Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளின் நீரிழிவு ஏன்? என்ன செய்வது?
Page 1 of 1 • Share
குழந்தைகளின் நீரிழிவு ஏன்? என்ன செய்வது?
[You must be registered and logged in to see this image.]
நவம்பர் 14... குழந்தைகள் தினமும் உலக நீரிழிவு தினமும் ஒருசேர கொண்டாடப்படுகிறதே... என்ன ஒரு சோகமான ஒற்றுமை! குழந்தைகள் நீரிழிவால் பாதிக்கப்படுவது இப்போது மிக அதிகம். முன்பெல்லாம், குழந்தைகள் நீரிழிவு என்பது, இளநிலை நீரிழிவாகவே (டைப் 1) இருக்கும். இவ்வகை நீரிழிவில் கணையமானது போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்வதில்லை. அதனால் சிறுவயதிலிருந்தே இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். சமீபகாலமாக, டைப் 2 நீரிழிவு நிலையும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இந்நிலையில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்திச் செய்யப்பட்டாலும், அது முறையாக செயலாற்றும் திறன் இல்லாமலும் ரத்த சர்க்கரையை குறைக்க இயலாததாகவும் இருக்கிறது. இது பற்றி விரிவாக விளக்குகிறார் நாளமில்லாச் சுரப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால்.
‘‘உடலிலுள்ள கணையம் இன்சுலின் சுரக்கும் சக்தியை இழக்கும்போது வகை 1 நீரிழிவு ஏற்படுகிறது. இதையே type 1 / insulin dependent diabetes / juvenile diabetes ஆகிய பெயர்களிலும் அழைக்கிறோம். வைரஸ் தாக்குதலினாலோ, உடலின் நோய்க்காப்பு இயங்கு முறையானது, கணையத்திலுள்ள செல்களை அழிப்பதனாலோ இக்குறைபாடு ஏற்படக்கூடும். இவ்வகை நீரிழிவை இன்சுலின் ஊசி மருந்து வழியாக மட்டுமே நிர்வகிக்க முடியும். இன்சுலின் தரப்படவில்லை என்றால், ரத்தச் சர்க்கரை அளவு அபாயகரமாக அதிகரிக்கும். அதோடு, ரத்தத்தில் குறிப்பிட்ட வகை அமில அளவுகளும் அதிகரிக்கத் தொடங்கும். இதுவே மிக அதிகமாக அச்சம் ஏற்படுத்துகிற சிக்கலான ‘நீரிழிவு கீட்டோ அமிலத்துவம்’ என்று அழைக்கப்படுகிற நீரிழிவு வகைக்கு இட்டுச் செல்லும்.
டைப் 1 நீரிழிவு பிரச்னைக்கு இன்று வரை ஒரே சிகிச்சை, ஊசி மூலம் இன்சுலின் செலுத்துவது மட்டுமே. இன்சுலினை வலியற்ற இன்சுலின் பம்ப் வழியாக தர முடியும் என்பதுதான் இதில் முக்கிய முன்னேற்றம். இப்போது, இன்சுலின் பம்ப் இன்சுலினை உட்செலுத்துவதோடு, ரத்த சர்க்கரை அளவையும் கண்டறிந்து, அதற்கேற்ப இன்சுலின் உட்செலுத்தப்படும் விகிதத்தையும் மாற்றி அமைத்துக்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நமது உடலின் கணையத்தில் இன்சுலின் உருவாக்குகின்ற செல்களைப் போலவே இதுவும் செயல்படுவதால், ‘செயற்கை முறை கணையம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, ரத்த சர்க்கரையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப, இதன் இன்சுலின் அளவுகளும் ஏற்ற இறக்கத்தைக் கொண்டிருக்கும்.
ரத்த குளுகோஸ் அளவு திடீரென இறங்கும் ‘ஹைபோகிளைசிமியா’ என்பது டைப் 1 நீரிழிவில் ஏற்படக்கூடிய இன்னொரு ஆபத்தான சிக்கல். ‘குளுக்ககான்’ என்று அழைக்கப்படுகிற, கணையத்தில் உருவாகிற மற்றொரு ஹார்மோன் போதுமான அளவு இல்லாத காரணத்தால்தான் இது பெரும்பாலும் நிகழ்கிறது. சில மாதங்களுக்கு முன், இன்சுலின் மற்றும் குளுக்ககான் ஆகிய இரண்டையும் சேர்த்து வழங்கக்கூடிய ‘ஒற்றை பம்ப்’ உருவாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். ‘இரட்டை ஹார்மோன் சிகிச்சை’ என இது அழைக்கப்படுகிறது. நமது கணையத்தைப் போலவே சிறப்பாகச் செயல்படுவதற்கும் நீரிழிவு குழந்தைகளின் வாழ்க்கையை இன்னும் எளிதாக ஆக்கவும் இது உதவும்.
டைப் 2 நீரிழிவு நிலையில், உடலானது போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அதனால் முறையாகச் செயல்பட இயலாத நிலை இருக்கிறது. அல்லது இன்சுலின் செயல்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மை காணப்படுகிறது. ‘இன்சுலினை சார்ந்திராத நீரிழிவு நோய்’ என்று இது குறிப்பிடப்படுகிறது. அளவுக்கு அதிக எடை அதிகரிப்பு மற்றும் போதுமான உடற்பயிற்சி இல்லாத காரணங்களால் இது ஏற்படுகிறது. இதை முறையாக நிர்வகிக்கா விட்டால், ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கக்கூடும். ஆனால், அமில அளவுகள் அதிகரிப்பதில்லை. இந்த வகை நீரிழிவு நிலையை பொதுவாக மாத்திரைகள் வழியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். எப்போதேனும் இன்சுலின் தேவைப்படலாம்.
இந்த இரு வகை நீரிழிவு நிலைகளிலும் சிகிச்சையின் முக்கிய அம்சமாக அமைவது ஆரோக்கியமான வாழ்க்கை முறையே. தவறாமல் செய்யப்படும் உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்கவழக்கங்கள் முக்கியமானவை. டைப் 1 நீரிழிவு குழந்தைகள் இனிப்புகள், கேக்குகளை உட்கொள்ளத் தடையில்லை. அனைத்து வகை உணவுகளையும் மிதமான அளவுகளில் அவர்கள் உண்டு மகிழலாம். உணவுக்கேற்ப, எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். வயது வந்த நபர்களைப் போன்றே, சரியான கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத நீரிழிவு நிலையால் ஏற்படும் சிக்கல்களும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும். கண்கள், சிறுநீரகச் செயல்பாடு, கொலஸ்ட்ரால் (கொழுப்பு அளவு) மற்றும் பாதங்கள் ஆகியவற்றை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம்.
நீரிழிவை முழுமையாகத் தடுக்க முடியுமா? குழந்தைகளை பாதிப்பதிலிருந்து எப்படி காக்க முடியும்? இவை பலருக்கும் எழும் கேள்விகள்...
டைப் 2 நீரிழிவின் இடர்பாட்டை, இளம் வயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் நிச்சயமாக குறைக்க முடியும். முன்மாதிரி நடத்தை மற்றும் பெரியவர்களை பின்பற்றி நடத்தல் ஆகியவற்றை குழந்தைகள் பின்பற்றுகிறார்கள் என்பதால், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஆரோக்கிய வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதையே இது குறிக்கிறது.
டைப் 1 நீரிழிவுக்கான இடர்காரணிகள் அதிக அளவு மரபணு சார்ந்ததாக இருக்கின்றன. இந்த இடர்பாட்டை டைப் 2 நீரிழிவு நிலையில் உள்ள அதே அளவுக்கு குறைக்க இயலாது. எனினும், ரத்தத்தில் ‘வைட்டமின் டி’ அளவை சிறப்பாகக் கொண்டிருப்பதன் மூலமும், 1 வயதுக்கு முன் பசும்பால் கொடுப்பதைத் தவிர்ப்பதன் மூலமும் இந்த இடர்பாட்டை குறைக்க முடியும்’’ என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்.
- தினகரன்
நவம்பர் 14... குழந்தைகள் தினமும் உலக நீரிழிவு தினமும் ஒருசேர கொண்டாடப்படுகிறதே... என்ன ஒரு சோகமான ஒற்றுமை! குழந்தைகள் நீரிழிவால் பாதிக்கப்படுவது இப்போது மிக அதிகம். முன்பெல்லாம், குழந்தைகள் நீரிழிவு என்பது, இளநிலை நீரிழிவாகவே (டைப் 1) இருக்கும். இவ்வகை நீரிழிவில் கணையமானது போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்வதில்லை. அதனால் சிறுவயதிலிருந்தே இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். சமீபகாலமாக, டைப் 2 நீரிழிவு நிலையும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இந்நிலையில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்திச் செய்யப்பட்டாலும், அது முறையாக செயலாற்றும் திறன் இல்லாமலும் ரத்த சர்க்கரையை குறைக்க இயலாததாகவும் இருக்கிறது. இது பற்றி விரிவாக விளக்குகிறார் நாளமில்லாச் சுரப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால்.
‘‘உடலிலுள்ள கணையம் இன்சுலின் சுரக்கும் சக்தியை இழக்கும்போது வகை 1 நீரிழிவு ஏற்படுகிறது. இதையே type 1 / insulin dependent diabetes / juvenile diabetes ஆகிய பெயர்களிலும் அழைக்கிறோம். வைரஸ் தாக்குதலினாலோ, உடலின் நோய்க்காப்பு இயங்கு முறையானது, கணையத்திலுள்ள செல்களை அழிப்பதனாலோ இக்குறைபாடு ஏற்படக்கூடும். இவ்வகை நீரிழிவை இன்சுலின் ஊசி மருந்து வழியாக மட்டுமே நிர்வகிக்க முடியும். இன்சுலின் தரப்படவில்லை என்றால், ரத்தச் சர்க்கரை அளவு அபாயகரமாக அதிகரிக்கும். அதோடு, ரத்தத்தில் குறிப்பிட்ட வகை அமில அளவுகளும் அதிகரிக்கத் தொடங்கும். இதுவே மிக அதிகமாக அச்சம் ஏற்படுத்துகிற சிக்கலான ‘நீரிழிவு கீட்டோ அமிலத்துவம்’ என்று அழைக்கப்படுகிற நீரிழிவு வகைக்கு இட்டுச் செல்லும்.
டைப் 1 நீரிழிவு பிரச்னைக்கு இன்று வரை ஒரே சிகிச்சை, ஊசி மூலம் இன்சுலின் செலுத்துவது மட்டுமே. இன்சுலினை வலியற்ற இன்சுலின் பம்ப் வழியாக தர முடியும் என்பதுதான் இதில் முக்கிய முன்னேற்றம். இப்போது, இன்சுலின் பம்ப் இன்சுலினை உட்செலுத்துவதோடு, ரத்த சர்க்கரை அளவையும் கண்டறிந்து, அதற்கேற்ப இன்சுலின் உட்செலுத்தப்படும் விகிதத்தையும் மாற்றி அமைத்துக்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நமது உடலின் கணையத்தில் இன்சுலின் உருவாக்குகின்ற செல்களைப் போலவே இதுவும் செயல்படுவதால், ‘செயற்கை முறை கணையம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, ரத்த சர்க்கரையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப, இதன் இன்சுலின் அளவுகளும் ஏற்ற இறக்கத்தைக் கொண்டிருக்கும்.
ரத்த குளுகோஸ் அளவு திடீரென இறங்கும் ‘ஹைபோகிளைசிமியா’ என்பது டைப் 1 நீரிழிவில் ஏற்படக்கூடிய இன்னொரு ஆபத்தான சிக்கல். ‘குளுக்ககான்’ என்று அழைக்கப்படுகிற, கணையத்தில் உருவாகிற மற்றொரு ஹார்மோன் போதுமான அளவு இல்லாத காரணத்தால்தான் இது பெரும்பாலும் நிகழ்கிறது. சில மாதங்களுக்கு முன், இன்சுலின் மற்றும் குளுக்ககான் ஆகிய இரண்டையும் சேர்த்து வழங்கக்கூடிய ‘ஒற்றை பம்ப்’ உருவாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். ‘இரட்டை ஹார்மோன் சிகிச்சை’ என இது அழைக்கப்படுகிறது. நமது கணையத்தைப் போலவே சிறப்பாகச் செயல்படுவதற்கும் நீரிழிவு குழந்தைகளின் வாழ்க்கையை இன்னும் எளிதாக ஆக்கவும் இது உதவும்.
டைப் 2 நீரிழிவு நிலையில், உடலானது போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அதனால் முறையாகச் செயல்பட இயலாத நிலை இருக்கிறது. அல்லது இன்சுலின் செயல்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மை காணப்படுகிறது. ‘இன்சுலினை சார்ந்திராத நீரிழிவு நோய்’ என்று இது குறிப்பிடப்படுகிறது. அளவுக்கு அதிக எடை அதிகரிப்பு மற்றும் போதுமான உடற்பயிற்சி இல்லாத காரணங்களால் இது ஏற்படுகிறது. இதை முறையாக நிர்வகிக்கா விட்டால், ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கக்கூடும். ஆனால், அமில அளவுகள் அதிகரிப்பதில்லை. இந்த வகை நீரிழிவு நிலையை பொதுவாக மாத்திரைகள் வழியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். எப்போதேனும் இன்சுலின் தேவைப்படலாம்.
இந்த இரு வகை நீரிழிவு நிலைகளிலும் சிகிச்சையின் முக்கிய அம்சமாக அமைவது ஆரோக்கியமான வாழ்க்கை முறையே. தவறாமல் செய்யப்படும் உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்கவழக்கங்கள் முக்கியமானவை. டைப் 1 நீரிழிவு குழந்தைகள் இனிப்புகள், கேக்குகளை உட்கொள்ளத் தடையில்லை. அனைத்து வகை உணவுகளையும் மிதமான அளவுகளில் அவர்கள் உண்டு மகிழலாம். உணவுக்கேற்ப, எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். வயது வந்த நபர்களைப் போன்றே, சரியான கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத நீரிழிவு நிலையால் ஏற்படும் சிக்கல்களும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும். கண்கள், சிறுநீரகச் செயல்பாடு, கொலஸ்ட்ரால் (கொழுப்பு அளவு) மற்றும் பாதங்கள் ஆகியவற்றை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம்.
நீரிழிவை முழுமையாகத் தடுக்க முடியுமா? குழந்தைகளை பாதிப்பதிலிருந்து எப்படி காக்க முடியும்? இவை பலருக்கும் எழும் கேள்விகள்...
டைப் 2 நீரிழிவின் இடர்பாட்டை, இளம் வயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் நிச்சயமாக குறைக்க முடியும். முன்மாதிரி நடத்தை மற்றும் பெரியவர்களை பின்பற்றி நடத்தல் ஆகியவற்றை குழந்தைகள் பின்பற்றுகிறார்கள் என்பதால், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஆரோக்கிய வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதையே இது குறிக்கிறது.
டைப் 1 நீரிழிவுக்கான இடர்காரணிகள் அதிக அளவு மரபணு சார்ந்ததாக இருக்கின்றன. இந்த இடர்பாட்டை டைப் 2 நீரிழிவு நிலையில் உள்ள அதே அளவுக்கு குறைக்க இயலாது. எனினும், ரத்தத்தில் ‘வைட்டமின் டி’ அளவை சிறப்பாகக் கொண்டிருப்பதன் மூலமும், 1 வயதுக்கு முன் பசும்பால் கொடுப்பதைத் தவிர்ப்பதன் மூலமும் இந்த இடர்பாட்டை குறைக்க முடியும்’’ என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?
» என்ன செய்வது??
» குழந்தைகள் குண்டாவதற்கு என்ன செய்வது?
» விரல் துண்டானால் என்ன செய்வது?
» குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?
» என்ன செய்வது??
» குழந்தைகள் குண்டாவதற்கு என்ன செய்வது?
» விரல் துண்டானால் என்ன செய்வது?
» குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|