Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தண்ணி ஏன் வழுக்கி விடுது?
Page 1 of 1 • Share
தண்ணி ஏன் வழுக்கி விடுது?
வி. தேவதாசன்
வீட்டின் நடு அறையில் உட்கார்ந்திருந்த கவின், மற்றொரு அறைக்குச் செல்வதற்காக வேகமாக எழுந்து நடந்து சென்றான். டைல்ஸ் தரையில் தண்ணீர் கொட்டிக்கிடப்பதைப் பார்க்காமல், அவன் வேகமாகச் சென்றதால் வழுக்கிக் கீழே விழப் பார்த்தான்.
பக்கத்தில் இருந்த அப்பா ஓடி வந்து, அவனைத் தாங்கிப் பிடித்ததால் கவின் அடிபடாமல் தப்பித்தான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி சிரித்தாள்.
"ரஞ்சனி! ஒருத்தர் கீழே விழும்போது அவங்களுக்கு உதவி செய்யாம இப்படித்தான் சிரிப்பியா?" என நிலா டீச்சர் அதட்டினார்.
"அம்மா! கொஞ்ச நேரத்துக்கு முன்னால டம்ளர்ல இருந்த தண்ணிய அவன்தான் கீழே கொட்டினான். அப்பவே அதைத் துடைச்சிருந்தா இப்போ விழுந்திருக்க மாட்டான்ல. அத நினைச்சுத்தான் சிரிச்சேன்" என்றாள் ரஞ்சனி.
"அவன் சின்ன பையன். தரையில தண்ணிய ஊத்தினா வழுக்கி கீழே விழுந்துடுவோம். அதனால அப்படி ஊத்தக் கூடாதுன்னு நீதான் அவனுக்குச் சொல்லியிருக்கணும்" என்றார் நிலா டீச்சர்.
"சரிம்மா" என்றாள் ரஞ்சனி.
"அம்மா! தரையில கிடக்கிற தண்ணியில கால வைச்சா ஏம்மா வழுக்கி விழுறோம்?" என்று கேள்வியைக் கேட்டான் கவின்.
"கவின் ஒவ்வொரு தடவை கீழே விழுறப்பவும், புதுசு புதுசா விஞ்ஞான விளக்கங்கள தெரிஞ்சிக்க வாய்ப்பு கிடைக்காது" என்று சொல்லி மீண்டும் சிரித்தாள் ரஞ்சனி.
"அம்மா! தண்ணி இருக்குற தரையில நடக்குறப்ப ஏன் கீழே விழுறோம்னு சொல்லுங்கம்மா" என்று மீண்டும் தன் கேள்விக்கே வந்தான் கவின்.
"சரி சொல்றேன்" என விளக்கத் தொடங்கினார் நிலா டீச்சர்.
"தரையில நாம நடக்கும்போது, சீராக நடக்கணும்னா தரைக்கும், நமது கால்களுக்கும் இடையே போதுமான பிடிப்பு (Grip) அவசியம். அதுக்கு காலுக்கும் தரைக்கும் இடையே சீரான உராய்வு இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். போதுமான உராய்வு இருந்தாதான் நாம தரையில காலை ஊனும்போது, தரையிலிருந்து போதுமான உந்து சக்தி கிடைச்சு, நாம் காலை எடுத்து அடுத்த அடியை வைக்க முடியும்.
நம்ம கால்களோட அடிப் பகுதி இயல்பாகவே சொரசொரப்பாக இருக்கும். இதனால நாம தரையில காலை வைக்கும்போது தரைக்கும், காலுக்கும் இடையே போதுமான உராய்வு கிடைச்சு, இயல்பாக நடக்க முடியுது.
செருப்போ, ஷூவோ போட்டுகிட்டு போகும்போது சீரான உராய்வு கிடைச்சாதான் நடக்கவோ, ஓடவோ முடியும். அதுக்காகத்தான் செருப்பு, ஷூவின் அடிப் பகுதிகள்ல
சிறுசிறு பள்ளங்களும், மேடுகளும் இருக்கும்படி தயாரிக்கிறாங்க.
