தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பத்தாண்டுகளில் நடந்த மாற்றம் என்ன?

View previous topic View next topic Go down

பத்தாண்டுகளில் நடந்த மாற்றம் என்ன? Empty பத்தாண்டுகளில் நடந்த மாற்றம் என்ன?

Post by நாஞ்சில் குமார் Sat Sep 20, 2014 11:00 pm

பத்தாண்டுகளில் நடந்த மாற்றம் என்ன? Sz749i

ரியல் எஸ்டேட் சந்தை கடந்த 10 ஆண்டுகளில் பெரும் மாறுதல்களைக் கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2005-ம் ஆண்டு முதல் ரியல் எஸ்டேட் துறைக்குக் கிடைத்த அந்நிய நேரடி முதலீடு காரணமாகப் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உருவாயின.

அதற்கு முன்னர் பரவலாகக் காணப்பட்ட ஒரு சில மாடிகள் மட்டுமே கொண்ட கட்டிடங்கள் காணாமல் போய் எங்கு பார்த்தாலும் பல மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இந்தப் பத்தாண்டுகளில் தலைகாட்டத் தொடங்கியுள்ளன என்று ரியல் எஸ்டேட் துறை தொடர்பான பிராபர்ட்டி கன்சல்டண்ட் சிபிஆர்இயின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2005-ல் அந்நிய நேரடி முதலீட்டு வாய்ப்பு ரியல் எஸ்டேட் துறைக்குக் கிடைத்த பின்னர், நிதிக்கான புதிய சாலைகள் திறந்துகொண்டன, முதலீட்டு வரவு பெருகியது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்திய விதிமுறைகள் காரணமாக 2004-ம் ஆண்டு வரை ரியல் எஸ்டேட் துறையில் நிதிக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்துவந்தது. ஆனால் 2005-ம் ஆண்டு வெளிநாட்டு நிதிகள் பெறும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னர் ரியல் எஸ்டேட் துறையின் நிதிவளம் பெருகத் தொடங்கியது. 2007-08 –ம் ஆண்டுகளில் அந்நிய முதலீடு பெருமளவில் இத்துறைக்குக் கிடைத்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில் சுமார் 14 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ரியல் எஸ்டேட் துறை பெற்றுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2005-ம் ஆண்டில் பொருளாதாரம், முதலீட்டு வாய்ப்புகளுக்கு தனது கதவைத் திறந்தது, இது பல துறைகளிலும் அடிப்படை மேம்பாடு காண்பதற்கு உதவியாக அமைந்தது, ஏனெனில் நுகர்வும் அதிகரித்தது, நிதி வரவும் பெருகியது என்கிறார் சிபிஆர்இயின் தெற்காசிய தலைவரும் மேலாண்மை இயக்குநருமான அன்சுமன் மகஸின்.

அந்நிய முதலீடு இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனது காலடியைப் பதித்ததால் இந்திய குடியிருப்புத் திட்டங்களின் முகமும் மாற்றமடைந்தது. அது வரை தனிவீடுகளும் ஒரு சில மாடிகளைக் கொண்ட வீடுகளுமே பிரதானமாக இருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மங்கியது.

இந்திய நகரங்களில் அநேக மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்கள் வீறு நடை போட ஆரம்பித்தன. இதற்குக் காரணம் வீட்டுத் தேவைகள் பெருமளவில் அதிகரித்ததுதான்.

வீட்டுத் தேவை அதிகரித்ததால் குறிப்பிட்ட ஒரு நிலத்தில் தனிவீடுகள், ஒரு சில மாடிகள் கொண்ட வீடுகள் கட்டுவதைவிடப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுவது அவசியமானது. ஏனெனில் அந்தக் குறிப்பிட்ட நிலத்தில் அதிக வீடுகளை உருவாக்கும் வாய்ப்பை அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களே பூர்த்திசெய்தன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மதிப்பு மிக்க பெரும் நிறுவனங்களுக்கு அலுவலகக் கட்டிடங்கள் அதிகமாகத் தேவைப்பட்ட காரணத்தாலேயே இந்திய ரியல் எஸ்டேட் துறை முக்கிய அமைப்பானது என்றும், முக்கிய நகரங்களில் மட்டுமே வணிகம் கொழித்த நிலை மாறி, பெரு நகரங்களைச் சுற்றியுள்ள துணை நகரங்களிலும் வணிகம் கொழிக்கும் நிலை உருவானதற்கும் இதுவே சான்றாகியுள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2005-ல் மதிப்புமிக்க பெரு நிறுவனங்களில் அலுவலகங்கள் சுமார் 90 மில்லியன் சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்திருந்தன. ஆனால் இது 2014-ல் 400 மில்லியன் சதுர அடியாக அதிகரித்துள்ளது. இந்த அலுவலகக் கட்டிடங்களின் தோற்றமும், கட்டமைப்பும், பரவும் தன்மையும் தனியார் துறையாலும் அரசின் தலையீடுகளாலும் பெருமளவில் மாற்றம் அடைந்துள்ளன.

இந்தப் பத்தாண்டுகளில் வணிகத் தெருக்களின் காலம் மறைந்து ஷாப்பிங் மால்கள் பிரபலமடைந்துள்ளன என்றும் ரியல் எஸ்டேட் அமைப்பின் முன்னேற்றத்தில் தொழில்நுட்பமும் மின் வர்த்தகமும் கூட்டாக இணைந்துள்ளன என்றும் மகஸின் தெரிவித்துள்ளார்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பத்தாண்டுகளில் நடந்த மாற்றம் என்ன? Empty Re: பத்தாண்டுகளில் நடந்த மாற்றம் என்ன?

Post by mohaideen Sun Sep 21, 2014 10:36 am

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum