Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்ணைக் கட்டுது கலப்படம்!
Page 1 of 1 • Share
கண்ணைக் கட்டுது கலப்படம்!
கலப்படம் என்பது வணிக தர்மத்தை மீறிய கொடுஞ்செயல். நம்பிக்கை துரோகம். இன்று நாம் பயன்படுத்துகிற பல்வேறு பொருட்களில் 25 சதவிகிதத்துக்கு மேல் கலப்படம் செய்யப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கலப்படம் செய்யப் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களுமே மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.
எந்தப் பொருளில் எதைக் கலக்கிறார்கள்?
பால் - யூரியா, ஜவ்வரிசி மாவு, டிடர்ஜென்ட் பவுடர்கள், போதாக்குறைக்கு மாடுகளுக்குப் போடப்படும் ஆக்சிடோசின் போன்ற மருந்துகளும் பாலில் கலந்து விடுகிறதாம்!
மஞ்சள் தூள் - நிறத்துக்காக லெட் குரோமேட் என்ற ஆபத்தான வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.
டீத்தூள் - புளியங்கொட்டை, முந்திரித்தோல், ரசாயன வண்ணப்பொடி, இலவம்பஞ்சு, மஞ்சனத்தி இலை, பயன்படுத்திய டீத்தூள்...
சமையல் எண்ணெய் - ஆர்ஜிமோன், பெட்ரோல் தயாரிக்கும் கச்சா எண்ணெயில் கடைசியில் எஞ்சும் மினரல் ஆயில், ஆமணக்கு எண்ணெய், கடுகு எண்ணெய்...
மிளகாய்த்தூள் - செங்கல் பொடி, ரசாயன வண்ணப்பொடி...
மல்லி(தனியா)த்தூள் - மரத்தூள், குதிரைச்சாணத் தூள், ரசாயன வண்ணப்பொடி...
மிளகு - பப்பாளி விதை.
சர்க்கரை - ரவை.
கடலைப்பருப்பு - கேசரி பருப்பு.
நெய் - வனஸ்பதி.
அரிசி - கல், தரம் குறைந்த அரிசி.
காபி - சிக்கரி, பேரீச்சைப் பொடி, முந்திரிக்கொட்டைத் தூள்.
பெருங்காயம் - மண், பிசின்
கடுகு - ஆர்ஜிமோன்
விதைகள்.
பச்சைப்பட்டாணி - ரசாயன வண்ணப்பொடி.
சீரகம்- புல்விதை,
நிலக்கரித்தூள்.
வெல்லம் - மெட்டானில் என்ற ரசாயன நிறமி, சலவைசோடா, சாக்கட்டித் தூள்.
பாக்குத்தூள் - மரத்தூள், ரசாயன வண்ணப்பொடி.
குங்குமப்பூ - உலர்ந்த சோள
நார்கள்.
லவங்கப்பட்டை - ரசாயன வண்ணப்பொடி கலந்த தரம் குறைந்த கருவாய்ப்பட்டை.
உப்பு - சுண்ணாம்பு,
தூள்கற்கள்.
தேன் - சர்க்கரை பாகு.
கடலை எண்ணெய் - பருத்திக்கொட்டை எண்ணெய்.
ரவை - இரும்புத்தூள்.
தானியங்கள் - நச்சுத்தன்மை உடைய காளான் விதைகள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கண்ணைக் கட்டுது கலப்படம்!
உணவகங்களில் கலப்படங்கள்?
டீக்கடைகளில், ஒரு துணியில் சிறிதளவு ஜவ்வரிசியைக் கட்டி பாலில் போட்டு விடுவார்கள். ஜவ்வரிசி வெந்து பாலில் கரைந்து பால் கெட்டியாக மாறிவிடும். சர்க்கரை பயன்பாட்டைக் குறைப்பதற்காக ஸ்வீட் மாஸ்டர் எனப்படும் சாக்கரினை பாலில் கலப்பார்கள். தொண்டை வரை இனிப்பு ஒட்டும். இதனால் வயிறு, தொண்டைக்கோளாறுகள் ஏற்படும். வாய் வெந்து புண்ணாகும்.
முட்டை புரோட்டா, கொத்து புரோட்டாக்களில் மீந்துபோன பழைய புரோட்டாக்களை கலப்படம் செய்வார்கள். கழிவு மீன்களை, புதிய மீன்களுடன் கலந்து கலர்ஃபுல் மசாலா தடவி பொரித்துத் தருவார்கள். சிக்கன், மட்டனோடு பீஃப் கலப்பதும் அதிகம். காடை பிரியாணி என்று காக்காய் பிரியாணி விற்பனை செய்கிறார்கள்.
ஆந்திரா, ராஜஸ்தான் பகுதிகளில் இருந்து ரயிலில் அனுப்பப்படும் கெட்டுப்போன இறைச்சி சென்னையில் பெருமளவு விற்பனையாகிறது.
பிரியாணியில் எண்ணெய், நெய்க்குப் பதிலாக மாட்டுக்கொழுப்பு எண்ணெய் சேர்க்கிறார்கள். நோய்வாய்ப்பட்டு இறந்த சிக்கன் இறைச்சி குறைந்த விலைக்குக் கிடைக்கிறது.
குளிர்பானங்களில் சர்க்கரைக்குப் பதில் சாக்கரின். ரெடிமேடு மாவுகளில் அரிசிக்கு இணையாக பழைய கஞ்சி சேர்த்து அரைத்து விற்கிறார்கள்.
சில உணவகங்களில் அரிசியோடு சேர்த்து சுண்ணாம்பையும் போட்டு சோறு வடிப்பார்கள். சோறு விறைப்பாக இருப்பதால் அதிகம் சாப்பிட முடியாது. ஆனால், வயிறு காலி.
விளைவு என்ன?
கலப்படத்துக்குப் பயன்படுத்துகிற பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. மெல்லக்கொல்லும் விஷம் போன்றவை. கலப்பட எண்ணெய் பயன்படுத்துவதால் பார்வை இழப்பு, வயிற்றுப்போக்கு, இதய நோய்கள், கல்லீரல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ரசாயன பொடிகளைச் சேர்ப்பதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். பருப்புகளில் கலக்கப்படும் கேசரி பருப்பால் முடக்குவாதம் வரலாம்.
சட்டம் என்ன சொல்கிறது?
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டப்படி கலப்படம் செய்வது கடுமையான குற்றம். அண்மையில் கொண்டுவரப் பட்ட உணவு பாதுகாப்புச் சட்டமும் கலப்படத்தை கடுமையாக கண்டிக்கிறது. பொருளில் கலப்படம் இருப்பதாகச் சந்தேகித்தால் அந்தப் பொருளோடு உங்கள் பகுதியின் சுகாதார அலுவலரையோ, ஆக்கப்பூர்வமாக செயல்படும் நுகர்வோர் அமைப்பையோ அணுகலாம். (044-28583222, 28583422, 24321830, 24334811, 24334818 ஆகிய எண்களில் சிவில் சப்ளை, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யலாம்.
dinakaran
டீக்கடைகளில், ஒரு துணியில் சிறிதளவு ஜவ்வரிசியைக் கட்டி பாலில் போட்டு விடுவார்கள். ஜவ்வரிசி வெந்து பாலில் கரைந்து பால் கெட்டியாக மாறிவிடும். சர்க்கரை பயன்பாட்டைக் குறைப்பதற்காக ஸ்வீட் மாஸ்டர் எனப்படும் சாக்கரினை பாலில் கலப்பார்கள். தொண்டை வரை இனிப்பு ஒட்டும். இதனால் வயிறு, தொண்டைக்கோளாறுகள் ஏற்படும். வாய் வெந்து புண்ணாகும்.
முட்டை புரோட்டா, கொத்து புரோட்டாக்களில் மீந்துபோன பழைய புரோட்டாக்களை கலப்படம் செய்வார்கள். கழிவு மீன்களை, புதிய மீன்களுடன் கலந்து கலர்ஃபுல் மசாலா தடவி பொரித்துத் தருவார்கள். சிக்கன், மட்டனோடு பீஃப் கலப்பதும் அதிகம். காடை பிரியாணி என்று காக்காய் பிரியாணி விற்பனை செய்கிறார்கள்.
ஆந்திரா, ராஜஸ்தான் பகுதிகளில் இருந்து ரயிலில் அனுப்பப்படும் கெட்டுப்போன இறைச்சி சென்னையில் பெருமளவு விற்பனையாகிறது.
பிரியாணியில் எண்ணெய், நெய்க்குப் பதிலாக மாட்டுக்கொழுப்பு எண்ணெய் சேர்க்கிறார்கள். நோய்வாய்ப்பட்டு இறந்த சிக்கன் இறைச்சி குறைந்த விலைக்குக் கிடைக்கிறது.
குளிர்பானங்களில் சர்க்கரைக்குப் பதில் சாக்கரின். ரெடிமேடு மாவுகளில் அரிசிக்கு இணையாக பழைய கஞ்சி சேர்த்து அரைத்து விற்கிறார்கள்.
சில உணவகங்களில் அரிசியோடு சேர்த்து சுண்ணாம்பையும் போட்டு சோறு வடிப்பார்கள். சோறு விறைப்பாக இருப்பதால் அதிகம் சாப்பிட முடியாது. ஆனால், வயிறு காலி.
விளைவு என்ன?
கலப்படத்துக்குப் பயன்படுத்துகிற பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. மெல்லக்கொல்லும் விஷம் போன்றவை. கலப்பட எண்ணெய் பயன்படுத்துவதால் பார்வை இழப்பு, வயிற்றுப்போக்கு, இதய நோய்கள், கல்லீரல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ரசாயன பொடிகளைச் சேர்ப்பதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். பருப்புகளில் கலக்கப்படும் கேசரி பருப்பால் முடக்குவாதம் வரலாம்.
சட்டம் என்ன சொல்கிறது?
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டப்படி கலப்படம் செய்வது கடுமையான குற்றம். அண்மையில் கொண்டுவரப் பட்ட உணவு பாதுகாப்புச் சட்டமும் கலப்படத்தை கடுமையாக கண்டிக்கிறது. பொருளில் கலப்படம் இருப்பதாகச் சந்தேகித்தால் அந்தப் பொருளோடு உங்கள் பகுதியின் சுகாதார அலுவலரையோ, ஆக்கப்பூர்வமாக செயல்படும் நுகர்வோர் அமைப்பையோ அணுகலாம். (044-28583222, 28583422, 24321830, 24334811, 24334818 ஆகிய எண்களில் சிவில் சப்ளை, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யலாம்.
dinakaran
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கண்ணைக் கட்டுது கலப்படம்!
கலப்படம் மனிதநேயமற்ற ஒரு செயல்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கண்ணைக் கட்டுது கலப்படம்!
இதெல்லாம் பெரும் பாவத்தைச் சேர்ந்தது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கண்ணைக் கட்டுது கலப்படம்!
ரானுஜா wrote:இதெல்லாம் பெரும் பாவத்தைச் சேர்ந்தது
உண்மைதான் அக்கா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்ணைக் கட்டுது கலப்படம்!
பணமே பிரதானமாக போனதால் பாவ புண்ணியம் ,மனிதபிமானத்திர்க்கெல்லாம் இடமில்லாமல் போய்விட்டது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கண்ணைக் கவரும் திருமண நகைகள்!
» கதரிலும் கலப்படம்
» கலப்படம் ... பொழைச்சிட்டேன்
» தேங்காய் எண்ணெய் கலப்படம்
» கண்ணைக் கவரும் “காகித பூக்களை” செய்வது எப்படி? – செய்முறை வீடியோ
» கதரிலும் கலப்படம்
» கலப்படம் ... பொழைச்சிட்டேன்
» தேங்காய் எண்ணெய் கலப்படம்
» கண்ணைக் கவரும் “காகித பூக்களை” செய்வது எப்படி? – செய்முறை வீடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|