அந்தக் காலத்துல வீடுகள்ல மண் தரையாகவோ சிமெண்ட் தரையாகவோ இருக்கும். அந்தத் தரைப் பகுதிகள் பெரும்பாலும் சொரசொரப்பா இருக்குங்கிறதால நடக்கும்போது தேவையான உராய்வு கிடைச்சு, இயல்பா நடக்க முடியும்.
ஆனால், இப்போ பெரும்பாலான வீடுகள்ல டைல்ஸ், மார்பிள், கிரானைட் கற்களால தரைய அமைக்கிறாங்க. மண், சிமெண்ட் தரையோட ஒப்பிட்டா டைல்ஸ், மார்பிள், கிரானைட் தரைகள் எல்லாம் சொரசொரப்பு குறைஞ்சு, வழுவழுப்பா இருக்கும்.
இதுல அந்த தரைல தண்ணிய வேற ஊத்துனம்னா வழுவழுப்பு இன்னும் அதிகமாகி, நாம காலை ஊனும்போது போதுமான உராய்வு கிடைக்காமப் போகும், வழுக்கி விழுந்திடுவோம். இதுபோல தண்ணி கிடக்கும் தரைகள்லயும், வழுவழுப்பான தரைகள்லயும் நடக்கும்போது வேகமாக ஓடாம, காலை நல்லா தரையில அழுத்தி, ஊன்றி நடக்கணும்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல. தரையில இயங்குற எல்லாப் பொருள்களுக்கும் இது பொருந்தும். உதாரணத்துக்குத் தரையில ஓடற வாகனங்கள்ல தரைக்கும் டயர்களுக்கும் இடையே போதுமான உராய்வு இருந்தாதான், வாகனங்கள்
சீராக இயங்க முடியும். இதுக்காகத்தான் வாகன டயர்கள்ல பல மேடு பள்ளங்கள் இருக்கும்படி தயாரிக்கிறாங்க.
புது டயர்ல நிறைய பள்ளங்கள் இருக்கும். அப்போ போதுமான உராய்வு கிடைச்சு தரைக்கும், டயருக்கும் இடையே சரியான பிடிமானம் இருக்கும். அதனால வாகனத்தை தேவையான வேகத்துல ஓட்டவோ, தேவைப்படும்போது உடனடியாக நிறுத்தவோ, திருப்பவோ முடியுது.
ஆனா பழைய டயர்கள்ல இந்த மேடு பள்ளங்கள் தேய்ஞ்சு போய் வழுவழுப்பாக மாறிடும். இதனால் தரைக்கும், டயருக்கும் இடையே உராய்வு குறைஞ்சு, தேவையான பிடிமானம் கிடைக்காத நிலை ஏற்படும். அதனாலதான் தேய்ஞ்சுபோன பழைய டயர்களப் பயன்படுத்தற பல வாகனங்கள் விபத்துகள சந்திக்குது" என விளக்கத்தைச் சொல்லி முடித்தார் நிலா டீச்சர்.
"அம்மா! நீங்க சொன்ன விளக்கத்துலேர்ந்து சீரான உராய்வுங்கிறது வாழ்க்கையோட பல செயல்பாடுகளுக்கு எவ்வளவு முக்கியம்ணு புரியுதும்மா" என்றான் கவின்.
"இப்போ கீழே விழுந்ததுக்கு விளக்கம் கிடைச்சிருச்சு. இனிமே அடிக்கடி நீ கீழே விழுந்தா, நாம இன்னும் நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கலாம்" என்று சொல்லி மீண்டும் சிரித்தாள் ரஞ்சனி.
© தி இந்து
வீட்டின் நடு அறையில் உட்கார்ந்திருந்த கவின், மற்றொரு அறைக்குச் செல்வதற்காக வேகமாக எழுந்து நடந்து சென்றான். டைல்ஸ் தரையில் தண்ணீர் கொட்டிக்கிடப்பதைப் பார்க்காமல், அவன் வேகமாகச் சென்றதால் வழுக்கிக் கீழே விழப் பார்த்தான்.
பக்கத்தில் இருந்த அப்பா ஓடி வந்து, அவனைத் தாங்கிப் பிடித்ததால் கவின் அடிபடாமல் தப்பித்தான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி சிரித்தாள்.
"ரஞ்சனி! ஒருத்தர் கீழே விழும்போது அவங்களுக்கு உதவி செய்யாம இப்படித்தான் சிரிப்பியா?" என நிலா டீச்சர் அதட்டினார்.
"அம்மா! கொஞ்ச நேரத்துக்கு முன்னால டம்ளர்ல இருந்த தண்ணிய அவன்தான் கீழே கொட்டினான். அப்பவே அதைத் துடைச்சிருந்தா இப்போ விழுந்திருக்க மாட்டான்ல. அத நினைச்சுத்தான் சிரிச்சேன்" என்றாள் ரஞ்சனி.
"அவன் சின்ன பையன். தரையில தண்ணிய ஊத்தினா வழுக்கி கீழே விழுந்துடுவோம். அதனால அப்படி ஊத்தக் கூடாதுன்னு நீதான் அவனுக்குச் சொல்லியிருக்கணும்" என்றார் நிலா டீச்சர்.
"சரிம்மா" என்றாள் ரஞ்சனி.
"அம்மா! தரையில கிடக்கிற தண்ணியில கால வைச்சா ஏம்மா வழுக்கி விழுறோம்?" என்று கேள்வியைக் கேட்டான் கவின்.
"கவின் ஒவ்வொரு தடவை கீழே விழுறப்பவும், புதுசு புதுசா விஞ்ஞான விளக்கங்கள தெரிஞ்சிக்க வாய்ப்பு கிடைக்காது" என்று சொல்லி மீண்டும் சிரித்தாள் ரஞ்சனி.
"அம்மா! தண்ணி இருக்குற தரையில நடக்குறப்ப ஏன் கீழே விழுறோம்னு சொல்லுங்கம்மா" என்று மீண்டும் தன் கேள்விக்கே வந்தான் கவின்.
"சரி சொல்றேன்" என விளக்கத் தொடங்கினார் நிலா டீச்சர்.
"தரையில நாம நடக்கும்போது, சீராக நடக்கணும்னா தரைக்கும், நமது கால்களுக்கும் இடையே போதுமான பிடிப்பு (Grip) அவசியம். அதுக்கு காலுக்கும் தரைக்கும் இடையே சீரான உராய்வு இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். போதுமான உராய்வு இருந்தாதான் நாம தரையில காலை ஊனும்போது, தரையிலிருந்து போதுமான உந்து சக்தி கிடைச்சு, நாம் காலை எடுத்து அடுத்த அடியை வைக்க முடியும்.
நம்ம கால்களோட அடிப் பகுதி இயல்பாகவே சொரசொரப்பாக இருக்கும். இதனால நாம தரையில காலை வைக்கும்போது தரைக்கும், காலுக்கும் இடையே போதுமான உராய்வு கிடைச்சு, இயல்பாக நடக்க முடியுது.
செருப்போ, ஷூவோ போட்டுகிட்டு போகும்போது சீரான உராய்வு கிடைச்சாதான் நடக்கவோ, ஓடவோ முடியும். அதுக்காகத்தான் செருப்பு, ஷூவின் அடிப் பகுதிகள்ல
சிறுசிறு பள்ளங்களும், மேடுகளும் இருக்கும்படி தயாரிக்கிறாங்க.
அந்தக் காலத்துல வீடுகள்ல மண் தரையாகவோ சிமெண்ட் தரையாகவோ இருக்கும். அந்தத் தரைப் பகுதிகள் பெரும்பாலும் சொரசொரப்பா இருக்குங்கிறதால நடக்கும்போது தேவையான உராய்வு கிடைச்சு, இயல்பா நடக்க முடியும்.
ஆனால், இப்போ பெரும்பாலான வீடுகள்ல டைல்ஸ், மார்பிள், கிரானைட் கற்களால தரைய அமைக்கிறாங்க. மண், சிமெண்ட் தரையோட ஒப்பிட்டா டைல்ஸ், மார்பிள், கிரானைட் தரைகள் எல்லாம் சொரசொரப்பு குறைஞ்சு, வழுவழுப்பா இருக்கும்.
இதுல அந்த தரைல தண்ணிய வேற ஊத்துனம்னா வழுவழுப்பு இன்னும் அதிகமாகி, நாம காலை ஊனும்போது போதுமான உராய்வு கிடைக்காமப் போகும், வழுக்கி விழுந்திடுவோம். இதுபோல தண்ணி கிடக்கும் தரைகள்லயும், வழுவழுப்பான தரைகள்லயும் நடக்கும்போது வேகமாக ஓடாம, காலை நல்லா தரையில அழுத்தி, ஊன்றி நடக்கணும்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல. தரையில இயங்குற எல்லாப் பொருள்களுக்கும் இது பொருந்தும். உதாரணத்துக்குத் தரையில ஓடற வாகனங்கள்ல தரைக்கும் டயர்களுக்கும் இடையே போதுமான உராய்வு இருந்தாதான், வாகனங்கள்
சீராக இயங்க முடியும். இதுக்காகத்தான் வாகன டயர்கள்ல பல மேடு பள்ளங்கள் இருக்கும்படி தயாரிக்கிறாங்க.
புது டயர்ல நிறைய பள்ளங்கள் இருக்கும். அப்போ போதுமான உராய்வு கிடைச்சு தரைக்கும், டயருக்கும் இடையே சரியான பிடிமானம் இருக்கும். அதனால வாகனத்தை தேவையான வேகத்துல ஓட்டவோ, தேவைப்படும்போது உடனடியாக நிறுத்தவோ, திருப்பவோ முடியுது.
ஆனா பழைய டயர்கள்ல இந்த மேடு பள்ளங்கள் தேய்ஞ்சு போய் வழுவழுப்பாக மாறிடும். இதனால் தரைக்கும், டயருக்கும் இடையே உராய்வு குறைஞ்சு, தேவையான பிடிமானம் கிடைக்காத நிலை ஏற்படும். அதனாலதான் தேய்ஞ்சுபோன பழைய டயர்களப் பயன்படுத்தற பல வாகனங்கள் விபத்துகள சந்திக்குது" என விளக்கத்தைச் சொல்லி முடித்தார் நிலா டீச்சர்.
"அம்மா! நீங்க சொன்ன விளக்கத்துலேர்ந்து சீரான உராய்வுங்கிறது வாழ்க்கையோட பல செயல்பாடுகளுக்கு எவ்வளவு முக்கியம்ணு புரியுதும்மா" என்றான் கவின்.
"இப்போ கீழே விழுந்ததுக்கு விளக்கம் கிடைச்சிருச்சு. இனிமே அடிக்கடி நீ கீழே விழுந்தா, நாம இன்னும் நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கலாம்" என்று சொல்லி மீண்டும் சிரித்தாள் ரஞ்சனி.
© தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» சும்மா 'கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு' தண்ணி குடிங்க..!
» தண்ணி போட்டா தலைகீழா தெரியுது...!!
» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
» ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க
» பிச்சை எடுக்க தைரியம் வர தண்ணி அடிக்கிறேன்…!!
» தண்ணி போட்டா தலைகீழா தெரியுது...!!
» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
» ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க
» பிச்சை எடுக்க தைரியம் வர தண்ணி அடிக்கிறேன்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|