தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சொன்னால்தான் தெரியும்!

View previous topic View next topic Go down

சொன்னால்தான் தெரியும்! Empty சொன்னால்தான் தெரியும்!

Post by நாஞ்சில் குமார் Thu Sep 18, 2014 4:58 pm

இரவு பூராவும்
தட தடக்கும்
மணல் வண்டி
மாடுகள் பழகிக் கொண்ட
திருட்டு நடையைப்
பாதிச் சம்போகத்தில்
ரசிக்கிறாய்
தலைமுடியைப் பற்றி
இறுக அணைத்து

- கலாப்ரியா

பிரவீன்குமாருக்கு சாஃப்ட்வேரில் வேலை... கை நிறைய சம்பளம். ஒழுக்கவாதி. எந்த தப்பு தண்டாவும் பண்ணாதவன். வேலை முடிந்து களைப்பாக  வீடு வந்து, உடை கூட மாற்றாமல் படுக்கையில் விழுவான். காலையில் அவசரக் குளியல் முடித்து மீண்டும் ஓட்டம். காதலிக்கவோ, பெண் பற்றி  நினைக்கவோ நேரம் இல்லை. 30 வயது ஆன பிறகு, இனிமேலும் இவனை இப்படியே விட்டு விடக் கூடாது என பெற்றோரே திருமணம் பேசி  விட்டனர்.

ஸ்வேதா... அழகான, அறிவான பெண். நேரில் பார்த்த பிரவீன் சொக்கிப் போனான். சமீபத்தில் பார்த்த திரைப்படத்தின் கதாநாயகி சாயலில் இ ருந்த அவளை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. நண்பர்கள் கொடுத்த காதல், காமரச படங்களின் டி.வி.டி.களை விரும்பிப் பார்த்தான்.  ‘ஆஹா... இத்தனை நாள் இதையெல்லாம் தவற விட்டு விட்டோமே’ என வருந்தினான். அவனுள் உருவெடுத்த கிளர்ச்சி, திருமண நாள் நெருங்க  நெருங்க உச்சத்தை அடைந்தது. ‘அழகிய சினிமா நடிகை போன்ற பெண்ணை மணக்கப் போகிறோம்’ என்ற எண்ணம் அவன் உள்ளம் முழுக்க  ஆக்கிரமித்து இருந்தது. ‘முதலிரவு அன்றே எல்லாவற்றையும் முடித்து ஆண்மையை நிரூபித்து விட வேண்டும்... இல்லாவிட்டால் பெண் தவறாக  நினைத்து விடுவாள்’ என்று நண்பர்கள் உசுப்பேற்றி விட்டனர்.

முதலிரவு அன்று அறையின் உள்ளே பாலுடனும் புன்னகையுடனும் வந்தாள் ஸ்வேதா. நெருங்கி வந்த பிரவீனிடமிருந்து பிறந்த நாற்றம் ஸ்வே தாவை முகம் சுழிக்க வைத்தது. பிரவீனாலும் நினைத்த படி உறவில் ஈடுபட முடியவில்லை. அவனது உறுப்பில் தாங்க முடியாத வலி. ரத்தமும்  கசிய ஆரம்பித்தது. ஸ்வேதா பயந்து போனாள். ‘அய்யோ... நம் ஆண்மை அவ்ளோதானா’ என பீதியில் உறைந்தவனை, ஸ்வேதா சமாதானப்படுத்தி  டாக்டரிடம் அழைத்துப் போனாள்.

அவனுக்கு என்ன பிரச்னை?

இதற்கு பைமோசிஸ் (Phimosis) எனப்படும் பிறப்புக் குறைபாடுதான் காரணம். ஆணுறுப்பின் முன்தோலை பின் பக்கம் தள்ள முடியாதபடி ஃப்ருனலம் (Frunulum) என்ற கீழ்ப்பகுதியில் உள்ள இணைப்புச் சவ்வு கடினமாக அமைந்து இருக்கும். இதை சிறுவயதிலேயே பார்த்துசர்கம்சிஷன் (Circumcision) - அதாவது, ஆணுறுப்பின் முனைப்பகுதியை சுற்றி இருக்கும் தோலை வெட்டி நீக்கிவிடுதல் செய்திருந்தால், இந்தப் பிரச்னை ஏற்பட்டு இருக்காது. ஆணுறுப்பின் முன்தோலை பின் தள்ளி, முனைப்பகுதியை சுற்றிலும் உள்ள பகுதியை சுத்தமாக கழுவாவிட்டால், முனைப்பகுதியை சுற்றி ஸ்மேக்மா (Smegma) எனப்படும் மெழுகு போன்ற திரவம் சுரந்து, உலர்ந்து ஆணுறுப்பில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இது மனைவியை முகம் சுழிக்க வைக்கும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹெல்த் செக்கப் என்பது மேலோட்டமாக கட்டண வசூலாக மட்டுமே நடத்தப்படுகிறது. ஆணுறுப்பை பரிசோதிப்பது  அதில் முக்கியமானது. பல ஹெல்த் செக்கப்களில் அதை செய்யாமலே விட்டு விடுகிறார்கள். பெற்றோரும் இனப்பெருக்க உறுப்புகளை சுத்தமாக  வைத்திருப்பது பற்றி பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவது மிக அவசியம். அறியாமை உள்ளவர்கள் தயங்காமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
இஸ்லாமிய சமுதாயத்தில் சர்கம்சிஷனைத்தான் ‘சுன்னத்’ என்ற பெயரில் செய்கிறார்கள். யூத மதத்திலும் இந்த முறை உண்டு.

இப்படிச் செய்து கொள்பவர்களுக்கு மேற்கண்ட பிரச்னை வர வாய்ப்பில்லை. மற்றவர்கள் கண்டிப்பாக தினமும் முன்தோலை பின்தள்ளி முனைப் பகுதியை சுத்தமான நீரால் கழுவ வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஆணுறுப்பில் கிருமிகள் சேர்ந்து நாட்போக்கில் சீழ் கட்டிவிடவும் வாய்ப்புண்டு. மனை விக்கும் இந்த கிருமிகள் பரவி விடக் கூடும். சுத்தமாக இருந்தாலே பல பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. இது போன்ற பேசத் துணியா விஷயங்கள் பலவற்றை இங்கே தெளிவாகப் பேசுவோம்!

மனித குலம் ஒருவர் மீது ஒருவர் அன்பு செய்வதற்காக உருவானதுதான் பாலியல் கலை. காமம் என்றாலே முகம் சுழிக்கும் போக்கு நிலவுவதற்குக்  காரணம் அறியாமை. காமத்தில் தவறு ஏதும் இல்லை. அதை தவறாக செய்வதுதான் தவறு. தயக்கங்களாலும் குற்ற உணர்ச்சிகளாலும் சூழப்பட்டு,  மிகச்சிறு பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கும் முறையை அறியாமல் வாழ்க்கையையே தொலைப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

வயது வந்த ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வழிகாட்டும் இப்பகுதியை வழங்குபவர் பிரபல செக்ஸாலஜிஸ்ட் டி.நாராயண ரெட்டி. இந்தியா வில் முதன்முதலாக பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் கிளினிக் தொடங்கியவரும் இவரே. பல சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களை யும் பெற்றிருக்கும் டாக்டர் நாராயண ரெட்டி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் பிரச்னைகளுக்கு அறிவியல் வழிமுறையில் வழிகாட்டி வருகி றார்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum