தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எங்கே செல்லும் இந்தப் பாதை?

View previous topic View next topic Go down

எங்கே செல்லும் இந்தப் பாதை? Empty எங்கே செல்லும் இந்தப் பாதை?

Post by நாஞ்சில் குமார் Thu Aug 21, 2014 10:43 pm

குடி குடியைக் கெடுக்கும்' என்று கூறிக் கொண்டே, குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவோர் ஏராளம். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இந்தியாவில் 1950-60-களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் இளமைப் பருவத்தில் குடிப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களின் அளவு 19.5 சதவீதம்.

இதுவே 1981-86-க்கு இடையே பிறந்தவர்களில் இளமைப் பருவத்தில் குடிப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோரின் அளவு 74.3 சதவீதம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மது மட்டுமல்ல, எந்தவொரு கெட்டப் பழக்கமும் வீட்டிலிருந்தே துவங்குகிறது. தந்தை மகனைப் பார்த்து, "கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி வா' என்று கூறுகிறார்.

தினந்தோறும் இப்பணியைச் செய்யும் வளரிளம் பருவத்தைச் சேர்ந்த மகன், ஒரு நாள் தானும் ஏன் இதைப் பழகிக் கொள்ளக் கூடாது என்று எண்ணுகிறான். பின்னாளில் அவனும் இப்பழக்கத்துக்கு அடிமையாகிறான்.

இப்போதெல்லாம், பிறந்த நாள் விழா, திருமணம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு என எந்தவொரு நல்ல சம்பவம் நிகழ்ந்தாலும், நண்பர்களுக்கு விருந்து வைப்பது என்பது கட்டாயமாக உள்ளது.

இதில் முக்கிய இடம் மதுபானத்துக்கு. மேலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் மதுக்கடைகளின் விற்பனை மற்ற நாள்களைவிட நான்கு மடங்கு அதிகரிக்கிறது.

போதைப் பழக்கத்துக்கு அடிமையாவோர் பணிபுரியும் இடம், வீடு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், சுற்றத்தாரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

போதைப் பொருள்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு பன்னாட்டுப் பிரச்னையாக விளங்கி வருகிறது.

இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றும், இவர்களில் 12-25 வயதில் உள்ளோர் அதிகம் உள்ளனர் என்றும், நகர்ப்புறங்களிலேயே இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, போக்குவரத்து பணியில் ஈடுபடுவோர், தெருவோரங்களில் வசிக்கும் சிறுவர்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என்பதும் தெரியவருகிறது.

வடகிழக்கு மாநிலங்கள், எல்லையோரப் பகுதிகள், கஞ்சா அதிகம் பயிரிடப்படும் பகுதிகளில் வசிப்போர் இப்பழக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 12 கோடி பேர் புகை பிடிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் புகை பிடிப்பவர்களில் இந்தியாவில் மட்டும் 12 சதவீதம் பேர் உள்ளனர்.

புகை பிடிப்பதால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 40 விநாடிக்கு ஒருவர் இறப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

போதைப் பழக்கத்தால் சமுதாயம் சீரழிவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களைப் பிறப்பித்தாலும், அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.

பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர், மருத்துவமனைகள், பஸ், ரயில்களில் இதற்கு தடை உள்ளது. மீறினால் அபராதம் விதிக்கவும் சட்டம் வகை செய்கிறது. இருந்தாலும்...?

போதைப் பழக்கத்துக்கு அடிமைப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க மறுவாழ்வு மையங்களை மத்திய, மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள் செயல்படுத்தி வந்தாலும், அவற்றால் பயனில்லை.

2013}ஆம் ஆண்டில் போதைப் பொருள்கள் விற்பனை மூலம் 322 பில்லியன் (ஒரு பில்லியன்=100 கோடி) டாலர் வருவாய் கிடைத்துள்ளது.

இந்நிலையில், போதைப் பொருள்களின் தீமை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும். சட்டத்தை கடுமையாக்க வேண்டும். மேலும், இவற்றின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும்.

வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். இல்லையென்றால்... எங்கே செல்லும் இந்தப் பாதை? என்றுதான் பாடத் தோன்றும்.

இந்த நிலையில், புகையிலைப் பொருள் கள் விற்பனைக்குத் தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனவை உச்சநீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது வரவேற்கத்தக்கது.

By பா. ராஜா

நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

எங்கே செல்லும் இந்தப் பாதை? Empty Re: எங்கே செல்லும் இந்தப் பாதை?

Post by ஸ்ரீராம் Fri Aug 22, 2014 11:26 am

கட்டுரை அருமை
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum