Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
துன்பம் தருதே தூசு!
Page 1 of 1 • Share
துன்பம் தருதே தூசு!
‘நீயெல்லாம் எனக்கு தூசுடா’ என்று ஆக்ஷன் படங்களில் ஹீரோ பஞ்ச் பேசிக் கேட்டிருப்போம். ஆனால், அந்த தூசுதான் டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களுக்கு வில்லன். தூசுக்குப் பயந்து மூக்கை மூடும்படி கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு செல்பவர்களை அன்றாடம் பார்க்க நேர்கிறது. இந்த டஸ்ட் அலர்ஜி ஏன் வருகிறது? இதற்கு என்னதான் தீர்வு? விளக்குகிறார் நோய்த்தொற்று மருத்துவர் சுப்ரமணியன்.
‘‘தூசியை எதிர்கொள்ளும்போது இருமல், தும்மல், கண் எரிச்சல், மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாவதற்கு பெயர்தான் டஸ்ட் அலர்ஜி. இப்பிரச்னை உள்ளவர்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகள், கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள் மற்றும் அதிக அளவு தூசி வெளியாகும் பணியிடங்களுக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களின் முன்னோர் எவருக்கேனும் இந்தப் பிரச்னை இருந்து
மரபணுக்கள் வழியாக அது தொடர்ந்திருக்கலாம். பிறப்பிலிருந்தே டஸ்ட் அலர்ஜிக்கான தன்மை உடலில் இருக்கும். அது எந்த வயதில் வேண்டுமானாலும் வெளிப்படலாம். இன்றைய சுற்றுச்சூழல் தூசிகள் நிறைந்து காணப்படுவதால் இந்த அலர்ஜி உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நல்ல வேளையாக, டஸ்ட் அலர்ஜி எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. இருமல், தும்மல், கண் எரிச்சல் போன்றவை வருவதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும், விடுப்பு எடுக்க நேரிடும். வேலை நேர இழப்புதானே தவிர பயப்படும்படி எதுவும் இல்லை. ஆஸ்துமா, இளைப்பு தொந்தரவு உள்ளவர்களுக்கு டஸ்ட் அலர்ஜி இருந்தால், அத்தொந்தரவுகள் அதிகரிக்கக்கூடும்’’ என்கிறவர், டஸ்ட் அலர்ஜிக்கான தீர்வு குறித்துப் பேசினார்.
‘‘டஸ்ட் அலர்ஜியை முழுமையாகத் தீர்க்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த மாத்திரைகளும் ஸ்பிரேக்களும் இருக்கின்றன. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இதற்கான முறையான நடவடிக்கை. முடிந்தவரை தூசி கிளம்பும் இடங்களுக்கு செல்லாமல் இருத்தல் நல்லது. அதையும் மீறி சென்றே ஆக வேண்டிய கட்டாயம் நேரிடும்போது, கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டும். நம் வசிப்பிடத்தில் தூசி தங்குவதற்கான வாய்ப்புகள் எவற்றில் இருக்கிறதோ, அவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். உதாரணமாக ஏ.சி. ஃபில்டரில் தூசி தேங்கும்... அது ஏசி காற்றோடு வெளியேறி தொந்தரவு ஏற்படுத்தும். வாரம் ஒரு முறை ஏசி ஃபில்டரை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். மெத்தை மற்றும் தலையணைகளில் அதிக அளவு தூசி தேங்க வாய்ப்பிருப்பதால், முறையாக பராமரித்தல் அவசியம்.
முக்கியமான ஒன்று... டஸ்ட் அலர்ஜி உள்ள எல்லோருக்கும் எல்லா தூசியாலும் அலர்ஜி ஏற்படாது. எந்தத் தூசியால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்த்து விடுதல் நல்லது’’ என்கிறார் சுப்ரமணியன். டஸ்ட் அலர்ஜியை முழுமையாகத் தீர்க்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த மாத்திரைகளும் ஸ்பிரேக்களும் இருக்கின்றன. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இதற்கான முறையான நடவடிக்கை...
தேவை தூசு கட்டுப்பாட்டு கருவி!
பஞ்சாலைப் பகுதிகளில் பருத்தியிலிருந்து வரும் நெப்த் என்னும் தூசு பெருவாரியாக வெளியாகிறது. இதனால்தான் பஞ்சாலைகள் அதிகம் உள்ள திருப்பூரை ‘தூசு நகரம்’ என்றே சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பஞ்சாலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் மர இலைகளில் கூட தூசு படிந்திருப்பதைக் காண முடியும். இந்தத் தூசு ஆஸ்துமா ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. போர்வெல் போடும் இடங்கள், கல்குவாரிகள், கிரஷர்களில் இருந்து அதிகளவில் மண் தூசு வெளியாகிறது, இந்தத் தூசுகள் வளிமண்டலத்தைச் சென்று சேர்ந்து புவிஈர்ப்பு விசை காரணமாகக் கீழே வந்தடைகிறது.
இந்தத் தூசுகளை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் மேலைநாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் பஞ்சாலைகள் போன்ற தூசு அதிகம் வெளியேறும் தொழிற்சாலைகள் நம் நாட்டில்தான் அதிக அளவில் இருக்கின்றன. இதுபோன்ற தொழில் மூலம் லாபம் ஈட்ட நினைக்கும் முதலாளிகள், செலவு செய்ய நேரிடும் என்பதற்காக தூசியைக் கட்டுப் படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகனங்கள் மற்றும் இயந்திரங்களில் ஒலி மற்றும் புகைத் தடுப்பான்கள் பொருத்துவது போன்று தூசு கட்டுப்பாட்டு கருவியும் பொருத்த வலியுறுத்தப்பட வேண்டும். பஞ்சாலைகள், குவாரி மற்றும் கிரஷர் என தூசு அதிகம் வெளியாகும் பகுதியைச் சுற்றிலும் சவுக்கு மரங்களை அதிக அளவில் நட்டு வளர்த்தல் நல்ல ஒரு தீர்வாக அமையும். தேக்கு மரத்தின் இலைகள் தூசுகளை வடிகட்டும் பண்புடையவை.
- தினகரன்
‘‘தூசியை எதிர்கொள்ளும்போது இருமல், தும்மல், கண் எரிச்சல், மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாவதற்கு பெயர்தான் டஸ்ட் அலர்ஜி. இப்பிரச்னை உள்ளவர்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகள், கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள் மற்றும் அதிக அளவு தூசி வெளியாகும் பணியிடங்களுக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களின் முன்னோர் எவருக்கேனும் இந்தப் பிரச்னை இருந்து
மரபணுக்கள் வழியாக அது தொடர்ந்திருக்கலாம். பிறப்பிலிருந்தே டஸ்ட் அலர்ஜிக்கான தன்மை உடலில் இருக்கும். அது எந்த வயதில் வேண்டுமானாலும் வெளிப்படலாம். இன்றைய சுற்றுச்சூழல் தூசிகள் நிறைந்து காணப்படுவதால் இந்த அலர்ஜி உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நல்ல வேளையாக, டஸ்ட் அலர்ஜி எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. இருமல், தும்மல், கண் எரிச்சல் போன்றவை வருவதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும், விடுப்பு எடுக்க நேரிடும். வேலை நேர இழப்புதானே தவிர பயப்படும்படி எதுவும் இல்லை. ஆஸ்துமா, இளைப்பு தொந்தரவு உள்ளவர்களுக்கு டஸ்ட் அலர்ஜி இருந்தால், அத்தொந்தரவுகள் அதிகரிக்கக்கூடும்’’ என்கிறவர், டஸ்ட் அலர்ஜிக்கான தீர்வு குறித்துப் பேசினார்.
‘‘டஸ்ட் அலர்ஜியை முழுமையாகத் தீர்க்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த மாத்திரைகளும் ஸ்பிரேக்களும் இருக்கின்றன. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இதற்கான முறையான நடவடிக்கை. முடிந்தவரை தூசி கிளம்பும் இடங்களுக்கு செல்லாமல் இருத்தல் நல்லது. அதையும் மீறி சென்றே ஆக வேண்டிய கட்டாயம் நேரிடும்போது, கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டும். நம் வசிப்பிடத்தில் தூசி தங்குவதற்கான வாய்ப்புகள் எவற்றில் இருக்கிறதோ, அவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். உதாரணமாக ஏ.சி. ஃபில்டரில் தூசி தேங்கும்... அது ஏசி காற்றோடு வெளியேறி தொந்தரவு ஏற்படுத்தும். வாரம் ஒரு முறை ஏசி ஃபில்டரை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். மெத்தை மற்றும் தலையணைகளில் அதிக அளவு தூசி தேங்க வாய்ப்பிருப்பதால், முறையாக பராமரித்தல் அவசியம்.
முக்கியமான ஒன்று... டஸ்ட் அலர்ஜி உள்ள எல்லோருக்கும் எல்லா தூசியாலும் அலர்ஜி ஏற்படாது. எந்தத் தூசியால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்த்து விடுதல் நல்லது’’ என்கிறார் சுப்ரமணியன். டஸ்ட் அலர்ஜியை முழுமையாகத் தீர்க்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த மாத்திரைகளும் ஸ்பிரேக்களும் இருக்கின்றன. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இதற்கான முறையான நடவடிக்கை...
தேவை தூசு கட்டுப்பாட்டு கருவி!
பஞ்சாலைப் பகுதிகளில் பருத்தியிலிருந்து வரும் நெப்த் என்னும் தூசு பெருவாரியாக வெளியாகிறது. இதனால்தான் பஞ்சாலைகள் அதிகம் உள்ள திருப்பூரை ‘தூசு நகரம்’ என்றே சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பஞ்சாலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் மர இலைகளில் கூட தூசு படிந்திருப்பதைக் காண முடியும். இந்தத் தூசு ஆஸ்துமா ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. போர்வெல் போடும் இடங்கள், கல்குவாரிகள், கிரஷர்களில் இருந்து அதிகளவில் மண் தூசு வெளியாகிறது, இந்தத் தூசுகள் வளிமண்டலத்தைச் சென்று சேர்ந்து புவிஈர்ப்பு விசை காரணமாகக் கீழே வந்தடைகிறது.
இந்தத் தூசுகளை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் மேலைநாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் பஞ்சாலைகள் போன்ற தூசு அதிகம் வெளியேறும் தொழிற்சாலைகள் நம் நாட்டில்தான் அதிக அளவில் இருக்கின்றன. இதுபோன்ற தொழில் மூலம் லாபம் ஈட்ட நினைக்கும் முதலாளிகள், செலவு செய்ய நேரிடும் என்பதற்காக தூசியைக் கட்டுப் படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகனங்கள் மற்றும் இயந்திரங்களில் ஒலி மற்றும் புகைத் தடுப்பான்கள் பொருத்துவது போன்று தூசு கட்டுப்பாட்டு கருவியும் பொருத்த வலியுறுத்தப்பட வேண்டும். பஞ்சாலைகள், குவாரி மற்றும் கிரஷர் என தூசு அதிகம் வெளியாகும் பகுதியைச் சுற்றிலும் சவுக்கு மரங்களை அதிக அளவில் நட்டு வளர்த்தல் நல்ல ஒரு தீர்வாக அமையும். தேக்கு மரத்தின் இலைகள் தூசுகளை வடிகட்டும் பண்புடையவை.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» இயற்கை தருதே... சத்துக்கள்
» தூசு -முஹம்மத் ஸர்பான்
» இந்த காணொளி தங்கள் நினைவுகளை தூசு தட்டும்
» துன்பம் ஒரு சோதனை
» துன்பம் = இன்பம்
» தூசு -முஹம்மத் ஸர்பான்
» இந்த காணொளி தங்கள் நினைவுகளை தூசு தட்டும்
» துன்பம் ஒரு சோதனை
» துன்பம் = இன்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|