தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குழந்தைகளுக்கு விளையாட நேரம் இருக்கிறதா?

View previous topic View next topic Go down

குழந்தைகளுக்கு விளையாட நேரம் இருக்கிறதா? Empty குழந்தைகளுக்கு விளையாட நேரம் இருக்கிறதா?

Post by நாஞ்சில் குமார் Sun Nov 02, 2014 8:19 pm



குழந்தைகளுக்குத் தற்போது சேர்ந்து விளையாடவோ, பொழுதைக் கழிக்கவோ, சாவகாசமாகத் தங்கள் இயல்புக்கு ஏற்ப கற்பதற்கோ போதிய நேரமில்லை. ஆனால் குழந்தைகளைப் பொருத்தவரை சாவகாசம் அவசியமானது.

எனது ஏழு வயது மகள் என்னிடம் ஒரு நாள் ஹேண்ட் சானிடைசரை வாங்கித்தரச் சொன்னாள். நான் எதற்கு என்று கேட்டேன். பள்ளிக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்றாள். “வேகமாகக் கையைச் சுத்தம் செய்துவிட்டு, டிபன் பாக்ஸைத் திறக்கலாம்” என்று காரணம் சொன்னாள். அவ்வளவு அவசரம் ஏன்? என்று கேட்டேன். “நாங்கள் கீழே போய் கையைத் தண்ணீரில் கழுவிவிட்டு வந்து சாப்பிட்டால் போதுமான நேரம் கிடைக்காது. நான் இரண்டு வாய் சாப்பிடுவதற்குள் பெல் அடித்துவிடும்” என்றாள். கொடுத்துவிடும் சாப்பாட்டை முழுமையாக அவள் சாப்பிடாமல் இருப்பதற்கான காரணம் எனக்கு இப்போது விளங்கியது.

“சாப்பிட்ட பிறகு விளையாட மாட்டீங்களா” என்று அவளிடம் கேட்டேன். வகுப்பறையை விட்டு வெளியே போக அனுமதி கிடையாது என்றாள். “ஆனால் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டால் கிளாஸுக்குள்ளேயே ஸ்டோன்-பேப்பர்-சிஸர் விளையாட்டு விளையாட நேரம் கிடைக்கும்” என்றாள்.

என் மகளிடம் இந்த ஒரு வருடமாக நான் பல விஷயங்களைக் கவனிக்கிறேன். சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, எடை குறைவு, பசியின்மை, சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கான காரணம் இப்போது என்னவென்று தெரிந்தது.

நான் இந்தியாவின் மத்தியில் இருக்கும் மாநிலத்திலிருந்து இதை எழுதினாலும், மற்ற இடங்களிலும் இதே நிலைதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு அதிகரித்துவரும் பாடச்சுமையும், அடுக்கடுக்கான ப்ராஜக்ட்களும் அவர்களது இளைப்பாறும் இடைவேளை நேரத்தைக் கபளீகரம் செய்துவருகின்றன.

மற்ற குழந்தைகளிடம் பேசும்போதும் அவர்களது விளையாட்டு நேரம் குறைந்துவிட்டது தொடர்பான அதிருப்தியையும் கோபத்தையும் என்னால் உணர முடிகிறது. பள்ளி நிர்வாகங்கள், பேராசையான பெற்றோர்களுடன் சேர்ந்து குழந்தைகளின் அடிப்படைத் தேவையான விளையாட்டைத் திருடிவருகின்றன. அவர்களுக்கென்று இருக்கும் சுதந்திர வெளியில் விளையாடவும், கண்டுபிடிக்கவும், சந்தோஷமாகவும் இருக்கும் வாய்ப்புகளைப் பறித்துவருகிறோம்.

இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்வேறு கல்வி மையங்கள் கற்றல் தொடர்பான விதவிதமான கோட்பாடுகளைச் சொல்கின்றன. குழந்தைகளின் மூளை நரம்புகளை வரைபடமாகப் போட்டு, கல்வியாளர் மரியா மாண்டிசோரி, மதுல் ஹோவர்ட் கார்ட்னர் வரை பெயர்களைச் சொல்லி லட்சக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகளின் மேல் சுமைகளை ஏற்றுகின்றனர். கணிதம், காலிக்ராபி, ஓவியம், நுண்கலை என விதவிதமான பயிற்சிகளை அளித்து ஒரு தலைமுறையையே குழந்தை மேதைகளாக்க பெற்றோர்கள் முயற்சி செய்கின்றனர்.

குழந்தைகளுக்கு விளையாட போதிய இடத்தை வழங்காததன் மூலம் திறந்தவெளி பற்றி அவர்கள் பெறும் அறிவையும், புறச்சூழலுக்கு ஏற்ப தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டலம் குறித்த புரிதல், தொடுதல் மற்றும் உணர்வுரீதியான வளர்ச்சியை நாம் பறித்துவிட்டோம். மணலில் விளையாடுவதற்கும், தண்ணீரில் குதித்தாடுவதற்கும், களிமண்ணைப் பிசைந்து விளையாடுவதற்கும் வழிகாட்டுதல்கள் எதுவும் அவசியம் இல்லை.

ஆனால் இந்தச் செயல்பாடுகள் ஆரோக்கியமான பலன்களை அதிகம் கொண்டவை. கோகோ, கபடி போன்ற விளையாட்டுகள் மூலம் சரியானது எது கள்ளாட்டம் எது என்பதை குழந்தைகள் அறிந்துகொள்கின்றனர். அத்துடன் துணிகர முயற்சிகளை எடுக்கவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும், அணி சேர்க்கவும், மற்றவர் மீது பிரியமாக இருக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். அப்படியான விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள்.

சின்னச் சின்னக் காயங்கள், வீக்கங்கள், அழுகை போன்றவை இல்லாத குழந்தைப் பருவம் குழந்தைப் பருவமே அல்ல. கீழே விழாமல் எப்படி எழுவதற்கு குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்? அவரவர் கொண்டுவந்த பண்டங்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், கருத்துகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் அவர்களால் எப்படி சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்? பயிற்றுவிப்பதைவிட கலந்துரையாடல்களில்தான் சமூகத்திறன்கள் வளர்கின்றன. பள்ளியைவிட அதற்கு வேறெந்த இடம் சிறப்பாக இருக்கமுடியும்?

இந்த வாய்ப்புகள் அனைத்தும் இல்லாமல் குழந்தைகளின் மனம் எப்படி இருக்கும்? பெரிய கிரேடுகளை வாங்குவது எப்படியென்ற சிந்தனையும், மனப்பாடம் செய்த பதில்களாலும் மட்டுமே நிரம்பி இருக்கும். தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் சுதந்திரம் அவர்களுக்கு இல்லை. சொந்தமாகச் சிந்திக்கும் வாய்ப்போ, சிந்தனைகளை ஒருங்கிணைத்து சுயமான மொழியில் பேசுவதற்கான சூழலோ இல்லை. சொந்தமாக ஒரு வாக்கியத்தை உருவாக்க முடியாத குழந்தைகள் எப்படி வளர்ந்து எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனைப் பெறப் போகிறார்கள்?

விளையாடுவதற்கான சுதந்திரம், அவரவர் இயல்புக்கேற்ப கல்வி கற்பதற்கான உரிமை எல்லாமே குழந்தைகளின் பிறப்புரிமைகள்.

குழந்தைகள் பகல் கனவு காணவும், கிறுக்கவும் செய்யலாம். ஆனால் அவர்கள் அந்தச் செயல்கள் மூலம் கற்கிறார்கள். அவர்கள் ஓடலாம், குதிக்கலாம், விழலாம், பரஸ்பரம் சண்டை போடலாம். அவர்கள் கற்கிறார்கள். அவர்களைக் கற்கவிடுவோம். அவர்களை விளையாட விடுவோம்.

‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: ஷங்கர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

குழந்தைகளுக்கு விளையாட நேரம் இருக்கிறதா? Empty Re: குழந்தைகளுக்கு விளையாட நேரம் இருக்கிறதா?

Post by முரளிராஜா Mon Nov 03, 2014 8:21 am

ஏற்றுகொள்ள வேண்டிய கருத்து
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum