Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
படிக்க வேண்டிய பாடம்!
Page 1 of 1 • Share
படிக்க வேண்டிய பாடம்!
உயிரின் மகத்துவத்தை உணர்ந்த முற்காலத் தமிழன் எழுத்துகளுக்குக்கூட உயிர் எழுத்துகள் என்று பெயரிட்டான். ஐந்தறிவு படைத்த விலங்குகள்கூட தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்களோ, தங்களின் விலை மதிப்பற்ற உயிரை விபத்துகளில் தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வெளிச்சத்தோடு விடிய வேண்டிய பொழுதுகள் விபத்துகளோடு விடிவது இன்றைய வாடிக்கை. அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் விபத்துகளும் தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டது. நாளொரு விபத்தும் பொழுதொரு மரணமுமாய் நகர்வதே மனித வாழ்க்கை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளோ, உறுப்பு இழப்புகளோ விபத்துக்குள்ளான ஒரு மனிதரோடு மட்டும் முடிந்து போவதில்லை. அவரது குடும்பத்திற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாழ்நாள் முழுதும் தொடரும் பெரும் சோகமாகும்.
விபத்துகள் பலவிதம். உடலை ஊனப்படுத்துவதிலும், உயிர்களைப் பலிகொள்வதிலும் இன்று முதலிடம் வகிப்பது சாலை விபத்துகள். மனிதனின் பயணத்திற்காகப் போடப்பட்ட சாலைகள் மரணத்திற்குப் போடப்பட்ட சாலைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
அவசரம், அலட்சியம், சாலை விதிகளை மீறுதல், போதையால் பயணப் பாதை மரணப்பாதையாதல், கைப்பேசியில் காலனின் அழைப்பே காலர் டியூனாதல் இவையெல்லாம் எமலோக பயணத்தின் காரணிகள்.
ஓட்டுநர் உறங்கும்போது எமன் விழித்துக்கொள்கிறான். உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே களவாடப்படுவது உன்னத உயிர்கள். தரைவழி, வான்வழி, நீர்வழி அனைத்தும் மரணத்தின் வழிகளாக மாறிப் போயின. எமலோகப் பதவிக்குக்கூட எத்தனைப் போட்டிகள். வாழ்க்கைத் தரம் உயர உயர விபத்துகளின் விழுக்காடும் உயர்ந்து கொண்டே போகிறது.
விபத்துகள் மனித சமுதாயத்திற்கு அடிக்கப்படும் எச்சரிக்கை மணி என்பதை நாம் ஏனோ உணர்வதில்லை. கண் முன் நிகழும் உயிரிழப்புகளை ஒரு நிமிட அனுதாப பார்வையோடு பார்த்தபடி மனிதர்களின் அவசரப் பயணம் தொடர்கிறது. அவர்களுக்கு இருக்கும் வேலைகளுக்குள் இழப்பின் சோகமும், விபத்தின் கோரமும் கரைந்து போவது காலத்தின் கோலம். பூத்துக் குலுங்க வேண்டிய வாழ்வு விபத்துகளால் மரணம் எனும் புதைகுழிக்குள் போகிறது. அரசின் நஷ்ட ஈடுகளும், ஆறுதல்களும் இழப்புகளுக்கு ஈடாவதில்லை. இழப்பீடு என்பது விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு கொடுக்கப்படும் மலிவு விலை.
இன்று சாலை விபத்துகளோடு போட்டி போடும் சமையல் எரிவாயு உருளை வெடிப்புகள், கள்ளச்சாராய சாவுகள், மலர வேண்டிய மொட்டுகளுக்கு மரண சாசனம் எழுதும் ஆழ்துளைக் கிணறுகள், ஆலைகளின் பாய்லர் வெடிப்பு, கட்டுமான பணிகளின்போது காலன்வாய்படும் ஏழைத் தொழிலாளிகள், இந்த மரணங்கள் எல்லாம் இன்று வாடிக்கைகள்.
நொடிப் பொழுதில் மரணத்தைப் பரிசாக வழங்கும் விபத்துகளும், மனித உயிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடிக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளும், கொடூர மனங்கொண்டவர்கள் நிகழ்த்தும் கொலைகளும், மரணத்திற்கு வரவேற்பு வாழ்த்துப்பா படிக்கும் மது பழக்கமும், வாழ்வதற்குக் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகள் சாவின் சமாதிகள் ஆவதும் மனித உயிர்கள் மலிவாகிப் போய்விட்டன என்ற கசப்பான உண்மையைக் காட்டும் கண்ணாடிகள்.
நம் உயிர் நம் கையில் என்பதே விபத்துகளிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம்!
- தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» குழந்தையை தத்தெடுப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..
» கணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை..
» ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விசயங்கள்! ! ! !
» படிக்க படிக்க மனது தெளிவாகும்
» கொழுத்தும் வெயிலை சமாளிக்க அருந்த வேண்டிய பானங்களும், தவிர்க்க வேண்டிய பானங்களும்!
» கணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை..
» ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விசயங்கள்! ! ! !
» படிக்க படிக்க மனது தெளிவாகும்
» கொழுத்தும் வெயிலை சமாளிக்க அருந்த வேண்டிய பானங்களும், தவிர்க்க வேண்டிய பானங்களும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|