தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு

View previous topic View next topic Go down

எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு Empty எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு

Post by நாஞ்சில் குமார் Tue Aug 19, 2014 9:57 pm

எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு 2ntgrbo

எக்ஸ்-ரே எடுக்கும் அறைகளில் ஆண் ஊழியர்களே அதிகம் பணியாற்றுவதால், பெண் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு பெண், சென்னையில் ஒரு மருத்துவமனையில் அலறி யடித்து ஓடிவந்த சம்பவம் இப்பிரச் சினையின் தீவிரத்தை படம் பிடித்துக் காட்டுவதாய் உள்ளது.

சென்னை ராஜா அண்ணா மலைபுரம், எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சிகிச்சைக் காக வந்தார். அங்கு இருந்த ஆண் ஊழியர் எக்ஸ்-ரே எடுப்பதற்காக ஆடைகளைக் கழற்றச் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் மறுத்தாலும், பின்னர் கட்டாயத்தால் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. அதன்பிறகு, அந்த ஊழியர் தவறான முறையில் தொட்டதால் அந்த பெண் அச்சத்தில் வெளியே ஓடிவந்தார்.

அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேலூரை சேர்ந்த ஊழியர் கார்த்திகேயனை (37) கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆண் ஊழியர்கள் அதிகம்

தமிழகத்தில் பெரும்பாலான எக்ஸ்-ரே மையங்களில் ஆண் களே பணிபுரிகின்றனர். அங்கு பெண்கள் தயக்கத்துடனே செல்ல வேண்டியுள்ளது. சில தவறான சம்பவங்கள் நடைபெற்றபோதி லும், பிரச்சினையைத் தவிர்ப் பதற்காக, பெண்கள் வெளியே சொல்லாமல் விட்டுவிடும் நிலை உள்ளது.

தற்போது இசிஜி, எக்ஸ்-ரே, எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், கருப்பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை செய்யும் இடங்களில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பாதுகாப்பு இல்லை

எக்ஸ்-ரே எடுக்க வரும் பெண்கள் தங்கள் உடைகளை சிறிது களைய வேண்டியுள்ளது. எக்ஸ்-ரே அறையில் ஆண் ஊழியர் பணியாற்றுவதால், பெண்கள் தங்களுடைய உடைகளை களைய தயக்கம் காட்டுகின்றனர். ஆனாலும் வேறு வழியில்லாததால் பெண்கள் அவர்கள் சொல்வதை செய்கின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை ஒரு சில பெண்களை தவிர, பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்வதில்லை. இதனால் எக்ஸ்-ரே அறைக்கு வரும் பெண் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவே இருக்கிறது.

பெண்களுக்கு ஆர்வம் இல்லை

எக்ஸ்-ரே பிரிவில் பெண் நிபுணர்கள் குறைவாக இருப்பது தொடர்பாக அரசு டாக்டர்கள் கூறியதாவது:

எக்ஸ்-ரே, இசிஜி போன்ற தொழில்நுட்ப படிப்பை மாண வர்கள்தான் அதிக அளவில் படிக்கின்றனர். மாணவிகள் படிக்க விருப்பம் காட்டுவதில்லை. அதனால்தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள எக்ஸ்-ரே அறைகளில் ஆண் ஊழியர்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். சில மருத்துவ மனைகளில் மட்டும் பெண்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர் என்றார்.

பெண் உதவியாளர்

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி கூறியதாவது:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெண் நோயாளியை, ஆண் டாக்டரோ தொழில்நுட்ப வல்லுநரோ பரிசோதனை செய்தால், அந்த இடத்தில் ஒரு பெண் உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். பெண் உதவியாளர் இல்லாமல், பெண் நோயாளியை பரிசோதனை செய்யக்கூடாது. இதற்கான மருத்துவ நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பெண் நோயாளியை பரிசோதனை செய்யும் போது, பெண் உதவி யாளர் கூடவே இருப்பார் என்றார்.

பெண்கள் தைரியமாக படிக்க வரலாம்

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு எக்ஸ்-ரே போன்ற தொழில்நுட்ப படிப்புகளை படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது மாணவிகள் அதிக அளவில் படிக்க வருகின்றனர். தொழில்நுட்ப படிப்புகளில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. புதிதாக பல தொழில்நுட்ப படிப்புகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. எக்ஸ்-ரே அறைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் ஆபத்து ஏற்படுமோ என மாணவிகள் பயப்பட வேண்டாம். கதிர்வீச்சு தாக்காமல் பாதுகாப்பாக பணியாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு Empty Re: எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 20, 2014 6:02 am

எல்லா இடத்திலும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு Empty Re: எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு

Post by ராகவா Wed Aug 20, 2014 7:10 am

என்று தீரும் இந்த நிலைமை..
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு Empty Re: எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு

Post by செந்தில் Wed Aug 20, 2014 2:42 pm

முடியலை முடியலை முடியலை 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு Empty Re: எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு

Post by ரானுஜா Wed Aug 20, 2014 3:36 pm

கோபம் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு Empty Re: எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பெண் நோயாளிகள் கவனத்துக்கு...
» டெல்லி பாதுகாப்பு பணியில் 41 பெண் கமாண்டோக்கள்
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» ஏப்ரல் 8 முதல் விண்டோஸ் எக்ஸ். பி. (Windows Xp) நிறுத்தம்: வங்கிகள் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் அப
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum