தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும்

View previous topic View next topic Go down

அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும் Empty அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும்

Post by நாஞ்சில் குமார் Tue Nov 18, 2014 9:59 pm




சுஜாதா விஜயராகவன்



மழை, உலகுக்கு உயிரூட்டும் அமுது. ஆனால், அது அமில மழையாகவோ அல்லது விஷவாயுக்களின் மழையாகவோ இருந்தால், அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்?

போபாலில் (1984) ஏற்பட்ட விஷவாயுக் கசிவு, ரஷ்யாவின் செர்னோபில் (1986) ஆண்டு ஏற்பட்ட அணுஉலை வெடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து மிகப் பெரிய பரப்பைப் பாதித்த, இன்றும் தொடர்கிற சேதங்களும் உலகளாவிய பண்பாடு என்று இன்றைக்கு முன்வைக்கப் படுவதன் மற்றொரு முகத்தைக் காட்டுகின்றன.

பொருளாதாரம், ஊடகம், நுண்பொறியியல் முதலிய துறைகளின் கூட்டு முயற்சி ஈன்றெடுத்த உலகமயமாக்கல் சூழலில், இயற்கையாக வான் கொடுக்கும் மழையைவிட மனிதன் உருவாக்கிய விஞ்ஞான விஷங்களின் மழை மறுக்க முடியாத பகுதியாகிவிட்டது. இதனால், எப்போது, எங்கே என்ன மாதிரி மழை பெய்யும் என்ற அச்சம் தொழிற்சாலைகளுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு உண்டு.

ஆழ் சூழலியல்

நார்வேயைச் சேர்ந்த ஆர்னி நெஸ் (Arne Dekke Eide Ness, 1912-2000) என்னும் சிந்தனையாளர் ஆழ் சூழலியல் (Deep ecology) என்ற தத்துவத்தை முன் வைத்தார். இந்த ஆழ் சூழலியல் என்ற புதிய தத்துவம், பொறுப்பான சீரமைப்பு தேவை என்பதை வலியுறுத்துவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆழ் சூழலியல் என்றால் என்ன? இயற்கை வளங்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொணர்ந்து, பின்னர் அவற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்தும் விஞ்ஞானம் சார்ந்த மேலைப் பண்பாட்டை இது மறுக்கிறது.

உருமாறாத நீர்

மனித இனமும், இயற்கையும் சமத்துவத்துடன் இருக்கும் அமைப்பில் நீரே அனைத்து உயிரினங்களையும் இணைக்கும் சரடாக இருக்கிறது. நாம் வாழும் நிலம், சுவாசிக்கும் காற்று, செடிகள், உணவு வகைகள் ஆகிய எல்லாவற்றிலுமே நீர் ஊடுருவி உள்ளது.

வெப்பமும் காற்றும் முடிவில் நீராக மாறும்போதுதான் உயிர் உண்டாகிறது. நீர் எப்போதுமே உருமாறுகிறதே தவிர, அழிவதில்லை. ஆக இயற்கை வழிபாடு தொடங்கி, பசுமை இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள் தொடங்கி ஆழ் சூழலியல் என்று மேலை நாட்டுத் தத்துவம்வரை அனைத்துக் கொள்கைகளும் நீரையே மையம் என்று சுட்டிக்காட்டுகின்றன.

குறளும் சூழலியலும்

வாழ்க்கை நெறிமுறைகளை ஏழு சொற்களில் திரட்டிக் கொடுத்த திருவள்ளுவர், கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்த பாயிரவியலில் வான் சிறப்பை முன் வைக்கிறார். உலகை வாழவைப்பது மழை என்பதால், குறளில் அது அமிழ்தம் எனப்படுகிறது.

வானின்று உலகம் வழங்கி வருதலால்

தானழிழ்தம் என்றுணரற் பாற்று. (அறம், அதிகாரம் 2, குறள் 11)

வள்ளுவர் கூறுவது ஒரு முழுமையான சூழலியல் கோட்பாடு. ஏனென்றால் மனித இனத்தை மையமாகக் கருதாமல், உயிரை மையமாகக் கருதி, அறத்தை உள்ளார்ந்ததாகக் கொண்ட உயிரை, அனைத்து உயிர்களுக்கும் சமமான மதிப்புடையதாகக் கருதுகிறார் வள்ளுவர்.

ஆக, வள்ளுவர் மழையென்று சுட்டுவது உலகுக்கு உயிரூட்டும் ஈரத்தைப் பற்றியது மட்டுமல்ல. அறம் என்னும் ஈரத்தால் பண்பட்ட வாழ்க்கை, இயற்கை வளத்தையும் வான் சிறப்பையும் பெறும்.

சூழலியல் அறம்

அற வாழ்க்கையே மனிதனுக்கும் இயற்கை வளத்துக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும். அற வாழ்வின் விளைவாகக் கிடைக்கும் செழுமையே உலகின் வளம். அறம் நிறைந்த உலகில் நீர்நிலைகள் வற்றாது, காடுகள் அழியாது, நஞ்சை நிலம் வறண்டு கட்டுமானப் பகுதியாக மாறாது.

அறத்தைத் தொடர்ந்து வரும் செழிப்பும் பொருளுமே, மனிதனுக்கு மன அமைதியையும், சூட்சுமமானதொரு இனிமையையும் தருகின்றன.ஆக அறம், பொருள், மேன்மையான இனிமை - ஆகிய அனைத்தையுமே, பாயிரவியலின் வான் சிறப்பில் சிறுகோட்டுப் பெரும் பழமாக வள்ளுவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அது ஆழ் சூழலியலையும் வெளிப்படுத்துகிறது.

கட்டுரையாளர்,
புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்

- தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும் Empty Re: அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும்

Post by செந்தில் Sun Aug 09, 2015 1:21 pm

சிறப்பான கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும் Empty Re: அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும்

Post by முரளிராஜா Tue Aug 11, 2015 5:32 am

கட்டுரையை தகவலில் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும் Empty Re: அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும்

Post by kanmani singh Tue Aug 11, 2015 12:01 pm

அருமையான கட்டுரை!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும் Empty Re: அன்றைய வான் சிறப்பும் இன்றைய சூழலியலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum