தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரிந்த மருந்து தெரியாத விஷயம்

View previous topic View next topic Go down

தெரிந்த மருந்து தெரியாத விஷயம் Empty தெரிந்த மருந்து தெரியாத விஷயம்

Post by நாஞ்சில் குமார் Thu Sep 18, 2014 4:45 pm

தெரிந்த மருந்து தெரியாத விஷயம் 2i9mtyg

ஒரு அலோபதி மருத்துவர் ஒரு மருந்துச் சீட்டு எழுதும் முன் நான்கரை வருடங்கள், உடலுறுப்புகளின் அமைப்பியல் (உடலுக்குள் உறுப்புகள் எங்கெங்கே, எவ்வாறு அமைந்துள்ளன), உடற்கூறு இயல், உடல் உறுப்புகள், சுரப்பிகளின் செயல்பாடுகள், ரத்த ஓட்டம், உயிர் வேதியியல் மாற்றங்கள், நுண்ணுயிரியல், நோய்களின் முக்கிய காரணிகள், அலோபதி மருந்தியல், நோய் குறியியல், நோய் உடலில் ஏற்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத தெரிந்த மாற்றங்கள் போன்ற அடிப்படை புரிதல் விஞ்ஞானங்களை  கற்ற பிறகு, பொது மருத்துவம், பெண்கள் நோய் மருத்துவம் மற்றும் குழந்தை பிறப்பு, அறுவை  சிகிச்சை முறைகள், கண், காது, மூக்கு, தொண்டை, இதயம், கை, கால் எலும்பு முறிவு போன்ற நோய்களை கற்று அறிந்த பின்பு மருந்துச் சீட்டு எழுத அனுமதிக்கப்படுகிறார். அதுவும் இந்திய மருத்துவ கவுன்சிலில்  பதிவு பெற்ற பின்பே எழுத அனுமதிக்கப்படுகிறார்.

‘FDA  Approval  பெற்றிருக்கிறதா, நம் நாட்டில் பயன்படுத்த உரிமம் இருக்கிறதா, நம் நாட்டு வல்லுனர்கள் இதை தம் நோயாளிகளுக்கு  பயன்படுத்துகிறார்களா, இம்மருந்தின் மருத்துவ ரசாயனம் அறிந்தவர் அதை மருந்தாகப் பயன்படுத்த மேற்கொண்ட சோதனைகள் ( Pre Clinical Trials  With animals, Human beings Volunteers advised) பற்றிய விவரங்கள், அதை முன் நின்று நடத்திய மருத்துவக்கழக பேராசிரியர்கள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்திய மருத்துவ வல்லுனர்களின்  மேற்பார்வையில் நோயாளிகளுக்கு ஏற்பட்ட மாற்றங்கள்  (Post Clinical / Launch Trail) மற்றும் இது பற்றிய கருத்தரங்குகளில் கலந்து கொண்ட பின்னரே, நவீன மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் புதிய மருந்துகளை எழுதுவார்கள்.

நவீன அலோபதி மருத்துவம் மனித உடலை அதன் உறுப்புகளை வேதியியல் கூறுகளாகத்தான் (body is a Biochemical   Factory)  பிரித்து உணர்ந்து கற்றுத் தெளிகிறது. எலும்புகள் கால்சியம், மெக்னீசியம், சிலேனியம் மற்றும் தாதுப்பொருட்களுடன் ஆன திடமான எலும்புத் திசுக்களால் ஆனது. இது  போன்று ஒவ்வொரு திசுக்களும் சில வேதியியல் பொருட்களால் அடிப்படை ஆதாரங்களோடு ஆனதோடு, அவற்றின் செயல்பாட்டுக்கும் சில வேதியியல் மாற்றங்களே காரணமாகின்றன. திசுக்கள், செல்களினால் ஆனவை என்பதை அறிவோம். செல்களின் சுவர்கள் கொழுப்பு, புரதம் மற்றும் மாவுச் சத்துகளால் ஆனவை. சைட்டோபிளாசம் எனப்படும் செல்களின் உள்ளிருக்கும் திரவமானது எலெக்ட்ரோலைட்ஸ் எனப்படும் (சோடியம், பொட்டாசியம், குளோரைடு பைகார்பனேட் ஆகிய) தாதுப் பொருட்களாலும் புரதம் மற்றும் சர்க்கரையாலும் ஆனவை.

அதன் செல்களின் கரு அல்லது  உட்கரு DNA, RNA   போன்ற புரோட்டீன்களால் ஆனவை. தசை செல்கள் புரதச் சத்தினால் ஆனது. தசைகள் விரிந்து சுருங்க கால்சியம் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அதற்குத் தேவையான ஆற்றல் கார்போஹைட்ரேட் மூலமாகக் கிடைக்கிறது. செல்கள், திசுக்கள், உறுப்புகள் மற்றும் உடலே பயோகெமிக்கல் ஃபேக்டரிதானே!

அதில் ஏற்படும் குறைகளை சரி செய்ய வேறு என்ன தர முடியும்?

நவீன மருத்துவத்தின் அடிப்படையே இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், பரிணாமவியல் மற்றும் பாரம்பரியவியல் ஆகிய விஞ்ஞானங்களை உள்ளடக்கியது. நவீன மருந்துகள் என்றவுடன் அவை மட்டுமே கெமிக்கல் என பிரித்து பார்ப்பதே விஞ்ஞான முதிர்ச்சியற்ற ஒரு ஒப்பீடுதான். உடலும் உணவுமே உயிர் வேதியியல் பொருட்கள் எனும்போது, உட்கொள்ளும் மருந்து அதனுடன் தொடர்பு உடையதாகத்தானே இருக்க முடியும்?

தாமிரம், மாங்கனீஸ், அயோடின், செலினியம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சல்பர் போன்ற தாதுப்பொருட்கள் மிகக்குறைந்த அளவில் நம் உடலில் இன்றியமையாத செயல்களை செய்து வருகின்றன. சோடியம் இல்லையென்றால் பரிமாற்றங்களே உடலில் நடைபெற வாய்ப்பு இல்லை. பொட்டாசி யம், கால்சியம் குறைந்தால் இதய தசைகள் வேலை செய்வது நின்றுவிடும். எலும்புகள் திடத் தன் மையை இழந்துவிடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல மாற்று மருந்துகளில் உள்ள உலோகங்கள் உடலின் சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட காரணமாகின்றன. ஆகவே, நவீன மருத்துவம் சாட்சிகளை ஆதாரமாக வைத்து (evidence based  medicine) நடைமுறைப்படுத்தப்படும் மருத்துவ முறையாகும்.

நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் (நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கும் பொருந்தும்படியாகச் செய்ய  வேண்டும்)  என்ற குறளின்படி, நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கு வேறு எந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத, ‘எந்த கிருமி - அதற்கு எந்த மருந்து’ என்று ஆராய்ந்து ‘ஆன்டிபயாட்டிக்’ மூலம் குணப்படுத்தப்படுகிறது. உடல் உறுப்புகளின் குறைபாடுகளினால் (பிறவியிலோ, பின்னாளிலோ,  வாழ்நாளிலோ) ஏற்படும் நோய்களுக்கு அதை சரி செய்யும் மருந்துகளும் அறுவைசிகிச்சை முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. உடல் நோய்  செயல்பாடு குறை களினால் நோய் வருமானால் அதற்கு ஏற்ப செயல்பாடுகளை சரி செய்யும் மருந்துகளும் அறுவை சிகிச்சைகளும் நோயை குணப்படுத்துகின்றன.

ஆங்கில மருந்துகளை கையாள்பவர்கள் எந்த நோயாளிகளுக்கு எதைக் கொடுக்கக்கூடாது, அதன் பக்கவிளைவுகள் என்ன? அதை யாருக்கெல்லாம்  முன்னெச்சரிக்கையாக கொடுக்க வேண்டும்? யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? இதையெல்லாம் அறிதல் அவசியம்.

ஆங்கில மருந்துகளுக்கு மட்டும் பக்க விளைவுகள் இருப்பதாக ஒரு தவறான கருத்து எல்லாத் தரப்பு மக்களிடமும் - அதிலும் கற்றவர்களிடம் அதிகம் இருக்கிறது. விளைவை ஏற்படுத்தும் ஒரு வினைக்குத்தானே (மருந்துக்குத்தான்) பக்க விளைவும் இருக்க முடியும். நவீன மருத்துவம் என்பது அனுபவம் சார்ந்த (Experience Based) மருத்துவ முடிவுகளில் இருந்து சாட்சிகளையும் ஆதாரங்களையும் ஆதாரமாகக் கொண்ட (Evidence  Based), மருந்துகளின் ஆளுமை (Efficacy), பாதுகாப்பு (Safety) மற்றும் அவற்றின் நோயை குணப்படுத்தும் தனித் திறமை (appropriateness) என்ற அடிப்படையில் மருந்துகளின் நடைமுறை சாத்திய ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது.

மருந்து (Drug) எனப்படுவது வெளியிலிருந்து செலுத்தப்படும் ஒரு வேதியியல் மூலக்கூறாகும். அது அடிப்படையில் மனித குலத்துக்குநன்மை செய்வதாக இருக்க வேண்டும்.  அதன் ஆளுமை, பாதுகாப்பு தரம், விலை, தாராளமாகக் கிடைக்கும் தன்மை மற்றும் பக்க விளைவுகளும் எதிர்விளைவுகளும் மிகக் குறைவாக உள்ளது ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும். இத்தனை பாதுகாப்புகளையும் தாண்டி வெளிவரும் நவீன மருத்துவ மருந்துகள் Good Manufacturing Practices (GMP)  என்ற மிகச்சுத்தமான மருந்து தயாரிக்கும் விதிமுறைகளை மருந்து கம்பெனிகள் கடைப்பிடிக்கின்றனவா? அரசு இயந்திரம் கண்காணிக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறி! அதையும் தாண்டி வெளிவரும் நவீன மருத்துவ மருந்துகளை வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோல நவீன மருத்துவம் படித்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கையாள கற்ற மருந்தாளுநர்களிடம் (பார்மசிஸ்ட்) மட்டுமே கிடைக்க செய்ய வேண்டும்.

அடுத்த இதழ் முதல், மக்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்தும் மருந்துகளின் குணாதிசயம், அதன் விளைவுகள், பக்க விளைவுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வோம்!‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றாள் கருதிச் செயல்’ (மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயதையும் நோயின் அளவையும் சிகிச்சை காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்) என்ற குறள் நினைவிருக்கிறதுதானே? நோயாளியின் வயது, எடை, பால் (Gender), நோயின் அளவு, மற்ற நோய்கள், அதற்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள், மருந்து ஒவ்வாமை என பல்வேறு விஷயங்களைக் கருத் தில் கொண்டு அலோபதி மருத்துவர் தர வேண்டிய மருந்துகளை, சிகிச்சையை அவரவர் விருப்பப்படி கையில் எடுத்துக் கொள்வதை என்னவென்று  சொல்லுவது?

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தெரிந்த மருந்து தெரியாத விஷயம் Empty Re: தெரிந்த மருந்து தெரியாத விஷயம்

Post by ஸ்ரீராம் Sat Sep 20, 2014 9:50 am

நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum