தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா?

View previous topic View next topic Go down

கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா? Empty கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா?

Post by நாஞ்சில் குமார் Wed Oct 22, 2014 5:51 pm

கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா? 23uyl2b


தேயிலையில் டி.டி.ட்டி (D.D.T.) பூச்சிக்கொல்லி இருப்பது பற்றி கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட ஆய்வுக்கு எதிராக, இந்தியத் தேயிலை வாரியம் அளித்த பதில் அறிக்கையில் இந்தியாவில் டி.டி.ட்டி. பூச்சிக்கொல்லியின் விவசாயப் பயன்பாடு 1989-லேயே தடை செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்து இருந்தது.

மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதால்தான் டி.டி.ட்டி. பூச்சிக்கொல்லியின் விவசாயப் பயன்பாடு உலகெங்கும் செய்யப்பட்டது. ஆனால், அது நம்மிடையே முற்றிலுமாக இல்லாமல் இருக்கிறதா? நம்மைச் சுற்றிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

கொசு மருந்து

அலகாபாத் அருகில் உள்ள திரிவேணி சங்கமம் எனப்படும் முக்கூடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் கும்பமேளா உட்பட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும், மழைக் காலங்களில் நம் வீடு, சுற்றுப்புறத்தில் கொசுவைக் கொல்வதற்காகப் பீய்ச்சி அடிக்கப்படும் புகையைத்தான் படத்தில் பார்க்கிறோம். இது டி.டி.ட்டி எனப்படும் டைகுளோரோ டைஃபினைல் டிரைகுளோரோ ஈதேன் எனப்படும் கொல்லி ஆகும். இது உலகின் பல நாடுகளில் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஏன், நமது நாட்டிலும் அறைகளுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் விற்கப்படுவது. ஆனால், நமது அரசே மக்கள் மீது இதை ஏன் தெளிக்கிறது?

தமிழ் மொழிபெயர்ப்புக் கோளாறுகளில் தலையாயவற்றில் இந்தப் ‘பூச்சிக்கொல்லிமருந்து' என்ற சொல்லும் ஒன்று. கொல்லியும் மருந்தும் ஒன்றான அவலம் தமிழில்தான் நடந்தேறியுள்ளது. பூச்சிகளை மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களையும் கொல்லும் இந்தப் பொருளுக்குத் தமிழக வேளாண்மைத் துறையும், அறிவியலாளர்களும் வைத்த பெயர் பூச்சி கொல்லி மருந்து..?

ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

டி.டி.ட்டி. 1880-களில் கண்டறியப்பட்டாலும், 1940-களில்தான் சந்தைக்கு வந்தது. அதன் கடும் விளைவுகளை 1960-களிலேயே வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ரேச்சல் கார்சன் (அவருடைய மவுன வசந்தம் புத்தகம் அதற்கான ஆவணம்). அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றம், உலகம் முழுவதும் அதற்கு எழுந்த எதிர்ப்பு ஆகியவற்றால் பல நாடுகளில் இது தடை செய்யப்பட்டது. ரேச்சல் கார்சன் வாழ்ந்த அமெரிக்க நாட்டிலும் முற்றிலும் தடை செய்யப்பட்டது. நார்வே, சுவீடன், ஹங்கேரி என்று பல ஐரோப்பிய நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டது.

பூச்சிகளைக் கொல்வதற்கு, அதாவது கொசுக்களை முதன்மையாகக் கொல்வதற்கு இன்றைக்கு இது பயன்படுத்தப்பட்டாலும், இது ஒரு வகை ஊடுருவிப் பாயும் நஞ்சு. இந்த நஞ்சு நமது சூழலில் தொடர்ச்சியாகத் தங்கி இருக்கும், கிட்டத்தட்ட 20 நாட்கள்வரை இருக்கும். நீர் வழியாக, காற்று வழியாக பல இடங்களுக்கும் இது பரவிக்கொண்டே இருக்கும். இதைப் பயன்படுத்தும்போது கையுறைகள், முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்று ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், நடைமுறையில் இவை எதுவுமே பின்பற்றப்படுவதில்லை என்பதுதான் சோகம்.

என்ன நடக்கிறது?

