Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காணாமல் போகும் காட்டு நண்டுகள்
Page 1 of 1 • Share
காணாமல் போகும் காட்டு நண்டுகள்
ஆர். பிரவிண்குமார்
கோவாவில் அடர்ந்த காட்டுக்குள் தூத் சாகர் அருவிக்கு அருகே, தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாறையின் மீது ஒரு நண்டைக் கண்டேன். தன் மீது தண்ணீர் விழும்படியாக, கெட்டியாகப் பாறையைப் பற்றிக்கொண்டு அது அமர்ந்திருந்தது, அந்தப் பெரிய சிவப்பு நண்டு. கண் இமைக்காமல் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, படமும் எடுத்துக்கொண்டேன்.
நான் நடந்து செல்லச் செல்ல இன்னும் நிறைய நன்னீர் நண்டுகள், பாறையைப் பற்றிக்கொண்டு இருந்ததைக் கண்டேன். அதன் பெரிய உருவமும், வசீகரிக்கும் சிவப்பு நிறமும் வியப்பைத் தந்தன. இந்த மாதிரி தனித்துவமான நன்னீர் நண்டு இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தனித்துவமான சில பகுதிகளில் மட்டுமே உள்ளன.
கூட்டம் கூட்டமாக
அந்த வாரத்தில் போண்ட்லா காட்டுயிர் சரணாலயத்தில் சுமார் ஆயிரம் நண்டுகள் சாலையைக் கடந்து, சாலை ஓரமாய்த் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த ஓடையில் குதிப்பதைக் கண்டபோது ஏற்பட்ட ஆச்சரியம் இன்னும் அகலவில்லை.
இப்படியாகப் பெரிதும் சிறியதுமாய், ஒன்றன் மேல் ஒன்றாக விழுந்து, நண்டுகள் கூட்டமாகக் காட்டுச் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் எண்ணற்ற நண்டுகள் அடிபட்டும், காயம்பட்டும், இறந்து போய்க் காய்ந்து ஒட்டிக்கொண்டிருப்பதை வெகு தொலைவுவரை பார்த்தபோது வருத்தமாக இருந்தது.
இந்தியாவில் ஒரே ஒரு நண்டு இனம் மட்டுமே இந்தியக் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. அது தென்னை நண்டுகள் (Bigrus latro) - அந்த இனம் தப்பிப் பிழைக்கும் என்று நம்புவோம்.
நண்டு ஆராய்ச்சி
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள நன்னீர் இறால்கள், நண்டுகளின் (Decapod crustaceans) பாதுகாப்பு நிலை குறித்து முதல்முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. போதுமான ஆராய்ச்சிகள் இல்லாத முதுகெலும்பில்லாத இந்த நன்னீர் உயிரினம், நன்னீர் உணவுச் சங்கிலியிலும், சூழல் தொகுதியிலும் மிகப் பெரிய பங்காற்றிவருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் நன்னீர் இறால் (Shrimps), நண்டுகள் (Crabs) உள்ளிட்ட நன்னீர் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. சுமார் 49 நன்னீர் இறால்கள், 39 நன்னீர் நண்டு இனங்கள் வகைப்படுத்தப்படாமலும், விரிவான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படாமலும் இருப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த நண்டு, இறால் வகைகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் ஓரிட வாழ்விகள் அதிகம்.
அழிவும் பாதுகாப்பும்
இந்த ஆராய்ச்சியின் முடிவில் மூன்று இனங்கள் அழியும் தறுவாயில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் அழிவுக்கான முக்கியக் காரணங்கள்: காப்பி, தேயிலை, ரப்பர், மிளகு போன்றவற்றைப் பயிரிடக் காடுகளை அழித்ததும், பூச்சிக்கொல்லிகள் மூலமாக வரும் கழிவு, மாசுபாடுகளும். அத்துடன் வாழிட அழிப்பும் முக்கியக் காரணம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கையின் தயாரிப்பில் பங்களித்தவர்களில் ஒருவரான கோவை ஜூ அவுட்ரீச் அமைப்பைச் சேர்ந்த சஞ்சய் மொலூர் “சூழலியலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்த நன்னீர் இனங்களைப் பாதுகாக்க, உடனடி ஆராய்ச்சிகள், பாதுகாப்பு மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது" என்று கூறினார். முதுகெலும்பில்லாத இந்தச் சிறிய உயிரினத்தையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க மேற்குத் தொடர்ச்சி மலையில் ஐந்து பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எதிர்காலம்
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்தான் என்றில்லை. நம் ஊரில் வயல் பக்கம், ஓடைக் கரைகளில் குழிக்குள் பதுங்கியிருந்த நண்டுகள் அதிவேகமாக அழிந்து வருகின்றன. பூச்சிக்கொல்லிகளும், வேதி உரங்களுமே இதற்கு முக்கியக் காரணம். மேலும் வாழிட அழிப்பும், முறையற்ற சுற்றுலாவும் தடுத்து நிறுத்தப்படாதவரை, இவற்றின் அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது.
மழைக் காலத்தில் புது விருந்தாளியாய், நம் வீட்டுப் பக்கமும், வயலிலும் எட்டிப் பார்க்கும் சின்ன நண்டுகளைப் பார்த்துப் பரவசமடைந்த, ரசித்த தருணங்கள் நமது வாரிசுகளுக்குக் கிடைக்குமா?
கட்டுரையாளர்,
ஆராய்ச்சி மாணவர்,
தொடர்புக்கு: brawinkumar@zooreach.org
- தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: காணாமல் போகும் காட்டு நண்டுகள்
நாஞ்சில் குமார் wrote:
மழைக் காலத்தில் புது விருந்தாளியாய், நம் வீட்டுப் பக்கமும், வயலிலும் எட்டிப் பார்க்கும் சின்ன நண்டுகளைப் பார்த்துப் பரவசமடைந்த, ரசித்த தருணங்கள் நமது வாரிசுகளுக்குக் கிடைக்குமா?
கஷ்டம்தான்... எங்களைப் போன்ற சிறியவர்களுக்கு இளைய தலைமுறைக்கு மூத்த முதியோர்கள் விட்டு வைக்கமாட்டேன் என்கிறார்களே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» காணாமல் போகும் நீர் நாய்கள்
» கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்..
» இன்று.. காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்
» காட்டு ராஜா -சிறுகதை
» புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்
» கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்..
» இன்று.. காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்
» காட்டு ராஜா -சிறுகதை
» புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|