தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா

View previous topic View next topic Go down

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா Empty பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா

Post by செந்தில் Mon Jan 19, 2015 4:58 pm

ஒரு ஊரில் உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து வரும் ஒரு ஏழை பிராம்மணன் வசித்து வந்தான். ஒரு நாள் ஒரு வீட்டு முன் நின்று அந்த பிராம்மணன் பிக்ஷை கேட்டான். அந்த இல்லத்தரிசியோ ஏழை எளியவர்கள் பால் இரக்கம்கொண்டு அவர்களுக்கு உதவி வரும் ஒரு நல்லாள்.

பிராமணன் பிக்ஷை கேட்பதை பார்த்து “சற்று நேரம் அந்த மரத்தடியில் உட்காருங்கள். நான் சமைத்து முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். சற்று நேரத்தில் சூடான உணவு கொண்டுவருகிறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றால். அடுத்த சில நொடிகளில் அவனுக்கு பசியாற சுவையான உணவு கொண்டு வந்து கொடுத்தாள்.

உணவை பார்த்த மாத்திரத்தில் பிராமணனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. அது போல அவன் சாப்பிட்டு பல நாட்கள் ஆகியிருந்தது. உணவை சாப்பிடும் முன், சில நிமிடங்கள் கண்களை மூடி பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிடலானான்.

அந்நேரம் பார்த்து, எங்கிருந்தோ ஒரு நாகத்தை தூக்கிக்கொண்டு வந்திருந்த பருந்து ஒன்று அம்மரத்தில் அமர்ந்திருந்தது. பருந்தின் கால்களில் சிக்கியிருந்த நாகம் தன்னை விடுவித்துக்கொள்ள போராடியபோது அதன் விஷமானது பிராமணனின் உணவில் அவனுக்கு தெரியாமல் சில துளிகள் விழுந்துவிட்டது.
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா Eagle-snakeஏதுமறியாத பிராமணன் அந்த உணவை சாப்பிட துவங்க சாப்பிட்ட சில நிமிடங்களில் அம்மரத்தடியிலேயே வாயில் நுரை தள்ளி இறந்துவிடுகிறான்.

தண்ணீர் கொண்டு வர உள்ளே செல்லும் இல்லாள் மீண்டும் வெளியே வரும்போது பிராமணன் இறந்துகிடப்பதை பார்க்கிறான். “என்ன நடந்தது என தெரியவில்லையே….” என அந்த இல்லாள் பதறித் துடிக்க, அந்நேரம் பார்த்து அவள் கணவன் வந்துவிடுகிறான். பிராமணன் இறந்துகிடப்பதை பார்த்து, அவனும் பதறிப்போய் மனைவியிடம் விசாரிக்க, அவள் நடந்ததை கூறுகிறாள். அவனோ தன் மனைவி தான் பிராமணனை சாப்பாட்டில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டாள் என்று கருதி, “ஒரு கொலைகாரியோடு என்னால் வாழமுடியாது! இன்றே ஊர் பஞ்சாயத்தை கூட்டி உன்னை ஒதுக்கிவைத்துவிடுகிறேன். உனக்கு தண்டனையும் வாங்கிக் கொடுப்பேன்!” என்கிறான்.

இந்த சம்பவத்தில் பிராமணனை கொன்ற பாபம் பிரம்மஹத்தி தோஷம் யாரை பிடிக்கும்?

1) பருந்தை என்றால், அது பாம்பை பிடிப்பதும் அதை உண்பதும் இயற்கையானது. அதை குற்றம் சொல்ல முடியாது. மேலும் அது ஐந்தறிவு விலங்கு.

2) பாம்பை என்றால் அதுவும் பருந்தைப் போல ஒரு ஐந்தறிவு விலங்கு. அதையும் குற்றம் சொல்ல முடியாது.

3) அந்த இல்லாளை என்றால் அவள் நிரபராதி என்பதை நீங்களே அறிவீர்கள்.

4) அந்த பிராமணன் மீது தான் தவறு. அவன் தான் அஜாக்கிரதையாக இருந்தான் என்றால், அதுவும் தவறு. இந்த விஷயத்தில் அஜாக்கிரதை என்பதே இல்லை.

அப்படியானால் ஒரு உயிரை போக்கிய பிரம்மஹத்தி தோஷம் யாரைப் பிடிக்கும்? பிராமணனை கொன்ற பாவத்தை யார் கணக்கில் சேர்ப்பான் இறைவன்?

மேற்கொண்டு படிப்பதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை யோசியுங்கள்.

இறைவன் என்றுமே நீதி தவறுவதில்லை.

மேற்படி சம்பவத்தை பொறுத்தவரை நடந்தது என்ன என்று ஆராயாமல், அவசரப்பட்டு தன் மனைவி மீது பழி சுமத்திய அவள் கணவனுக்கே அந்த பாவம் போய் சேரும்.

ஒரு தவறை இன்னார் தான் செய்திருப்பார்கள் என்று உறுதியாக தெரியாதபோது, சந்தேகத்தின் அடிப்படையில் யார் மற்றவர் மீது பழி சுமத்துகிறார்களோ அவர்களையே அந்த குற்றத்திற்கான பாவம் போய் சேரும். தர்ம சாஸ்திரம் கூறுவது இதைத் தான்.

அலுவலகத்திலும், இன்ன பிற இடங்களிலும் தவறு நடக்கும்போது “எனக்கு தெரியும்…. அவர் தான் அதை செஞ்சிருப்பார். இவர் மேலத் தான் எனக்கு சந்தேகம். இவர் தான் அதை செஞ்சிருப்பார்!” போன்ற வார்த்தைகளை பிரயோகிக்கவேண்டாம். நீங்களாகவே குற்றவாளி குறித்து ஒரு முடிவுக்கும் வரவேண்டாம். ஒருவேளை நீங்கள் பழி சுமத்தும் நபர் நிரபராதியாக இருந்தால் உங்கள் புண்ணியப் பலன் முழுதும் அவருக்கு போய் சேர்ந்துவிடும். அவர் பாவப் பலன் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.

எனவே அடுத்தமுறை, உங்களைச் சுற்றி ஏதாவது குற்றமோ தவறோ நடந்தால் அவசரப்பட்டு யார் மீதும் பழி போடவேண்டாம். மௌனமாய் இருங்கள். மௌனம் சர்வார்த்த சாதகம்.

நன்றி -http://rightmantra.com
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா Empty Re: பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா

Post by ஸ்ரீராம் Mon Mar 02, 2015 10:48 am

உங்களைச் சுற்றி ஏதாவது குற்றமோ தவறோ நடந்தால் அவசரப்பட்டு யார் மீதும் பழி போடவேண்டாம். மௌனமாய் இருங்கள். மௌனம் சர்வார்த்த சாதகம்.

உண்மை உண்மை 
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி செந்தில்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா Empty Re: பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா

Post by kanmani singh Mon Mar 02, 2015 11:57 am

''ஒரு தவறை இன்னார் தான் செய்திருப்பார்கள் என்று உறுதியாக தெரியாதபோது, சந்தேகத்தின் அடிப்படையில் யார் மற்றவர் மீது பழி சுமத்துகிறார்களோ அவர்களையே அந்த குற்றத்திற்கான பாவம் போய் சேரும். தர்ம சாஸ்திரம் கூறுவது இதைத் தான்.''

சிறந்த படிப்பினை பதிவு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா Empty Re: பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum