Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மலச்சிக்கல் போக்கும் இயற்கை உணவு !
Page 1 of 1 • Share
மலச்சிக்கல் போக்கும் இயற்கை உணவு !
மேலை நாட்டினரைப் போல் இந்தியர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும் நம்மில் பலரும் சிற்சில வேளைகளில் இத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக நாகரீக வாழ்க்கை முறையில் மூழ்கித் திளைத்திருக்கும் நகரத்து மக்கள் இதனால் பெரிதும் பாதிப்புறுகின்றனர். ஓய்வில்லாத ஓட்டமும், உணவுக் குறைபாடுகளும், இட நெருக்கடியும், போதிய கழிவறைகள் இல்லாமையும் இதற்குக் காரணங்கள் என்று கூறலாம். அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் மூலநோயிலும் பௌத்திரத்திலும் போய் முடியலாம். மலமிளக்கிகளும், பேதி மருந்துகளும் இதற்கு நிரந்தரமான தீர்வாகாது.
மலச்சிக்கலை Constipation என்று ஆங்கிலத்தில் கூறுவர். சேர்த்துக்கட்டு அல்லது ஒரு சேரக்கட்டு என்னும் பொருள்படுகின்ற Constipareateum என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தான் Constipation என்ற சொல் உருவாகியது. முழுதும் வெளியேற்றப்படாத, கடினமான, கெட்டிப்பட்ட மலம் தான் இதன் உணர்குறி. பெரும்பான்மையானவர்கள் ஒரு நாளுக்கு ஒரு முறை மலங்கழித்தால் போதுமானது என்று கருதுகிறார்கள். சிலர் இரண்டு முறை கழிவறைக்குச் சென்றால் நல்லது என்று எண்ணுகின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று கணக்கு வைத்திருப்பவர்களும் உண்டு. மேலை நாடுகளில் வாரத்திற்கு மூன்று முறை மலங்கழித்தாலும் அதை நார்மல் என்று குறிப்பிடுகின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் குளிர் நாடுகளில் வாழ்வதாலும், அவர்களது உணவுப் பழக்கங்கள் அவ்வாறு அமைந்துள்ளதாலும் என்று கூறப்படுகிறது.
நம் நாடு போன்ற வெப்ப நாடுகளில் வாழ்கின்றவர்களுக்கு வியர்வை அதிகமாக உண்டாவதால் அவர்கள் குடிக்கின்ற நீர்மங்கள் வியர்வையாக வெளியேறி விடுகின்றன. எஞ்சியுள்ள நீர்மம் பெருங்குடலார் உறிஞ்சப்பட்டு விடுகின்ற போது மலம் கெட்டிப்பட்டுவிடுகிறது. கொழுப்பு மிகுந்த உணவு வகைகளையும் எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை உண்பதாலும், உணவில் காய்கறிகள், கீரை, பழங்கள் போன்ற உணவுகள், நார்ப் பொருட்கள் இல்லாமல் போவதாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும், கால ஒழுங்கின்றி உண்பதாலும், மலச்சிக்கல் ஏற்படுகிறது. விட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைவினாலும் பெருங்குடல் செவ்வி குறைந்து மலத்தை உந்தித் தள்ள இயலாது போவதும் ஒரு காரணமாகலாம். காரணம் எதுவாக இருந்தாலும் மலச்சிக்கலை அலட்சியப்படுத்துவது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல. தொடர்ந்து அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும் போது மலம் மேலும் கெட்டிப்பட்டுப் போகிறது. மலம் கழிக்கப் பெரும் பிரயாசை எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது. முக்கி, முயன்று மலத்தை வெளியேற்றி நேர்வதால் மலக்குடல் பிதுக்கம் (Prolapse Rectum) ஆசனவாய் வெடிப்பு (Anal Fissure), , பவுத்திரம் எனப்படும் புரையோடிய ஆசனவாய்ப்புண் (Fistula), மூலம் (Piles) மற்றும் குடல் பிதுக்கம் போன்ற பல தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக இதய நோய் உள்ளவர்களை மலச்சிக்கல் பெரிதும் பாதிக்கக் கூடும். இது தவிர வயிற்றப் பொருமல், தலைவலி, வாய்க் கசப்பு போன்றவையும் ஏற்படலாம். பின் இதற்குத் தீர்வு தான் என்ன?
இயற்கை உணவே ஏற்ற தீர்வு
மலச்சிக்கலினால் அவதிப்படுபவர்கள் தங்கள் நடைமுறை வா-ழ்விலும், உணவுப் பழக்கங்களிலும் சில முக்கியமான மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். தினசரி 3 வேளை உணவில் ஒரு வேளைக்குப் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே உண்பதென்று பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். செல்லுலோஸ் நிறைந்த பழங்களைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். வாழைப்பழம் போன்ற பொட்டாஷியம் நிறைந்த பழங்களையும், விட்டமின் 'பி' சத்து மிகுந்த முளைகட்டிய தானியங்களையும் உணவின் ஒரு பாகமாக்கிக் கொள்ள வேண்டும். பருப்பு, கடலை போன்றவற்றைக் குறைத்து அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களை அதிகமாக உண்ணுவது நல்லது.
இயன்ற வரை காபி, டீ, கோலா போன்ற பானங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இறைச்சி உண்பவர்கள் அதை நிறுத்துவது நல்லது. நீர் மோர், இளநீர், பழச்சாறுகள், நீராகாராம் போன்றவற்றைப் பெருமளவில் பருக வேண்டும். தண்ணீர் நிறையக் குடிக்கலாம். குறைந்தது 8 முதல் 10 டம்ளர்கள் தண்ணீராவது தினமும் குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் கட்டாயம் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கு மாற்றாக எந்த நீர்மமும் செயல்படாது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
இவை எதிலும் நிவர்த்தியில்லாவிடில் இதோ வேறொரு வழி. சைனா கிராஸ் (Agar Agar) எனப்படும் கடற்பாசி, பொடி வடிவத்தில் எசென்ஸ் கடைகளில் கிடைக்கும். இதைத் தண்ணீரில் போட்டால் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு உப்பிப் பருக்க வல்லது. இதை அளவான தண்ணீரில் சேர்த்து அடுப்பில் வேக வைத்தால் அல்வா போல வந்து விடும். இரவு படுக்கைக்குச் செல்லுமுன் இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு விட்டுப் படுத்தால் காலையில் மலம் எளிதாகக் கழியும். இது இயற்கை முறையில் மலச்சிக்கல் தீர்க்கும் வழியாகும்.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட லிக்விட் பாரபினும், சென்னா மாத்திரைகளும், மில்க் ஆப் மக்னீஷியமும் சாப்பிடுகிறார்கள். இது நிரந்தரமான தீர்வு அல்ல என்பதுடன் இம் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடும் போது பல பக்க விளைவுகள் ஏற்படுகின்ற வாய்ப்புண்டு. எனவே இயற்கையான முறையில் நிரந்தரமாக மலச்சிக்கலை நீக்குவதற்கான ஒரே வழி இயற்கை உணவுகளுக்குத் திரும்புவதேயாகும்.
நன்றி -உணவு நலம்
மலச்சிக்கலை Constipation என்று ஆங்கிலத்தில் கூறுவர். சேர்த்துக்கட்டு அல்லது ஒரு சேரக்கட்டு என்னும் பொருள்படுகின்ற Constipareateum என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தான் Constipation என்ற சொல் உருவாகியது. முழுதும் வெளியேற்றப்படாத, கடினமான, கெட்டிப்பட்ட மலம் தான் இதன் உணர்குறி. பெரும்பான்மையானவர்கள் ஒரு நாளுக்கு ஒரு முறை மலங்கழித்தால் போதுமானது என்று கருதுகிறார்கள். சிலர் இரண்டு முறை கழிவறைக்குச் சென்றால் நல்லது என்று எண்ணுகின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று கணக்கு வைத்திருப்பவர்களும் உண்டு. மேலை நாடுகளில் வாரத்திற்கு மூன்று முறை மலங்கழித்தாலும் அதை நார்மல் என்று குறிப்பிடுகின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் குளிர் நாடுகளில் வாழ்வதாலும், அவர்களது உணவுப் பழக்கங்கள் அவ்வாறு அமைந்துள்ளதாலும் என்று கூறப்படுகிறது.
நம் நாடு போன்ற வெப்ப நாடுகளில் வாழ்கின்றவர்களுக்கு வியர்வை அதிகமாக உண்டாவதால் அவர்கள் குடிக்கின்ற நீர்மங்கள் வியர்வையாக வெளியேறி விடுகின்றன. எஞ்சியுள்ள நீர்மம் பெருங்குடலார் உறிஞ்சப்பட்டு விடுகின்ற போது மலம் கெட்டிப்பட்டுவிடுகிறது. கொழுப்பு மிகுந்த உணவு வகைகளையும் எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை உண்பதாலும், உணவில் காய்கறிகள், கீரை, பழங்கள் போன்ற உணவுகள், நார்ப் பொருட்கள் இல்லாமல் போவதாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும், கால ஒழுங்கின்றி உண்பதாலும், மலச்சிக்கல் ஏற்படுகிறது. விட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைவினாலும் பெருங்குடல் செவ்வி குறைந்து மலத்தை உந்தித் தள்ள இயலாது போவதும் ஒரு காரணமாகலாம். காரணம் எதுவாக இருந்தாலும் மலச்சிக்கலை அலட்சியப்படுத்துவது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல. தொடர்ந்து அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும் போது மலம் மேலும் கெட்டிப்பட்டுப் போகிறது. மலம் கழிக்கப் பெரும் பிரயாசை எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது. முக்கி, முயன்று மலத்தை வெளியேற்றி நேர்வதால் மலக்குடல் பிதுக்கம் (Prolapse Rectum) ஆசனவாய் வெடிப்பு (Anal Fissure), , பவுத்திரம் எனப்படும் புரையோடிய ஆசனவாய்ப்புண் (Fistula), மூலம் (Piles) மற்றும் குடல் பிதுக்கம் போன்ற பல தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக இதய நோய் உள்ளவர்களை மலச்சிக்கல் பெரிதும் பாதிக்கக் கூடும். இது தவிர வயிற்றப் பொருமல், தலைவலி, வாய்க் கசப்பு போன்றவையும் ஏற்படலாம். பின் இதற்குத் தீர்வு தான் என்ன?
இயற்கை உணவே ஏற்ற தீர்வு
மலச்சிக்கலினால் அவதிப்படுபவர்கள் தங்கள் நடைமுறை வா-ழ்விலும், உணவுப் பழக்கங்களிலும் சில முக்கியமான மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். தினசரி 3 வேளை உணவில் ஒரு வேளைக்குப் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே உண்பதென்று பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். செல்லுலோஸ் நிறைந்த பழங்களைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். வாழைப்பழம் போன்ற பொட்டாஷியம் நிறைந்த பழங்களையும், விட்டமின் 'பி' சத்து மிகுந்த முளைகட்டிய தானியங்களையும் உணவின் ஒரு பாகமாக்கிக் கொள்ள வேண்டும். பருப்பு, கடலை போன்றவற்றைக் குறைத்து அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களை அதிகமாக உண்ணுவது நல்லது.
இயன்ற வரை காபி, டீ, கோலா போன்ற பானங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இறைச்சி உண்பவர்கள் அதை நிறுத்துவது நல்லது. நீர் மோர், இளநீர், பழச்சாறுகள், நீராகாராம் போன்றவற்றைப் பெருமளவில் பருக வேண்டும். தண்ணீர் நிறையக் குடிக்கலாம். குறைந்தது 8 முதல் 10 டம்ளர்கள் தண்ணீராவது தினமும் குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் கட்டாயம் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கு மாற்றாக எந்த நீர்மமும் செயல்படாது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
இவை எதிலும் நிவர்த்தியில்லாவிடில் இதோ வேறொரு வழி. சைனா கிராஸ் (Agar Agar) எனப்படும் கடற்பாசி, பொடி வடிவத்தில் எசென்ஸ் கடைகளில் கிடைக்கும். இதைத் தண்ணீரில் போட்டால் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு உப்பிப் பருக்க வல்லது. இதை அளவான தண்ணீரில் சேர்த்து அடுப்பில் வேக வைத்தால் அல்வா போல வந்து விடும். இரவு படுக்கைக்குச் செல்லுமுன் இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு விட்டுப் படுத்தால் காலையில் மலம் எளிதாகக் கழியும். இது இயற்கை முறையில் மலச்சிக்கல் தீர்க்கும் வழியாகும்.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட லிக்விட் பாரபினும், சென்னா மாத்திரைகளும், மில்க் ஆப் மக்னீஷியமும் சாப்பிடுகிறார்கள். இது நிரந்தரமான தீர்வு அல்ல என்பதுடன் இம் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடும் போது பல பக்க விளைவுகள் ஏற்படுகின்ற வாய்ப்புண்டு. எனவே இயற்கையான முறையில் நிரந்தரமாக மலச்சிக்கலை நீக்குவதற்கான ஒரே வழி இயற்கை உணவுகளுக்குத் திரும்புவதேயாகும்.
நன்றி -உணவு நலம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
» வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
» கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்!!!
» சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்
» மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள்!!!
» வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
» கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்!!!
» சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்
» மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|