தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல்

View previous topic View next topic Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல் Empty முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல்

Post by mohaideen Thu Sep 18, 2014 11:39 am

முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல் Ht2835
சூரனை அழித்த முருகனின் வேலுக்கு பிறகு தமிழர்கள் அதிகம் அறிந்திருப்பது (ACACIA ARABICA) கருவேல்தான். கரிய நிறத்துடன் பெருத்த மரமாய் தமிழகத்தின் ஏரிக்கரைகள், வேலிகள் ஆகியவற்றில் தானாகவே வளரும். சிறகு இலைகள் இரட்டையாக அமைந்திருக்கும். மஞ்சள் நிறத்தில் உருண்டை வடிவ கதிர் பூக்களும், கரிய நிறத்துடன் உள்ள மரத்தில் வெள்ளை நிறத்தில் வேல் போன்ற கூரிய முட்களையும் வெள்ளை நிற பட்டையான காய்களையும் கொண்டது.

மரப்பட்டை, வேர்பட்டை, இலைக்கொழுந்துகள், மரப்பிசின் ஆகியவை மருத்துவ பயன் கொண்டவை ஆகும். பிசின் சளியை அகற்றி தாதுக்களின் எரிச்சலை தணிக்கும். அளவாக பயன்படுத்தினால் காமத்தை பெருக்கும். இதன் பட்டை, சதை மற்றும் நரம்புகளை சுருங்க செய்யும். ஆலும்வேலும் பல்லுக்குறுதி என்பதற்கு ஏற்ப நமது பற்களை காப்பதில் ஈடற்ற ஆற்றல் உடையது, கருவேல். இன்றும் கிராமங்களில் வேலங்குச்சியை கொண்டு பல் துலக்குவதை நாம் பார்க்கலாம். கருவேலன் பற்களில் ஏற்படும் பல்வேறு நோய்களை போக்கி அவைகளை கல்லுக்கு ஒப்பாக அசையாமல் இருக்க செய்யும் ஆற்றல் பெற்றது.

பட்டை, வாதுமை கொட்டை சமஅளவு எடுத்து நெருப்பு அடுப்பில் மண் சட்டியை வைத்து கருக்கி பொடி செய்து அதை துணியில் சலித்து வைத்துக்கொண்டு பல் துலக்கி வர பல்லீறுகளில் உள்ள புண், அழுகல், பல்லாட்டம் முதலியவை தீரும். பட்டை, வாதுமை கொட்டை சமஅளவு எடுத்து நெருப்பு அடுப்பில் மண் சட்டியை வைத்து கருக்கி பொடி செய்து அதை துணியில் சலித்து வைத்துக்கொண்டு பல் துலக்கி வர பல்லீறுகளில் உள்ள புண், அழுகல், பல்லாட்டம் முதலியவை தீரும். பட்டையை கசாயம் செய்து வாய்கொப்பளிக்க பல்லாட்டம், வாய்புண், ரசவேக்காடு மற்றும் வாய்ப்புண் நீங்கும். இதைத்தான்,

பல்லுக் கருத்த பலநோய
யகற்றி யதைக்
கல்லுக் நேராகக் கட்டுமே- மல்லுக்கு
நண்மின்வனை காளெனப்
போய் நாளும் வியாதிகளைச்
சண்மயில் வன்னாயு தம்’’

என்கின்றார் தேரையர். தாங்க முடியாத வேதனையுடன் அவதிக்குள்ளான மூலநோய் உள்ளவர்கள் கருவேலன் இலையை மென்மையாக அரைத்து இரவுதோறும் ஆசன வாயில் கட்டிவர மூலம் சுருங்கி விழும். ஆறாத புண்கள் மீது இலையை அரைத்து கட்டிவர புண்கள் விரைந்து ஆறும். ஏதாவது விஷ பூச்சிகள், பாம்புகள் கடித்து விட்டால் உடனடியாக மருத்துவம் செய்ய முடியாத இடத்தில் இதன் இலையை அரைத்து தயிரில் கலந்து கொடுத்து விட்டால் நஞ்சு உடலில் கலக்காமல் காப்பாற்றி விடலாம். பிறகு மருத்துவம் செய்து கொள்ளலாம்.

இளம் வேர் 20 கிராம் எடுத்து நன்கு நசுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு 160 மிலியாக சுண்ட காய்ச்சி வடிகட்டி அதில் 25 மிலி வீதம் காலை மாலை குடித்துவர ரத்த கழிச்சல் தீரும். 15 கிராம் பட்டையை பொடிசெய்து 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி 50 முதல் 100 மிலி வரை காலை மாலை வெறும் வயிற்றில் குடித்துவர மதுமேகம், வெளி மூலம், கருப்பை பிதுக்கம், வெள்ளை வெட்டை தீரும். சில இளைஞர்களுக்கு விந்து நீர்த்து தண்ணீராக போகும். இதனால் குழந்தை பேறும், இல்லறமும் பாதிக்கும். இவர்கள் கருவேலன் பிசினை இரவில் ஊறவைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து உண்டால் நீர்த்துபோன விந்து இறுகும்.

சில பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் அல்லது மாதவிடாய் வரும் நாட்களிலும் வெள்ளை படும். தாங்க முடியாத வலி மற்றும் உடல் பலவீனத்தையும் ஏற்படுத்தும். உயிரை எடுக்கக்கூடிய அளவில் உள்ள இந்த நோய் கண்ட பெண்கள், காலையில் 5 கிராம் அளவில் எடுத்து வர தொடர்ந்து பிசினை உண்டு வர எரிச்சலோடு வருகின்ற வெள்ளையை நிறுத்தும். ஆண்கள் உண்டுவர அழகும் உடலில் வன்மையும் உண்டாகும். இதை,

கருவேலின் வேர்க்குக்
கடுப்பிரத்தம் மாந்தம்
பருவாதம் ஊறுகரப் பானும்-பெருகு
பெரும்பேதி யும்போகும் பேசவிளிக்கும்
கரும்பே! இதனை கருது.
நீர்த்தொழுகும் விந்து
நிலைக்கப் புரியுமெரி
பூத்தொழுகும் வெள்ளை
தனைப் போக்குமிம்- மாத்திரமோ?
பேசுகரு வேலம் பிசின்
தேக தரு ரஞ் செய்யும் பெரியோராற் -

என்கின்றது தேரையர் குணவாகடம். கருவேலன் குச்சி அல்லது பட்டை பொடியை கொண்டு பல் துலக்கினால், காலம் முழுவதும் பல் பிரச்னை இல்லாமல் வாழ முடியும். விளம்பரங்களை கண்டு மயங்கி விடாமல் நமது முன்னோர்கள் வழங்கிய கருவேலை பயன்படுத்தி பல்லை காப்பதன் மூலம், உடல் நலத்தையும் காப்போம்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2845
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல் Empty Re: முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல்

Post by kanmani singh Fri Sep 19, 2014 12:50 pm

கருவேல மரத்தில் இத்தனை பயன்களா?
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum