தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தாய்க்கு இணையான கடவுள்!

View previous topic View next topic Go down

தாய்க்கு இணையான கடவுள்! Empty தாய்க்கு இணையான கடவுள்!

Post by நாஞ்சில் குமார் Fri Oct 17, 2014 3:45 pm

மிகப்பெரிய கடவுள் அவர். மழலைச் செல்லங்களுக்கு வார்த்தைகளை பழக்கும் மந்திரம் தெரிந்தவர். அவரின் சுட்டுவிரலில் இந்த உலகின்  ஒட்டுமொத்த அழகும் ஒளிந்திருந்தது. குட்டி நிலாக்களுக்கு அவர் முன்பெல்லாம் கதைகள் சொல்வார். பாட்டுப் பாடிப் பரவசப்படச் செய்வார்.  அவர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடுவார். ‘என்ன சாப்பிட்டாய்..?’, ‘வீட்டில் என்ன செய்தாய்?’ என அக்கறையாக விசாரிப்பார்... விசாரித்தலின்  மூலம் பேசக் கற்றுக் கொடுப்பார். ஒரு காலத்தில் களிமண்களையும் கரும்பாறைகளையும் கூட சிற்பங்களாக வடித்து வழியனுப்பியவர். அவர்...  ‘ஆசிரியர்’ என்கிற கடவுள்!

குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைப்பதில், லட்சியங்களுக்கான அடித்தளம் இடுவதில், அடிப்படைத் திறன்களைக் கண்டறிந்து வழிநடத்து வதில்  தாய்க்கு இணையான பொறுப்பு ‘ஆசிரியர்’ எனப்படும் கடவுளுக்கும் உண்டு. ஆசிரியர்கள் குழந்தைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப்  பேசுகிறார் ஆசிரியர் பிரபு... ‘‘தாய் மீன் போகும் பாதையில் மாறாத ஒழுங்குடன் மீன் குஞ்சுகள் நீந்திச் செல்லும். இதை ‘ஸ்கூல் ஆஃப் ஃபிஷ்’  என்பார்கள். ஆசிரியர் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கூட்டத்தை வழிநடத்திச் செல்பவர்.

பொதுக் கல்வியின் தொடக்க காலத்தில் மாணவர்களுக்கு அறிவையும் தனது அனுபவத்தை யும் கடத்தக் கூடியவராக இருந்தார். ஒவ்வொரு  குழந்தையும் தனித்துவம் மிக்கது. கற்பித்தல், கவனம் செலுத்துதல் மற்றும் அணுகுமுறை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். தனித்துவம் மிக்க  குழந்தைகளை ‘சிஸ்டம்’ என்கிற ஒரு கட்டத்துக்குள் அடைக்க முடியாது. அனைத்துக் குழந்தைகளையும் குறிப்பிட்ட சிஸ்டத்தில் ஒரே மாதிரி  கற்பித்து, ஒரே மாதிரியான விளைவுகளை எதிர்பார்ப்பது இன்றைய கல்வியின் அணுகு முறையாக இருக்கிறது.

குழந்தை வளர்ந்து, ஒரு மனிதனாக வாழ்வைத் தொடங்கும் போது ஒரு வெற்றியாள னாகவும் சக மனிதர்களின் வலி  உணரக் கூடியவனாக வும்  அவனை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியருக்கு இருக்கிறது. குழந்தைகளுக்கு புதியவற்றுக்கான தேடல் மிகுந்திருக்கும். ஆசிரியரும் தேடலுக்கு  உரியவராக இருந்தால்தான் பள்ளிப் பயணம் சுவாரஸ்யமாக இருக்கும். அம்மாவைத் தாண்டி பள்ளிக்கு வரும் குழந்தைக்கு நம்பிக்கைக்குரிய ஆதர்ஷ  மனிதர் ஆசிரியரே. அவர் சொல்வதையெல்லாம் குழந்தை கள் நம்புகிறார்கள்... தங்கள் கேள்விகளுக்கான பதில் ஒகளையும் அவரிடம்  எதிர்பார்க்கிறார்கள்.

ஆசிரியர், ஒழுக்கங்களை மீறும்போது அவரது வார்த்தைகள் வலுவிழந்து போகின்றன. குழந்தை களுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மட்டுமோ,  திறனில் மட்டுமோ நாட்டம் இருக்காது. அவர்கள் பன்முகத் திறன்களைக் கொண்டவர்கள்... அனைத்து பாடங்களும் பிடித்தமானவையே. ஆசிரியர்,  எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகை யில் பாடம் நடத்தும் போது அந்தப் பாடமே நமக்கு வரவில்லையோ என்ற சந்தேகத்தில் மாணவர்களின்  ஈடுபாடு மாறுகிறது.

ஆசிரியர், குறிப்பிட்ட மாணவனின் தன்மையைப் புரிந்து வைத்திருக்க வேண்டும். அவனது குடும்பச் சூழல், பெற்றோர், வீட்டில் உள்ளவர்கள் பற்றியும்  அறிந்திருத்தல் அவசியம். சமூகம் சார்ந்த புரிதலை உருவாக்குவதற்கான கல்வியை, பாடங்களின் இடையே கதைகள், விளையாட்டுகள் மூலம் கற்றுத்  தர வேண்டும். குழந்தையின் மூளையை பற்றி மட்டும் யோசிப்பவராக இல்லாமல் மனநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாணவன் எதற்குக்  கோபப்படுவான்? அவனது ப்ளஸ், மைனஸ் என்னென்ன? குறிப்பிட்டச் சூழலில் எப்படி தன்னை வெளிப்படுத்துவான் என்பதை யெல்லாம் தெரிந்து  வைத்திருக்க வேண்டும்.

புதிய விஷயங்களைத் தேடி, அது பற்றி விவாதித்து புதிய முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.  தங்களது ஆர்வத்தை குழந்தைகள் வெளிப் படுத்தும் போது பாராட்டி ஊக்கப்படுத்தலாம். குறைபாடுகளை பெரிதுபடுத்தாமல் நல்ல விஷயங் களுடன்  ஒப்பிட்டு சரி செய்ய வலியுறுத்தலாம். ‘சமூகம் மிகப்பெரிய போட்டி மைதானம். அங்கு ஓட்டப் பந்தயம் நடக்கிறது. அதில் வெற்றி பெற மதிப்பெண்  முக்கியம். எனவே, அதிக மதிப்பெண் பெறுபவர்களாக குழந்தைகளை உருவாக்க வேண்டும்’ என்கிற நெருக்கடியை வணிகமயக் கல்வி, ஆசிரியர்களுக்கு  உருவாக்கியிருக்கிறது.

இது போன்ற கல்வி நிலையங்களைத் தேடியே பெற்றோரும் ஓடுகிறார்கள். அதனால், சமூகத்தை கற்றுத்தர ஆசிரியர் விரும்பினாலும் அதற்கான  வாய்ப்பு வகுப்பறையில் இல்லை. பெற்றோரிடமும் அப்படியொரு எதிர்பார்ப்பு இல்லை. மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கல்வி  எந்த அளவு அபத்தமானது என்பது இன்றைக்கு மெதுவாகப் புரியத் தொடங்கியிருக்கிறது. ஒரு காலத்தில் எல்லோராலும் விரும்பப்பட்ட ஆசிரியர் வகுப்பறையில் தொலைக்கப்பட்டு விட்டார். அவரைத் தேடி கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு  பெற்றோருக்கும் இந்த சமூகத்துக்கும் இருக்கிறது. கல்வி சார்ந்த வணிகமய சிந்தனையும் மதிப்பீடும் மாறினால் அனைத்து ஆசிரியர்களுமே  மாணவர்களுக்கு வாழ்க்கையை சொல்லித்தர களத்தில் இறங்கிவிடுவார்கள்.

தனித்துவம் மிக்க குழந்தைகள் ஒரு சூழலை பலவிதமாக அணுகுகிறார்கள். எந்தப் பிரச்னையுமே இல்லாத வாழ்க்கை என்று ஏதாவது இருக்கிறதா?  எதற்காக பிரச்னைகளைக் கண்டு பயப்பட வேண்டும்? பிரச்னைகள் நமது வாழ்க்கைப் பயணத் தில் நிறுத்தங்களைப் போன்றவை. அவற்றைக்  கடந்துதான் ஆக வேண்டும். தங்களது அறிவு, திறன், ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த விஷயத்துக்கும் எளிய தீர்வுகளை கண்டறிபவர்  களாக குழந்தைகளை சிந்திக்கத் தூண்டுவது ஆசிரியரின் கடமை. ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்வதுதானே வாழ்க்கையாக இருக்க முடியும்!

ஆசிரியரும் வகுப்பறையும் ரசனைக்குரியதாக மாறும்போது படிப்பு எப்படிக் கசக்கும்? குழந்தையின் கல்வியும் ஆசிரியரும் எப்படி இருக்க வேண்டும்  என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. குழந்தைகளின் அறிவு தாகத்தை தொடக்கக் கல்விப் பருவத்தில் பூர்த்தி  செய்யாமல் விடும்போது குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைகிறது. அதற்கான வாய்ப்புள்ள கல்வித் திட்டத்தை பெற்றோர் தேர்வு செய்யும்போது  குழந்தைகளை விரும்பும், குழந்தைகளால் விரும்பப்படும் ஆசிரியர்கள் கிடைப்பார்கள்!’’

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தாய்க்கு இணையான கடவுள்! Empty Re: தாய்க்கு இணையான கடவுள்!

Post by முரளிராஜா Sat Oct 18, 2014 12:36 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum