Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
"கள்' மயக்கம் தெளியுமா?
Page 1 of 1 • Share
"கள்' மயக்கம் தெளியுமா?
நல்ல செய்திகளைவிட, கெட்ட செய்திகள் அதிவேகமாகப் பரவுகிறது. "வாழ்த்துக்கள்' என்பதை "வாழ்த்துகள்' என்று எழுதி, ஓரெழுத்தைக் கொலை செய்வது அதி வேகமாகப் பரவி வருகிறது. அது இலக்கணத்தை மீறிய செயலாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
வாழ்த்துக்கள் - இது கள்ளைக் குறிக்கிறது என்கிறார்கள். ஆம். இது கள்ளையும் குறிக்கிறது; ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்த்துக்கள் என்ற பன்மையையும் குறிக்கிறது. வாழ்த்துக்கள் - என்றொரு கள் இருக்கிறதா? இல்லையே. அதனால், இல்லாத கள்ளை விட்டுவிட்டு இருக்கிற பன்மையை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆண்கள், பெண்கள் என்று எழுதுகிறோம். அதற்காகக் கள்ளிலே இரண்டு வகை உண்டு; ஒன்று ஆண்; மற்றொன்று பெண் என்று சொல்லலாமா?
உண்மையில் பூக்கள், பழங்கள் என்பவை கள்ளையும் குறிக்கின்றன; பன்மையையும் குறிக்கின்றன. இடத்திற்கேற்ப பொருள் கொள்ளவில்லையா? அதைப்போல, "வாழ்த்துக்கள்' என்பதையும் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே? வன்றொடர்க் குற்றுகரப் புணர்ச்சியில் மட்டும் கள் மயக்கம் ஏன்? எழுத்துக்கள் எனும் சொல் இலக்கண விதிகளிலேயே இடம்பெற்றுள்ளது. எழுத்துகள் என்றொரு வகையான கள் இல்லவே இல்லை.
தமிழில் பல பொருள் ஒரு சொல்லுக்கு உண்டு. இதற்குப் பஞ்சமே இல்லை. இடத்திற்கேற்பப் பொருள்கொள்ள வேண்டியதுதான்.
""நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்'' - இதில் எங்கே இருக்கிறது மதுவாகிய கள்? ""நல்வாழ்த்துக்கள்ளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்'' என்றால்தான் தவறு. ஏனென்றால், "நல்வாழ்த்துக்கள்' என்றொரு வகையான கள் கிடையாது.
உண்மையில், வாழ்த்துகள் என்பதுதான் கள்ளைக் குறிக்கிறது. ஆம். வாழ்த்திய கள், வாழ்த்துகின்ற கள், வாழ்த்தப் போகும் கள் - என வாழ்த்துகள் என்பது கள்ளை மட்டுமே குறிக்கிறது. இதில் பன்மை இல்லை.
"வாழ்த்துக்கள்' என்பதில் இரு பொருளிருந்தாலும், வாழ்த்துக்கள் என்றொரு கள் இல்லாததால், பல வாழ்த்துக்கள் என்ற பொருளையே தரும். இதைப் போன்றே எல்லா குற்றுகரச் சொற்களுக்கும் பொருந்தும்.
இன்னும் சிலர், "ஆள்கள்', "நாள்கள்' என்று எழுதுகிறார்கள். அதே கள் மயக்கம் இங்கும் வருகிறது. ஆட்கள் - என்றொரு வகையான கள் இல்லவே இல்லை. எனவே, ஆட்கள் என்பது பல ஆட்கள் என்ற பன்மையை மட்டுமே குறிக்கும். மாறாக, ஆள்கள் என்பதுதான் ஆண்ட கள், ஆளுகின்ற கள், ஆளப்போகும் கள் - எனக் கள்ளை மட்டுமே குறிக்கும். எனவே, ஆட்களைக் குறிப்பதற்கு "ஆள்கள்' என்பது தவறாகும். கள் ஆட்சி செய்யுமிடத்தில் வேண்டுமானால், ஆள்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
நாட்கள் என்பது கள்ளையும் குறிக்கிறது; பன்மையையும் குறிக்கிறது. இடத்திற்கேற்பப் பொருள் கொள்ளலே நன்று. "நான்கு நாட்களாகப் படித்தேன்' - இது பன்மையைக் காட்டும். நான்கு நாட்கள்ளைக் குடித்தேன் - இது மதுவைக் குறிக்கும்.
"கண்' எனப்படும் வேற்றுமை உருபுக்கும், "கண்' எனப்படும் உடல் உறுப்புக்கும் வேறுபாடு தெளிவாகத் தெரியும்பொழுது, "கள்' எனப்படும் பன்மை விகுதிக்கும், "கள்' எனப்படும் மதுவுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பது விந்தையிலும் விந்தை!
By ப.குருநாதன்
dinamani
வாழ்த்துக்கள் - இது கள்ளைக் குறிக்கிறது என்கிறார்கள். ஆம். இது கள்ளையும் குறிக்கிறது; ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்த்துக்கள் என்ற பன்மையையும் குறிக்கிறது. வாழ்த்துக்கள் - என்றொரு கள் இருக்கிறதா? இல்லையே. அதனால், இல்லாத கள்ளை விட்டுவிட்டு இருக்கிற பன்மையை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆண்கள், பெண்கள் என்று எழுதுகிறோம். அதற்காகக் கள்ளிலே இரண்டு வகை உண்டு; ஒன்று ஆண்; மற்றொன்று பெண் என்று சொல்லலாமா?
உண்மையில் பூக்கள், பழங்கள் என்பவை கள்ளையும் குறிக்கின்றன; பன்மையையும் குறிக்கின்றன. இடத்திற்கேற்ப பொருள் கொள்ளவில்லையா? அதைப்போல, "வாழ்த்துக்கள்' என்பதையும் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே? வன்றொடர்க் குற்றுகரப் புணர்ச்சியில் மட்டும் கள் மயக்கம் ஏன்? எழுத்துக்கள் எனும் சொல் இலக்கண விதிகளிலேயே இடம்பெற்றுள்ளது. எழுத்துகள் என்றொரு வகையான கள் இல்லவே இல்லை.
தமிழில் பல பொருள் ஒரு சொல்லுக்கு உண்டு. இதற்குப் பஞ்சமே இல்லை. இடத்திற்கேற்பப் பொருள்கொள்ள வேண்டியதுதான்.
""நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்'' - இதில் எங்கே இருக்கிறது மதுவாகிய கள்? ""நல்வாழ்த்துக்கள்ளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்'' என்றால்தான் தவறு. ஏனென்றால், "நல்வாழ்த்துக்கள்' என்றொரு வகையான கள் கிடையாது.
உண்மையில், வாழ்த்துகள் என்பதுதான் கள்ளைக் குறிக்கிறது. ஆம். வாழ்த்திய கள், வாழ்த்துகின்ற கள், வாழ்த்தப் போகும் கள் - என வாழ்த்துகள் என்பது கள்ளை மட்டுமே குறிக்கிறது. இதில் பன்மை இல்லை.
"வாழ்த்துக்கள்' என்பதில் இரு பொருளிருந்தாலும், வாழ்த்துக்கள் என்றொரு கள் இல்லாததால், பல வாழ்த்துக்கள் என்ற பொருளையே தரும். இதைப் போன்றே எல்லா குற்றுகரச் சொற்களுக்கும் பொருந்தும்.
இன்னும் சிலர், "ஆள்கள்', "நாள்கள்' என்று எழுதுகிறார்கள். அதே கள் மயக்கம் இங்கும் வருகிறது. ஆட்கள் - என்றொரு வகையான கள் இல்லவே இல்லை. எனவே, ஆட்கள் என்பது பல ஆட்கள் என்ற பன்மையை மட்டுமே குறிக்கும். மாறாக, ஆள்கள் என்பதுதான் ஆண்ட கள், ஆளுகின்ற கள், ஆளப்போகும் கள் - எனக் கள்ளை மட்டுமே குறிக்கும். எனவே, ஆட்களைக் குறிப்பதற்கு "ஆள்கள்' என்பது தவறாகும். கள் ஆட்சி செய்யுமிடத்தில் வேண்டுமானால், ஆள்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
நாட்கள் என்பது கள்ளையும் குறிக்கிறது; பன்மையையும் குறிக்கிறது. இடத்திற்கேற்பப் பொருள் கொள்ளலே நன்று. "நான்கு நாட்களாகப் படித்தேன்' - இது பன்மையைக் காட்டும். நான்கு நாட்கள்ளைக் குடித்தேன் - இது மதுவைக் குறிக்கும்.
"கண்' எனப்படும் வேற்றுமை உருபுக்கும், "கண்' எனப்படும் உடல் உறுப்புக்கும் வேறுபாடு தெளிவாகத் தெரியும்பொழுது, "கள்' எனப்படும் பன்மை விகுதிக்கும், "கள்' எனப்படும் மதுவுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பது விந்தையிலும் விந்தை!
By ப.குருநாதன்
dinamani
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "கள்' மயக்கம் தெளியுமா?
தெளிவான விளக்கத்திற்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மயக்கம்... சில காரணங்கள்!
» மயக்கம் வந்தால்....
» மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்
» தலைசுற்றல், மயக்கம் போக்க-ஏலக்காய்
» நர்ஸ் வந்ததும்தான் மயக்கம் வந்தது...!
» மயக்கம் வந்தால்....
» மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்
» தலைசுற்றல், மயக்கம் போக்க-ஏலக்காய்
» நர்ஸ் வந்ததும்தான் மயக்கம் வந்தது...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|