Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அறிவோம் நம் மொழியை: காதில் ஏறுகிறதா?
Page 1 of 1 • Share
அறிவோம் நம் மொழியை: காதில் ஏறுகிறதா?
கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது ‘செவிநுகர் கனிகள்’ என்றார் கம்பர். அந்த அளவு மொழிக்கு மிகவும் முக்கியமானது காது என்றும் செவி என்றும் அழைக்கப்படும் உறுப்பு.
எழுத்துக்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு, செவி வழியாகத்தான் மொழியும் அறிவும் கடத்தப்பட்டுவந்தன. இலக்கியங்களையும் பிற துறை நூல்களையும் குரு சொல்லக் கேட்டு, அதை மனதில் இருத்திக் கொள்வதுதான் முற்கால மரபு. யாப்பு வடிவங்களுக்கும் செவிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
மரபுக் கவிதை மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற விதத்தில் எதுகை, மோனை, சந்தம், தொடை போன்றவற்றைக் கொண்டிருந்தது. அச்சுக் கலையின் பரவலையும் புதுக்கவிதையின் பிறப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து, நவீன காலத்தில் கவிதை செவியிலிருந்து கண்ணுக்குப் புலம்பெயர்ந்துவிட்டதை நாம் உணரலாம்.
காது தொடர்பான சொற்கள், தொடர்களில் சில:
ஊசிக்காது: (பார்த்துப் பேசு, உன் கணவருக்கு ஊசிக்காது.)
காதில் ஏறு: ( நான் எவ்வளவு சொன்னாலும் உனக்குக் காதில் ஏறாதே!)
காதில் வாங்கு: (கழுதை மாதிரி கத்துகிறேனே, காதில் வாங்குகிறாளா பார்!)
காதில் விழு: (ஏழைகள் குரல் அவர்கள் காதில் விழாது.)
காதுபட: (என் காதுபடவே என்னைப் பற்றி அசிங்கமாகப் பேசுகிறார்கள்.)
காதும் காதும் வைத்தாற்போல: (தம்பி, இந்த வேலையைக் காதும்காதும் வைத்தாற்போல முடிக்க வேண்டும்.)
காதை அடை: (பசி, காதை அடைக்கிறது.)
காதைக் கடி: (நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என் மனைவி ‘அவர் உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்’ என்று காதைக் கடித்தாள்.)
காதோடு காதாக: (காதோடு காதாக ஒரு விஷயத்தை அவளிடம் சொன்னேன்.)
இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடு: ( எவ்வளவு அறிவுரை சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவான்.)
காதொலிக்கருவி: கேட்புத் திறன் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் சாதனம்.
செவிசாய்: (மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்த்தது.)
செவிப்பறை: செவியில் உள்ள சவ்வு போன்ற உறுப்பு.
செவிவழி: (இந்தக் கோயிலைப் பற்றி நிறைய செவிவழிச் செய்திகள் உலவுகின்றன.)
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
நன்றி: தி இந்து
எழுத்துக்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு, செவி வழியாகத்தான் மொழியும் அறிவும் கடத்தப்பட்டுவந்தன. இலக்கியங்களையும் பிற துறை நூல்களையும் குரு சொல்லக் கேட்டு, அதை மனதில் இருத்திக் கொள்வதுதான் முற்கால மரபு. யாப்பு வடிவங்களுக்கும் செவிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
மரபுக் கவிதை மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற விதத்தில் எதுகை, மோனை, சந்தம், தொடை போன்றவற்றைக் கொண்டிருந்தது. அச்சுக் கலையின் பரவலையும் புதுக்கவிதையின் பிறப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து, நவீன காலத்தில் கவிதை செவியிலிருந்து கண்ணுக்குப் புலம்பெயர்ந்துவிட்டதை நாம் உணரலாம்.
காது தொடர்பான சொற்கள், தொடர்களில் சில:
ஊசிக்காது: (பார்த்துப் பேசு, உன் கணவருக்கு ஊசிக்காது.)
காதில் ஏறு: ( நான் எவ்வளவு சொன்னாலும் உனக்குக் காதில் ஏறாதே!)
காதில் வாங்கு: (கழுதை மாதிரி கத்துகிறேனே, காதில் வாங்குகிறாளா பார்!)
காதில் விழு: (ஏழைகள் குரல் அவர்கள் காதில் விழாது.)
காதுபட: (என் காதுபடவே என்னைப் பற்றி அசிங்கமாகப் பேசுகிறார்கள்.)
காதும் காதும் வைத்தாற்போல: (தம்பி, இந்த வேலையைக் காதும்காதும் வைத்தாற்போல முடிக்க வேண்டும்.)
காதை அடை: (பசி, காதை அடைக்கிறது.)
காதைக் கடி: (நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என் மனைவி ‘அவர் உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்’ என்று காதைக் கடித்தாள்.)
காதோடு காதாக: (காதோடு காதாக ஒரு விஷயத்தை அவளிடம் சொன்னேன்.)
இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடு: ( எவ்வளவு அறிவுரை சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவான்.)
காதொலிக்கருவி: கேட்புத் திறன் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் சாதனம்.
செவிசாய்: (மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்த்தது.)
செவிப்பறை: செவியில் உள்ள சவ்வு போன்ற உறுப்பு.
செவிவழி: (இந்தக் கோயிலைப் பற்றி நிறைய செவிவழிச் செய்திகள் உலவுகின்றன.)
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: அறிவோம் நம் மொழியை: காதில் ஏறுகிறதா?
நல்ல கட்டுரை.
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|