Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இனிது இனிது வாழ்தல் இனிது!
Page 1 of 1 • Share
இனிது இனிது வாழ்தல் இனிது!
‘உன் கோபத்துக்காக நீ தண்டிக்கப்படுவதில்லை. உன் கோபத்தாலேயே நீ தண்டிக்கப்படுகிறாய்...’ என்பது புத்தர் வாக்கு. அர்த்தமற்ற விஷயங்களுக்காக, காரணமின்றி கோபப்பட்டவர்கள் நிச்சயம் இதை உணர்ந்திருப்பார்கள்.
கோபம் என்பது என்ன?
சட்டென்று மாறுகிற மனநிலையின் வெளிப்பாடு. அதன் பின்னணியில் உடலையோ, மனத்தையோ வருத்தும் ஏதோ ஒரு விஷயம் இருக்கலாம். கோபம் என்பது காய்ச்சல் மாதிரி ஓர் அறிகுறி. காய்ச்சல் என்பது எப்படி ஒரு நோய் இல்லையோ, உடலுக்குள் உண்டான ஏதோ ஒரு பிரச்னையின் அறிகுறியோ, அதே போலத்தான் கோபமும். மனத்தையோ, உடலையோ ஒரு விஷயம் உறுத்துகிறது, அதைக் கவனி என ஒருவரைத் திசை திருப்புகிற விஷயம்தான் கோபமும். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு பழகுகிறவர்கள், ஒரு கட்டத்தில் கோபத்தை தனது ஒரு கேரக்டராகவே மாற்றிக் கொள்கிறார்கள். இந்த விஷயத்துக்கு அவர் இப்படித்தான் ரியாக்ட் செய்வார் என்பது மற்றவர்களுக்குப் புரிகிற அளவுக்கு அந்த கேரக்டர் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கும்.
கோபத்தைத் தன் அவசிய அடையாளமாக ஏற்றுக் கொண்ட ஆண்கள் தன்னை ஒரு சூப்பர் ஹீரோ மாதிரிக் கற்பனை செய்து கொள்வார்கள். ஆதிக்கக் குணம் அதிகமிருக்கும். பெரிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற தேடலில் இருப்பார்கள். போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியுடன் இருப்பார்கள். கோபத்தைத் தனக்கான ஆயுதமாகக் கொண்டு, மனைவியிடம் கூட நெருங்கிப் பழக மாட்டார்கள். மனைவியிடம் அன்பாக, இரக்கமாக, கருணையாகப் பேசினாலோ, சிரித்தாலோ தன்னை பலவீனமானவராக நினைத்து விடுவார்களோ என இறுக்கமாகவே இருக்க முயற்சி செய்வார்கள். தனது பயங்களையோ, பலவீனங்களையோ, தோல்விகளையோ பற்றி வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள். இதனால் சில வேளைகளில் அளவுக்கதிகமான மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள்.
ஆனாலும், துணையிடமிருந்து விலகியே நிற்பார்கள். கோபக்கார ஆண்கள் இப்படி என்றால், கோபக்கார பெண்களோ கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்வார்கள். கணவரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள். கணவரின் கோபம் அறிந்த மனைவிகள் என்றால் எந்த விஷயம் அவரது கோபத்தைத் தூண்டும் எனத் தெரிந்து கொண்டு அதை அவரிட மிருந்து மறைப்பார்கள். கணவன் - மனைவிக்குள் கோபம் ஊற்றெடுக்க இரண்டு பிரதான காரணங்களைச் சொல்லலாம். தனக்கு மரியாதை இல்லை என உணரும் போதும், தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிற போதும் கோபப்படுகிறார்கள். உடல், மன அளவில் தனது எல்லைகளில் வாழ்க்கைத் துணை தலையிடுவதையோ, அந்த எல்லையை மீற முயற்சிப்பதையோ பொறுத்துக் கொள்ள முடியாத போது கோபப்படுகிறார்கள்.
இந்த இரண்டையும் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
வார்த்தை வன்முறை...
கோபமாகப் பேசுவது, நக்கலாகப் பேசுவது, விட்டுவிட்டுப் போய் விடுவேன் என மிரட்டலாகப் பேசுவது, ஆபாசமாகப் பேசுவது, துணையின் பெற்றோர், உற்றார், உறவினர்களைப் பற்றி அவதூறு பேசுவது, பொய் பேசுவது என எல்லாம் இதில் அடக்கம். துணைக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறுவது. எப்போதும், யாரேனும் ஒருவருடன் ஒப்பிட்டுப் பேசி மட்டம் தட்டுவது. தன்னுடைய அபிப்ராயங்களை, கருத்துகளை துணையின் மேல் திணிப்பது. துணையின் சார்பாக தானே முடிவெடுப்பது.
- அடிப்பது.
மேலே சொன்ன எல்லாம் மரியாதையைக் குலைத்துக் கோபத்தைத் தூண்டும் விஷயங்கள். துணையின் அறைக்குள் அனுமதியின்றி அத்துமீறுவது, அவரது பொருட்களை எடுப்பது, மறைத்து வைப்பது, செல்போனை எடுத்து ஆராய்வது, துணை தூங்கும் போது சத்தமாக டி.வி.யை, ரேடியோவை அலற விடுவது, துணைக்கு விருப்பமில்லாத தருணங்களில் உறவுக்குக் கட்டாயப்படுத்துவது... போன்றவை எல்லாம் எல்லைமீறல் பிரச்னைகளால் கோபத்தைத் தூண்டக்கூடியவை. இந்த இரண்டையும் தவிர உளவியல் ரீதியாகவும் சில விஷயங்கள் கோபத்தைத் தூண்டலாம். துணையை எப்போதும் கிண்டலடிப்பது, ‘எதுக்கும் லாயக்கில்லை’ என மட்டம் தட்டுவது, துணையின் சக்திக்கு மீறிய வேலைகளைக் கொடுத்து செய்ய முடியாமல் திணறடிக்கச் செய்வது, துணை ஏதாவது பேச முயற்சிக்கும் போது முழுக்க பேச விடாமல் இடைமறிப்பது, துணையின் அவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்ற விடாமல் செய்வது (உதாரணத்துக்கு துணையின் பெற்றோர் வீட்டுக்குச் செல்வதைத் தடுப்பது, விருப்பமான சினிமாவை கூட பார்க்க விடாமல் தான் விரும்பும் சினிமாவை பார்க்கச் செய்வது), எந்த விஷயத்திலும் சுதந்திரம் தராமல் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்றவை.
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம்தான் என்ன?
ஹார்ட் அட்டாக் வந்து உயிரிழப்பவர்களில் சிலர் மனதுக்குள் கோபத்தையும் வருத்தத்தையும் போட்டுப் புதைத்து வைப்பவர்களே என்கிறது ஓர் ஆய்வு. கோபப்படும் போது அட்ரீனலின் என்கிற ஹார்மோன் சுரந்து, இதயத்துக்குச் செல்கிற ரத்தக் குழாய்களை சுருங்கச் செய்து, மாரடைப்புக்குக் காரணமாகிறது.
எப்படிக் கட்டுப்படுத்தலாம்?
ஒரு பிரச்னை வரும் போது, அதில் தனது உரிமை எப்படி மீறப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு முன் அதே போன்றதொரு சம்பவம் நடந்திருக்கிறதா எனப் பார்த்து, கோபத்துக்குக் காரணமான அந்த கொக்கியைக் கடிக்கலாமா, கடித்தால் என்னாகும் என்றும் யோசிக்க வேண்டும். தேவைகளுக்கும் விருப்பங்களுக்குமான வித்தியாசத்தை உணர வேண்டும். பிரச்னைக்குக் காரணமான விஷயம் தேவை நிறைவேற்றப்படாத தன் விளைவால் வந்ததா அல்லது விருப்பம் நிறைவேற்றப்படாததால் வந்ததா என்கிற தெளிவு வேண்டும். கோபத்தைத் தூண்டுகிற விஷயம் உண்மையிலேயே கோபப்படத் தகுந்ததுதானா எனப் பார்க்க வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களுக்காக கோபப்படுவது, அன்யோன்யமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தடையாக மாறும் என்பதை உணர்ந்தால் அதைத் தவிர்க்கலாம்.
கோபத்திலிருந்து விலகி நிற்க...
துணையிடம் மனம் திறந்து பேசுவதுதான் ஒரே சிறந்த வழி. கணவனும் மனைவியும் அமைதியாக உட்கார்ந்து, மனம் திறந்து பேசப் பழகினால், அந்தக் குடும்பமே ஆரோக்கியமான சூழல் கொள்ளும். அதைப் பார்த்து வளர்கிற குழந்தைகளும் நாகரிகமான மனிதர்களாக வளர்வார்கள். பிரச்னையை சொல்லி முடித்த திருப்தி துணைக்கு ஏற்படும். இப்படிப் பேசும் போது இடையிடையே சட்டென கோபப்படுவது, பழைய பிரச்னைகளைக் கிளறுவது போன்றவற்றைத் தவிர்த்தாக வேண்டியது மிக முக்கியம்.
தேவதையா, பூதமா?
உங்களுடைய இரண்டு தோள்களில் ஒரு தோளில் தேவதையையும் இன்னொரு தோளில் பூதத்தையும் சுமப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கோபப்படுகிற ஒரு சூழல் வரும் போது தேவதை பேசுவதைக் கேட்பதா, பூதம் சொல்வதையா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். ‘உனக்கொரு ஆபத்து காத்திருக்கிறது. இந்தச் சூழலில் பொறுமையாக இரு... கோபத்துக்கான கொக்கியை அவசரப்பட்டுக் கடித்து விடாதே’ என தேவதை எச்சரிக்கும். பூதமாக இருந்தால் இதற்கு நேரெதிராகச் சொல்லிக் கோபத்தைக் கிளறி விடும். யார் பேச்சைக் கேட்பது என்பது உங்கள் சாய்ஸ்.
கோபம் வரும் போது நினைவில் கொள்ள வேண்டிய 4As
Avoid - கோபத்துக்குக் காரணமான மன அழுத்தத்தைத் தவிர்ப்பது.
Alter - கோபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை மாற்றுவது.
Adjust - கோபத்துக்குக் காரணமான விஷயத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளப் பழகுவது.
Accept - வேறு வழியே இல்லை என்கிற நிலையில் அதை ஏற்றுக் கொள்வது.
கோபமாக இருக்கிறீர்களா?
உங்கள் துணையை விமர்சிக்காதீர்கள். என்னதான் கோபம் தலைக்கேறினாலும் துணையை மோசமான, தகாத வார்த்தைகளால் திட்டாதீர்கள். வன்முறையைப் பிரயோகிக் காதீர்கள். பிரிவைச் சொல்லி மிரட்டாதீர்கள்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» இனிது இனிது வாழ்தல் இனிது
» இனிது இனிது வாழ்தல் இனிது!
» இனிது இனிது வாழ்தல் இனிது!
» இனிது இனிது வாழ்தல் இனிது!
» திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்தல்
» இனிது இனிது வாழ்தல் இனிது!
» இனிது இனிது வாழ்தல் இனிது!
» இனிது இனிது வாழ்தல் இனிது!
» திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|