தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதென்ன மர்மக் காய்ச்சல்

View previous topic View next topic Go down

அதென்ன மர்மக் காய்ச்சல் Empty அதென்ன மர்மக் காய்ச்சல்

Post by நாஞ்சில் குமார் Wed Nov 19, 2014 9:38 pm



மழைக்காலம் தொடங்கிவிட்டால் சளி, இருமல், உடல் வலி என நோய்கள் வரிசைகட்டி நிற்கும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் கொண்டாட்டத்துடன் பரவும். சுத்தமில்லா தெருக்கள், குண்டுகுழி சாலைகள் எல்லாவற்றிலும் தண்ணீர் தேங்கி, கழிவுநீருடன் கலந்து பல தொற்றுநோய்களை உருவாக்கும். மலேரியா, வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் எளிதாகப் பரவும். அரசு அதிகபட்ச அக்கறை எடுத்து தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க, பல வழிமுறைகளை கையாளக்கூடும். ஆனால், சுகாதாரத்துறைக்கே சவால் விடக்கூடியது மர்மக் காய்ச்சல்!

‘மர்மக் காய்ச்சலுக்கு 20 பேர் பலி’ என்பது போல பீதி கிளப்பும் செய்திகளை அடிக்கடிப் பார்க்கிறோம். ஒரு காலத்தில் எய்ட்ஸ் நோயே ‘மர்ம நோய்’ என்றுதானே அழைக்கப்பட்டது? பெயரிடாமல் ‘மர்மக் காய்ச்சல்’ என்று அழைக்கப்படுவது ஏன்? கண்டுபிடிக்கப்படாத கிருமியால் வருவதுதான் மர்மக் காய்ச்சலா? வரும் முன் இதன் அறிகுறிகளை கண்டறிய முடியாதா? தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன? இது பற்றி புதுச்சேரி ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ்குமாரிடம் பேசினோம்...

‘‘எந்த வைரஸ் மூலம் வருகிறது எனத் தெரியாமல் மக்களைத் தாக்கும் காய்ச்சலையே மர்மக் காய்ச்சல் என்று செய்தித்தாள்களில் குறிப்பிடுகின்றனர். வைரஸ் கிருமிகளின் மூலம் வரும் காய்ச்சல் மட்டுமே இந்த வகையில் சேர்க்கப்படும். யாராவது ஒருவர் தெளிவில்லாத அறிகுறிகள் உள்ள காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தால், உடனடியாக எங்கள் மருத்துவக்குழுவை அங்கே தீவிரப்படுத்துவோம். ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் தயாராக வைக்கப்படும். அந்தப் பகுதியில் உள்ளமக்களை பரிசோதனைக்கு உட்படுத்துவோம். வேறு யாருக்கேனும் சந்தேக அறிகுறிகள் இருந்தால், அவர்களையும் பரிசோதித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்போம்.

சிக்குன்குனியா, டெங்கு, ஸ்வைன் ஃப்ளு போன்றவை மர்மக் காய்ச்சலில் அடங்கும். காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற வழக்க மான அறிகுறிகளையே இது முதலில் காட்டும். உடல் வலி இருக்கும். பற்களில் வலியும் ஈறுகளில் ரத்தக் கசிவும் ஏற்படும். சாதாரணக் காய்ச்சல் என்று இருந்து விடாமல் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. சிக்குன்குனியா, ‘ஏடிஸ்’ எனப்படும் பகல் நேரத்தில் கடிக்கும் வரிகொசுவின் மூலம் ஏற்படுகிறது. சிக்குன்குனியா காய்ச்சல் வந்தால் மூட்டு வலி கடுமையாக இருக்கும். சிக்குன்குனியாவுக்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லை. கொசுக்கள் வராமல் வீட்டைச் சுத்தமாக பராமரிப்பதுதான் எளிய வழி. வலியைக் குறைக்க மட்டுமே மாத்திரைகள் பயன்படும்.

நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலமும் எதிர்ப்பு சக்தியை பெறலாம். நொச்சி இலைகளை நெருப்பில் போட்டு புகையை மூட்டினால் ‘ஏடிஸ்’ வகை கொசு வருவதில்லை. இது போன்ற இயற்கையான வழிமுறைகளை கையாளலாம். டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், மூட்டுவலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை நிற மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி - இந்த மூன்றும்தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் நோய் அறிகுறிகள்.

ரத்தக் கசிவும் ஏற்படலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கடுமையாக பாதிக்கும். இந்த நோய், 4 வகை வைரஸ்களால் உண்டாக்கப்படுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். டெங்கு வைரஸின் ஒரு வகையால் பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரஸுக்கு மட்டும், வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புத் தன்மை உருவாகி விடும். டெங்கு ரத்தக் கசிதல் நோய் (Dengue hemorrhagic fever) என்பது மிகத் தீவிர தன்மை கொண்டது. தோலில் ரத்தக் கசிவு, மூக்கில் ரத்தம் வடிதல், வாய் ஈறில் ரத்தம் வருதல், கருப்பு மலம், ரத்த வாந்தி போன்றவை ஏற்படக்கூடும். ரத்தக் கசிவு ஆபத்தை விளைவிக்கும் dengue shock syndrome என்னும் இந்த டெங்கு இறப்பு வரை கொண்டு சென்று விடும்.

இன்ஃபுளுயன்சா தொற்று நோய் வகையை சேர்ந்ததுதான் ‘ஸ்வைன் ஃப்ளூ’. பொதுவாக பன்றி வளர்க்கும் பண்ணைகளில் இருந்தே, இது பரவத் தொடங்குகிறது. பன்றி இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் ஸ்வைன் ஃப்ளூ பரவுவதால் ‘பன்றிக் காய்ச்சல்’ என்றும் அழைக்கப்படுகிறது. சுவாசத்தைப் பாதிக்கக்கூடியது. கடுமையான காய்ச்சல், இருமல், தும்மல், உடம்பு வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என எல்லாம் ஒன்று சேர்ந்து 4 நாட்களுக்கு ஆளை பாடாகப்படுத்தும். இந்த நோய் பிறரது தும்மல் மற்றும் இருமல் மூலமாக காற்றில் வேகமாகப் பரவும். இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகியிருப்பது அவசியம்.

இந்நோயின் கடுமையை தாக்குப்பிடிக்க முடியாத சிலர் இறந்து விடுகின்றனர். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடும். அதோடு, மூச்சு விடவும் சிரமப்படுவார்கள். இந்நோய்க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தையே இப்போது தருகின்றனர். மர்மக் காய்ச்சலின் தீவிரத்தில், நுரையீரலுக்குச் செல்லும் சுவாசம் நின்று விடுவதால்தான் பொதுவாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை Respiratory arrest என்று அழைப்போம். நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்ற பாகங்களையும் வைரஸ் பாதிக்கிறது.

இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் இவ்வகை காய்ச்சல் வந்தால் மக்கள் பயப்படுகிறார்கள். அதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலந்தாய்வுகளை நடத்தி வருகிறோம். தெருக்களை, வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம். சிறு குழுக்களாக பிரிந்து, மருத்துவ முகாம்களையும் நடத்தி வருகிறோம். தண்ணீர் தேங்காமல், குப்பை கூளங்கள் இல்லாமல், கொசுக்கள் இல்லாமல் சுத்தமாக நமது சுற்றுச்சூழலை பராமரித்தால் எந்த மர்மக் காய்ச்சலும் மக்களை தாக்காது’’ என்று மர்மக் காய்ச்சல் மர்மங்களை விளக்குகிறார் மருத்துவர் சதீஷ்குமார்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

அதென்ன மர்மக் காய்ச்சல் Empty Re: அதென்ன மர்மக் காய்ச்சல்

Post by செந்தில் Thu Nov 20, 2014 12:00 pm

மழைக்கால முன் எச்சரிக்கை பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum