Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நிழல் மனிதர்கள்
Page 1 of 1 • Share
நிழல் மனிதர்கள்
ததும்பி வழியும் மௌனம்: அ.வெண்ணிலா
சமீபத்தில் இந்தியா முழுக்கப் பகிரப்பட்ட வீடியோ காட்சி - டெல்லி உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிக்கு இரையான அப்பாவி இளைஞனின் மரணம். தன்னுடைய பதின் பருவத்தின் இறுதி யில் விளையாட்டுத்தனமாக தன் உயிரை இழந்த அந்த இளைஞனின் மரணம் நம் பக்கத்து வீட்டு மரணம் போலவே நம்மை எல்லாம் பதைபதைக்க வைத்தது.
உயிரியல் பூங்காவுக்கு வேடிக்கை பார்க்கப் போன அந்த இளைஞன் தனியாக வந்தானா? குறிப்பாகப் பெண் தோழிகளுடன் வந்தானா? அவனாகப் பாதுகாக்கப்பட்ட அந்த சுவரின் மேல் ஏறி நின்றபோது தடுமாறி விழுந்தானா? இல்லை... அசட்டுத் துணிச்சலில்
தன்னுடைய வீரத்தைக் காண்பிக்க உள்ளே குதித்தானா? இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதில் நமக்குத் தெரியாது. அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள். ஆனால், அவன் மரணம் உண்டாக்கிய விவாதங்களும் கேள்விகளும் இன்னும் குறைந்தபாடில்லை. புலியை, உயிரியல் பூங்கா நிர்வாகத்தை, வேடிக்கை பார்த்தவர்களை, படம் எடுத்தவர்களை என எல்லாரையும் குற்றம் சாட்டிவிட்டார்கள் அவரவர் கோணத்தில்...
சிந்தனைத் தளத்தில். 6 மாதக் குட்டியான வெள்ளைப் புலி, இளைஞனின் மரணத்துக்குப் பழி சுமந்து கொண்டது. ஆழமாக யோசித்துப் பார்த்தால் இந்த மரணத் தை நோக்கி வேறு யாரும் அந்த இளைஞனைத் தள்ளிவிடவில்லை. அவனாகத் தேர்வு செய்து கொண்டதே இந்த மரணம். அவன் சிறு குழந்தையல்ல... விதிக்கப்பட்டுள்ள எல்லைகளை மீறினால் என்ன நிகழும் என்பதை அவனால் தெளிவாகவே உணர்ந்திருக்க முடியும். அதற்கு ஏற்றாற்போல நிச்சயமாக பாதுகாப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்க முடியும். அப்படி நடந்து கொள்ள விடாமல் அவனிடம் மேலோங்கியிருந்த உணர்வு எது?
இந்தச் சம்பவத்தைப் போல் நடந்துள்ள பல சம்பவங்களை நாம் ஆராய்ந்துப் பார்த்தால் ஓர் உண்மை புலனாகும். வெட்டி வீராப்புக்காகவும், தன்னிடம் இல்லாத வீரத்தை மற்றவர்களுக்கு - குறிப்பாகப் பெண்களுக்குக் காட்டுவதற்காகவும் மட்டுமே இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதே அந்த வலியான உண்மை. பேருந்துகளில் பெரும்பாலும் பையன்கள் கும்பலாகப் படிக்கட்டுகளில்தான் நிற்கிறார்கள். தங்களின் காதலிக்காகவோ, தோழிக்காகவோ அல்லது பேருந்தில் உள்ள மற்ற வயது ஆண்களிடம், ‘நாங்கள் உங்களைப் போல் அல்ல... இள ரத்தம் பாயும் இளஞ் சிங்கங்கள்’ என்று காட்டவோ தொங்கிக் கொண்டோதான் வருவார்கள்.
‘படியில் பயணம் நொடியில் மரணம்’ என்ற வார்த்தையைச் சத்தம் போட்டுப் படித்துக் காட்டி, அதைக் கிண்டல் செய்தபடி அஜாக்கிரதையாகப் பயணம் செய்த எத்தனையோ இளைஞர்கள் ஒரு நொடியில் மரணமடைவதைப் பார்க்கும்போதும் இவர்களுக்குப் பயம் வருவதில்லை. உயிரோடு இருந்தால்தான் தன்னுடைய வீரத்தையும் பந்தாவையும் காட்டமுடியும் என்ற பாதுகாப்பு உணர்வு சிறிதும் அற்றவர்களாகி விட்டார்கள் இளைஞர்கள். சுற்றுலா செல்லும் இளைஞர்களில் ஒருவரோ, இரண்டு, மூன்று பேரோ இறந்து போகும் செய்திகளைப் பார்க்கிறோம்.
இந்தச் செய்திகளுக்குப் பின்னால் பார்த்தாலும் ஒரு போட்டியோ, விளையாட்டோ நிச்சயமாக இருக்கும். கடல் எந்த ஒரு மாயசக்தியாலும் ஒரு வினாடியில் மேலெழுந்து இவர்களை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டு போயிருக்காது. இவர்களாக மரணத்தின் கண்ணிகளைத் தேடிப் போய் தங்களின் திரும்பப் பெற முடியாத உயிர்களை மாட்டிவிட்டு வருகிறார்கள். வேகம் இன்றைய இளைஞர்களுக்குப் பெரும் விருப்பமாக இருக்கிறது. விவேகமற்ற வேகம். அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்று உயிரிழப்போர் எத்தனை ஆயிரம் பேர்? பைக்கை எடுத்தாலே நூறு கி.மீ. வேகம்தான். இவர்களுக்காக என்றே இன்னும் வேகம், இன்னும் வேகம் என்று ஓட்ட புதுப்புது வண்டிகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் குடி வேறு. சும்மாவே குரங்கு. கல் குடித்தக் குரங்குப் போல் தலைகால் புரியாத ஒரு வேகம்.
நண்பர்களுடன் சேர்ந்து 2 சக்கர, 4 சக்கர வாகனங்களை எடுக்கும் பிள்ளைகள் பத்திரமாக வீடு வந்து சேரும் வரை பெற்றோர் படும்பாட்டைச் சொல்லி மாளாது. விளையாட்டுத்தனமாக வண்டியோட்டி காரணமற்று இறந்து போகிறவர்கள் எத்தனை பேர்? இப்போதெல்லாம் எல்லா ஊர்களிலும் பெரிய பெரிய ஃபிளக்ஸ் பேனர்களில் கண்ணீர் அஞ்சலி படம் போட்டு ஒவ்வொரு சாலை யிலும் வைத்திருக்கிறார்கள். அப்படி வைக்கப்படும் படங்கள் பெரும்பாலும் 20-30 வயதுப் பையன்களின் படங்களே. அந்த மரணங்கள் பெரும்பாலும் சாலை விபத்துகளில் நேர்ந்தவையாகவே இருக்கும்.
பொது இடங்களில் தன்னுடைய ஆண்மையை, வீரத்தை நிலைநாட்டுவது இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமல்ல... நம்முடைய சங்க காலம் தொட்டு நம்முடைய பண்பாட்டின் ஓர் அடிப்படை அம்சமாக இருந்துவரும் நடவடிக்கையே. அந்த வீரம் பெண்களை, தன் இனக் குழுவினரை கவரும் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், அந்த வீரத்தால் பிறருக்கும் அவரின் சுயத்துக்கும் பெரும்பாலும் ஆபத்து இருந்ததில்லை. போரில் துறக்கும் உயிருக்கு மிகப்பெரிய தியாகமும் நாட்டைக் காக்கும் அர்ப்பணிப்பும் அடிப்படையாகி விடுகிறது.
காளையை அடக்குவது, பெரும் கல்லைத் தூக்குவது, புலியை விரட்டுவது, உறியை அடிப்பது என்று இந்த வீர விளையாட்டுகளில் ஏராளம் அடங்கியுள்ளன. அவை அந்தக் காலத்தில் இருந்து ஒரு மரபாக, நம் இனக்குழுவின் சமூக வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. வீரதீரச் செயல்களும் பாதுகாப்பாக, அத்தனைப் பேரின் அங்கீகாரத்துடன் நடைபெறும். ஜல்லிக்கட்டுப் போன்ற ஒன்றிரண்டு விளையாட்டுகளில் உயிரிழப்பு இருந்தாலும், அன்றைய வாழ்க்கை நியதியில் அது ஓர் வீரத்தின் நிரூபணமாக இருந்தது.
முன்பு உடல் சார்ந்த அடையாளமாகவாவது வீரம் இருந்தது. அதற்குத் தகுதி உடையவர்களாக இளைஞர்கள் தங்களை வைத்திருந்தார்கள். அந்த வீரம் ஏற்கக்கூடியதா, அந்த வீரத்தில் நமக்கு உடன்பாடு இருக்கிறதா என்பதைத் தாண்டி, அந்த வீரத்தில் ஓர் உண்மைத்தனம் இருந்ததை நாம் உணரலாம். இன்றைய இளைஞர்களுக்கோ வீரம் என்பது ஒரு வெற்று பிம்பம்தான். அப்போதைக்கு அப்போது பார்க்கும் திரைப்படங்களின் பாதிப்பில் அவர்களிடம் தற்காலிகமாக உருவாக்கப்படும் எழுச்சியான மனநிலை மட்டுமே வீரம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. தங்களால் உருவாக்கப்படும் வெற்று பிம்பங்களுக்கு அவர்களே பலி ஆகிறார்கள்.
ஒரு பொது இடத்தில் நான்கைந்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்தவுடன், அவர்களின் தனிப்பட்ட மனோபாவம் மாறிப்போய், ஒரு கூட்டத்தின் மனோபாவம் வந்து விடுகிறது. அந்த கூட்ட (mob) மனோபாவம் இன்று பெரும்பாலும் திரைப்படங்களால் வடிவமைக்கப்படுகின்றன. இன்றைக்கு நம்முடைய கதாநாயகர்களாக சித்தரிக்கப்படுபவர்கள் பெரும் பாலும் ரவுடிகளாகவும் தாதாக்களாகவும் வேறு சமூக வன்முறையாளர்களாகவும் இருப்பதால், அவர்களைப் பற்றிக் காட்டப்படும் சித்திரங்கள் வன்முறையானதாகவே இருக்கின்றன.
திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் தங்களின் சுயகுணம் தெரியாமல் பொது இடத்தில் நடந்து கொள்வார்கள். தன்னைத் தனியாகப் பிரித்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற துணிவு ஒரு பக்கம். நண்பர்களோடு இருக்கும்போது அவர்களை திருப்தி செய்யும்படி இருந்தால் மட்டுமே, தனக்கும் அந்தக் குழுவில் சமமான இடம் கிடைக்கும் என்ற புரிதலும் அவர்களின் தனித்த குணங்களைப் போக்கி, ஒரு கூட்டத்தோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளச் செய்கிறது. இந்தக் கூட்ட மனோபாவம் தனிப்பட்ட இளைஞ னுக்கு அவனுடைய மனதின் ஆழத்தில் இருக்கும் தவறுகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பாகவும் அமைந்து விடுகிறது.
தனியாகச் செல்லும்போது அமைதியாக மிதமான வேகத்தில் செல்லும் ஒருவன், தன்னுடைய நண்பர்கள் நான்கைந்து பேருடன் பைக்கில் போகும்போது மின்னல் வேகத்தில் மற்றவர்களை அச்சுறுத்தும் வேகத்தில் பறப்பது, இப்படிப்பட்ட தூண்டுதலினால்தான்.கும்பலாக இருக்கும்போது தங்களின் நடத்தை ஒழுங்கு பற்றியும் இளைஞர்கள் கவலைப்படுவதே இல்லை. பொது இடங்களில் சத்தமாகப் பேசுவதும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு, கிண்டல் செய்து பேசுவதும், புகைப்பதும், எச்சில் துப்புவதும், பெண்களை அநாகரிகமாகப் பார்ப்பதும், அவர்கள்முன் அருவெறுப்பான செய்கைகளைக் காட்டுவதும் இன்று வெகு இயல்பாக இருக்கிறது. இடை நகரங்களின் திரையரங்குகளில் அவர்களின் நடவடிக்கைகளின் ஆபாசத்தை எழுதிச் சொல்ல முடியாது.
சில பாடல்கள் வரும்போது அவர்களின் கூச்சல்களும் அசிங்கமான வார்த்தைகளும்... அந்த இடத்தையே நரகமாக்கிவிடும். பெண்களைப் பொது இடத்தில் சகஜமாக நடமாட விடாமல் கூசிப் போகச் செய்யும் நடவடிக்கைகள் இன்றைய ஆண்களுக்கு வெகு இயல்பான ஒன்றாக இருக்கிறது. நான்கு பேர் இருக்கும் இடத்தில் தான் ஆண் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை, இன்றைய இளைஞர்கள் அடிப்படை மனோ பாவமாகக் கொள்கிறார்கள். அதற்காக தப்புத் தப்பான பல செயல்களை செய்கிறார்கள். அவர்கள் தனியாக உட்கார்ந்து தாங்கள் நடந்து கொண்டதைப் பற்றி யோசித்துப் பார்த்தாலே எவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்துவிடும். ஆனால், அப்படி ஒரு புரிதலைத் தரும் தனிமையை அவர்கள் விரும்புவதே இல்லை.
சரிகா ஷா-வை நம்முடைய பரபரப்பான நினைவுகள் மறந்துவிட்டு இருக்கலாம். ஆனால், நம்முடைய நனவிலி மனம் அந்தப் பெண்ணின் அழகு ததும்பும் குழந்தை முகத்தையும் காரணமில்லாமல் சென்னை வீதியில் பலியாக்கப்பட்ட கொடூரத்தையும் நிச்சயம் மறந்திருக்காது. இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் செல்ல கிளம்பிய அந்தப் பெண்ணை, இப்படி ஒரு மூடர் இளைஞர் கூட்டம் போட்டா போட்டிப் போட்டுக் கொண்டு அவள் தங்களை மிஞ்சக் கூடாது என்று விரட்டிக் கொண்டுச் செல்ல, அந்த அப்பாவிப் பெண் பயந்து போய் பதற்றத்தில் சாலையோர நடைபாதை ஒன்றில் வண்டியுடன் தடுமாறி விழ, பரிதாபமாகச் செத்துப் போனாள்.
இந்தக் கற்பனை வீரர்கள் தங்களின் உயிர்களை காவு கொடுப்பதைப் போலவே இளம் பெண்களின் உயிர்களையும் காவு வாங்கியுள்ளனர். தெருமுக்குகளில் கும்பலாக நின்று புகைத்தபடியே போவோர் வருவோரை கிண்டல் செய்வது, ஒரு சின்ன வாய் வார்த்தைக்கும் கோபப்பட்டு கை கலப்பு நடத்திக் கொண்டு, மக்களுக்கு அச்சம் உண்டாக்குவது, பேருந்துகளில் வரம்புமீறி நடப்பது என்ற இந்த இளைஞர்களின் அருவெறுப்பான நடவடிக்கைகளுக்குப் பின் இயங்குவது, அவர்கள் உருவாக்கிக் கொண்ட பொய்யான பிம்பம் மட்டுமே. வீரம் என்பது ஒருவருடைய உடல், மன ஆளுமை தொடர்புடையது. வீரத்தை வெளிப்படுத்த ஓர் அடிப்படையான, தெளிவான, பயன்கொண்ட நோக்கம் இருக்க வேண்டும். வெற்று ஆர்ப்பாட்டங்களை வீரம் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
தங்களின் உண்மையான பிம்பங்களுக்குத் தொடர்பில்லாத நகல்களை நம்பி தங்களைத் தாங்களே பலி கொடுத்துக் கொள்பவர்கள் எத்தனை பேர்? மரணத்தைத் தழுவிக் கொள்ளும் அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு முடிவடைந்து போகிறது. அவர்களை இழந்து வாடிக் கொண்டிருக்கும் பெற்றோர், உயிர் நண்பர்களுக்கோ மீளாத்துயர்.நோய் வந்தும், நம்மால் தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படும் மரணங்களே வலியானவை. புரிதலின்மையாலும் ஆர்ப்பாட்டத்துக்காகவும் வெற்று வீம்புக்காகவும் உயிரிழப்புத் தேவையா? அவ்வை எத்தனை முறைதான் சொல்வாள்... அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது... அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.வெறும் செவிகள் எத்தனை முறை கேட்டாலும் எதிரொலித்து மறந்து போகும். செவிகளில் ஒலிக்கும் சொற்களின் உண்மையை இதயம்தானே புரிந்து கொள்ள முடியும்?
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|