தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்.

View previous topic View next topic Go down

வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம். Empty வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்.

Post by முழுமுதலோன் Fri Aug 08, 2014 11:28 am

அடுத்த நாளின் டைரியை முதல்நாளே எழுதுவது,
முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கியத் திருப்புமுனை.

பலபேருக்கும் வேலை, ஒரு பொதிபோல் வந்து விழுகிறது. அவர்களுடைய சொந்த வேலைகள்,

அவர்களை நோக்கி வந்த வேலைகள், அனாவசியமாய் பிறர் தந்த வேலைகள் இப்படி எல்லாத் திசைகளில் இருந்தும் வந்துகொண்டேயிருக்கிற வேலைகளால் இயல்பாகச் செய்ய வேண்டிய வேலைகள்கூட இமாலயப் பணிகளாய் தோற்றமளிக்கின்றன.

“என்னுடைய முகராசி! எல்லாரும் எல்லா வேலைகளையும் என்னிடமே தருகிறார்கள்” என்றொரு ஜோதிடரிடம் கேட்கப் போனார் ஒருவர். “உங்கள் முகராசி அப்படித்தான்! அதற்கு பரிகாரம் உண்டு. அடுத்த வாரம் வாங்க! இப்ப போகிறபோது அப்படியே என் டெலிபோன் பில்லைக் கட்டிடுங்களேன்… ப்ளீஸ்!” என்று தன் பங்குக்கு இன்னொரு வேலையைத் தந்தார் ஜோதிடர்.

அதிகமான வேலைப்பளு சுமப்பதை முகராசி என்பதை விடவும் “தலைராசி” என்று சொல்வதே பொருத்தம். வேண்டாத வேலை வழங்கப்படும்போது, தலையை இடதும் வலதுமாய் ஆட்டாமல் மேலும் கீழுமாய் ஆட்டி வைப்பதால் வரும் ஆபத்து இது.

அளவுக்கதிகமான வேலையை செய்வதால் ஒன்று அதிவிரைவில் சோர்வடைவீர்கள். அல்லது அரைகுறையாய்ச் செய்து அவப்பெருக்கு ஆளாவீர்கள்.
குடும்பத்துடன் சாப்பிடப் போகிறபோது கூட, தரவாரியாய் சிலவற்றை தேர்ந்தெடுக்கிறோம். முதல் விருப்பம், இந்த உணவகம். இல்லை யென்றால் அது. இரண்டிலும் இடமில்லை யென்றால் மூன்றாவது. இது போலவே வேலைகளையும் அவற்றின் முக்கியத்துவம், அவசரம், ஆதாயம் போன்ற அளவுகோல்களால் வகை பிரித்துப் பழகுங்கள். இதுவே, வேண்டியது வேண்டாதது என்று தேர்ந்தெடுக்கும் முன்பே முடிவெடுக்க உதவும்.

ஒரு மனிதருக்கு, தனிமனித நிலையில் – உறவுகள் சார்ந்து – வேலைகள் சார்ந்து என்று வெவ்வேறு கடமைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றில் அவசியமானவற்றை தேர்ந்தெடுத்துப் பழகுங்கள். உதாரணமாக, உங்கள் தம்பி மனைவியின் தங்கையின் நாத்தனாருக்கு நடக்கிற வளைகாப்பு வைபவத்துக்காக நீங்கள் அரை நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு பாரி முனையிலிருந்து பள்ளிக்கரணை போக வேண்டிய அவசியமில்லை.

குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டிய விசேஷங்கள், குடும்பத்திலிருந்து யாரேனும் ஒருவர் சென்றுவர வேண்டிய விசேஷங்கள் என்று பகுத்துக் கொள்வதும் பலன் கொடுக்கும். செயல் திறன் உச்சத்துக்கு வரும் நேரம் எதுவென்று உங்களையே கேளுங்கள். ஒரு நாளில் உஷ்ண வெளிப்பாடு உச்சத்துக்கு வருகிற நேரம், மதியம் மூன்று மணி என்கிறார்கள். உங்கள் செயலாற்றல் சிறந்து விளங்குகிற நேரத்தை கணித்து, அதி முக்கியமான வேலைகளை அந்த நேரங்களில் வைத்துக் கொள்ளலாம்.

மனதை இலகுவாக்கிக் கொள்ளவென்று, சில பொழுதுபோக்குகள், சில சந்தோஷமான நிமிஷங்கள் அவசியம். அவை ஆக்கப்பூர்வமாய் இருக்கிறதா என்று பாருங்கள். அதற்கென ஒதுக்கிய நேரம் முடிவடைகிறபோது நீங்கள் உற்சாகமாய் இருக்கிறீர்களா, உள்ள உற்சாகத்தையும் இழந்து சோர்வடைகிறீர்களா என்று பாருங்கள்.

மறுநாள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் பற்றி முதல்நாளே ஒரு பட்டியல் போடுங்கள். ஒரு நாளில் நடந்து முடிந்த சம்பவங்களை எழுத ஒரு டைரியும், அடுத்த நாளை முன் கூட்டியே திட்டமிட இன்னொரு டைரியும் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாளின் டைரியை முதல்நாளே எழுதுவது, முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கியத் திருப்புமுனை.

நாம் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் நாமே முடிவெடுப்பது நல்லது. ஒரு வேளை, அதற்கான சூழல் அமையவில்லை யென்றால், நாம் செய்ய வேண்டிய வேலைகளும் அதற்காக ஒதுக்குகிற நேரமும் நம்முடைய கட்டுப்பாட்டிலாவது இருப்பது அவசியம். வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்.

 ஆசிரியர்: மதிவாணன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம். Empty Re: வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்.

Post by ஸ்ரீராம் Sat Aug 09, 2014 11:05 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம். Empty Re: வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்.

Post by மகா பிரபு Sat Aug 09, 2014 12:09 pm

நன்றி அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம். Empty Re: வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum