தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடலஸன்ட் எனப்படும் பதின்ம பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள்

View previous topic View next topic Go down

அடலஸன்ட் எனப்படும் பதின்ம பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள்  Empty அடலஸன்ட் எனப்படும் பதின்ம பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள்

Post by நாஞ்சில் குமார் Sat Nov 01, 2014 2:08 pm

அடலஸன்ட் எனப்படும் பதின்ம பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள்  2labloo


சொல்லு மழலையிலே, கண்ணம்மா!
   துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே எனது
   மூர்க்கந் தவிர்த்திடுவாய்.
இன்பக் கதைக ளெல்லாம் உன்னைப்போல்
   ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே உனைநேர்
   ஆகுமொர் தெய்வ முண்டோ?
மார்பில் அணிவதற்கே உன்னைப்போல்
   வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல்
   செல்வம் பிறிது முண்டோ?    
                                    - மகாகவி பாரதியார்

குழந்தையின் அருமை பெருமைகளை இதைவிட சிறப்பாக வேறு எவரேனும் சொல்ல முடியுமோ? வைரமணிகளுக்கென ஒரு விலைமதிப்பு உண்டு.  நம் கண்மணிகளுக்கு ஏதேனும் விலைமதிப்பு வைக்க முடியுமோ? மதிப்பிடமுடியா பொக்கிஷமாகத்தானே குழந்தைகளை காக்க வேண்டும்.  ஆண்குழந்தையோ பெண் குழந்தையோ - அடலஸன்ட் எனப்படும் பதின்ம பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். வீடு நிறைய  பெரியவர்களும் பெண்களும் நிறைந்து இலைமறையாக சொல்லிக்கொடுத்த காலம் அல்லவே இது. பெற்றோர் வாழ்வாதாரத்தைத் துரத்தும் நிலையில்,  குழந்தைகளின் சந்தேகங்களை நிவர்த்திக்க யாரேனும் மெனக்கெட வேண்டியது அவசியம்தானே?

ஆண் குழந்தைகள் மனநிலை வேறு மாதிரி என்றால், பெண்குழந்தைகளுக்கோ உடல்ரீதியான சந்தேகங்கள் நிமிடத்துக்கு நிமிடம் பூதாகரமாக  இருக்கும். வகுப்பில் பெரிய விஷயமாகப் பேசப்படுவது, 'பெரிய மனுஷியாகிவிட்டாளா’ என்பதாகவே இருக்கும். தோழிகளின் உடல்வாகுடன்  தன்னுடலை ஒப்பிடுவதில் தொடங்கி, எத்தனையோ விஷயங்கள் அவர்களை அலைக்கழிக்கும்.

பருவம் எய்துதல்  

இப்போதைய உணவு, வாழ்க்கை முறைகளால் பெண்குழந்தைகள் பொதுவாக பத்து வயதிலிருந்தே பருவம் எய்த ஆரம்பிக்கிறார்கள். அதனால்,  குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன்பாகவே மனரீதியாக குழந்தைகளை தயார்படுத்த வேண்டும். உடலின் ரோம வளர்ச்சியானது, ஒரு குழந்தை  பெண்ணாகத் தயாராகிறாள் என்பதை பெற்றோருக்கு உணர்த்தும். பருவ மாறுதல்களை சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் குழந்தைக்கு கற்பிக்க  வேண்டும். அந்த குறிப்பிட்ட நாளில் ஏற்படப்போகும் கலவையான உணர்வை எப்படி எதிர்கொள்வது என்று தெளிவாக கற்றுக்கொடுங்கள். வீடு  அல்லாத வெளி இடங்களில் பருவம் எய்தினால், அதனை எப்படி கையாள வேண்டும் என்பதை நன்றாக  மனதில் பதிய வையுங்கள். பள்ளி  ஆசிரியையிடமும் இதனை ஒருமுறை தெரிவிப்பது பல்வேறு சங்கடங்களைத் தவிர்க்கும்.

பள்ளியில் பருவமெய்தும் குழந்தைகள் அதிகமாக வெட்கப்படுவதாகவும், மீண்டும் பள்ளிக்குச் செல்லும் நாளை பதற்றமாக எதிர்கொள்வதாகவும்  ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைக்கு சில விஷயங்களை தெளிவாகப் புரிய வையுங்கள்... முக்கியமாக - ‘உலகில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும்  இது நடக்கும். அதனால் அச்சப்பட அவசியம் இல்லை’ என்பதை.  நாப்கின் உபயோகிப்பது எப்படி என்று ஒரு முறைக்கு பலமுறை செய்து  காட்டவேண்டும். வெட்கப்பட அதில் ஒன்றும் இல்லை என்றும், இயல்பாக அதனை கடக்கவும் பழக்க வேண்டும்.

அனாவசிய பயமுறுத்தல்கள், மூட நம்பிக்கைகள் மற்றும் சிறிய வலியை பெரியதாக விளக்குவதும் அவர்களின் எதிர்பார்ப்பை இன்னும்  கலவரப்படுத்தும். எந்த மறைமுகப் பெயர்களும் இல்லாமல் ‘பருவம் எய்துதல்’ என்றால் என்ன, ஏன் வருகிறது என்பதைத் தேவைக்கு ஏற்ப விளக்கி,  அது குறித்த அறிவியல் பூர்வமான புத்தகங்கள் இருப்பின், அவற்றைக் கொடுத்தும் கற்றுத் தரலாம்.  பருவமெய்திய குழந்தையின் பள்ளிப் பையில்  எப்போதும் ஓர் உள்ளாடையும் நாப்கினும் ஒரு கவரும் இருப்பது அவசியம். உடைகளில் பட்டாலும் அது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று  சொல்லி வைக்கவும். இதை இயல்பான ஒரு விஷயமாகக் கையாளத் தெரிந்தால் பல்வேறு மன அழுத்தங்களை தவிர்க்க முடியும்.

உடல்ரீதியான மாற்றங்கள்

திடீரென உயரமாவது, கன்னத்தில் சிறு பருக்கள், வெளித்தோற்றம் மட்டுமின்றி வியர்வை வாசனையும் மாறுவது  போன்றவை அவர்களை கொஞ்சம்  கலவரப்படுத்தக்கூடும். இவையெல்லாம் மிக மிக இயற்கையானவை. ஒரு பெண் போல் இன்னொரு பெண்ணுக்கு உடல் அமைப்பும் தோற்றமும்  இருக்காது எனப் புரிய வையுங்கள்.  ‘பர்சனல் ஹைஜின்’ எனப்படும் சுகாதாரம் குறித்தும் விளக்கமாக கற்றுத் தருதல் அவசியம். குறிப்பிட்ட  நேரத்துக்கு ஒரு முறை நாப்கின்  மாற்றுதல், சத்தான உணவு உண்ணுதல், நிறைய நீர் அருந்துதல், உடற்பயிற்சி செய்தல், ஏதேனும் ஒரு கலையை  கற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை வழக்கமாகப் பழக்குங்கள்.  அடுத்த குழந்தையுடன் உடல்ரீதியான ஒப்பீடு அனாவசியம். நிறம், அளவுகள்,  வாசனைகள், மாதவிலக்கு நேர சுழற்சிகள் எல்லாமே ஒருவர் போல இன்னொருவருக்கு இருக்காது. இது போன்ற அனைத்தையும் குழந்தைக்கு  அவசியம் கற்றுத்தர வேண்டும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

அடலஸன்ட் எனப்படும் பதின்ம பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள்  Empty Re: அடலஸன்ட் எனப்படும் பதின்ம பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள்

Post by முரளிராஜா Sun Nov 02, 2014 8:56 am

சரியான வழிகாட்டுதல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum