Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவலையை எதிர் கொள்வது எப்படி?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
கவலையை எதிர் கொள்வது எப்படி?
ஒருவரது கவலை அடுத்தவருக்கு கவலையாக தெரிவது இல்லை. இது ஏன்? உண்மையில் அது கவலையாயின் அடுத்தவருக்கும்,ஏன் எல்லோருக்குமல்லவா அது கவலையாக இருக்க வேண்டும். அவ்வளவு ஏன்? கவலை எவ்வளவு காலம் ஒருவருக்கு நீடிக்கிறது? சென்ற வருடம் ஒரு சிக்கலைச் சந்தித்தபோது பட்ட கவலை, அந்தச் சிக்கல் இன்னும் அப்படியே இருக்கும்போது இன்று ஏன் அதற்காகக் கவலைப்படுவதில்லை? இப்போது கவலையற்றிருப்பது போல்,ஏன் அப்போதே அந்தக் கவலைப்படாமல் இருந்திருக்க கூடாது? அப்படி மட்டும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்மையாக இருந்திருக்கும்.எவ்வளவு நட்டத்தை தவிர்த்திருக்கலாம்.
சின்ன சிக்கலைக் கூடக் கவலை என்னும் பூதக்கண்ணாடியால் பார்த்து ஈ, கொசுவைக் கூட யானையாக்கிக் கொள்வார்கள் சிலர். இப்படி நாமாகக் கவலையை உருவாக்கிக் கொள்ளலாம்? ஒரு பெரிய கவலை தானாகத் தீர்ந்தாலோ அல்லது நாமாகத் தீர்த்தாலோ பெரிய சிக்கல் இருந்த வரை நாம் பொருட்படுத்தாத வேறு ஒரு சிறிய சிக்கலை எடுத்துக் கொண்டு, நாம் கவலைப் படுவதும் உண்டு.கவலையே ஒரு பழக்கமாகவும்,ஒரு தேவையாகவும், ஒரு சுவையாகவும் ஆகிவிட்ட ஒரு பரிதாபமான நிலையே இதற்குக் காரணம்.
ஏதோ பிறந்து விட்டோம். ஆனால் இப்படித்தான் வாழ வேண்டுமெனத் தெரிந்து வாழ வேண்டும்; தைரியமாக வாழ வேண்டும். சிக்கல்கள் வெள்ளம் போல் வந்தாலும் அறிவெனும் தோணியில் ஏறி அவ்வெள்ளத்தில் மிதக்க வேண்டும்; மூழ்கிவிடக்கூடாது.
''வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான
உள்ளத்தின் உள்ளக் கெடும்''
(குறள்-622)
என்கிறார் வள்ளுவர்.அத்தகைய அறிவுடைமையை நாம் பெற்றாக வேண்டும். கவலை வேறு, பொறுப்புணர்ச்சி வேறு, கவலைப்படக்கூடாது என்பதற்காக, வந்து விட்ட சிக்கலை மறுத்துவிடலாகாது. சிக்கலை ஏற்கத் தான் வேண்டும்; எதிர்கொள்ளத்தான் வேண்டும; ஆராயவேண்டும். அதை விடுத்து;''அழுவதிலோ'',''இனி என்ன செய்யப் போகிறேன்?''என்று ஏங்குவதிலோ என்ன பயன்? அன்றாட வாழ்க்கையிலேயே இதுபோல் கவலைப்பட்டதனால் சிக்கலைத் தீர்க்க முடிந்ததா? இல்லையே, கவலைப்படுவதால் சிக்கலின் தன்மையை கணிக்க முடியாமல் போகும். சிக்கல் பெரிதாகத் தோன்றும். சிக்கலை அதன் நுட்பம் தெரிந்து அவிழ்க்கும் திறமை குறைந்து போகும்.
சின்ன சிக்கலைக் கூடக் கவலை என்னும் பூதக்கண்ணாடியால் பார்த்து ஈ, கொசுவைக் கூட யானையாக்கிக் கொள்வார்கள் சிலர். இப்படி நாமாகக் கவலையை உருவாக்கிக் கொள்ளலாம்? ஒரு பெரிய கவலை தானாகத் தீர்ந்தாலோ அல்லது நாமாகத் தீர்த்தாலோ பெரிய சிக்கல் இருந்த வரை நாம் பொருட்படுத்தாத வேறு ஒரு சிறிய சிக்கலை எடுத்துக் கொண்டு, நாம் கவலைப் படுவதும் உண்டு.கவலையே ஒரு பழக்கமாகவும்,ஒரு தேவையாகவும், ஒரு சுவையாகவும் ஆகிவிட்ட ஒரு பரிதாபமான நிலையே இதற்குக் காரணம்.
ஏதோ பிறந்து விட்டோம். ஆனால் இப்படித்தான் வாழ வேண்டுமெனத் தெரிந்து வாழ வேண்டும்; தைரியமாக வாழ வேண்டும். சிக்கல்கள் வெள்ளம் போல் வந்தாலும் அறிவெனும் தோணியில் ஏறி அவ்வெள்ளத்தில் மிதக்க வேண்டும்; மூழ்கிவிடக்கூடாது.
''வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான
உள்ளத்தின் உள்ளக் கெடும்''
(குறள்-622)
என்கிறார் வள்ளுவர்.அத்தகைய அறிவுடைமையை நாம் பெற்றாக வேண்டும். கவலை வேறு, பொறுப்புணர்ச்சி வேறு, கவலைப்படக்கூடாது என்பதற்காக, வந்து விட்ட சிக்கலை மறுத்துவிடலாகாது. சிக்கலை ஏற்கத் தான் வேண்டும்; எதிர்கொள்ளத்தான் வேண்டும; ஆராயவேண்டும். அதை விடுத்து;''அழுவதிலோ'',''இனி என்ன செய்யப் போகிறேன்?''என்று ஏங்குவதிலோ என்ன பயன்? அன்றாட வாழ்க்கையிலேயே இதுபோல் கவலைப்பட்டதனால் சிக்கலைத் தீர்க்க முடிந்ததா? இல்லையே, கவலைப்படுவதால் சிக்கலின் தன்மையை கணிக்க முடியாமல் போகும். சிக்கல் பெரிதாகத் தோன்றும். சிக்கலை அதன் நுட்பம் தெரிந்து அவிழ்க்கும் திறமை குறைந்து போகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
சினத்தினால் உயிராற்றல் விரயமாகும் என்றும், நோய்கள் பலவும் வரும் என்றும் முன்னர் பார்த்தோமல்லவா? அவ்வகையில் இந்தக் கவலையும் சினத்திற்கு இளைத்ததன்று.கவலையினால் உயிராற்றல் வேகமான எண்ண அலைகளாக அழிந்து விரயமாகிறது. கவலையினால் இரத்த அழுத்தம் மற்றும் அசீரணம், குடல்புண், தலைவலி, சுவாச நோய்கள் போன்றவை வருகின்றன; மிகுகின்றன. இந்தக் கவலை தேவைதானா?
'கவலை' என்ற சொல்லுக்கு 'ஏற்றம்' (தண்ணீர் இறைக்கும் சாதனம்) என்று ஒரு பொருளும் உண்டு. எனவே நாம் இப்போது ஆராயும் கவலையானது உவமை ஆகு பெயர் எனலாம். மற்றவகை ஏற்றத்தைவிடக் கவலை விரைவாகத் தண்ணீரைக் கிணற்றிலிருந்து வெளியேற்றிவிடும். அதே போல் இந்த மனக்கவலையும் வெகு வேகத்தில் உயிராற்றலை உடலிலிருந்து வெளியேற்றி விடும்.
கருத்தொடராக வரும் தீவினைகளான பாவப்பதிவுகள் கூட்டுவிக்கும் சிக்கல்களாயினும்,தன்னை உணர்ந்த தெளிவினால் நீங்கிவிடும் ஞானியர்க்கு முன்வினைப் பயமுமில்லை, தவறிழைத்துச் சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளும் பின்வினை பயமும் இல்லை.இதைத் தான் திருமூலர்,
''தன்னை அறிந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே''
என்றார்.இனி,தன்னாலோ,பிறராலோ விளையும் சிக்கலை என்ன செய்வதன்று, எப்படி எதிர்கொள்வதென்று ஆராய்வோம். சிக்கல்களைக் கொண்டு மிரள்வது கூடாது.கவலைப்படுவதாலும் ஆவதொன்றில்லை.கவலையினால் எல்லா வகையிலும் இன்னல்தான். இதை முதலில் தெரிந்து கொள்கிறோம்.
இப்போது கவலையாக உருக்கொண்டிருக்கும் இந்தச் சிக்கல் ஏன் வந்த்து?யார் காரணம்? இந்தச் சிக்கலின் தன்மை என்ன? இந்தச் சிக்கலினால் நமக்கு என்ன துன்பம் வர இருக்கிறது ? என்பதை ஆராயந்தாக வேண்டும்.
எனவே, கவலை கொண்டு நம் உடல் நலனை கெடுத்துக்கொள்வதை விட, அதை எளிதில் கையாளுவதில் தான் நம் திறன் மறைந்து கிடக்கிறது...
பிரச்சனைகளை கண்டு பயந்து கொள்வதை விட, அதை தீர்க்க முற்படுவதே நம் மனத்திற்கும், உடல் நலத்திற்கும் நல்லது...
மாலைமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
இவர் கவலை பெரிய கவலையா இருக்கேகவியருவி ம. ரமேஷ் wrote:கவலையை எதிர்கொள்ளவும் கவலைப்பட வேண்டியிருக்கு!
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
இவர் கவலை பெரிய கவலையா இருக்கே
உங்கள் கவலை நிவர்த்தி ஆனதா முரா அண்ணா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
உங்களை நம்புற வரைக்கும் அது நிவர்த்தி ஆகாது என்பது உலகறிந்த விசயம்தானே
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
முரளிராஜா wrote:உங்களை நம்புற வரைக்கும் அது நிவர்த்தி ஆகாது என்பது உலகறிந்த விசயம்தானே
சத்தியமா இதைதான் எதிர் பார்த்தேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
நீங்க இப்படிதான் சொல்வீங்கனு நினைச்சேன், சொல்லி விட்டீர்கள் தல
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
ஏன் உங்கள் சுய முன்னேற்றம் என்னவாயிற்று?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
முன்னேற்றத்திற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் ராம்ஸ்ரீராம் wrote:என் சுய முன்னேற்றம் என்னவாயிற்று?
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
மேலே போயி நல்ல படிங்க இன்னொரு தடவை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
அதெல்லாம் சரிதான்ஸ்ரீராம் wrote:மேலே போயி நல்ல படிங்க இன்னொரு தடவை.
நீங்க ஒழுங்கா படிச்சிருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா ?
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
"தன் கையே தனக்கு உதவி" அப்படினு யாரோ சொல்லி இருக்காங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
சரி சரி கோப படாதீங்க. பார்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவலையை எதிர் கொள்வது எப்படி?
சரி சரி சண்டையை முடிச்சிக்கங்க .......[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கவலையை எதிர் கொள்வது எப்படி???
» இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது
» அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
» நிஜ பிரசவவலியைத் தெரிந்து கொள்வது எப்படி?
» வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி?
» இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது
» அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
» நிஜ பிரசவவலியைத் தெரிந்து கொள்வது எப்படி?
» வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|