Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நடமாடும் உரக் கிடங்கு யார்?
Page 1 of 1 • Share
நடமாடும் உரக் கிடங்கு யார்?
ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளின் சிறுநீர், சாணம் போன்றவை நீண்டகாலமாக விவசாயத்தில் உரமாகப் பயன்பட்டு வருகின்றன. இதைப் போலவே, மனிதக் கழிவான சிறுநீர், ரசாயன உரங்களுக்கு மாற்றாக நல்ல உரமாக உள்ளது. ஆடு-மாடுகள் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும்போது, இதையும் சேர்த்துப் பேச வேண்டும்.
மனித சிறுநீரில் தழைச்சத்து (நைட்ரஜன்) அதிக அளவிலும், மணிச்சத்து (பாஸ்பரஸ்), சாம்பல் சத்து (பொட்டாசியம்) குறிப்பிடத்தக்க அளவிலும் உள்ளன. சரி, இந்தச் சத்துக்களை எப்படிப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துவது?
சூழலியல் காக்கும் கழிவறை
சூழலியல் காக்கும் கழிவறை (Ecological Sanitation Toilet) என்பது சிறுநீர், மலம், உடலைச் சுத்தம் செய்த தண்ணீரைத் தனித்தனியே பிரித்து உரமாக்குகிறது. இந்தக் கழிவறையில் மலத்தை அகற்றத் தண்ணீர் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால் இன்று பரவலாக உள்ள தண்ணீர் பற்றாக்குறைக்கு, இவ்வகை கழிவறைகள் நிரந்தரத் தீர்வாக அமையும்.
மேலும் கடினப் பாறைகள், ஆற்றுப் படுகைகளில் சாதாரண வகை கழிவறைகளைக் கட்ட முடியாது. சூழலியல் காக்கும் கழிவறைகள் பூமிக்கு மேற்பரப்பில் கட்டப்படுவதாலும், மேற்பரப்பிலேயே பாதுகாப்பான முறையில் கழிவு சேமிக்கப்பட்டு, மக்க வைக்கப்படுவதால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை.
சிறந்த மாற்று
இந்தியாவில் பரவலாகக் கட்டப் படுகிற செப்டிக் டேங்க், தேன்கூடு வகை கழிவறைகளைப் பயன்படுத்த அதிகத் தண்ணீர் தேவை. இதில் செப்டிக் டேங்க் கழிவு, நீர்நிலைகளில் கலப்பதால் சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. தேன்கூடு வகை கழிவறைகளில் குடிநீர் ஆதாரங்களுக்கும் (கிணறு, அடிகுழாய்) மலக் குழிக்கும் இடையே போதிய இடை வெளி விட முடிவ தில்லை. இதனால் நிலத்தடி நீர் மாசடைகிறது.
முன்னோடி
இந்தியாவில் சூழலியல் காக்கும் கழிவறை அமைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இக்கழிவறையைப் பரவலாக்க 'நிர்மல் பாரத் அபியான்' என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. சூழலியல் காக்கும் கழிவறைகளில் சிறுநீர் தனியாகச் சேமிக்கப்படுகிறது. இதை நெல், வாழை, காய்கறிகளுக்கு உரமாகப் பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும்.
மனிதச் சிறுநீரைச் சேமித்துப் பயன்படுத்துவதற்கு எளிதான வழி சூழலியல் காக்கும் கழிவறையே. அத்துடன் மனித மலத்தைச் சாம்பல் மூலம் மூடுவதால், 6-8 மாதங்களில் சிறந்த உரம் கிடைக்கும்.
உரக் கிடங்கு
ஒவ்வொரு மனிதனும் ஒரு நடமாடும் உரக் கிடங்குதான். ஒரு வருடத்துக்கு ஒரு மனிதன் 50 கிலோ மலத்தையும் 500 லிட்டர் சிறுநீரையும் வெளியேற்றுகிறான். இதிலிருந்து 4.5 கிலோ நைட்ரஜன், 0.55 கிலோ பாஸ்பரஸ், 1.28 கிலோ பொட்டாசியம் சத்துகள் கிடைக்கின்றன. இவற்றை முறைப்படி சேகரித்துப் பயன்படுத்தினால் உரச் செலவைப் பெருமளவு குறைக்கலாம்.
நீருக்காக ஏற்படும் போட்டியால்தான் அடுத்த உலகப் போர் நிகழும் என ஐ.நா. அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். இக்கழிவறை நீர் செலவைக் குறைப்பதாலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதாலும், இவற்றைப் பரவலாக்க அரசு முன்வர வேண்டும்.
ஏன் மறுசுழற்சி அவசியம்?
# மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படுகிறது.
# உறிஞ்சு குழி கழிப்பறை மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர் நீர்நிலைகளையும் உயிர்ச் சூழலையும் பாதிக்கிறது.
# மறுசுழற்சி செய்வதால் மண்ணுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. வேதி உரத் தேவை பெருமளவு குறையும்.
# மனிதக் கழிவுகளை உரமாகப் பயன்படுத்துவதால் மண்ணின் தரம் பாதுகாக்கப்பட்டு, பயிர் அதிக மகசூல் தருகிறது.
# மனித உரம் செலவில்லாமல் கிடைக்கிறது.
# சுழலியல் காக்கும் கழிவறை மனிதக் கழிவுகளை வளமாக மாற்றுகிறது.
அது மட்டுமல்லாமல், ஒரு தனிமனிதனின் கழிவுகளை உரமாகப் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 16 கிலோ பசுங்குடில் வாயுவை ஒரு வருடத்தில் குறைக்கமுடியுமாம். இக்கழிவறைகள் பல நன்மைகளைத் தருகின்றன
மூன்று முக்கிய நன்மைகள்
# நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகின்றன (குறைவான தண்ணீர் பயன்பாடு, மாசடைவது தடுக்கப்படுகிறது)
# அதிக விவசாய உற்பத்தி
# திறந்தவெளியில் மலம் கழிப்பதால் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன.
சூழலியல் காக்கும் கழிவறையைப் பரவலாக்க இக்காரணங்களே அடிப்படையாக உள்ளன.
கட்டுரையாளர்,
ஹேண்ட் இன் ஹேண்ட்
இந்தியா நிறுவனத் திட்ட இயக்குநர்
தொடர்புக்கு: putheribabu@gmail.கம
- தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நடமாடும் உரக் கிடங்கு யார்?
விழிப்புணர்வு தரும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|