Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல்லூர் அருள்மிகு சுந்தரவரதராஜர் திருக்கோயில், திருவண்ணாமலை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
நல்லூர் அருள்மிகு சுந்தரவரதராஜர் திருக்கோயில், திருவண்ணாமலை
மூலவர் : சுந்தர வரதராஜர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : வில்வமரம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : நல்லூர்
மாவட்டம் : திருவண்ணாமலை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ஆழ்வார் திருநட்சத்திர பூஜை.
தல சிறப்பு:
ஒரே கல்லில் இவரது சிலை அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. சுந்தரவரதராஜப்பெருமாள் கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியின் கீழ் அமர்ந்து, வணங்கிய கோலத்தில் உள்ளார்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுந்தரவரதராஜப்பெருமாள் கோயில், நல்லூர் - 604406, வந்தவாசி தாலுகா திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:
-
பொது தகவல்:
இத்தலத்திற்கு அருகில் திரவுபதிக்கு தனிக்கோயில் இருக்கிறது. கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன், தர்மர் ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக உள்ளனர்.
இக்கோயிலில் சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத் தின் போது பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், ஒரே சப்பரத்தில் உலா செல்வது விசேஷம்.
பிரார்த்தனை
இத்தலத்து சுவாமிக்கு, "பிள்ளைப்பேறு நாயகன்' என்ற பெயரும் உண்டு. இவரிடம் வேண்டிக்கொள்ள புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
கருடாழ்வாரை, பெருமாள் எதிரே வணங்கியபடிதான் பார்த்திருப்பீர்கள். அரிதாக, ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற ஒரு சில தலங்களில் சுவாமியின் அருகில் அவர் இருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகிலுள்ள நல்லூர் சுந்தரவரதராஜப்பெருமாள் கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியின் கீழ் அமர்ந்து, வணங்கிய கோலத்தில் உள்ளார். இந்த பெருமாள் குழந்தை வரம் தருபவர் என்பதால் "பிள்ளைப் பேறு நாயகன்' என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறார்.
கருடாழ்வார் சிறப்பு: மூலஸ்தானத்தில் சுவாமி, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உடன் தாயார்கள் இல்லை. அந்தணர்கள் பிரதிஷ்டை செய்து வணங்கிய சுந்தர வரதராஜர், தனிசன்னதியில் இருக்கிறார். இவரே இத்தலத்தின் மூல மூர்த்தி என்பதால், தினமும் இவருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. ஒரே கல்லில் இவரது சிலை அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் பிரயோக சக்கரம், வலம்புரி சங்கு, இடது கீழ் கையில் தண்டம் வைத்தபடி காட்சி தருகிறார். அருகில் ஸ்ரீதேவி, பூதேவி காட்சி தருகின்றனர். இவரது பீடத்தில் ஆஞ்சநேயர் மண்டியிட்டு வணங்கிய படியும், மகரிஷிகள் தவம் செய்தபடியும் இருப்பது விசேஷம். மேலே கந்தர்வர்கள் உள்ளனர்.
சுந்தரவரதராஜரின் வலது பாதத்திற்கு அருகில் கருடாழ்வார், மண்டியிட்டு வணங்கியபடி இருக்க, சுவாமி அவருக்கு மேலே, தன் வலது கையால் ஆசிர்வதித்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. இந்த கருடாழ்வார், பக்தர்களின் குறைகளை பரந்தாமனிடம் பரிந்துரைத்து நிவாரணம் செய்பவர் என கருதப்படுவதால், "பரிந்துரைக்கும் கருடாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார். மற்றொரு கருடாழ்வார், மூலஸ்தானத்திற்கு எதிரே சுவாமியை வணங்கியபடி இருக்கிறார்.
சிறப்பம்சம்: இத்தலத்து சுவாமிக்கு, "பிள்ளைப்பேறு நாயகன்' என்ற பெயரும் உண்டு. இவரிடம் வேண்டிக்கொள்ள புத்திரப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு அழைக்கிறார்கள்.
வைகாசி விசாகத்தன்று, சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். பிரதான தாயார் சுந்தரவல்லி தனி சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் வடக்கு நோக்கி, தனிச்சன்னதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையுடன், கிளம்பும் கோலத்தில் இருக்கிறார். ஆண்டாளுக்கும் சன்னதி இருக்கிறது. உற்சவ மூர்த்தியுடன்ராமானுஜர்,வேதாந்ததேசிகர் இருக்கின்றனர். சிவனுக்கு உகந்த வில்வமரமே இங்கு தலவிருட்சம். பல்லாண்டுகளுக்கு முன்பு இங்கு பெருமாளுக்கு பல யாகங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. யாகம் செய்த "யாகசாலை ஸ்தூபி' கோயில் அருகில் இருக்கிறது. எனவே இத்தலத்திற்கு "சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரும் உண்டு.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இங்கு தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை வைத்து பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, இவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் இத்தலத்தில் தங்க விரும்புவதாகக் கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், இங்கு கோயில் எழுப்பினர். நாளடைவில் இந்தக் கோயில் பாழடையவே,பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி காண்போரை வசீகரிக்கும் அழகுடன் காட்சியளிப்பதால், "சுந்தர வரதராஜர்' என்று அழைக்கப்படுகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: ஒரே கல்லில் இவரது சிலை அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. சுந்தரவரதராஜப்பெருமாள் கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியின் கீழ் அமர்ந்து, வணங்கிய கோலத்தில் உள்ளார்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நல்லூர் அருள்மிகு சுந்தரவரதராஜர் திருக்கோயில், திருவண்ணாமலை
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நல்லூர் அருள்மிகு சுந்தரவரதராஜர் திருக்கோயில், திருவண்ணாமலை
தலத்தின் பெருமையை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
Similar topics
» அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்,நல்லூர் ,தஞ்சாவூர்
» பொய்யாத நல்லூர் அருள்மிகு தையல்நாயகி திருக்கோயில், அரியலூர்
» அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை
» அருள்மிகு பூதநாராயணர் திருக்கோயில், திருவண்ணாமலை
» ஆரணி அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
» பொய்யாத நல்லூர் அருள்மிகு தையல்நாயகி திருக்கோயில், அரியலூர்
» அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை
» அருள்மிகு பூதநாராயணர் திருக்கோயில், திருவண்ணாமலை
» ஆரணி அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|