தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர்

View previous topic View next topic Go down

ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர் Empty ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர்

Post by நாஞ்சில் குமார் Wed Sep 17, 2014 10:40 pm

ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர் Ju7lnr


கர்ப்பம் சுமந்த நாட்களின் பரவச உணர்வுகள் தந்த சிலிர்ப்பைப் போலவே, பயத்தைக் கிளப்பிய தருணங்களும் என் நினைவுகளை சமமாக ஆக்கிரமித்து நிற்கின்றன. எப்போது நினைத்தாலும் கலங்கச் செய்கிற அத்தகைய அனுபவம் ஒன்று உண்டு.

கர்ப்பத்தின் 2வது மாதத் தொடக்கத்தில் இருந்தேன்... முதல் ஸ்கேனில் ‘இரட்டைக் குழந்தைகள், இரண்டும் தனித்தனியாக வளர ஏதுவாகவே இருக்கிறது’ என்றெல்லாம் தெரிந்து, கருவோடு சேர்த்து கனவுகளையும் சுமந்து கொண்டிருந்த நேரம்... அலுவலகத்தில் இருந்தபோது திடீரென ரத்தப்போக்கு... உடலெல்லாம் வியர்த்துக் கொட்ட, கனவெல்லாம் கலைந்துவிட்ட பயத்தில், கதவடைத்த கழிப்பறையில் கதறிக் கதறி அழுது கொண்டு நின்றேன். உதிரப் போக்கு என்பது கருக்கலைப்பின் அறிகுறி என்று அறிந்திருந்த எனக்கு, என்ன செய்வ தெனத் தெரியவில்லை. நீண்ட நேரமாக என்னைக் காணாமல் தேடி வந்தாள் தோழி அமுதா. நடந்ததைச் சொல்லி அவள் தோள் சாய்ந்து கதறினேன்.
‘‘ஒண்ணும் ஆகாது... உடனே ஆஸ்பத்திரிக்கு போவோம்...’’ என என்னைத் தேற்றினாலும், அவளது கண்களும் கலங்கியே இருந்தன.
செல்போன் இல்லாத காலம் அது. அலுவலகத்தில் பொதுவான ஓர் இடத்தில் ஒரே ஒரு லேண்ட்லைன் தொலைபேசி. சுற்றிலும் ஆண்கள் சூழ இருக்கும் போது, டாக்டருக்கு எப்படி போன் போட்டு என் நிலை பற்றிக் கேட்பேன்? என்னுடைய நல்ல நேரம்... திடீரென அத்தனை பேரும் அந்த இடத்தை விட்டு நகர, கிடைத்த அந்த சில நொடிகளுக்குள், என் மருத்துவர் சரோஜா பொன்னையனுக்கு போன் போட்டேன். ‘எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுங்க... பார்த்துடலாம்’ எனப் படபடப்பைக் கூட்டினார்.

‘ஆட்டோ பயணம் கூடாது’ என அறிவுறுத்தப்பட்டிருந்ததால், கச்சேரி சாலையில் 12பி பேருந்துக்காக காத்திருந்தோம் நானும் அமுதாவும். மயிலாப்பூரில் இருந்து கோடம்பாக்கத்தில் மருத்துவமனையை அடைகிற வரை, அத்தனை பேரும் என்னையே வேடிக்கை பார்க்கும்படி அழுகையை அடக்க முடியாமல் நானும் எனக்கு தைரியம் சொன்ன படி அமுதாவும் போன அந்த நாள் இன்று வரை மறக்கவில்லை.  
ஆஸ்பத்திரி வாசலில் என் கணவர், அம்மா, அப்பா, அக்கா என மொத்தக் குடும்பமும் காத்திருந்தது. பிரசவ அறைக்கு வெளியே காத்திருப்பதைவிட தவிப்பான காத்திருப்பு அது.அறைக்குள் என்னை அழைத்துச் சென்று சோதித்த மருத்துவர், ‘எதுக்கு இவ்ளோ டென்ஷன்? நீங்க பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லை. ட்வின் ப்ரெக்னன்ஸிசியில இந்த மாதிரி ப்ளீடிங் ஆகிறது சகஜம். அபார்ஷன் ஆயிட்டதா நினைச்சு பயப்பட வேண்டியதில்லை. இன்ஜெக்ஷன் போட்டா சரியாகிடும். ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுங்க... உங்க குழந்தைங்க உள்ளே பத்திரமா இருக்காங்க... டோன்ட் வொரி...’ என்றார். அந்தச் சில மணி நேர பயமும் பரிதவிப்பும் அத்தனை சீக்கிரத்தில் மாறவில்லை. போன உயிர் திரும்பி வந்தது மாதிரி என்பார்களே... அதை நிஜமாக உணர்ந்தேன் நான்.ஒன்றுக்கு மேலான குழந்தைகளை சுமக்கும் பெண்களுக்கு கர்ப்பத்தின் போது திகிலடையச் செய்கிற இந்த ரத்தப்போக்கு பற்றி விளக்கமாகச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.

‘‘குழந்தைப் பையில் உள்ள லேயரும் கர்ப்பப்பையில் உள்ள லேயரும் மூடிக் கொள்கிற வரை அவ்வப்போது லேசான உதிரப்போக்கு வரலாம். கர்ப்பத்தின் 12 வாரங்களுக்குள் இந்த இரண்டு லேயர்களும் மூடிக் கொள்ளும். அதுவரை சிலருக்கு மாதா மாதம் கூட இந்த உதிரப்போக்கு இருக்கும். இந்தப் பிரச்னை ஒன்றுக்கு மேலான கர்ப்பம் சுமக்கும் பெண்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
நஞ்சுப்பை பகுதியானது கர்ப்பப்பை வாய் வரை இருக்கும் போதும் (இதை ஆங்கிலத்தில் ‘லோ லையிங் பிளாசென்ட்டா’ என்கிறோம்) அதற்கான அழுத்தம் அதிகமாகும் போதும் அதிக எடை தூக்குவது போன்ற வேலைகளை செய்யும் போதும் ரத்தப்போக்கு ஏற்படலாம்.
கருவில் ஒரு குழந்தை மட்டுமே இருக்கும் போது கர்ப்பப்பையானது மெதுவாக விரிவடையும். அதுவே ஒன்றுக்கு மேலான குழந்தை என்றால், கர்ப்பப்பையானது திடீரென்று விரிவடையும். ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம்.
இப்படி திடீர் ரத்தப்போக்கைப் பார்க்கிற எந்தப் பெண்ணுக்கும் அது கருக்கலைப்பாக இருக்குமோ என்கிற பயமும் பதற்றமும் உண்டாவது சகஜமே. இப்படி ரத்தப்போக்கைப் பார்த்தால் மிரளா மல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். பிறப்புறுப்பின் வழியே செய்யப்படுகிற ‘டிரான்வெஜைனல் ஸ்கேன்’தான் செய்யப்பட வேண்டும். ரத்தப்போக்கை நிறுத்தும் பிரத்யேக இன்ஜெக்ஷன் தேவைப்படும். கூடவே சில ஹார்மோன் மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார். இவை தவிர, முழு ஓய்வு அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வது, நிறைய தண்ணீர் குடிப்பது, உடலை வருத்தும் வேலைகளை செய்யாமலிருப்பது போன்றவையும் அவசியம். ரத்தப்போக்கை நிறுத்தும் ஊசியை தேவையைப் பொறுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டியிருக்கும். கர்ப்ப காலத்தில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் எடுத்துக் கொள்வதும் இந்த விஷயத்தில் பெரிதும் உதவும்.

இது தவிர, கர்ப்பப்பை வாயின் நீளம் மற்றும் உறுதியை சரிபார்க்க வேண்டியதும் அவசியம். சாதாரணமாக 4 செ.மீ. நீளம் இருக்க வேண்டிய கர்ப்பப்பை வாயானது, அதைவிட அளவில் குறைவாக இருந்தால், இரட்டை கர்ப்பம் சுமக்கும் பெண்களுக்கு கரு கலையும் அபாய வாய்ப்பு அதிகம். 4 செ.மீ.க்கும் குறைவாக இருக்கும்போது கர்ப்பப்பை வாயை தைக்கும் சிகிச்சை தேவைப்படலாம். சில நேரங்களில் ரத்தப்போக்கானது அதிகமாகி, கட்டியாகும், ‘சப் கோரியானிக் ஹெமரேஜ்’ என்கிற பிரச்னைக்கும் காரணமாகலாம். எனவே, முதல் 3 மாதங்களில் ஏற்படுகிற ரத்தப்போக்கை சாதாரணமானது என்கிற நினைப்பில் அலட்சியப்படுத்த வேண்டாம். இனிப்பு சாப்பிட்டால் ரத்தப்போக்கு வரும் என்கிற தவறான நம்பிக்கை கிராமப் புறங்களில் இன்னமும் உண்டு. அதற்கு பயந்து கொண்டே கர்ப்பிணிகள் பிரசவம் வரை இனிப்பைத் தொடவே மாட்டார்கள். இனிப்புக்கும் ரத்தப் போக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே உண்மை...’’
முதல் 3 மாதங்களில் அவசியமான சோதனைகள்... ஏன்? எதற்கு?

மீனாவின் டிப்ஸ்...

‘‘பொதுவா ட்வின்ஸ்ல ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும் இன்னொரு குழந்தை கொஞ்சம் பலவீனமாகவும் இருக்கிறது சகஜம். பிறந்த நொடியிலேருந்தே அதிகபட்ச சுத்தத்தையும் சுகாதாரத்தையும் கடைப்பிடிக்கிறதும் ஆரோக்கியமான உணவுகளை கொடுத்துப் பழக்கறதும் ரெண்டு பேரையும் நல்ல ஆரோக்கியத்தோட வளர வைக்கும். வீட்டு உணவுகளை கொடுத்து வளர்க்கிறது, வளர்ந்த பிறகான அவங்க ஆரோக்கியத்துக்கும் ரொம்பவே அடிப்படை...’’

ரொம்ப ஷ்பெஷல் ஃபீலிங்ஸ்

வர்ஷா என்கிற தேவசேனா, வர்ணிகா என்கிற வள்ளிமயில் என இரண்டு குட்டிச் செல்லங்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது மீனாவின் வாழ்க்கை. இரட்டையரை சுமந்ததில் தொடங்கிய மகிழ்ச்சி இன்று வரை இரட்டிப்பாகித் தொடர்கிறது மீனாவுக்கு!
‘‘நாலாவது மாசம் ஸ்கேன் பண்ணும் போதுதான் ட்வின்ஸ்னு சொன்னாங்க. சந்தோஷப்படறதுக்குப் பதிலா அழுதேன். ஒட்டிப் பிறக்கற ட்வின்ஸ் பத்திக் கேள்விப்பட்டிருந்த பல விஷயங்கள் என்னைக் குழப்பி இருந்தது.  எந்த வாசனையைப் பார்த்தாலும் வாந்தி வரும். 5வது மாசம் வரைக்கும் வெறும் கேரட் ஜூஸ்லயே உயிர் வாழ்ந்தேன். ஒவ்வொரு மாசமும் ஸ்கேன் பண்ணும் போது என் படபடப்பு கூடும். ஒரு குழந்தையோட இதயத்துடிப்புதான் கேட்கும். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சுதான் இன்னொரு குழந்தையோட இதயத்துடிப்பு கேட்கும். டெலிவரிக்கு முன்னாடி பண்ணின ஸ்கேன் வரைக்கும் அந்த பயம் தொடர்ந்திருக்கு. பேங்க்ல வேலை பார்க்கறேன். 9வது மாசம் வரைக்கும் வேலைக்குப் போயிட்டிருந்தேன். சிசேரியன்ல ரெண்டு குழந்தைங்களும் நல்லபடியா பிறந்தாங்க. பிறக்கும் போதே ரெண்டு பேருக்கும் ரெண்டு பல் இருந்தது. வர்ணிகாவுக்கு கால்லயும் தலையிலயும் ஒரு மச்சம் மாதிரி இருந்தது. வயித்துக்குள்ள ரொம்ப நாள் ரெண்டு பேரும் ஒட்டியே இருந்ததால ரத்தக்கட்டு மாதிரி இருந்த அந்த மச்சம், ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் மறைஞ்சது. குழந்தைங்க பிறந்த ஒரு வருஷம் தாய்ப்பால் கொடுக்க ரொம்பவே சிரமப்பட்டேன். முதுகுவலியில துடிச்சிருக்கேன். அவங்க வளர ஆரம்பிச்சதும், ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கப் பார்க்க, பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து போச்சு. ரெண்டு பேரும் பார்க்கிறதுக்கு மட்டுமில்லை, பழக்க வழக்கங்கள்லயும் ஒரே மாதிரி. ஒரு தடவை ஒருத்தி சைக்கிள் ஓட்டிக்கிட்டிருந்தா. இன்னொருத்தி தூங்கிட்டிருந்தா. சைக்கிள் ஓட்டிக்கிட்டிருந்தவ, சக்கரத்துல கால் மாட்டி, விழுந்து, அடிபட்டுக்கிட்டா. அவளுக்கு மருந்து போட்டு சமாதானப்படுத்திட்டிருந்தேன். தூங்கிட்டிருந்தவ திடீர்னு எழுந்து, அழுது, வாந்தி எடுத்ததைப் பார்த்தப்ப ஷாக் ஆயிட்டேன்.ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் 5 நிமிஷம் கூட பிரிஞ்சு இருக்க மாட்டாங்க. யாராவது திட்டினாலும் பொறுத்துக்க மாட்டாங்க. ஒரே மாதிரி டிரெஸ் பண்றதையே விரும்புவாங்க. ரெண்டு பேரும் ஒரே மாதிரி பாடறது, பேசறது, தூங்கறதுனு அவங்க பண்ற சின்னச் சின்ன விஷயங்கள் ரசிக்க வைக்கும். அதெல்லாம் ரொம்ப ஸ்பெஷலான ஃபீலிங்ஸ்...’’ & பெருமிதம் பொங்குகிறது மீனாவின் பேச்சில்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர் Empty Re: ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர்

Post by செந்தில் Thu Sep 18, 2014 3:35 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர் Empty Re: ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர்

Post by முரளிராஜா Fri Sep 19, 2014 11:14 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர் Empty Re: ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum