தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீர் எனும் அற்புதம்!

View previous topic View next topic Go down

நீர் எனும் அற்புதம்! Empty நீர் எனும் அற்புதம்!

Post by நாஞ்சில் குமார் Tue Oct 21, 2014 10:03 pm

நீர் எனும் அற்புதம்! 2hx3ua8

இயற்கையின் பரிசு

‘நீரின் அருமை தெரியும் கோடையிலே’ என்பார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இன்றியமையாது உயிர்நாடியாக விளங்குவது தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவர் வாக்கில் புதைந்திருக்கும் உண்மையை இவ்வுலகில் ஜீவித்த உயிர்கள் யாவும் உணரும். மூன்றாம் உலகப் போரே உதிக்கலாம் என்கிற சூழ்நிலையைக் கூட உருவாக்கும் அளவு நீரின் தேவை உலகை வியாபித்திருக்கிறது.

நீரற்ற உலகை ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்... தாகத்துக்கு ஏங்கியபடி ஜீவராசிகள் அலைந்து கொண்டிருக்கும்... எல்லா நீர்நிலைகளிலும் எத்தனை கூழாங்கற்கள் இருக்கின்றன என்பதை சுலபமாக எண்ணி விடலாம்... கடல் பகுதிகள் அத்தனையும் பொட்டல் வெளிகளாக காட்சி தரும்... நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதா? இத்தனை அருமை பெருமைகளை உடைய தண்ணீரை சரியான முறையில் அருந்தினால் நம் உடலுக்கு அருமருந்தாகும். நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் நிரப்பப்பட்டு இருக்கிறது. நமது மூளையில் 74 சதவிகிதம், ரத்தத்தில் 83 சதவிகிதம், தசைகளில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. எலும்பில் கூட 22 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது.

தண்ணீரே பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாகும். எப்படி?

தண்ணீர் சிறுநீரகக் கற்களை வர விடாமல் செய்கிறது. முறையாக தண்ணீர் குடிக்காத தாலும் சிறுநீரகக்கற்கள் ஏற்படும். தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீரகங்களில் கற்கள் சிறிய அளவில் இருக்கும்போதே கரைந்து விடுகிறது. சிறுநீர் வரும் வழியில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தாலும்  தண்ணீர் அதை சுத்தப்படுத்தி வெளியேற்றி விடுகிறது. கேடு விளைவிக்கும் பாக்டீரியா சிறுநீர்ப்பையில் இருந்தாலும்கூட நிறைய தண்ணீர் குடிப்பவர்களுக்கு பிரச்னை வராது... தண்ணீர் அதனை துவம்சம் பண்ணி வெளியேற்றி விடும். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தண்ணீர் நிவாரணம் அளிக்கிறது. வயிற்றுப்போக்கால் உடலில் நீர்ச்சத்தை இழந்தவர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் கால் டீஸ்பூன் உப்பையும் கலந்து கொடுத்தால் இழந்த நீர்ச்சத்தை மீட்டு, போதிய சக்தி பெற உதவும்.காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின்
உடலில் அதிக சூடு  இருக்கும்.

நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் அடிக்கடி வரும். இதனால் காய்ச்சல் விரைவில் குறைகிறது. இருமல், சளி, தொண்டைப்புண், சுவாசப்பாதை தொற்று போன்றவை குணமாகக் கூட தண்ணீர் உதவுகிறது. கெட்டியான சளியை கூட தண்ணீர் இலகுவாக்கி வெளியேற்றிவிடும். நுரையீரலில் தங்கி இருக்கும் தேவையில்லாத கோழையையும் வெளியேற்றும் தன்மை உடையது தண்ணீர். உணவு சாப்பிட்ட பின் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கலாம். வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடும். மலத்தையும் இலகுவாக்கும். தண்ணீர் உங்கள் உடலில் உள்ள சக்தியை நீட்டிக்கச் செய்கிறது.

ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மூளை சோர்ந்து இருக்கும் வேளையில் தண்ணீர் குடித்தால் சுறுசுறுப்படையச் செய்கிறது. தலைவலி கூட இதனால் சரியாகிறது. தண்ணீர், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சாப்பிடுவதற்கு முன்னால் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்தால் அதன் பிறகு எவ்வளவு சாப்பிட்டாலும் கொழுப்பு உடலில் தங்காமல் செய்து விடும். தண்ணீர் தோலை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்களின் தோல் உலர்ந்தும் கண்கள் குழி விழுந்தும் காணப்படும். அழகிய சருமத்தை பெற நிறைய தண்ணீர் குடியுங்கள்.

தண்ணீர் குடிக்க சரியான வழிகள்

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

தூக்கத்தின் போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறைந்து விடும். தூங்கப்போகும் முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. காலையில் எழுந்தவுடன் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து சோர்வாக இருக்கும். காலையில் போதுமான நீரைக் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் எளிதில் வெளியேறி உங்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.

தினமும் 8 முதல் 12 கிளாஸ் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். ஏன்?

55 கிலோ எடையுள்ளவருக்கு தினமும் 8 கிளாஸ் தண்ணீர் தேவை. 86 கிலோ எடையுள்ளவருக்கு 12 கிளாஸ் தண்ணீர் அவசியம்.  அவ்வப்போது சிறுநீரின் நிறத்தையும்  கவனிக்க வேண்டும். வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும் என்கிறது அமெரிக்க நலவாழ்வியல் அமைப்பான மாயோ கிளினிக். தினம் 16 கிளாஸ்களுக்கு அதிகமாகவும் தண்ணீர் அருந்த வேண்டாம்.

தண்ணீரை ஒரே மூச்சில் மடக் மடக் என்று குடிக்காமல் மிடறு மிடறாகப் பருகுவது நல்லது. ஏன்?

ஒரு சொம்பு தண்ணீரை ஒரேடியாக குடித்தால் இதயம் வெகு வேகமாக வேலை செய்யும். இது நல்லதல்ல. மிடறு மிடறாகப் பருகினால் இதயத்துக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் குறையும். உடல் தண்ணீரை மெதுவாக எடுக்கும். இதனால் சோர்வு வெகுவாகக் குறையும்.

தண்ணீர் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்கக் கூடாது. ஏன்?

தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்தால் உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரில் 2 கிளாஸ் குறைவாகவே குடிப்பீர்கள். முதியோருக்கு சரியாக தாகம் எடுக்காது. அதனால், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நல்லது.

தண்ணீருக்கு மாற்றாக வேறு பானங்கள் அருந்தக்கூடாது. ஏன்?

சிலர் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக வேறு குளிர்பானங்கள் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை அருந்துவார்கள். இதில் அதிக சர்க்கரையும் பாஸ்பரஸுசும் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் எலும்புகளின் வலுவை குறைக்கும் ஆஸ்டியோபோரசிஸ் பிரச்னை, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. காபி அதிகமாக குடிப்பவர்களுக்கும் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைகிறது. மதுபானங்கள் அருந்துபவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் மூலம் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் சுத்தமாக வெளியேறும். அதனால் சோர்வடையச் செய்கிறது.

குழந்தைகளுக்கு முறையாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏன்?

குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். பள்ளிக்கு அவர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டிலில் போதுமான தண்ணீரை கொடுத்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு வரும் சிறுநீரகக் கற்களை தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி செய்யும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுகிறது. அதனால் உடல் திரவச் சமநிலையை அடைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடல்நலமில்லாமல் இருக்கும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

உடல்நலமில்லாமல் இருக்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் போதுமான அளவு நீர்ச்சத்து கிடைத்து, உடலில் உள்ள தொற்றுக் கிருமிகளையும் வெளியேற்றி, உடலை நல்ல நிலைக்கு மீட்க தண்ணீர் உதவுகிறது.

கர்ப்பிணிகள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

பால் சுரப்பதற்கும் குழந்தைக்குப் பாலூட்டவும் தண்ணீர் நிறைய குடிப்பது அவசியம். கர்ப்பமாக இருக்கும் போது தினமும்  10 கிளாஸ் தண்ணீரும், பாலூட்டும் போது  13 கிளாஸ் தண்ணீரும் குடிக்க வேண்டும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நீர் எனும் அற்புதம்! Empty Re: நீர் எனும் அற்புதம்!

Post by முரளிராஜா Wed Oct 22, 2014 5:36 pm

நீரின் பலன்களை அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீர் எனும் அற்புதம்! Empty Re: நீர் எனும் அற்புதம்!

Post by mohaideen Thu Oct 23, 2014 11:48 am

நீர் பற்றி பலனுள்ள தகவல்கள்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீர் எனும் அற்புதம்! Empty Re: நீர் எனும் அற்புதம்!

Post by kanmani singh Tue Oct 28, 2014 1:58 pm

மிக அருமையான பகிர்வு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

நீர் எனும் அற்புதம்! Empty Re: நீர் எனும் அற்புதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum