Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செடிகள் செழிப்புடன் வளர வேண்டுமா?
Page 1 of 1 • Share
செடிகள் செழிப்புடன் வளர வேண்டுமா?
மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 20,2014, 12:51 AM IST பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 20,2014, 12:51 AM IST
வீட்டில் வளர்க்கப்படும் செடிகள் பராமரிக்கப்படுவதை பொறுத்தே அழகுடன் காட்சி அளிக்கும். ஆதலால் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் காய்கறி செடிகளாக இருந்தால் அவை செழிப்புடன் வளர்வதற்கு ஆவண செய்ய வேண்டும். அப்போதுதான் சமையலுக்கு தேவையான காய்கறிகளை பெற முடியும். அதற்கு போதிய இடைவெளியில் செடிகளுக்கு உரமிட்டு வர வேண்டும். அவை இயற்கை உரங்களாக இருந்தால் ரசாயன கலப்பில்லாத காய்கறிகளை பெறலாம். அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும். செடிகள் செழிப்புடன் வளர்வதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
* வீட்டு கழிவுகளையே செடிகளுக்கு உரமாக போடலாம். அவை செடிகளின் வளர்ச்சியில் பங்கெடுக்கும். வீட்டில் குப்பைகள் சேருவதையும் தடுக்கலாம்.
* குறிப்பாக மட்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவைகளை குழிதோண்டி புதைத்து விட்டால் சில நாட்களுக்கு பிறகு அவை உரமாக மாறி இருக்கும். அதனை மண்தொட்டியில் தூவி வரலாம். அந்த உரக்கலவை செடிகளின் வளர்ச்சிக்கு துணை புரியும்.
* வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளை வெட்டும்போது மீதமாகும் கழிவுகளை அப்படியே செடிகளுக்கு உரமாக போடலாம். அந்த தோலில் இருக்கும் சத்துக்களை உரமாக மாற்றி செடிகள் செழித்து வளரும்.
* காபி போடும்போது அடியில் படியும் தூளை செடிகளை சுற்றி போடலாம். அவை சிறந்த பூச்சிக்கொல்லி மருந்தாக செயல்படும் தன்மை கொண்டது. செடிகளை பூச்சிகள் தாக்காமல் பார்த்துக்கொள்ளும். செடிகளும் காபி தூளை உறிஞ்சி நன்றாக வளரும். பாத்திரத்தில் படிந்திருக்கும் காபி தூளை அப்படியே செடிகள் மீது ஊற்றிவிடக்கூடாது. அது சூடாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் செடிகள் வாடிவிடும்.
* டீ இலைகளை பயன்படுத்தி டீ போடுவதாக இருந்தால் அதன் இலை களையும் செடிகளுக்கு போடலாம். அதுவும் சிறந்த உரமாக மாறும். எனினும் டீ இலைகள் சூடாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* அரிசி கழுவும் நீரையும் செடிகளுக்கு ஊற்றலாம். அந்த நீரில் கலந்திருக்கும் சத்துக்களும் செடிகள் செழிப்பாக வளருவதற்கு துணைபுரியும்.
* வேப்பிலையையும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படுத்தலாம். அதனை நன்றாக அரைத்து செடிகள் மீது தெளித்து வர வேண்டும். அவ்வாறு செய்தால் பூச்சிகள் செடிகளை நெருங்காது. அதனால் செடிகள் பூச்சிகளால் நோய் தாக்குதலுக்கு ஆளாகுவது தவிர்க்கப்படும். செடிகளும் நன்றாக வளரும்.
* வீட்டிலே உரம் தயாரிக்க குழியையோ அல்லது உடைந்த பாத்திரங்களையோ பயன்படுத்தலாம். அதில் சிறிதளவு மண் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதனுடன் சமையல் அறை கழிவுகளுடன் காய்ந்த இலைகளை சேர்த்து கலக்க வேண்டும். ஏனெனில் பச்சையாக இருக்கும் கழிவுகளுடன் காய்ந்த கழிவுகளை சேர்க்க வேண்டும். அப்போதுதான் விரைவாக மட்க வைக்க முடியும். அதில் கலந்திருக்கும் ஈரப்பதம் மட்கும் தன்மையை உருவாக்கி உரமாக மாற்றுவதற்கு முக்கிய காரணியாக அமையும். இந்த உரக்கலவையை இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும். அப்போதுதான் கழிவுகள் மேலும், கீழுமாக இடம் மாறி மட்கும் தன்மையை விரைவாக்கும். இந்த உரத்தில் சத்துக்கள் அதிகமாக கலந்திருக்கும். இவை செடிகளின் வளர்ச்சியை தூண்டுவதற்கும் உதவும்.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: செடிகள் செழிப்புடன் வளர வேண்டுமா?
அறியவேண்டிய தகவல்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மூலிகைச் செடிகள்!
» தோட்டத்தில் வளர்க்கக்கூடிய பொதுவான 10 செடிகள்!!!
» காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!
» வீட்டுக்குள் வளரும் செடிகள்
» காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!
» தோட்டத்தில் வளர்க்கக்கூடிய பொதுவான 10 செடிகள்!!!
» காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!
» வீட்டுக்குள் வளரும் செடிகள்
» காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|