எடுத்துக்காட்டாக, இந்த வேதிப்பொருள் கொசுவை ஒழிப்பதற்காகப் புல்வெளிகளில் தெளிக்கப்படுவதாகக் கொள்வோம். இது உடனடியாகத் தனது வீரியத்தை இழப்பதில்லை என்பதால், மெல்லக் கரைந்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்குச் செல்லும். அங்குள்ள தாவர மிதவை உயிர்களான பாசிகளில் சேரும்போது, அவற்றில் பத்து மடங்கு கூடுதலாகச் சேரும். மீண்டும் அவை மீன்களால் உண்ணப்படும்போது, மேலும் பத்து மடங்கு உயரும். அதன் பின்னர் அவை பறவைகளால் உண்ணப்படும்போதும், பிற பாலூட்டிகளால் உண்ணப்படும்போதும் பத்து பத்து மடங்காக உயர்ந்துகொண்டே போகும். இதற்கு உயிரிய ஊத்தம் (Biomagnification) என்று பெயர்.

அதாவது, புல்லில் 0.04 பி.பி.எம். (10 லட்சத்தில் ஒரு பங்கு - part per million - ppm) இருக்கும் டி.டி.ட்டி பாசிகள், மீன்கள், பறவைகள், பாலூட்டிகள் என்று பயணித்து 13.8 பி.பி.எம். அளவுக்கு உயர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக மிகக் கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

என்ன பாதிப்பு?

சரி, இந்த டி.டி.ட்டி. என்ன மாதிரியான தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது?

மார்பகப் புற்றுநோய், அவற்றுடன் கூடிய புற்றுக் கட்டிகளை உருவாக்குவதில் இது முதன்மைப் பங்கு வகிக்கிறது. ஆண் மலட்டுத் தன்மைக்குக் காரணமாக அமைகிறது. குறைவான எடையுடன் கூடிய குழந்தைப் பேறு, ஈரல் சிதைவு என்று மிக நுட்பமான, சீர்செய்யக் கடினமாக நோய்களை உருவாக்குவதில் முதன்மை பெறுகிறது.

விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தைத் தொடுகிறோமோ, இல்லையோ டி.டி.ட்டி. பூச்சிக் கொல்லி தயாரிப்பில் உலகிலேயே முதலிடம் இந்தியாவுக்குத்தான். இந்துஸ்தான் இன்செக்டிசைடு லிமிடெட் என்ற நிறுவனம் ஆண்டுக்கு ஏறத்தாழ 3,000 டன்களுக்கு (டன் = ஆயிரம் கிலோ) மேல் உற்பத்தி செய்கிறது. இவை மலேரியா ஒழிப்பு என்ற பெயரில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் தலையில் கொட்டப்படுகின்றன. இதன் விளைவாகப் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாத கொடூர நோய்கள் பெருகுகின்றன.

தடைக்கு இந்தியா எதிர்ப்பு

டி.டி.ட்டியை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட 2013-ம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் மாநாட்டு தீர்மானப்படி எடுக்கப்பட்ட முயற்சியால், 2020 ஆண்டுக்குள் அனைத்து நாடுகளிலும் இதைத் தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது இதை, இந்தியா எதிர்த்தது. முற்றிலும் தடை முடியாது என்று கூறிவிட்டது.

கொசு ஒழிப்பு என்ற பெயரில் பூமிப் பந்தை அழிக்கும் முயற்சியைத் தொடர்வது என்று நமது ஆட்சியாளர்கள் முடிவு செய்துவிட்டார்கள். மலேரியாவுக்கான காரணம் கொசு, கொசுவுக்கான காரணம் சாக்கடை, அதை நீக்காமல் குறிப்பாகச் சாக்கடைகளில் தேங்கும் ஞெகிழிப் பைகளைத் தடை செய்யாமல் தூய்மை இயக்கம் பற்றி பேசி என்ன பயன்? அறுவை சிகிச்சைக்குப் பதிலாகப் புண்ணுக்குப் புனுகு போடும் வேலை தீர்வாகாது, நமது ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?

கட்டுரையாசிரியர், சுற்றுச்சூழல் எழுத்தாளர் மற்றும் இயற்கை விவசாயி, தொடர்புக்கு: adisilmail@gmail.கம

- தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா? Empty Re: கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா?

Post by mohaideen Thu Oct 23, 2014 11:53 am

தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா? Empty Re: கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா?

Post by ரானுஜா Thu Oct 23, 2014 3:24 pm

நல்ல தகவல் நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா? Empty Re: கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா?

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 23, 2014 3:37 pm

நல்ல பதிவும் விழிப்புணர்வும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா? Empty Re: கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா?

Post by செந்தில் Thu Oct 23, 2014 3:46 pm

சிறப்பான விழிப்புணர்வு தகவல்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா? Empty Re: கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum