற்சி எதுவும் முறிந்து போயிருந்தால் இன்னொருதடவை முயன்று பார்க்க இதயம் இடம் கொடுப்பதில்லை.
யாருடனாவது பழகி, அவர்கள் துரோகத்தால் ஏமாந்துபோக நேர்ந்தால் வாழ்வில் நண்பர்களே வேண்டாமென்று நினைக்கத் தோன்றுகிறது.
இவையெல்லாம், நாம் எந்தவித முயற்சியும் செய்யாமலேயே இதயத்தை சூழ்ந்துகொள்ளும் எதிர்மறை எண்ணங்களின் பாதிப்புகள்தான். இன்னொன்று, எதிர்மறையான கற்பனையில் ஒரு சுவாரசியம் மறைந்திருக்கிறது. ஒன்று சரியாக நடக்கும் என்றால் ஒரேயொரு விளைவுதான் மனதில் தோன்றும். ஒன்று தவறாகப் போக எத்தனையோ வழிகள் இருக்கும். இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோ என்று கற்பனைகள் வளர்ந்து கொண்டே போகும். முன்னெச்சரிக்கையாய் இருப்பதற்காக எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி மறைந்தால் தவறில்லை. எண்ணங்களின் போக்கே அந்த விதமாக இருந்தால் அப்புறம் அவஸ்தைதான்.
இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? எண்ணங்களை நேர்மறையாகவோ எதிர் மறையாகவோ செலுத்துவது நம்மிடம்தான் இருக்கிறது.
தபால் வருகிறது என்றால் உடனே வாங்கி அவசரமாய் பிரித்து அல்லது பிரிப்பதாய் நினைத்துக் கிழித்து, பக்கங்களை ஒட்டவைத்துப் படித்துவிடுவோம்.
ஆனால், பதிவுத் தபால் வருகிறதென்றால் உடனே வாங்க மாட்டோம். உஷாராகிவிடுவோம். யார் அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்த்து, ஏன் அனுப்பியிருப்பார்கள் என்று யோசித்து, விருப்பம் இருந்தால் வாங்குவோம், இல்லையென்றால் திரும்ப அனுப்பிவிடுவோம்.
எண்ணங்கள் அப்படித்தான் எதிர்மறையாய் போகத் தொடங்குகிறது என்று தெரிந்தால், நிதானித்து எண்ணங்களை மடை மாற்றினால், போகப்போக தானாகவே எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்முறை எண்ணங்கள் வரத் தொடங்கி விடும்.
இன்னோர் உதாரணம். குடும்பத்துடன் டிவி பார்க்கிறீர்கள். ஆபாசமான காட்சியோ அச்சுறுத்தும் காட்சியோ வருகிறது. குழந்தைகள் பெண்கள் பார்க்கக்கூடாது என்று நினைத்தால் உடனே சேனலை மாற்றுகிறீர்கள். இதே தொழில்நுட்பம்தான் உள்ளேயும் தேவை. எதிர்மறையான காட்சிகளும் எண்ணங்களும் தாறுமாறாக ஓடுகின்றனவா… சேனலை மாற்றுங்கள்!
நேர்மறையான சிந்தனைகளை வலியப் புகுத்துங்கள். எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.
பயனுள்ள தகவல்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.
சிறப்பான சிந்தனை.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» எல்லாம் எண்ணத்தின் உருவாக்கமே!
» உனது செயல்களுக்கு நீயே பொறுப்பு உணரும் பொழுதில் வெற்றிகள் உனக்கு!
» சேரும் இனத்தைப் பொறுத்தே உன் வாழ்க்கை தீர்மானிக்கப்படும்
» என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு இஞ்சி
» என்றென்றும் புன்னகையிலிருந்து லிசா நீக்கம் ஏன்?
» உனது செயல்களுக்கு நீயே பொறுப்பு உணரும் பொழுதில் வெற்றிகள் உனக்கு!
» சேரும் இனத்தைப் பொறுத்தே உன் வாழ்க்கை தீர்மானிக்கப்படும்
» என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு இஞ்சி
» என்றென்றும் புன்னகையிலிருந்து லிசா நீக்கம் ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|