Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனித உறுப்புகள்
Page 1 of 1 • Share
மனித உறுப்புகள்
மனித உறுப்புகள் விற்பனை என்பது இப்போது சர்வசாதாரணமாக நடக்கிறது. டூவீலர் ஸ்பேர்பார்ட்ஸ் போல் புரோக்களிடம் பணம் கொடுத்தால் உடனடியாக கிடைக்கும் நிலைதான் உள்ளது.
பெருகிவரும் நாகரீகம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மனித உடலில் புதுப்புது நோய்கள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது.
பணம் என்பது பெரிய பொருட்டாக இல்லாத நிலையில், அதை வைத்து கொண்டு மனித உறுப்புகளை வாங்க ஏராளமானவர்கள் துடிக்கின்றனர். இதையே தொழிலாக மாற்றிக் கொண்ட புரோக்கர்களும் பெருகிவருகின்றனர். ஒரு சில பெரிய மருத்துவமனைகளில் இதற்கென்றே புரோக்கர்கள் சுற்றி, சுற்றி வருகின்றனர். இவர்களின் வேலை, மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக யார் சேர்க்கப்படுகிறா£ர்கள் என்பதை பார்த்து, அவர்களிடம் சிறுநீரக தானத்துக்கு தன்னிடம் நபர்கள் தயாராக இருப்பதாக கூறி எவ்வளவுக்கு எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கறக்க முயல்வதுதான்.
உண்மையிலேயே இந்த புரோக்கர்களிடம் ஆட்கள் இருப்பது உண்மைதான். ஆனால், மிக பணக்கஷ்டத்தில் இருக்கும் ஏழைகளை சந்தித்து, அவர்களிடம் பணத்தாசை காட்டி உடல்தானத்துக்கு ஒப்புக் கொள்ள வைக்கின்றனர். இதற்காக புரோக்கர்கள் ரூ.5 லட்சம் வாங்கினால், தானமாக கொடுத்த ஏழைக்கு அவர் அளிப்பது வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே. எவ்வளவு மோசடி நடக்கிறது என்பது தெரிகிறதா?
ஒருவருக்கு உடலில் பெரிய பாதிப்பு என்றால், தன் உடலையே தானமாக கொடுக்கக்கூட அவரது மனைவி தயங்க மாட்டார். ஆனால், மனைவி என்பவள் வேற்று குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதால், அவளது உடல் உறுப்புகள் பெரும்பாலாலும் கணவனுக்கு சேர்வதில்லை. இதனால் மனைவி உடல் உறுப்பை கொடுக்க தயாராக இருந்தாலும், அதை எடுத்து கணவருக்கு பொருத்த முடியாத நிலைதான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.
இதனால் கோடிக்கணக்கில் பணம் கொட்டிக் கிடந்தாலும், சொந்த குடும்பத்தில் இருந்தே (சகோதரர்கள், சகோதரிகள், பெற்றோர்) ஒருவர் உடல் உறுப்புகளை தானமாக பெற வேண்டிய நிலை உள்ளது. ஆனால், திருமணமாகி தனிக்குடும்பமாக வசிக்கும் சகோதரர்கள், சகோதரிகளில் எத்தனை பேர் தங்களுடைய உடல் உறுப்பை உடன்பிறப்புக்கு அளிக்க முன்வருவார்கள் என்று சொல்ல முடியாது.
சுமார் 8 ஆண்டுக்கு முன்பு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய அளவில் மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. லட்சக்கணக்கில் இதில் பணம் கைமாறுவதும், உடல் உறுப்புகளை தானமாக கொடுத்த நபரின், மருத்துவ சிகிச்சை குறித்து கவலைப்படாமல் அவர்களின் உயிர்களை கிள்ளுக்கீரையாக கருதியதும் தெரியவந்தது.
இதையடுத்துதான், மத்திய அரசு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைப்படுத்தும் சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி, ஒருவர் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அல்லாமல் வேற்று நபர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை பெற முயன்றால், அதற்காக உரிய குழுவிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த சட்டம், உண்மையான நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டது என்றாலும், அதிலும் பல்வேறு ஓட்டைகளை கண்டுபிடித்து மோசடி செய்வது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
குடும்பத்தை சேராத வேறு ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு ஆண், சிறுநீரகத்தை தானமாக பெற முயற்சி மேற்கொள்கிறார் என்றால், சட்டச்சிக்கல் வராமல் இருப்பதற்காக சம்பந்தப்பட்ட ஏழை பெண்ணை தற்காலிமாக திருமணம் செய்து கொள்கிறார். அதாவது ஒப்புக்கு மாலை, மாங்கல்யத்துடன் போட்டோ எடுத்து கொள்வது. இதற்கு ஆதாரமாக திருமண பத்திரிகை ஒன்றையும் தயார் செய்து கொள்வது. இதை வைத்துக் கொண்டு சொந்த மனைவியிடம் இருந்து சிறுநீரகத்தை தானம் பெற்றதாக காட்டிவிடுகின்றனர். இதேபோல், சட்டத்தை ஏமாற்றும் வேலைகள் பல இடங்களில் நடக்கிறது.
சரி இதற்கு வழிதான் என்ன என்றால், உண்மையாக பாதிக்கப்பட்ட நபருக்கு எளிதில், உடல் உறுப்புகள் தானமாக கிடைக்க, அரசே கொடையாளிகளின் பெயரை தயாராக வைத்து கொண்டு, அவர்களின் ரத்த வகை, உறுப்பு உள்ளிட்டவை குறித்த விவரங்களை தயார் செய்து வைத்து கொண்டு, தேவைப்படும் நபர்களுக்கு அளிக்கலாம். அதாவது ரத்த வங்கிகள் போன்று உடல் உறுப்பு வங்கிகளை செயல்படுத்துவதுதான்.
இதேபோல், பெரும்பாலான விபத்துக்களில் இறப்பவர்களின் முக்கிய உடல் உறுப்புகள் ஏராளமானமவை வீணாக சாலைகளில் அழுகித்தான் போகின்றன. இதை தடுக்க விபத்துக்களில் இறப்பவர்களின் முக்கிய உடல் பாகங்களை அரசு மருத்துவமனைகள் பயன்படுத்திக் கொள்ள, சட்டத்தில் மாற்றம் செய்யப்படலாம்.
உயிரை காப்பாற்றத்தான், இறந்த மற்றொரு உயிரின் பாகங்களை எடுக்கிறோம். இதில் விவகாரங்கள் ஏற்படாமல், பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு கண்டால் இருக்கும் உயிர்களையாவது காப்பாற்றலாம். இடைத்தரகர்களால் ஏழைகளின் உடல் உறுப்புகள் சுரண்டப்படுவதையும் தடுக்கலாம்.
நன்றி -உணவு உலகம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|