Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாண்டகுடி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், திண்டுக்கல்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
தாண்டகுடி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், திண்டுக்கல்
மூலவர் : பாலமுருகன்
உற்சவர் : முருகன்
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தாண்டிக்குதி
ஊர் : தாண்டிக்குடி
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
பங்குனி உத்திரத்திருவிழா, மாத கார்த்திகை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம்
தல சிறப்பு:
திருவடிச்சுவடுகள் மண்ணில் பதிந்தால் எப்படி இருக்குமோ அப்படி அந்தக்கல்லில் திருவடிச்சுவடு காணப்பட்டது. மேலும் அதற்கு அடுத்தாற்போல் உள்ள பாறையில் முருகனின் வாகனமான மயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும் காணப்பட்டது. (இந்த தோற்றங்களை நாம் இப்போதும் பார்க்கலாம்). இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தாண்டிக்குடி- 624 216 திண்டுக்கல் மாவட்டம்.
போன்:
+91- 4542- 266 378, +91- 99626 71467
பொது தகவல்:
பழம் பெரும் ஆலயங்கள் எழுப்ப சில முக்கிய காரணங்கள் இருக்கும். அவற்றைத்தான் நாம் ஸ்தல புராணம் என்கிறோம். அந்தந்த இடங்களில் நடந்த தெய்வீக நிகழ்ச்சிகளே ஆலயங்கள் எழுப்ப காரணமாய் விளங்கின. ஒரு ஆலயத்தை பல மன்னர்கள் கட்டி முடித்திருக்கிறார்கள். (உதாரணம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில்) ஒரு ஆலயத்தை ஒரே மன்னனே தன் கடுமையான உழைப்பினால் கட்டியும் முடித்துள்ளான். (உதாரணம் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்) செங்கண்ணன் என்ற சோழ மன்னன் ஒருவனே 75 சிவாலயங்கள் கட்டியுள்ளதாக வரலாறு உள்ளது. பேரரசர்கள், சிற்றரசர்கள் மட்டுமல்லாமல் சித்தர்களும் சில ஆலயங்கள் எழுப்ப காரணமாய் இருந்திருக்கிறார்கள். (உதாரணம் - பழனி முருகன் கோயிலை போகர் என்ற சித்தரும், திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலை கொங்கணர் என்ற சித்தரும் எழுப்ப காரணமாய் இருக்கிறார்கள்) ஆனால் அந்தக் கோயில்கள் எல்லாம் வெகு காலத்திற்குப் பின்னர் தான் கட்டடமாக கட்டி முடிக்கப்பட்டது.
பிரார்த்தனை
தாண்டிக்குடி வந்து முருகனை தரிசித்து, பிரார்த்தனை செய்வதன் முலம் முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
நேர்த்திக்கடன்:
பங்குனி உத்திரத்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு பங்குனி உத்திர தினத்தன்று காவடி தூக்கிச் சென்று வழிபடுகின்றனர்.
தலபெருமை:
பழனிக்கே முருகன் இங்கிருந்து தான் சென்றிருக்கிறார். எனவே பழனிக்கு செல்பவர்கள் இங்குள்ள தாண்டிக்குடி பாலமுருகனை தரிசித்த பின் சென்றால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இங்கிருந்து பழநிக்கு தாண்டிக்குதித்துச் சென்ற முருகப்பெருமானை, பத்தொன்பது சித்தர் என்று அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் (இயற்பெயர் ராமசாமி) தாண்டிக்குடிக்கே பாலமுருகன் வடிவில் அழைத்து வந்து விட்டார்கள்.
அவர் மறுபடியும் முருகனை அழைத்து வந்ததற்கு அடையாளமாக தாண்டிக்குடி மலையில் முன்று நாட்கள் தொடர்ந்து அனைவரும் பார்க்கும் படி ஓர் ஜோதி தோன்றியது. இதனாலேயே இந்த மலை "ஜோதி மலை' என வழங்கப்பட்டது. மூன்று நாட்களும் தொடர்ந்து ஜோதி தெரிந்து முடிந்தவுடன், அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, முருகப்பெருமான் மறுபடியும் தாண்டிக்குடிக்கு வந்து விட்டதற்கு அறிகுறியாக திருவடிச்சுவடுகள் மண்ணில் பதிந்தால் எப்படி இருக்குமோ அப்படி அந்தக்கல்லில் திருவடிச்சுவடு காணப்பட்டது. மேலும் அதற்கு அடுத்தாற்போல் உள்ள பாறையில் முருகனின் வாகனமான மயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும் காணப்பட்டது. (இந்த தோற்றங்களை நாம் இப்போதும் பார்க்கலாம்). இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
தல வரலாறு:
முருகப்பெருமான் தன் ஆறாவது படைவீடான பழமுதிர்ச் சோலையில் மலைவளம் கண்டபிறகு, தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என் இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழநி வந்து சேருகிறார். இதை அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாகிக் கொள்ள உரியது என கருதி தாண்டிக்குதிக்கிறார். இதன் காரணமாகவே இந்த இடம் "தாண்டிக்குதி' என்ற அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி "தாண்டிக்குடி' ஆனது.
பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி முருகனே கோயில் கட்ட தேவையான பொருள்களுக்கு அது சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி, அந்தப் பொருள்களை கொடுக்க கூறினார் என்றும், தற்போது கோயிலில் உள்ள மூலவர் சிலை கூட ஸ்தபதி ஒருவரின் கனவில் முருகனே சென்று கூறி அதன் மூலம் நிறுவப்பெற்று, திருப்பணிவேலைகள் முருகப்பெருமானின் மேற்பார்வையிலேயே முடிந்தது. கணபதி, முருகன், மயில், இடும்பன், பைரவர், அகஸ்தியர் மற்றும் நவக்கிரகங்களுடன் 1949ல் மிகவும் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு மூலவரான முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோயிலில் உள்ள முலவரின் அமைப்பே இக்கோயிலும் உள்ளன. இந்தக் கோயிலுக்கு மருதநாயகமும், கணபதியும் தலைமைப்பூசாரியாக இருந்திருக்கிறார்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தாண்டகுடி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், திண்டுக்கல்
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்,தாண்டிக்குடி , திண்டுக்கல்
» திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்
» அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்.ரத்தினகிரி
» ரத்தினகிரி-அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
» அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி
» திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்
» அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்.ரத்தினகிரி
» ரத்தினகிரி-அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
» அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|