Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர்
Page 1 of 1 • Share
ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர்
கர்ப்பத்தில் சுமப்பது இரட்டைக் குழந்தைகள் எனக் கேள்விப்படுகிற யாருக்கும் லேசான பொறாமை புகையும். ‘‘நீங்க ரொம்ப லக்கி... சுமக்கிறது, பெத்தெடுக்கிறது, வளர்க்கிறதுனு எல்லாத்தையும் ஒரே டைம்ல முடிச்சிடலாம். ரெண்டு பேரும் ஒண்ணு போல வளர்ந்துடுவாங்க...’’ என தெரிந்தும் தெரியாமலும் ஏதேதோ சொல்லிவிட்டுப் போவார்கள்.
உண்மையில்,ஒன்றுக்கு மேலான கர்ப்பம் சுமக்கும் எல்லாப் பெண்களுக்கும் அது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவோ, ஆனந்தத்தின் அடுக்குகளாகவோ இருப்பதில்லை. மாறாக ‘ஏன் பிறந்தாய் மகனே(ளே)?’ என காலத்துக்கும் சோக கீதம் பாடுகிற அளவுக்கு நிரந்தரத் துயரத்தையும் தருவதுண்டு. அப்படியா? ஆமாம்... பிரபல மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி சொல்வதைக் கேளுங்கள்.
‘‘ஒன்றுக்கு மேலான கருவைச் சுமக்கும் போது, இரண்டு கருக்களுமே மரபணுக் கோளாறு களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அதன் தொடர்ச்சியாக கர்ப்ப காலம் முழுவதுமே ரிஸ்க் நிறைந்ததாகத் தொடரும். குழந்தையின் குரோமோசோம்களில் எந்தக் கோளாறும் இல்லை என்றாலும், ஒரே கர்ப்பத்தில் இரண்டு, மூன்று குழந்தைகளாக உருவாகிப் பிறப்பவர்களுக்கு மூளை, இதயம், கல்லீரல், சிறுநீர்பை போன்ற உறுப்புகளில் பிறவிக் கோளாறுகளுடன் பிறப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
இந்தக் குழந்தைகள் ‘செரிப்ரல் பால்சி’ நோயுடன் பிறக்கும் அபாயமும் அதிகம். ‘செரிப்ரல் பால்சி நோய் தாக்கும் அபாய வாய்ப்பானது, ஒரே குழந்தையாகப் பிறப்பவர்களைவிட ஒன்றுக்கு மேலாகப் பிறப்பவர்களுக்கு 4 மடங்கு அதிகம்’ என்கிறது சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று. ஒருவராகப் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 25 பேருக்கும், ஒன்றுக்கு மேலாகப் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 35 பேருக்கும் பிறவிக் குறைபாடுகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
ஒன்றுக்கு மேலான கர்ப்பம் சுமக்கும் பெண் களுக்கு கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் ‘ப்ரீ நேட் டல் ஸ்கிரீனிங்’ என்கிற சோதனை அவசியம் என வலியுறுத்தப்படுவதன் பின்னணி இதுதான். அதில் முக்கியமானது நியூக்கல் டிரான்ஸ்லுசன்சி (nuchal translucency) எனப்படுகிற என்.டி. ஸ்கேன். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனான இதில், கருவிலுள்ள ஒரு குழந்தைக்கோ, அத்தனை குழந்தைகளுக்குமோ கழுத்துப் பகுதியில் கூடுதல் திரவம் இருப்பதையும் அதன் தொடர்ச்சியாக ‘டவுன் சிண்ட்ரோம்’ பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் தெரிந்து கொள்ளலாம்.
என்.டி.ஸ்கேன் உடன், சில நேரங்களில் சில ரத்தப் பரிசோதனை களையும் சில மருத்துவர்கள் மேற்கொள்ளச் சொல்வார்கள். இதற்கு ‘ஃபர்ஸ்ட் ட்ரைமெஸ்டர் கம்பைண்டு ஸ்கிரீனிங் டெஸ்ட்’ என்று பெயர். இந்தச் சோதனைகள், ஒன்றுக்கு மேலான கருக்களிடம் காணப்படுகிற மரபணுக் கோளாறு களை அத்தனை துல்லியமாகக் கண்டு பிடித்துவிடும் என்றும் உறுதியாகச் சொல்வதற் கில்லை.
இது தவிர பிறவிக் கோளாறுகளைக் கண்டுபிடிக்க கர்ப்பத்தின் 15 முதல் 18 வாரங்களில் செய்யப்படுகிற ‘மல்ட்டிபுள் மார்க்கர் ஸ்கிரீன் டெஸ்ட்’ மற்றும் ரத்தப் பரிசோதனையும் அத்தனை துல்லியமாக இருப்பதில்லை என்பதால்பல மருத்துவர்களும் இந்தச் சோதனைகளைப் பரிந்துரைப்பதில்லை. ‘அம்னியோசென்டெசிஸ்’ (Amniocentesis) அல்லது ‘சிவிஎஸ்’ (chorionic villus sampling) சோதனைகளும் குரோமோசோம் குறைபாடுகள் உள்ளிட்ட மற்ற குறைபாடுகளையும் கண்டுபிடிக்க உதவுகின்றன.
இவற்றில் சிபிஎஸ் சோதனையானது கர்ப்பத்தின் 10 முதல் 12 வாரங்களிலும் அம்னியோ சென்டெசிஸ் சோதனையானது 20 வாரங்களிலும் செய்யப்படும். இந்த இரண்டுமே டவுன் சிண்ட்ரோம் மற்றும் மரபணுக் கோளாறுகளைக் கண்டுபிடிக்கச் செய்யப்படுபவை. இந்தச் சோதனைகள், கருவிலி ருப்பவர்கள் ஐடென்டிகல் ட்வின்ஸ் எனப்படுகிற ஒத்த இரட்டையரா, ஃபிராட்டர்னல் ட்வின்ஸ் எனப்படுகிற உடன்பிறந்த இரட்டையரா என்பதையும் காட்டும்.
ஒன்றுக்கு மேலான குழந்தை கள் கருவில் இருக்கும் நிலையில் இந்த இரண்டு சோதனை களுமே ரொம்பவும் நுட்பமாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டும். டெஸ்டை மேற்கொள்கிற டெக்னீஷியன், இரண்டு கருக்களிடம் இருந்தும் தனித்தனியே சாம்பிள் திரவத்தை எடுக்க வேண்டும். இரண்டும் கலந்துவிடக் கூடாது. இரண்டு கருக்களும் பொதுவான ஒரு பனிக்குடப் பையைப் பகிர்ந்து கொள்ளும் போது இருவருக்கும் ஒரே டி.என்.ஏ. இருக்கும் என்பதால் சாம்பிள் கலந்தாலும் பிரச்னையில்லை. சிலர் 2க்கும் மேலாக 3, 4 கருக் களைக்கூட சுமப்பதுண்டு.
அவர்களில் ஒவ்வொரு வரிடம் இருந் தும் தனித்தனியே மாதிரியை எடுத்து சோதித்துப் பார்ப்பது என்பது எப்போதும் சாத்திய மாகாது. இந்தச் சோதனைக்குப் பிறகு கருக் கலைப்புக்கான வாய்ப்புகளும் மிக அதிகம். உதாரணத்துக்கு அம்னியோசென்டெசிஸ் சோதனைக்குப் பிறகு ஒன்றுக்கு மேலான கருக்கள் கலைவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம். சிவிஎஸ் சோதனைக்குப் பிறகான இந்த அபாயம் 4 சதவிகிதம் அதிகம். நிபுணத்துவம் பெற்ற, அனுபவமுள்ள டெக்னீஷியன்களால் செய்யப்படுகிற போது, இந்த அபாய வாய்ப்பு சற்றே குறையலாம்’’ என்கிறார் டாக்டர் நித்யா ராமமூர்த்தி.
அருணாவின் டிப்ஸ்...
‘‘நேர நிர்வாகம் ரொம்ப முக்கியம். ரெண்டு குழந்தைங்களையும் ஒரே நேரத்துல தூங்க வைச்சுப் பழக்கணும். அரை மணி நேரம் டைம் கிடைச்சாலும், அதுல அம்மாக்கள் தங்களை கவனிச்சுக்கக் கத்துக்கணும். அந்த அரைமணி நேரம், அவங்களை ரீசார்ஜ் பண்ணி, மீதி நேரத்துக்குத் தயார்படுத்தும்!
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர்
நல்லதொரு கட்டுரை. யோசிக்கவேண்டியது
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர்
சிறப்பான கட்டுரை .பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ட்வின்ஸ் : ஆச்சரியத் தொடர்
» அண்டங்காக்கையின் ஆச்சரியத் தேடல்
» ட்வின்ஸ்
» ட்வின்ஸ் ட்வின்ஸ் ட்வின்ஸ்
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
» அண்டங்காக்கையின் ஆச்சரியத் தேடல்
» ட்வின்ஸ்
» ட்வின்ஸ் ட்வின்ஸ் ட்வின்ஸ்
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|